-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், அக்டோபர் 25

ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது? ஓர் உளவியல் அணுகல்.


‘என் இறiவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!’ என்று (நபியே) நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 20:114)
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவ்கள் அறிஞர்கள்தாம். (அல்குர்ஆன் 35:28)
“அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39:9)
இந்த இறை வசனங்களிலிருந்து கல்வியின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது. அநேகமானோர் கல்வி என்பது பாடசாலைகளில் கற்கப்படுவது மட்டும் என்ற தவறான கருத்தில் உள்ளனர். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை கல்வி கற்கக்கூடியவனாகவே உள்ளான். 

கல்விவியலாளர்களின் கருத்துப்படி கல்வி அறிவானது மனிதனுக்கு மூன்று வழிகளில் கிடைக்கப் பெறுகின்றது. 

1) Informal - இம்முறையானது ஒருவனது குழந்தைப் பருவத்தில் 5 ½ வயது வரை தனது பெற்றோர், உறவினர், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் மூலம் கற்கும் கல்வி. இப்பருவத்தில் மூளையின் வளர்ச்சி அதி தீவிரமாக இருக்கும். குழந்தைகள் கூடுதலாக கேள்விகள் கேட்கும் பருவம். 

2) Formal - இம்முறை பாடசாலை சென்று கல்வி கற்கும் முறை. இது ஒருவரின் 5 ½ வயதில் பாடசாலையில் ஆரம்பமாகி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்கும் கல்வி. 

3) Non formal - இம்முறையானது பாடசாலை, பல்கலைக்கழகங்கள் தவிர்ந்து நண்பர்கள், மீடீயாக்கள். இதர பொழுதுபோக்கு சாதனங்கள் மூலம் கற்கும் கல்வி. 

இன்றைய கல்வியின் நிலை.

இன்று மூலைமுடுக்குகளில் எல்லாம் சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. சர்வதேசப் பாடசாலைகளில் தம் பிள்ளைகள் கல்வி கற்பதை நம் சமுதாயத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் கௌரவமாக நினைக்கின்றனர். இதனால் பாடசாலையின் தரத்தைப் பற்றி அவர்கள் அக்கறை எடுப்பதில்லை. குறிக்கோளே இல்லாமல் பணத்தை வீண்விரயமாக்குவதில் நம் முஸ்லிம் சமுதாயத்தினர் முன்னணியில் உள்ளனர். 

கல்வி கற்கும் பாடசாலையை எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு பாடசாலையின் தரத்திற்கு அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர், நிர்வாகம் என்பவற்றோடு அப்பாடசாலையின் பௌதீக வளமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பௌதீக வளம் என்பது மாணவர்களுக்கு போதிய அளவிலான வகுப்பறைகளின் நிலப்பரப்பு, கட்டிடவசதி, தளபாடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம், மைதானம் என்பனவாகும். மாணவர்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பாடசாலை சூழல் அமைந்திருத்தல் வேண்டும். ஆனால் இன்று சர்வதேசப் பாடசாலைகள் என மூலைமுடுக்குகளில் இயங்கி வரும் பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான உகந்த சூழல் காணப்படுவதில்லை. காரணம் இட வசதி போதாமை, பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமை, மைதானம் இல்லாமை, நூலகம் இல்லாமை, விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லாமை, ஒழுங்கற்ற நிர்வாகம் ஆகியனவாகும்.  

