-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதன், ஆகஸ்ட் 29

வெள்ளிக் கிழமையின் சிறப்பும் அதன் சட்டங்களும். தொடர் – 01


வெள்ளிக் கிழமையின் சிறப்புக்கள்.

ஜும்ஆ என்ற இந்த வணக்கம் ஒவ்வொரு வாரமும் செய்யக் கூடிய சிறப்பு வழிபாடாகும். நபி (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்பிருந்து ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறைவன் இதை வழங்கினான் சமுதாயங்களில் நாம் தான் கடைசி சமுதாயமாக இருப்பதனால் நமக்கு ஒரு நாளை தேர்வு செய்து வழிபாடு நடத்துவற்கு தந்துள்ளான் இது பற்றி பின்வரும் நபி மொழி நமக்கு தெளிவு படுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வௌ;ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வௌ;ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.

சனி, ஆகஸ்ட் 25

சுப்ஹுத் தொழுகையும், சோம்பேரிகளும் – (Video)



பிரிந்த உள்ளங்கள் இணையும் நாள். – பெருநாள் உரை (Video)

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக கொழும்பு, மாளிகாகந்த, வைட்பார்க் மைதானத்தில் வைத்து நடத்தப்பட்ட பெருநாள் திடல் தொழுகையில் “பிரிந்த உள்ளங்கள் இணையும் நாள்” என்ற தலைப்பில்
 ஆற்றப்பட்ட உரை.

செல்போன் கதிர்வீச்சை குறைத்து பயன்படுத்துவது எப்படி


செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’
யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து
முழுவதுமாக தப்ப இயலாது.


ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின்
கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும்.
குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள்
தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு
பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு
நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது
இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய்
கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், ஆகஸ்ட் 23

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள்.



உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள். (அல்குர;ஆன் 2: 223)
அல்லாஹ் மனைவியரை விளைநிலங்களுக்கு உவமையாக இங்கு குறிப்பிடுகின்றான். அதனைத் தொடர்ந்து உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள் என்று மேலும் தெளிவுபடுத்துகின்றான்.
இந்த அல்குர்ஆன் வசனத்தின் மூலம் மேலோட்டமாக பார்த்தால் கணவன் மனைவியிடம் எல்லா விதத்திலும் உரிமை படைத்தவன் என்று புலப்படுகின்றது. ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ‘விளைநிலம்’ என்ற சொல்லின் மூலம் நமக்கு ஏராளமான விளக்கங்களை அருளியுள்ளான். படைத்த படைப்பாளன் மட்டும் தான் முக்காலங்களும் அறிந்தவன். உலகம் அழிவதற்குள்ளான காலம் மட்டும் ஏற்படும் விளைச்சலுக்கான விளைநிலத்தை மனிதன் எவ்வாறு அணுக வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை அல்லாஹ் ‘விளைநிலம்’ என்ற சொற் பிரயோகத்தின் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.
ஒரு மனிதன் விளைநிலத்தைப் பயன்படுத்துவதன் நோக்கம் விளைச்சலைப் பெறுவதற்கே. மேலே குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் விளைநிலம் மனைவியாக இருப்பதால் விளைச்சல் குழந்தைகளாக இருக்கின்றன. விளைச்சலான குழந்தையை எதிர்ப்பார்த்து விளைநிலமாகிய மனைவியுடன் கணவன் விரும்பியவாறு அறுவடை செய்யலாம் என இந்த அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது. எல்லோரும் நினைக்கலாம் இதில் என்ன புதுமை இது தெரிந்த விஷயம் தானே என்று. ஆனால், அறுவடையின்போது விளைச்சல் பெறப்படவில்லை என்றால் தான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. வேறு வழிகளில் விளைச்சலைப் பெறுவதற்கு மனிதன் முற்படுவான். எனவே, இஸ்லாத்தில் இது கூடுமா? கூடாதா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழும்.

