-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சனி, ஜூன் 30

ஏழை மாணவிக்கு கல்வி உதவி



நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக 29/06/12 – வெள்ளிக் கிழமை அன்று ஏழை மாணவிக்கு ரூ.2000 கல்வி உதவி வழங்கப்பட்டது



வியாழன், ஜூன் 28

ஆயிரங்களில் இஸ்லாத்தில் நுழைந்தவா்கள், தற்போது லட்சத்தில் நுழைகிறார்கள்.



நவீன உலகின் பலம்மிக்க சக்தி இஸ்லாமே!
இன்றைய நவீன உலகை ஆளும் தகுதி படைத்த ஒரே வார்த்தை இஸ்லாம் மாத்திரமே!
எந்தவொரு மதத்தினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்திய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு.
இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களை கூட தன் தூய கருத்தினால்,உண்மை செய்திகளினால் உள்ளிழுத்து நேர்வழியின் பக்கம் அவா்களை கொண்டு வந்த சத்திய மார்க்கம் தான் இந்த இஸ்லாம்.
நபியவா்களின் காலத்திலிருந்து இன்று வரை இஸ்லாத்தை எத்தனையோ சக்திகள் அழிக்க நினைத்த போதும்,இறுதியில் இஸ்லாமே வெற்றிவாகை சூடியுள்ளது.
இன்று வல்லரசுகள் என்று தங்களை மார் தட்டிக் கொள்ளக் கூடிய எத்தனையோ நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக காய் நகர்த்தினாலும் அந்த நாடுகளில் இஸ்லாம் கிளை விடுவதை அவா்களால் தடுக்க முடியவில்லை.

உயிரைக் கொடுத்து பைபிளைப் பொய்யாக்கிய பாதிரியார் !

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
பாம்புகளை கையில் எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.
(மாற்கு : 16 : 17 முதல் 19 வரை)
மேற்கூறப்பட்டுள்ள வசனங்கள்தான் ஒரு கிறித்தவர் அவர் உண்மையான கிறித்தவரா?அல்லது போலி விசுவாசியா?என்பதை அறிந்து கொள்வதற்காக கர்த்தர் பைபிளில் சொல்லியுள்ள வாசகங்கள். அற்புதமான வசனங்கள்(?).

சனி, ஜூன் 23

”மம கட்சியின் சமுதாயத் துரோகம்” பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு!


சென்னை: வருகின்ற 24.06.2012 ஞாயிறு இரவு 7.00 மணி முதல் 10.00 மணிவரை மமகட்சியின் சமுதாயத் துரோகத்தை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மண்ணடியில் நடக்கும் பொதுக்கூட்டம் நேரடியாக ஒளிபரப்பாகும். பயிற்சி மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று கூறுகெட்ட அறிக்கை வெளியிட்டுள்ள ஜால்ரா சட்டமன்ற உறுப்பினரின் மடமையையும் சமுதாயத்துக்குச் செய்த துரோகத்தையும் பீ.ஜைனுல் ஆபிதீன், கோவை ரஹ்மதுல்லா ஆகியோர் அம்பலப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ்!
இந்த நிகழ்ச்சி www.onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்!


வியாழன், ஜூன் 21


மாணவர்களுக்காக...

மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது.மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன.உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது...

படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் பேசும் போது..
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன'' (அல்குர்ஆன் 3:190)

புதன், ஜூன் 20

மிஃராஜ் தரும் படிப்பினை!


கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்' (அல்குர்ஆன் 17:1)

விண்ணகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும். இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்போர் நம்மில் மிகச் சிலரே...

இன்னும் சிலரோ மிஃராஜின் தாத்பரியத்தை தாங்களும் உணராமல் சமுதாயத்தையும் உணரச்செய்யாமல் மிஃராஜ் தினத்தில் சில சடங்கு,சம்பிரதாயங்களை கொண்டாடி விட்டு குறுகிய பலன்களை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

பரபரப்புடன் திருச்சியில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!


