-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், மே 17

காதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?


காதல் என்பது விபச்சாரத்திற்கு நிகரானது என்று கூறுகின்றார்களே! இது சரியா? விளக்கவும். - சாதிக் பாதுஷா, மேலப்பாளையம்

''விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான்.  அதை அவன் அடைந்தே தீருவான்.  கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்.  நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்.  மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது.  பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது;  அல்லது பொய்யாக்குகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை. திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வ­யுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ர­) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், ''நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள்.  அவர் இல்லை என்று கூறினார்.  உடனே நபி (ஸல்) அவர்கள், ''பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்'' என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)

காதல் என்பது விபச்சாரத்திற்கு நிகரானது என்று கூறுகின்றார்களே! இது சரியா? விளக்கவும். - சாதிக் பாதுஷா, மேலப்பாளையம்

''விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான்.  அதை அவன் அடைந்தே தீருவான்.  கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்.  நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்.  மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது.  பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது;  அல்லது பொய்யாக்குகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை. திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வ­யுறுத்தியுள்ளனர்.

முகீரத் இப்னு ஷுஃபா (ர­) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், ''நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள்.  அவர் இல்லை என்று கூறினார்.  உடனே நபி (ஸல்) அவர்கள், ''பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்'' என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)