முன்னைய காலத்தை விட இக்கால கட்டத்தில் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் கூடுதலாக காணப்படுகின்றனர். அதே போல் நவீன கண்டுபிடிப்புக்களின் உதவியுடன் இதற்கான தீர்வு முறைகளும் வைத்தியத் துறையில் காணப்படுகின்றன. அத் தீர;வு முறைகளில் சிலவற்றை கடைபிடிப்பது மார்க்கத்திற்கு முரணானதா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்குக் காரணம் நமக்கு வாழ்க்கைக்கு வழி காட்டியாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இம் முறைகள் இருக்கவில்லையே அவர்கள் இவ்வாறு செய்யுமாறு ஏவவில்லையே என்ற மனக் குழப்பம்.
இஸ்லாம் முழுமைப் பெற்ற மார்க்கம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5: 3)
அல்குர்ஆனும், நபி வழியும் மட்டுமே பின்பற்றுவதற்கு மார்க்க ஆதாரமாகும் எனவும் அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வுக்கும், அவனது துhதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அல்குர்ஆன் 8: 46)
இவ்விரு அல்குர்ஆன் வசனங்களிலிருந்து அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் (ஆதாரமானவையாக இருக்க வேண்டும்) எல்லா வகையான பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு உண்டு என சந்தேகமில்லாமல் தெளிவாகின்றது. காரணம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
இனி, குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு வைத்தியத் துறையின் நவீன சிகிச்சை முறைகள் என்ன என்பதையும், அவை மார;க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? என்பதையும் பார;ப்போம்.
செயற்கை கருத்தரிப்பு முறைகள்.
தம்பதியினரில் கணவன் அல்லது மனைவியிடம் உடல் ரீதியான குறைபாடுகள் அதாவது பெண்ணின் முட்டையின் வளர்ச்சி போதாமை, பெண்ணின் கருவறைச் சுவரின் கலங்கள் வேறு இடத்தில் வளர;ந்து காணப்படுதல் இதற்கு  நுனெழஅநவசழைளளை கோளாறு என்பர். இதனால் கருத்தரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் குறைவு. மேலும், பெண்களில் கருக்கட்டல் நடைபெறக்கூடிய பலோபியன் குழாயின் சிதைவு, ஆண்களின் விந்துக்களின் தரக் குறைவு ஆகிய காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகின்றது.
இங்கு ஒன்றை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ் நாடினால் எந்தக் குறைபாடு இருந்தாலும் குழந்தை பாக்கியம் அமையும். சிலர் எந்தவித குறைபாடுகள் அற்றவர்களாக இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனர்.
வானங்கள் மற்றும் புமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகின்றான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்ககிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42: 49,50)
இரு வகையான செயற்கை கருத்தரிப்பு முறைகளாவன:
Intrauterine insemination (IUI) – செயற்கை விந்தூட்டல் முறை
In Vitro Fertilization (IVF) – Test tube pregnancy – பரிசோதனைக்குழாய் குழந்தை
Intrauterine insemination (IUI) - செயற்கை விந்தூட்டல் முறை.
இது ஒரு செயற்கை கருத்தரிப்பு முறையாகும். இம் முறையில் ஆணிடமிருந்து பெறப்பட்ட விந்து மாதிரி ஆய்வு கூட செயல் முறையின் மூலம் பரிசோதிக்கப்பட்டு மிக வேகமாக நகரும் விந்து ஏனைய குறைவாக நகரக்கூடிய விந்துக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு  நேரடியாக கருப்பை வாய் அல்லது கருப்பை அல்லது பலோபியன் குழாய் ஆகிய ஏதேனும் ஒன்றினுள் பெண்ணின் மாதாவிடாய் சக்கரத்தின் முட்டை வெளியாகும் காலப்பகுதியைக் கணித்து கருவியின் உதவியுடன் உட்செலுத்தப்படும். இம் முறையின் மூலம் விந்து எந்தவித தடங்களும் இல்லாமல் குறைவான துhரத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும். இயற்கையான முறையை விட இம் முறையில் கருத்தரிப்பு சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படும். கருப்பையில் விந்து வைக்கப்படுவதே இம் முறையின் விஷேட நிகழ்வாகும்.
இம் முறையினால் ஏற்படும் கற்ப விகிதமானது இதற்குப் பயன்படுத்தப்படும் அதி உயர; தொழிநுட்பத்தின் அளவுக்கு இல்லாவிடினும் இம் முறையானது மலட்டுத் தன்மை உடையவர;களுக்கு (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) ஒரு திறவுகோளாக அமைந்திருக்கின்றது.
In Vitro Fertilization (IVF) – Test tube pregnancy  - பரிசோதனைக்குழாய் குழந்தை.
இதுவும் ஒரு செயற்கை கருத்தரிப்பு முறையாகும். இச் செயல்முறையின் மூலம் செயற்கையான கருக்கட்டல் மனித உடலுக்கு வெளியே ஆய்வுகூடத்தின் சோதனைக் குழாயில் நடைபெறுகின்றது. இதனாலேயே இம் முறையில் பிறக்கும் குழந்தை Test tube Baby என அழைக்கப்படுகின்றது. இம்முறை பலோபியன் குழாய் சேதமடைந்தவர்களுக்கும், முன்னர் குறிப்பிட்ட IUI முறையின் கீழ் சிகிச்சை பெற்று சிகிச்சை பயனளிக்காதவர்களக்கும், ஏனைய சில காரணங்களால் கருத்தரிப்பு அடையாதவர்களுக்கும் உகந்தது. வைத்தியர்களின் ஆலோசனை இம்முறையில் சிகிச்சை பெறும் பெண்கள் 38 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதே சிறந்தது. இது மிகவும் சிக்கலான செயல்முறையாகவும், அதிகமான செலவையும், நேரத்தையும் கொண்டதாகவும் இருக்கின்றது. இச் சிகிச்சை முறை வெற்றி அளிக்கக்கூடிய விகிதம் 15-30% ஆகும்.