இதுபோக முஸ்லிம்களாகிய நாம் கருத்திற் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் நம் பிள்ளைகளை சேர்க்கும் பாடசாலையின் நடவடிக்கைகள் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக்கு உட்பட்டதா இல்லையா என்பது. இன்று பெரும்பாலான பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கோட்டை விடுகின்றனர். பாடசாலையின் தரத்தையும், கல்வியின் தரத்தையும் பரிசோதிக்கும் இவர்கள் அப்பாடசாலை இஸ்லாமிய மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டா இயங்குகின்றது என்பதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். நாம் பௌத்த மத நெறிகளைக் கொண்ட நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் முஸ்லிம்களில் சிலர் தம் பிள்ளைகள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சிங்களப் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கின்றனர். சிங்கள மொழி மூலம் கற்பதோ அல்லது சிங்கள பாடசாலைகளில் கற்பதோ தவறல்ல. ஆனால், அப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் அவர்களது மத அனுஷ்டானங்களில் முஸ்லிம் மாணவர்களும் பங்கு பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். எனவே, அந்நிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கும் பெற்றோர் தாமே தம் பிள்ளைகளை மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். அத்தோடு நம் நாட்டில் பெரும்பாலான ஜும்ஆ உரைகள் தமிழிலேயே அமைந்திருப்பதால் சிங்கள, ஆங்கில மொழியில் கற்கும் மாணவர்கள் ஜும்ஆவில் தூங்கி விழும் நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கப்பட வேண்டும்.   

இன்று பல முஸ்லிம் பாடசாலைகள் கூட பெயரளவில் முஸ்லிம் பாடசாலைகளாக உள்ளன. இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத பல நிகழ்ச்சிகளை உதாரணமாக மீலாது விழா, கலை விழா போன்றவை மட்டுமில்லாது இசை, நடனங்களை பாடமாகவும் பயிற்றுவிக்கின்றனர். ஏன் பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளில் இசை வாத்தியங்களை இயக்கும் குழுக்களும் காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் மார்க்கத்திற்கு முரணாக நடக்க ஆர்வமூட்டப்படுகின்றனர். உண்மையில் அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளை எடுத்தால் நாம் இவ்வாறு எதிர்ப் பார்ப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. இன்று சில தனியார் முஸ்லிம் பாடசாலைகள் ஓரளவிற்கு மார்க்க வரையறைக்குள் இயங்குகின்றன.

ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்: இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)  
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73

மேலுள்ள இந்த நபிமொழியிலிருந்து அல்லாஹ் தந்த கல்வி ஞானத்தைக் கொண்டு தாம் கற்றதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதென்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பது புலப்படுகின்றது. ஆனால் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிலை ஒரு தொழிலாக மட்டும் கருதி அதன் சிறப்பையும் அதிலுள்ள ஏராளமான நன்மைகளையும் மறந்து கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை. நாம் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் நன்மை நம்மிடம் கற்றவர் இன்னொருவருக்கக் கற்றுக் கொடுத்து பின்னர் அவர் இன்னொருவருக்கக் கற்றுக் கொடுத்து இவ்வாறு சங்கிலித் தொடர் போல் பயனடையும் அத்தனை நபர்கள் மூலமாகவும் கிடைத்துக் கொண்டே போகும். 

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்ற காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 3084 

ஆசிரியர்களின் கடமைகள், அவர்கள் எவ்வாறு மாணவர்களை வழி நடத்த வேண்டும் என்பவற்றை பார்ப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளை நாம் அறிந்து கொள்வோம். ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களை வழி நடத்துவதில் அளப்பறிய பங்காற்றக்கூடியவர்கள். மாணவர்களை சமூகத்திற்கு ஒரு நல்ல பொறுப்புள்ள பிரஜைகளாக உருவாக்குவதில் ஆசிரியர்களே அத்திவாரமாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் சீராக இருந்தால் தான் மாணவர்களுக்கு சீரிய வழியைக் காட்ட முடியும். கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் கடமை அல்ல. மாறாக, கல்வியோடு சேர்த்து ஒழுக்கம், பழக்கவழக்கங்கள், கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருதல் ஆகியவற்றுடன் ஏராளமான நற் பண்புகளை கற்பித்தல் ஆசிரியர்களின் கடமைகளாகும். 