திருச்சி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று 19.06.2012  அன்று திருச்சி எல்கேஎஸ் மஹாலில் சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
முதலாவதாக மாநிலத் துனைத் தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மாநில நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை குறிப்பிட்டு செயற்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார்கள்.


திங்கள், ஜூன் 11

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்! முஸ்லிம்கள் கொந்தளிப்பு! முற்றுகைப் போராட்டம் அறிவித்தது TNTJ!



தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

வியாழன், ஜூன் 7

தப்லீக் தாலீமை பின்பற்றலாமா?


கேள்வி : சுன்னத் ஜமாத்தினர் தஹ்லீம் என்ற ஒன்றை வாசிப்பார்கள் அதில் ஹதீஸ் இல் உள்ளதை தன solhirahal என்று ஒரு சஹோதரர் சொன்னார் அதை பற்றி விளக்கவும். 

பதில் : சுன்னத் ஜமாத்தினர் வாசிக்கும் தஃலீம் தொகுப்பிற்கு “தப்லீக் தஃலீம் தொகுப்பு” என்று சொல்லுவார்கள். ஜக்கரிய்யா சாஹிப் என்ற ஒருவரினால் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் ஆரம்பமாக சில குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இடம் பெற்றிருப்பது உண்மை.

தொழுகையின் சிறப்பு,ஸதகாவின் சிறப்பு, ரமலானின் சிறப்பு என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இந்த நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வாரத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன. ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன்பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை சொறுக ஆரம்பித்து விடுவார்.

 ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் தஃலீம் தொகுப்பு மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்று விடுவதால் அடுத்தடுத்து புத்தக ஆசிரியர் ஜக்கரிய்யா சாகிப் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை.

தஃலீம் தொகுப்பில் மார்க்கத்திற்கு முரனான பல நச்சுக் கருத்துக்கள் அடங்கியிருப்பதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டோம் அதனடிப்படையில் அதில் உள்ள மார்க்கத்திற்கு முரனான செய்திகளில் சிலதை மட்டும் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகின்றோம்.

இளைய சமுதாயத்திற்காக!


உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70) 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி)

இளமை! இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை! வளம் பொருந்திய ஆக்கங்களுக்கும், வீரதீரமிக்க சாகசங்களுக்கும் உண்டான செயல் களமே இளமை! தயக்கமும் தடுமாற்றங்களும் இன்றி தரம் உயர்ந்த கனவுகளை மெய்ப்படுத்த முயற்சிக்கும் அருமையான காலகட்டமே இளமை!

செவ்வாய், ஜூன் 5

கொள்கை உறவே! குருதி உறவு!!


ன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தவர்கள் ஒரு தனிமையை உணர்ந்தனர். சில ஊர்களில் கொள்கையை ஏற்ற ஒருவர் மட்டுமே இருப்பார். சில இடங்களில் இருவர்; சில இடங்களில் மூவர் அல்லது நால்வர்; அதிகபட்சமாக பத்து பேர் அவ்வளவுதான்...!

இப்படி இருந்த இந்தக் கொள்கையாளர்கள் பத்து நூறாகஇருபது இருநூறாக படிப்படியாகப் பல்கிப் பெருகி இன்று இலட்சக்கணக்கில் வளர்ந்து ஒரு தனிப்பெரும் தவ்ஹீத் சமுதாயமாக உருவெடுத்துள்ளனர். 


ஏகத்துவக் கொள்கை புகுந்த ஊரெல்லாம் ஒரு கூரை வேயப்பட்ட பள்ளி கண்டுஐங்காலத் தொழுகைகள்ஜகாத்நோன்புஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளிலும்திருமணம் போன்ற வாழ்க்கை விவகாரங்களிலும்இறந்தவருக்குச் செய்கின்ற ஜனாஸா இறுதிக் கடமைகள் வரை அனைத்திலும் முழுமையாகக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும் பின்பற்றுகின்ற ஒரு கொள்கைப் பிடிப்புள்ள ஜமாஅத்தாகச் செயல்பட்டு வருகின்றது.