இச் சிகிச்சை முறைக்கு தம்பதியினர் ஏற்றவர்கள் என முடிவு செய்யப்பட்ட பின் விந்து பகுப்பாய்வு (semen analysis) விந்து கலாச்சாரம் (semen culture), ஹார்மோன் சார் மதிப்பீடு, மாதவிடாய் சுழற்சி மதிப்பீடு ஆகிய சோதனைகள் மேற்கொள்ளப்படும். பெண்ணின் முட்டைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க மருந்துகள் கொடுக்கப்படும். இதனால் பல தகுந்த வளர்ச்சியடைந்த முட்டைகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன. இவற்றில் ஒன்று முதலில் குறிப்பிட்டது போல் பிரித்தெடுக்கப்பட்ட வேகமாக நகரக்கூடிய விந்துடன்  சோதனைக்குழாயில் கருக்கட்டச் செய்யப்பட்டு வெற்றிகரமாக கருவறையில் உள்வைக்கப்படும். கருவின் வளர;ச்சியின் முன்னேற்றம் பெண்ணின் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை அல்லது செவி உணரா ஒலி (ultrasound) மூலம் கணிக்கப்படுகின்றது.
செயற்கை முறையினால் கூட கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள்.
சில தம்பதியினருக்கிடையே சில நிரந்தரமான குறைபாடுகள் காணப்படலாம். அதாவது கணவனின் விந்தின் செயற்பாடு போதாமை, ஹார்மோன் சமனிலையின்மை, இன்னும் ஏராளாமான கெட்ட பழக்க வழக்கங்களின் மூலம் ஏற்படும் குறைபாடுகள், மனைவியின் முட்டை தகுந்த வளர்ச்சியடைந்து காணப்படாமை, ஹார்மோன் சமநிலையின்மை, பாதிக்கப்பட்ட சூலகங்கள், பலோபியன் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு,  Endometriosis கோளாறுகள் (கருவறைச் சுவரின் கலங்கள் வேறு இடத்தில் வளர;ச்சியடைதல்), கருப்பையில் ஏற்படும் கட்டிகள் (Polycystic ovary syndrome) போன்ற காரணங்களால் ஒரு பெண் செயற்கை முறைகளாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்களை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகையால் தற்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியில் தம்பதியினருக்கு வேறு ஆணிடமிருந்து விந்தையோ அல்லது வேறு பெண்ணிடமிருந்து முட்டையையோ நன்கொடையாக பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. இதற்காக விந்து மற்றும் முட்டை வங்கி (Sperm and egg Bank) உலகில் காணப்படுகின்றது. அது மட்டுமில்லாது கருப்பையில் குழந்தையை சுமக்க முடியாத நோய்க் காரணிகளைக் கொண்டவர்களுக்கு வாடகை தாய்மார்கள் (Surrogate Mother) அதாவது பிற தம்பதியினருடைய அல்லது பிற ஆணினது குழந்தையை செயற்கை கருத்தரிப்பு முறையான Test tube முறை மூலம் கருக்கட்டப்பட்ட நுகத்தை  தன் கருப்பையில் சுமந்து பிரசவித்துக் கொடுக்கும் பெண்ணே வாடகைத் தாய் என்று அழைக்கப்படுகிறாள்.
விந்து அல்லது முட்டை நன்கொடை, வாடகைத் தாய், இஸ்லாத்தில் கூடுமா?
மேலுள்ள தகவல்களின் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறைகளுக்கு தம்பதியினருடைய அல்லாத வேறு நபர்களுடைய விந்து அல்லது முட்டையும் கருத்தரிப்புக்கு பயன்படுத்தப்படுவது தெளிவாகின்றது.
மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தில் உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்’ என்பதிலிருந்து ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதற்கு அந்த தம்பதியினரின் ஈடுபாட்டைத் தவிர வேறு எந்த நபரின் பங்களிப்பிற்கும் அனுமதி இல்லை. அத் தம்பதியினருக்கு வேறு ஒருவரின் முட்டையையோ அல்லது விந்தையோ அல்லது கருவறையையோ பயன்படுத்த அனுமதி இல்லை. விளைநிலம் என்பது விளைச்சலைத் தரக்கூடியது. எனவே தான் எல்லாம் வல்ல அல்லாஹ் மனைவியரை ‘விளைநிலம்’ என உவமையாக்கி மனைவியிடம் மட்டுமே விளைச்சலை விரும்பியவாறு பெற்றுக் கொள்ளுமாறு ஏவுகின்றான்.
ஒருவருக்கு இஸ்லாம் அனுமதித்த ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால் கருத்தரிப்பிற்கு சாத்தியம் இல்லாத, கருப்பையில் குழந்தையை சுமக்க முடியாத மனைவிக்காக மற்ற மனைவியின் கருவறையில் சோதனைக் குழாயில் கருக்கட்டப்பட்ட நுகத்தை உட்பதிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. காரணம் அந்த கணவரைப் பொருத்தவரை இரு மனைவியரும் அவரது விளைநிலங்களாகும்.
இதிலிருந்து தம்பதியினர; செயற்கை முறையில் குழந்தையை நாடினால் அவர்களின் விந்து, முட்டை அல்லாத வேறு நபர்களினது விந்து அல்லது முட்டையை பாவிப்பது கூடாது என்றும், தம்முடைய விந்து, முட்டை ஆகியவற்றால் உருவான கருவாக இருந்தாலும் வேறு ஒரு கருப்பையில் பதிப்பது அதாவது வாடகைத் தாய் கூடாது எனவும் தெளிவாகின்றது. தம்முடைய குழந்தையின் உருவாக்கத்தை எதிர்பார்த்து தம்பதியினர் அல்லாத மூன்றாவது நபரின் பங்களிப்பிற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ் மனிதர்களிடம் ஏற்படும் பல சிக்கல்களுக்கு தீர்வு அளிக்கின்றான்.
ஆக்கம் : பாத்திமா ஷஹானா