ஆசிரியர்கள் முதலில் பொறுமையின் சின்னமாகத் திகழ வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு சூழலிலிருந்து பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். அவர்களின் மனநிலையும், உடலமைப்பும் ஒவ்வொரு மாணவர்களுக்கிடையே வித்தியாசப்படும். எனவே, ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கு எற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டு உளவியல் ரீதியில் அவர்களை அன்போடு அவர்களை அணுக வேண்டும். 

மாணவர்களைப் பொருத்த வரை அவர்கள் மூன்று பிரிவினர்களாக பிரிக்கப்படுகின்றனர். 

1) அதி விவேகமுள்ள மாணவன் (Gifted child)

2) சாதாரண மாணவன் (Normal child)

3) பின் தங்கிய மாணவன் (Backward child)

ஒரு வகுப்பறையிலுள்ள இம்மூன்று வகை மாணவர்களையும் சமாளிக்கக்கூடிய தகுதி ஆசிரியருக்கு இருக்க வேண்டும். சளிப்படையாமல் பின் தங்கிய மாணவனை அலட்சியம் செய்யாமல் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அன்புடனும், ஆதரவுடனும் அம்மாணவனை அணுகினால் ஏனைய சக மாணவர்கள் மத்தியில் பின் தங்கிய மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாது. இதனால் சக மாணவர்கள் மத்தியில் சகஜமாகப் பழகக்கூடியவாறு இருக்கும். தன் வகுப்பறையிலுள்ள மாணவன் மேலுள்ள மூன்று பிரிவுகளில் எப்பிரிவைச் சேர்ந்த மாணவன் என மாணவர்களை அவதானிப்பதன் மூலம் ஒரு ஆசிரியருக்கு கிரகிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

மாணவனுக்கு கல்வி கற்பதில் ஏற்படும் தடைக்கல்லை அகற்றி அம்மாணவனுக்கு கல்வி கற்பதற்கான படிக்கல்லை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும். ஒரு மாணவனுக்கு புரிய வைப்பதற்கு எத்தனை தடவை சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அத்தனை தடவை சலிப்படையாமலும், முகம் சுழிக்காமலும், கோபப்படாமலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு ஆசிரியர் தியாக மனப்பான்மை கொண்டவராக இருத்தல் வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால் தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதனைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை ஸலாம் சொல்வார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி) அவர்கள், ஆதாரம்: புஹாரி 95  

மாணவர்கள் சிறு பராயத்திலிருந்தே ஆசிரியர்களை அவதானித்து அவர்களைப் போல் இருக்க ஆசைப்படுவர். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். ஒழுக்க விழுமியங்களை மாணவர்களுக்குக் கற்பித்து தாம் அதற்கு மாற்றமாக நடக்கக்கூடாது.எந்த நிலையிலும் மாணவர்களை அரவணைக்கக்கூடியவர்களாகவும், தன்னம்பிக்கை ஊட்டக்கூடியவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

இன்றைய பெரும்பாலான முஸ்லிம் ஆசிரியர்களின் நிலை ?

இன்று பெரும்பாலான முஸ்லிம் ஆண் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த வியாபார நோக்கங்களுக்காக தங்கள் ஊர் பாடசாலைகளிலிருந்து மாறுதல்  பெற்று கொழும்பிற்கு வந்து பாடசாலைக்கு அதிக விடுமுறை போட்டு தம் வியாபாரத்தைக் கவனிக்கின்றனர். பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாட்களில் கூட மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கம் இல்லாமல் மாணவர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை வீணடித்து விட்டு செல்கின்றனர். இதற்கு இஸ்லாத்தை கற்பிக்கும் மௌலவி ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல.

மாணவர்களுக்குக் கடமையான கற்பித்தலை முறையாக செய்யாத காரணத்தினால் கற்பித்தலுக்காக வாங்கும் சம்பளம் அவர்களுக்கு ஹராமாகின்றது. சிலர் பாடசாலைகளில் கற்பிக்காது மாணவர்களை அவர்களது பிரத்தியேக வகுப்புகளுக்கு வரச் சொல்லி மாணவர்களிடமிருந்து பணத்தை சூறையாடுகின்றனர். 