திங்கள், ஜூன் 4

தொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.

தொலைக்காட்டி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக் காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம்.
நாட்டு நடப்புக்கள்மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள்சமுதாய விளிப்புணர்வுத் தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலே இருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை.
ஆம் திரைப்படத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணி நேரங்கள் வீனடிக்கப்படுகின்றனவென்றால், தொலைக்காட்சித் தொடர்களுக்கு நாளும் பல மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டு குடும்பமே அமர்ந்து ரசிக்கும் நிலை உருவாகியுள்ளது.
குடும்பப் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.
இளைஞர்களுக்கான உற்சாகமூட்டும் தொலைக்காட்சித் தொடர் நாடகம்.
இளம் பெண்களின் எண்ணத்திற்கேற்ற தொடர் கதை.
சிறுவர்களை வயப்படுத்தும் தொடர் நாடகம்.
வயோதிபர்களின் வயதுக்கேற்ற நாடகம்.
என்று பல வித்தியாசமான விளம்பரங்களுடன் ஒளிபரப்பப்படுகின்றன இன்றைய நாடகங்கள்.
இந்தியா, இலங்கை போன்ற ஆசிய தமிழ் பேசும் மக்களைத் தாண்டி உலகலவில் பல நாடுகளிலும் இந்த தொலைக் காட்சித் தொடர் நாடகங்கள் பிரபலம் பெற்றுள்ளன.
தொலைக்காட்சித் தொடர்களும்விபரீதங்களும்.

நபிவழிப்படி ஜனஸா அடக்க மறுப்பு! TNTJ முயற்சியால் ஜனஸா அடக்கம்!


ராஜாகிரி: தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி சித்தீக் அவர்களின் தந்தை கடந்த 31.05.2012 அன்று மர்ஹீம் ஆகிவிட்டார்கள். இவரின் ஜனஸாவை ராஜகிரியில் உள்ள பள்ளியில் நபிவழிப்படி அடக்கம் செய்வதற்கு ஊர் சுன்னத் ஜமாஅத்தினர் பல தடைகளை ஏற்படுத்தினர்.
பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜனஸாவை நபி வழிப்படி அடக்க செய்ய மறுத்துவிட்டனர். இந்த செய்தியை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த கொள்கை சகோதரர்கள் ராஜகிரியில் திரள ஆரம்பித்துவிட்டணர்.

ஜனஸாவை நபிவழிப்படி அடக்கம் செய்ய மையாவாடி (மைய்யத் அடக்கம் செய்யும் இடம்) திறந்துவிடவில்லை என்றால் தடையை மீறி மையவாடியின் பூட்டை உடைத்து அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


நிலைமையின் அவசியத்தை புரிந்து கொண்ட காவல்துறை இரு தரப்பியையும் அழைத்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்தை நடத்தியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நபிவழிப்படிதான் அடக்கம் செய்வோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.

இருதரப்பின் கருத்துகளையும் கேட்ட தாசில்தார் நபிவழிப்படி அடக்கம் செய்ய சுன்னத் ஜமாஅத்தினரை மையாவாடியை திறந்துவிடும்ப்படி உத்தரவு பிறப்பித்தார்.


இதன் பின்னரும் தாசில்தார் உத்தரவுக்கு செவிசாய்க்கமல் மையாவாடியின் சாவியை சுன்னத் ஜமாஅத்தினர் கொடுக்கவில்லை. இதனால் மையாவாடியின் பூட்டை உடைத்து அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டு,  ஜனஸாவை மையாவாடி நோக்கி தஞ்சை வடக்கு மாவட்ட துனை தலைவர் சுவாமிமலை ஜாபர் தலைமையில் கொள்கை சகோதரர்கள் எடுத்து சென்றனர்.


இந்நிலையில் காவல்துறை சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளை மையவாடியை திறந்துவிடும்ப்படி எச்சரித்தனர். இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகி ஒருவர் நபிவழிப்படி அடக்கம் செய்ய மையாவாடியை திறந்துவிட்டார்.