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? - ஆப்பரேட்டிங் சிஸ்டம்!


டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் 
சிஸ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். 
அது பற்றிய சில எளிமையான குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.

கம்ப்யூட்டரின் உயிர்

நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் 
கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற 
ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க 
ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. ஆப்பரேட்டிங் 
சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. 
அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் 
கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் 
ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; 
அது இல்லாமல் இது இல்லை.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்

உலோகம் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு ஆக்கப்பட்ட உயிரற்ற ஒரு 
பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, டிவி போன்ற பொருட்களை 
எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும்
என்று வரையறுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் 
இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு 
வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் 
பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய 
ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். 
புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, 
ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.

குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் 
எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு 
புரோகிராம் எழுதலாம். 
வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் 
தேவைப்படலாம்.

நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை 
சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது 
சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் 
சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் 
பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் 
ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் 
சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது 
ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

என்ன வேலைகளைச் செய்கிறது?

கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது 
ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு/வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் 
கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் 
சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள 
கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, 
அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து 
அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் 
கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், 
அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் 
டைப் செய்கிற விவரங்களை அமைக்கும் இடம், டிஸ்க்கிலுள்ள பைலை 
படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் 
போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 
அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். 
இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும்
இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த 
ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை 
இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) 
கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான 
பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. 
பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் 
செய்ய போன்ற வேலைகளை நீங்கள் கட்டளை தருகையில் 
ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது. 

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்

எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த 
மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் 
சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் - ஒரு பணி (Single User Single task)
2) ஒரு பயனாளர் - பல பணி (Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி (Multy User Multi task)

ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே, அதுவும் ஒரு பணியினை 
மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் 
சிஸ்டத் தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், 
முதல் பணியை அவர் மூட வேண்டும். பழைய DOS 
ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.