மேலும் ஆண்,பெண் ஒன்றாகப் படிக்கும் பாடசாலைகளில் சில ஆசிரிய, ஆசிரியர்கள் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு மாணவர்கள் முன்னிலையில் முன்மாதிரி இல்லாமல் நடந்து கொள்கின்றனர். சில ஆசிரியர்கள் இதற்கு மாணவர்களை தம் தூதுக்கு பயன்படுத்துகின்றனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். நம் நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆண், பெண் கலந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளை தனித் தனி ஆண், பெண் பாடசாலைகளாக மாற்ற எந்தவித முயற்சியும் எடுக்காமை வெட்கப்பட வேண்டிய விஷயம். 

இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் கற்பித்தலை ஒரு தொழிலாக மட்டும் கருதி சேவை மனப்பான்மை இல்லாமல், கற்பிக்கின்றோம் என்ற பெயரில் தாம் கற்பிக்கும் விடயம் மாணவர்களை சென்றடைகின்றதா? அல்லது தாம் கற்பிக்கும் முறை சரியாக இருக்கின்றதா? ஒன்றும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனையும் உளவியல் ரீதியாகவே அணுக வேண்டும். ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கற்பிக்காத காரணத்தினாலேயே மாணவர்கள் பாட நேரத்தில் வேறு சிந்தனையுடனும், குறும்புத்தனத்துடனும் நேரத்தைக் கழிக்கின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்கள் கேள்விகள் கேட்கும்போது கோபப்பட்டு எரிந்து விழுகின்றனர். இவர்கள் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு பதிலாக கல்வியில் வெறுப்பை ஏற்படுத்துகின்றனர். இதனாலேயே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் சூட்டுவதற்கு அவர்களே காரணமாகின்றனர். எந்த ஒரு செயலையும் நன்மையையும், இறை திருப்தியை நாடியே செய்ய வேண்டும். 

“ஒருவரிடம் (கல்வியைப் பற்றி) கேள்வி கேட்கப்பட்டு, அதை அவர் (அறிந்த பின்பும்) மறைத்தால், மறுமை நாளில் அவருக்கு நெருப்பிலான கடிவாளம் போடப்படும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) , ஆதாரம்: அபூதாவூது 3658

சில பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக தற்காலிக (volunteersஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கின்றனர். இவர்கள் பயிற்றுவிக்கப்படாத காரணத்தினால் மாணவர்களுடன் எவ்வாறு உளவியல் ரீதியல் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாதுள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது நம் பிள்ளைகளே. இன்று முஸ்லிம் ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த இடத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊமைகளாகவே உள்ளனர். 

இன்று ஏனைய மாற்று மத நண்பர்களின் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் பாடசாலைகளே பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது. காரணம் பெற்றோர் தம் பிள்ளைகளின் கல்வியில் அக்கறைக் காட்டாமை, ஆசிரியர்களின் சேவை மனப்பான்மையற்ற நிலை, அதிபரின் நிர்வாக சீர் குழைவுகள் ஆகியனவாகும். இஸ்லாம் கல்விக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் இம்மை, மறுமை நலன்களை மக்கள் அறியாமல் செயல்படுவதே இவ் வகையான பொடுபோக்கு நிலைக்கு முக்கிய காரணமாகும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுய இலாபம் கருதாமல் தியாக மனப்பான்மையுடன் அல்லாஹ்விற்கு அஞ்சி செயற்பட வேண்டும்.  

அன்பின் ஆசிரியர்களே!

இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி நியாயமான முறையில் தெளிவான கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதின் மூலம் நமது சமுதாயத்தை முதன்மை சமுதாயமாக உயர்த்துவதற்கு உதவுவதின் மூலம் இம்மை மறுமை வாழ்வை சீராக்கிக் கொள்வோமாக!