பின்னர் நபிவழிப்படி தனது தந்தைக்கு சித்தீக் அவர்கள் தொழுகை நடத்தினார். இதனை தொடர்ந்து ஜனஸா அடக்கம் செய்யப்பட்டது. 


இந்த ஜனஸா தொழுகையில் 2,500-க்கும் மேற்ப்பட்ட கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! 

நபி (ஸல்) அவர்கள் பிற மத ஜனஸா உங்களை கடந்து சென்றாலும் எழுந்து நிற்க வேண்டும் என்று சொல்லும் மார்கத்தில் நபிவழிப்படி அடக்கம் செய்ய மறுப்பவர்களே சிந்திக்க வேண்டும். அல்லாஹ்தான் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்:

முஸ்லிமின் உடலோமுஸ்லிம் அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.
'உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க வேண்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)’ நூல்: புகாரி 1308
ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்தோம். 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸாஎன்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 1311, 1313

தகவல்: ராஜகிரி சீத்திக்,
துபை.

சனி, ஜூன் 2

தக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.


தவ்ஹீத் ஜமாத்தாஅல்லது தக்லீத் ஜமாத்தா?
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை தடுக்க நினைக்கும் சில சுயநலவாத சிந்தனை கொண்ட கயவர்கள் தவ்ஹீத் ஜமாத் மீதும் தவ்ஹீத் வாதிகள் மீதும் பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள் அந்த குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச் சாட்டு தவ்ஹீத் வாதிகள் தக்லீத் (தனி மனித வழிபாடு)செய்கிறார்கள் என்பதாகும்.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்பகாலங்களில் நாம் குர்ஆனும்,ஹதீஸ{ம் மாத்திரம் தான் மார்க்க ஆதாரம் மத்ஹபுகளோ இமாம்களோ தரீக்காக்களோ மார்கத்தின் ஆதாரங்கள் இல்லை என்று உடைத்துப் பேசுகின்ற போதெல்லாம்.நம்மை எதிர்த்தவர்கள் நம்மீது சொன்ன குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமானது.
இவர்கள் இமாம்களைத் திட்டுகிறார்கள்.
இமாம்களை இவர்கள் மதிப்பதில்லை.
இது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் மக்கள் மன்றில் வைக்கப் பட்டது.
அல்லாஹ்வின் பேருதவியால் அந்த அனைத்து வாதங்களும் அடித்து நொருக்கப் பட்டது.
இப்போது நம்மை நோக்கி இவர்கள் ஸஹாபாக்களை திட்டுகிறார்கள்.
பி.ஜெயை கண்மூடிப் பின்பற்றுகிறார்கள்
என்றெல்லாம் பரப்பி வருகிறார்கள்.
அதாவது ஸஹாபாக்கள் ஈமானிலும்,தியாகத்திலும் நம்மை விட பண்மடங்கு உயர்ந்தவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் அவர்களின் சொந்தக் கருத்து மார்கத்தின் ஆதாரமாகாது.என்பதுதான் நமது வாதம்.
சகோதரர் பி.ஜெ அவர்கள் ஒரு சிறந்த மார்க்க அறிஞர் பண்முக ஆளுமை கொண்டவர் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் அவர் சிறந்த அறிஞர் என்பதற்காக எந்தத் தவ்ஹீத் வாதியும் அவரின் கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதில்லை பின்பற்றவும் கூடாது.
இன்றைக்கு இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் சிலர் தாங்கள் எடுத்து வைக்கும் தவறான வாதங்கள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போவதாலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் அபார தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளதாலும் அவரை எதிர்க்க தங்களுக்கு திராணியில்லாததினால் தக்லீத் என்ற ஒரு கோஷத்தை இன்று கையிலெடுத்துள்ளார்கள்.
தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமன்றி அரபுலகத்திலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் மார்க்கம் தொடர்பான கருத்துக்கள் இன்று மெச்சப்படுவது அனைவரும் அறிந்ததே!