இப்போது இதனை இவ்வகையில் நாம் பயன்படுத்துவதில்லை ஒரு 
நேரத்தில் ஒருவரை மட்டுமே ஆனால் அவர் எவ்வளவு பணிகளை 
வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை 
ஒரு பயனாளர்/பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் 
சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல 
பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு 
வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட 
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், 
லினக்ஸ், விண்டோஸ் என்டி, விண்டோஸ் சர்வர் ஆப்பரேட்டிங் 
சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.

செவ்வாய், ஆகஸ்ட் 21

வாசுதேவநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் ழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளையில் கடந்த 20-08-2012 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.




வாசுதேவநல்லூரில் ரூபாய் 32,220 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் நகர 


கிளை சார்பாக கடந்த 19-8-2012 அன்று 80 நபர்களுக்கு ரூபாய் 32,220 மதிப்பில் 


ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.


ஞாயிறு, ஆகஸ்ட் 19

ஃபித்ரா-பெருநாள்-ஆறு நோன்பு!


நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான். (அல்குர்ஆன் 5:9)

நோன்புப் பெருநாளை ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் காட்டியுள்ள அழகிய செயலே ஸதக்கத்துல் ஃபித்ர் என்னும் இந்த நோன்புப் பெருநாள் தர்மம். நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொரு முஸ்லிமும் கொடுக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.

அடிமைகள், அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரிச்சம்பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனும்(அளவை) நபி(ஸல்) அவர்கள் நிர்ணையித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புஹாரி 1503, முஸ்லிம்


மேலே கூறப்பட்ட ஹதீஸில், நோன்புப் பெருநாள் தர்மம் என்பது நமக்கெல்லாம் கட்டாயக் கடமை என்பதும், அதைப் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் கொடுத்து விட வேண்டும் எனவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள். 

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் (பெருநாள்) தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: அபூதாவூத்

மேலே கூறப்பட்ட ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுப்பதையும், பின்பு கொடுப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்கள். பெருநாள் தொழுகைக்குப் பினனால் கொடுத்தால் ஏழைகளுக்கு பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதை சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.

யாருக்குக் கடமை!

மேற்கண்ட ஹதீஸில், நோன்பில் ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதாக கூறினாலும், நோன்பு நோற்காதவர்களுக்கும் இது கடமையாகும். மேற்கண்ட ஹதீஸில் நோன்பின் தவறுகளுக்கு பரிகாரமாக வேண்டும் என்றும், ஏழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்றும் இரு நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன.

நோன்பு நோற்றவர்கள் இந்த இரு பயன்களையும் பெற்றுக் கொள்ளலாம். நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட உதவுவதால் ஏற்படும் நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே ஒருவர் தமக்காகவும், தமது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மற்றும் தமது பராமரிப்பிலுள்ள அனைவருக்காகவும் இந்த பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும். 

ஃபித்ராவின் அளவு!

தமது பராமரிப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸாவு' அளவு என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். ஸாவு என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினால் எவ்வளவு வருமோ அந்த அளவே ஒரு 'ஸாவு' (சுமார் இரண்டரை கிலோ) எனப்படும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி, பேரிச்சம்பழம் ஆகியவை தான். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: புஹாரி 1510
எப்படி கொடுப்பது?!

ரமளானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி(ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புஹாரி 3275, 5010

நாஃபிஉ (ரஹ்) கூறுகிறார்கள்...

மேலும் பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித் தோழர்கள் (இந்த தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். (புஹாரி 1511)

நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தில் ஒரு ஸாவு என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்ட ரகமான பேரிச்சம்பழங்களை கொண்டு வந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் (பெற்றுக் கொள்ளாமல்) இந்த பழத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா(ரலி) நூல்கள்: ஹாகீம்

இதன் மூலம் தர்மம் செய்யப்படும் பொருள் தரமானதாகவும், நிறைவானதாகவும் இருக்க வேண்டும். மேலும் ஃபித்ராவை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்பதையும், கூட்டாக வசூலித்து வினியோகம் செய்யலாம் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாளின் சிறப்பு!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது மதீனாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனா வாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் இந்த இருநாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது எனக் கேட்டார்கள்? அதற்கு அவர்கள் அறியாமைக் காலத்தில் (இந்த நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம். என்றனர். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்கு பதிலாகவும் அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், 'பித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான். என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவூத் 1004

இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) செய்வதும் கேட்பதும், வேறு சில கடமைகளை செய்வதும் நபிவழியாகும்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு மற்றும் ஹஜ்ஜு பெருநாட்களில் முஸல்லா எனும் மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அபு ஸயிது அல் குத்ரி(ரலி) - புஹாரி 956

இந்த ஹதிஸின் அடிப்படையில் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழாமல் திடலுக்கு சென்று தான் தொழ வேண்டும். அதுவும் நாம் வாழ்ந்து வரும் துபையில் பிரத்தியேகமாக பெருநாள் தொழுகைக்கென்றே ஈத்கா அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு சென்று தான் தொழ வேண்டும். 

'நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், 2வது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள். இவ்விரண்டு தக்பீர்களையும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) – திர்மிதி 492, அபுதாவுத்

சாதாரண தொழுகையில் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையில் உண்டு. 12 தக்பீர்கள் மட்டும் தான் மேலதிகமான செயலாகும். 

அதே போல் இவ்வாறு இமாம் தக்பீர் கூறும் போது கைகளை காது வரை உயர்த்தி அவிழ்த்து கட்டும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அவ்வாறு இருந்ததாக ஹதீஸ்களில் காணப் படவில்லை. ஏனெனில் தக்பீர் என்பது வாயால் சொல்வது தான் என்பதை நாம் விளங்கி செயல்பட வேண்டும். ஆதாரமில்லாத செயல்களை செய்து நம் தொழுகைகளை பாழ்படுத்தி விடக்கூடாது.

 பெருநாள் தினங்களில் தக்பீர் என்ற பெயர்களில் நாம் பல விதமான வாசகங்களை சொல்லி வருகிறோம். அவ்வாறு ஓதுவதற்கு நபிவழியில் எந்த விதமான ஆதாரமும் இல்லை. வரக்கூடிய ஹதீஸ்கள் அத்தனையும் பலவீனமானவையாகும். எனவே இவ்வாறு ஓதுவதை விட நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை அதிகமதிகம் ஓதலாம். மேலும் பெருநாள் தொழுகை முடிந்தவுடன் உரை நிகழ்த்துவார்கள்.

'நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையை துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்கு போதனை செய்தார்கள்.  அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) - புஹாரி 961

இதனடிப்படையில் குத்பா உரையை கேட்க வேண்டும் என அறிய முடிகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் தொழுகை முடிந்தவுடன் இடத்தை விட்டு வெளியேறி விடுகிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பெண்கள் பகுதிக்கும் சென்று உரை நிகழ்த்தினார்கள் என்றால் பெருநாள் உரை எந்தளவுக்கு அவசியம் என்பதை உணர்ந்து உரை முடிந்தவுடன் கலைந்து செல்வது தான் நபி வழியாகும்.

பெருநாள் தொழுகையில் பெண்கள்!

'பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும் கூடாரத்திலுள்ள கண்ணிப் பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்கு பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா(ரலி)- புஹாரி 971

பாதையை மாற்ற வேண்டும்!

பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள்அ ஒரு (போவதற்கும்  வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.  அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூல்கள்: புகாரி 986

ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால்...

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்த பெருநாள் தொழுகையை தொழுகின்றாரோ அவர் ஜும்மா தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்மா தொழுகையை நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர் : அபுஹுரைரா(ரலி) - அபுதாவுத் 907

ஷவ்வால் மாத ஆறு நோன்பு!

அதேப்போல் ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

'யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் :  அபூ அய்யுப்(ரலி) நூல்கள்: முஸ்லிம் 1984, திர்மிதி, அபுதாவுத்

மேலும் நம் பகுதியிலுள்ள மக்கள் இந்த நோன்பை பெண்களுக்கு உண்டானது என்று கூறி ஆண்கள் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் அப்படி கட்டளையிடவில்லை. அதனால் சுன்னத்தான நோன்பு தானே என அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ்வின் அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும். 

பெருநாளை தொடர்ந்து ஷவ்வால்  மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள் செய்திடுவானாக!