‘என் இறiவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!’ என்று (நபியே) நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 20:114)
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவ்கள் அறிஞர்கள்தாம். (அல்குர்ஆன் 35:28)
“அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39:9)
இந்த இறை வசனங்களிலிருந்து கல்வியின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது. அநேகமானோர் கல்வி என்பது பாடசாலைகளில் கற்கப்படுவது மட்டும் என்ற தவறான கருத்தில் உள்ளனர். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை கல்வி கற்கக்கூடியவனாகவே உள்ளான். 

கல்விவியலாளர்களின் கருத்துப்படி கல்வி அறிவானது மனிதனுக்கு மூன்று வழிகளில் கிடைக்கப் பெறுகின்றது. 

1) Informal - இம்முறையானது ஒருவனது குழந்தைப் பருவத்தில் 5 ½ வயது வரை தனது பெற்றோர், உறவினர், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் மூலம் கற்கும் கல்வி. இப்பருவத்தில் மூளையின் வளர்ச்சி அதி தீவிரமாக இருக்கும். குழந்தைகள் கூடுதலாக கேள்விகள் கேட்கும் பருவம். 

2) Formal - இம்முறை பாடசாலை சென்று கல்வி கற்கும் முறை. இது ஒருவரின் 5 ½ வயதில் பாடசாலையில் ஆரம்பமாகி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்கும் கல்வி. 

3) Non formal - இம்முறையானது பாடசாலை, பல்கலைக்கழகங்கள் தவிர்ந்து நண்பர்கள், மீடீயாக்கள். இதர பொழுதுபோக்கு சாதனங்கள் மூலம் கற்கும் கல்வி. 

இன்றைய கல்வியின் நிலை.

இன்று மூலைமுடுக்குகளில் எல்லாம் சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. சர்வதேசப் பாடசாலைகளில் தம் பிள்ளைகள் கல்வி கற்பதை நம் சமுதாயத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் கௌரவமாக நினைக்கின்றனர். இதனால் பாடசாலையின் தரத்தைப் பற்றி அவர்கள் அக்கறை எடுப்பதில்லை. குறிக்கோளே இல்லாமல் பணத்தை வீண்விரயமாக்குவதில் நம் முஸ்லிம் சமுதாயத்தினர் முன்னணியில் உள்ளனர். 

கல்வி கற்கும் பாடசாலையை எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு பாடசாலையின் தரத்திற்கு அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர், நிர்வாகம் என்பவற்றோடு அப்பாடசாலையின் பௌதீக வளமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பௌதீக வளம் என்பது மாணவர்களுக்கு போதிய அளவிலான வகுப்பறைகளின் நிலப்பரப்பு, கட்டிடவசதி, தளபாடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம், மைதானம் என்பனவாகும். மாணவர்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பாடசாலை சூழல் அமைந்திருத்தல் வேண்டும். ஆனால் இன்று சர்வதேசப் பாடசாலைகள் என மூலைமுடுக்குகளில் இயங்கி வரும் பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான உகந்த சூழல் காணப்படுவதில்லை. காரணம் இட வசதி போதாமை, பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமை, மைதானம் இல்லாமை, நூலகம் இல்லாமை, விஞ்ஞான ஆய்வுகூடம் இல்லாமை, ஒழுங்கற்ற நிர்வாகம் ஆகியனவாகும்.  

இதுபோக முஸ்லிம்களாகிய நாம் கருத்திற் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் நம் பிள்ளைகளை சேர்க்கும் பாடசாலையின் நடவடிக்கைகள் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக்கு உட்பட்டதா இல்லையா என்பது. இன்று பெரும்பாலான பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கோட்டை விடுகின்றனர். பாடசாலையின் தரத்தையும், கல்வியின் தரத்தையும் பரிசோதிக்கும் இவர்கள் அப்பாடசாலை இஸ்லாமிய மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டா இயங்குகின்றது என்பதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். நாம் பௌத்த மத நெறிகளைக் கொண்ட நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் முஸ்லிம்களில் சிலர் தம் பிள்ளைகள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சிங்களப் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கின்றனர். சிங்கள மொழி மூலம் கற்பதோ அல்லது சிங்கள பாடசாலைகளில் கற்பதோ தவறல்ல. ஆனால், அப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் அவர்களது மத அனுஷ்டானங்களில் முஸ்லிம் மாணவர்களும் பங்கு பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். எனவே, அந்நிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கும் பெற்றோர் தாமே தம் பிள்ளைகளை மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். அத்தோடு நம் நாட்டில் பெரும்பாலான ஜும்ஆ உரைகள் தமிழிலேயே அமைந்திருப்பதால் சிங்கள, ஆங்கில மொழியில் கற்கும் மாணவர்கள் ஜும்ஆவில் தூங்கி விழும் நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கப்பட வேண்டும்.   

இன்று பல முஸ்லிம் பாடசாலைகள் கூட பெயரளவில் முஸ்லிம் பாடசாலைகளாக உள்ளன. இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத பல நிகழ்ச்சிகளை உதாரணமாக மீலாது விழா, கலை விழா போன்றவை மட்டுமில்லாது இசை, நடனங்களை பாடமாகவும் பயிற்றுவிக்கின்றனர். ஏன் பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளில் இசை வாத்தியங்களை இயக்கும் குழுக்களும் காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் மார்க்கத்திற்கு முரணாக நடக்க ஆர்வமூட்டப்படுகின்றனர். உண்மையில் அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளை எடுத்தால் நாம் இவ்வாறு எதிர்ப் பார்ப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. இன்று சில தனியார் முஸ்லிம் பாடசாலைகள் ஓரளவிற்கு மார்க்க வரையறைக்குள் இயங்குகின்றன.

ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்: இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)  
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73

மேலுள்ள இந்த நபிமொழியிலிருந்து அல்லாஹ் தந்த கல்வி ஞானத்தைக் கொண்டு தாம் கற்றதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதென்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பது புலப்படுகின்றது. ஆனால் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிலை ஒரு தொழிலாக மட்டும் கருதி அதன் சிறப்பையும் அதிலுள்ள ஏராளமான நன்மைகளையும் மறந்து கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை. நாம் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் நன்மை நம்மிடம் கற்றவர் இன்னொருவருக்கக் கற்றுக் கொடுத்து பின்னர் அவர் இன்னொருவருக்கக் கற்றுக் கொடுத்து இவ்வாறு சங்கிலித் தொடர் போல் பயனடையும் அத்தனை நபர்கள் மூலமாகவும் கிடைத்துக் கொண்டே போகும். 

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்ற காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 3084 

ஆசிரியர்களின் கடமைகள், அவர்கள் எவ்வாறு மாணவர்களை வழி நடத்த வேண்டும் என்பவற்றை பார்ப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளை நாம் அறிந்து கொள்வோம். ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களை வழி நடத்துவதில் அளப்பறிய பங்காற்றக்கூடியவர்கள். மாணவர்களை சமூகத்திற்கு ஒரு நல்ல பொறுப்புள்ள பிரஜைகளாக உருவாக்குவதில் ஆசிரியர்களே அத்திவாரமாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் சீராக இருந்தால் தான் மாணவர்களுக்கு சீரிய வழியைக் காட்ட முடியும். கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் கடமை அல்ல. மாறாக, கல்வியோடு சேர்த்து ஒழுக்கம், பழக்கவழக்கங்கள், கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருதல் ஆகியவற்றுடன் ஏராளமான நற் பண்புகளை கற்பித்தல் ஆசிரியர்களின் கடமைகளாகும். 