இந்த ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் தர்மம் அனைத்து ஏழைகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வும், அவனது ரஸுலும் காட்டித்தந்த வழியில் ஆண்டுதோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உலகம் முழுவதும் உள்ள தமிழ் முஸ்லிம்களிடமிருந்து வசூல் செய்து தாயகத்திலுள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட தேவையான உணவுப் பொருட்களை கண்ணியமான முறையில் வினியோகம் செய்து அல்லாஹ்வின் பேரருளால் அரும்பணியாற்றி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அதன் முறையான கணக்கு விபரங்களை உணர்வு வார இதழில் வெளியிட்டு வருகிறது. சென்ற ஆண்டு வளைகுடா வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களிடம் மட்டும் வசூல் செய்த   தொகை  ஏறத்தாழ  ரூ.8லட்சம்.அதை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்துள்ளது. எனவே இவ்வருடமும் தங்களின மேலான ஆதரவை அல்லாஹ்வுக்காக நல்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

புதன், ஆகஸ்ட் 15

பர்மா (மியன்மார்) வில் தினமும் அழிக்கப்படும் முஸ்லீம்கள். – உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்?

மியன்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் கடந்த சில நாட்களாக அங்கு வாழும் முஸ்லீம்களை அங்குள்ள அரசு துட்டுக் கொண்டு குவித்து வருகின்றது.
பா்மாவில் வாழும் மக்களில் சுமார் 15 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள் அதில் 10 லட்சம் பேர் பர்மாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பர்மியர்கள் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வங்காலத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள்.
எகிப்தில் இருக்கும் ஒரு ஷரீஆ கல்லூரியில் கல்வி பயின்று வரும் பர்மாவைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி இது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் பர்மாவில் வாழும் முஸ்லீம்களின் தற்போதைய நிலையை தெளிவாக விளக்குகின்றது.
“அல் வதனுல் மிஸ்ரிய்யா” என்ற பத்திரிக்கைக்கு ஆயிஷா ஸூல்ஹி அளித்துள்ள பேட்டியில் பின்வரும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பர்மாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம் இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும் என்று துன்புறுத்தப் படுகின்றார்கள். ஆனால் அங்குள்ள முஸ்லீம்கள் மரணத்தைத் தான் தங்கள் தேர்வாக எடுத்துக் கொள்கின்றார்கள்.
பர்மாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலைச் செய்யப்படும் பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?
பர்மா முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை மற்றவர்களுக்கு கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் மிக முக்கிய செய்தியாகும்.
பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்.” இவ்வாறு ஆயிஷா ஸூல்ஹி கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பற்றி வாய் திறக்காத ஆங் சாங் சூகி.
ஜனநாயக ரீதியில் போராடியமைக்காக பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டவரும், பர்மாவின் முக்கிய எதிர்க் கட்சியான நேசனல் லீக்ஃபார் டெமோக்ரெஸியின் (என்.எல்.டி) தலைவரும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவருமான “ஆங் சாங் சூகி” முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை தொடர்பில் இது வரைக்கும் மவுனம் சாதித்து வருவது அங்குள்ள முஸ்லீம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங் சாங் சூகியின் மவுனம் தொடர்பில் பங்காஷ் பிரஸ் டி.வி யில் கருத்து வெளியிட்ட “ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி” அவர்கள் “ஆங் சாங் சூகி” யின் மவுனம் குற்றகரமானது என சாடுகின்றார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த “சூகி” பர்மா முஸ்லீம்கள் அந்நாட்டு குடிமக்கள் தானா? என்ற கேள்விக்கு தெரியாது என்று லாவகமாக பதிலளித்து தப்பித்துக் கொண்டார்.
சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர் தனது நாட்டின் குடிமக்கள் தாக்கப்படுவது குறித்து அமைதியாக இருப்பதும், அவர்கள் தனது நாட்டினர் தானா என்பதே தெரியாது என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த கொடூர நிகழ்வுகள் தொடர்பில் இது வரைக்கும் எந்த உலக நாடுகளும் வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றன. குறிப்பாக எந்த அரபு நாடும் இது தொடர்பில் கருத்துக்களோ கண்டனங்களோ தெரிவிக்கவில்லை. என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயமாகும்.
அன்பின் இஸ்லாமிய உறவுகளே!
பர்மாவில் நமது சகோதரன் கொல்லப்படுகின்றான், நம் சகோதரிகள் கற்பழிக்கப்படுகின்றார்கள், இவர்களுக்காக நமது இரு கரங்களையும் ஏந்தி ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.