ஆசிரியர்கள் முதலில் பொறுமையின் சின்னமாகத் திகழ வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு சூழலிலிருந்து பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். அவர்களின் மனநிலையும், உடலமைப்பும் ஒவ்வொரு மாணவர்களுக்கிடையே வித்தியாசப்படும். எனவே, ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கு எற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டு உளவியல் ரீதியில் அவர்களை அன்போடு அவர்களை அணுக வேண்டும். 

மாணவர்களைப் பொருத்த வரை அவர்கள் மூன்று பிரிவினர்களாக பிரிக்கப்படுகின்றனர். 

1) அதி விவேகமுள்ள மாணவன் (Gifted child)

2) சாதாரண மாணவன் (Normal child)

3) பின் தங்கிய மாணவன் (Backward child)

ஒரு வகுப்பறையிலுள்ள இம்மூன்று வகை மாணவர்களையும் சமாளிக்கக்கூடிய தகுதி ஆசிரியருக்கு இருக்க வேண்டும். சளிப்படையாமல் பின் தங்கிய மாணவனை அலட்சியம் செய்யாமல் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அன்புடனும், ஆதரவுடனும் அம்மாணவனை அணுகினால் ஏனைய சக மாணவர்கள் மத்தியில் பின் தங்கிய மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாது. இதனால் சக மாணவர்கள் மத்தியில் சகஜமாகப் பழகக்கூடியவாறு இருக்கும். தன் வகுப்பறையிலுள்ள மாணவன் மேலுள்ள மூன்று பிரிவுகளில் எப்பிரிவைச் சேர்ந்த மாணவன் என மாணவர்களை அவதானிப்பதன் மூலம் ஒரு ஆசிரியருக்கு கிரகிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

மாணவனுக்கு கல்வி கற்பதில் ஏற்படும் தடைக்கல்லை அகற்றி அம்மாணவனுக்கு கல்வி கற்பதற்கான படிக்கல்லை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும். ஒரு மாணவனுக்கு புரிய வைப்பதற்கு எத்தனை தடவை சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அத்தனை தடவை சலிப்படையாமலும், முகம் சுழிக்காமலும், கோபப்படாமலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு ஆசிரியர் தியாக மனப்பான்மை கொண்டவராக இருத்தல் வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால் தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதனைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை ஸலாம் சொல்வார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி) அவர்கள், ஆதாரம்: புஹாரி 95  

மாணவர்கள் சிறு பராயத்திலிருந்தே ஆசிரியர்களை அவதானித்து அவர்களைப் போல் இருக்க ஆசைப்படுவர். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். ஒழுக்க விழுமியங்களை மாணவர்களுக்குக் கற்பித்து தாம் அதற்கு மாற்றமாக நடக்கக்கூடாது.எந்த நிலையிலும் மாணவர்களை அரவணைக்கக்கூடியவர்களாகவும், தன்னம்பிக்கை ஊட்டக்கூடியவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

இன்றைய பெரும்பாலான முஸ்லிம் ஆசிரியர்களின் நிலை ?

இன்று பெரும்பாலான முஸ்லிம் ஆண் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த வியாபார நோக்கங்களுக்காக தங்கள் ஊர் பாடசாலைகளிலிருந்து மாறுதல்  பெற்று கொழும்பிற்கு வந்து பாடசாலைக்கு அதிக விடுமுறை போட்டு தம் வியாபாரத்தைக் கவனிக்கின்றனர். பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாட்களில் கூட மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கம் இல்லாமல் மாணவர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை வீணடித்து விட்டு செல்கின்றனர். இதற்கு இஸ்லாத்தை கற்பிக்கும் மௌலவி ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல.

மாணவர்களுக்குக் கடமையான கற்பித்தலை முறையாக செய்யாத காரணத்தினால் கற்பித்தலுக்காக வாங்கும் சம்பளம் அவர்களுக்கு ஹராமாகின்றது. சிலர் பாடசாலைகளில் கற்பிக்காது மாணவர்களை அவர்களது பிரத்தியேக வகுப்புகளுக்கு வரச் சொல்லி மாணவர்களிடமிருந்து பணத்தை சூறையாடுகின்றனர். 

மேலும் ஆண்,பெண் ஒன்றாகப் படிக்கும் பாடசாலைகளில் சில ஆசிரிய, ஆசிரியர்கள் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு மாணவர்கள் முன்னிலையில் முன்மாதிரி இல்லாமல் நடந்து கொள்கின்றனர். சில ஆசிரியர்கள் இதற்கு மாணவர்களை தம் தூதுக்கு பயன்படுத்துகின்றனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். நம் நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆண், பெண் கலந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளை தனித் தனி ஆண், பெண் பாடசாலைகளாக மாற்ற எந்தவித முயற்சியும் எடுக்காமை வெட்கப்பட வேண்டிய விஷயம். 

இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் கற்பித்தலை ஒரு தொழிலாக மட்டும் கருதி சேவை மனப்பான்மை இல்லாமல், கற்பிக்கின்றோம் என்ற பெயரில் தாம் கற்பிக்கும் விடயம் மாணவர்களை சென்றடைகின்றதா? அல்லது தாம் கற்பிக்கும் முறை சரியாக இருக்கின்றதா? ஒன்றும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனையும் உளவியல் ரீதியாகவே அணுக வேண்டும். ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கற்பிக்காத காரணத்தினாலேயே மாணவர்கள் பாட நேரத்தில் வேறு சிந்தனையுடனும், குறும்புத்தனத்துடனும் நேரத்தைக் கழிக்கின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்கள் கேள்விகள் கேட்கும்போது கோபப்பட்டு எரிந்து விழுகின்றனர். இவர்கள் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு பதிலாக கல்வியில் வெறுப்பை ஏற்படுத்துகின்றனர். இதனாலேயே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் சூட்டுவதற்கு அவர்களே காரணமாகின்றனர். எந்த ஒரு செயலையும் நன்மையையும், இறை திருப்தியை நாடியே செய்ய வேண்டும். 

“ஒருவரிடம் (கல்வியைப் பற்றி) கேள்வி கேட்கப்பட்டு, அதை அவர் (அறிந்த பின்பும்) மறைத்தால், மறுமை நாளில் அவருக்கு நெருப்பிலான கடிவாளம் போடப்படும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) , ஆதாரம்: அபூதாவூது 3658

சில பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக தற்காலிக (volunteersஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கின்றனர். இவர்கள் பயிற்றுவிக்கப்படாத காரணத்தினால் மாணவர்களுடன் எவ்வாறு உளவியல் ரீதியல் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாதுள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது நம் பிள்ளைகளே. இன்று முஸ்லிம் ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த இடத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊமைகளாகவே உள்ளனர். 

இன்று ஏனைய மாற்று மத நண்பர்களின் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் பாடசாலைகளே பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது. காரணம் பெற்றோர் தம் பிள்ளைகளின் கல்வியில் அக்கறைக் காட்டாமை, ஆசிரியர்களின் சேவை மனப்பான்மையற்ற நிலை, அதிபரின் நிர்வாக சீர் குழைவுகள் ஆகியனவாகும். இஸ்லாம் கல்விக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் இம்மை, மறுமை நலன்களை மக்கள் அறியாமல் செயல்படுவதே இவ் வகையான பொடுபோக்கு நிலைக்கு முக்கிய காரணமாகும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுய இலாபம் கருதாமல் தியாக மனப்பான்மையுடன் அல்லாஹ்விற்கு அஞ்சி செயற்பட வேண்டும்.  

அன்பின் ஆசிரியர்களே!

இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி நியாயமான முறையில் தெளிவான கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதின் மூலம் நமது சமுதாயத்தை முதன்மை சமுதாயமாக உயர்த்துவதற்கு உதவுவதின் மூலம் இம்மை மறுமை வாழ்வை சீராக்கிக் கொள்வோமாக!