-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், டிசம்பர் 13

பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :
கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
நெல்லை மாநகரில் இருக்கும் மண்டபங்களிலேயே மிகப்பெரியது இந்த பார்வதி மஹால்தான். இருந்தாலும் மக்கள் வெள்ளத்தால் இதுவும் கூட இடப்பற்றாக்குறையாய் இருந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கம் காலை 10 மணிக்கே நிரம்பி வழிய ஆரம்பித்தது. அரங்கத்தின் மாடி, பக்கவாட்டுப் பகுதிகள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. அரங்கத்திற்கு வெளியே ஷாமியானா பந்தல் போடப்பட்டு அதிலும் நாற்காலிகள் குவிக்கப்பட்டன. ஆனாலும் இடமின்றி மக்கள் பலர் நின்ற வண்ணமே இருந்தனர்.
வானுயர்ந்த உறுப்பினர்களின் கோஷம்:
பொதுக்குழுவின் முதல் நிகழ்ச்சியாக நிர்வாகக் குழு எடுத்த சில நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. சைபுல்லாஹ் ஹாஜாவின் தவறான செயல்பாடு காரணமாக அவரை நீக்கியதை பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் கேட்கப்பட்டது. “அல்லாஹ் அக்பர்” என தங்களின் கைகளை உயர்த்தி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
அதுபோல சொந்தக் காரணங்களுக்காகவும், வேலைப்பளு காரணமாகவும் தங்களின் பொறுப்புகளை ராஜினாமா செய்த சகோ.அப்துந்நாசர், தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.தம்மாம் தவ்ஃபீக், மாநிலச் செயலாளர் சகோ.மாலிக் ஆகியோரின் விலகல் குறித்தும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
எழுச்சியடைய வைத்த லுஹாவின் உரை:
பொதுக்குழுவின் முதல் அமர்வின் முதல் நிகழ்ச்சியாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி “கொள்கை உறவு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த ஜமாஅத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உறவுகளைப் பேணுபவர்கள், அதே நேரம் அந்த உறவுகள் கொள்கைக்கு மாற்றமாகச் செயல்படும் சமயத்தில் அதைத் தூக்கி எறிந்து விட்டு இந்த சத்தியக் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்திய ஒரு வரலாற்றைச் சுட்டிக் காட்டி சிறப்பாக விளக்கினார்.
துல்லியமான கணக்கு வழக்குகள்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை அதிகமான மக்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கமாக இருக்கின்றது. அதற்கான முக்கியக் காரணம், கணக்கு வழக்குகளில் இறைவனின் அருளால் இன்று வரை பிசகாமல் நிற்பதே ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை பொருளாளர் அன்வர் பாஷா சமர்ப்பித்தார். மாத வாரியான வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என்பதைத் துல்லியமாக அறிவித்தார். இந்தக் கணக்குகளில் ஏதேனும் குறை இருந்தால் சுட்டிக் காட்டலாம் என தணிக்கைக் குழுத் தலைவர் எம்.ஐ. சுலைமானிடம் தெரிவித்தார்.
தணிக்கைக் குழுவின் நற்சான்றிதழ் :
பொருளாளர் தாக்கல் செய்த வரவு செலவுகள் குறித்து கருத்து தெரிவித்த தணிக்கைக் குழுத்தலைவர் எம்.ஐ. சுலைமான், கணக்கு வழக்குகள் ஏற்கனவே சகோ.ஈரோடு சாதிக் மூலம் பார்க்கப்பட்டு தொகுக்கப்பட்டதையும், தணிக்கைக் குழுவும் அதை மறு ஆய்வு செய்ததில் அதில் எவ்வித குளறுபடிகளும் இல்லை என்பதையும் தெரிவித்தார்.
அனல் பறந்த ஆண்டறிக்கை:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆண்டறிக்கையை பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தாக்கல் செய்தார். இந்த ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். மாதந்தோறும் அதிகரிக்கும் ஜுமுஆ தொழுகைகள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாற்று மதத்தவர் அழைப்புப் பணிகள், புத்தகங்கள், பிரசுரங்கள் வாயிலாக தவ்ஹீத் பிரச்சாரங்கள், பேனர்கள், போஸ்டர்கள் மூலமாக தெருக்கள் தோறும் திருக்குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் அத்தோடு சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற சேவை இல்லப் பணிகள், இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு முற்றிலும் இலவசப் பயிற்சிகள், சத்தியத்தை எத்தி வைக்கும் விவாதங்கள் போன்ற மார்க்கப் பணிகள் இந்த வருடத்தில் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது பற்றிய புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார். அதுபோல தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த வருடமும் இரத்த தானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதையும் விளக்கினார். ஆண்டறிக்கையின் ஒவ்வொரு வாசகமும் தக்பீரைக் குவித்தன.
புஸ்வாணமாகிப் போன பொறம்போக்குகளின் அவதூறு :
பீஜேக்கு எதிராக, மின்னஞ்சல் முகவரியைத் திருடியவர்கள் அவதூறுப் பிரச்சாரம் செய்து வருவது குறித்து பீஜே தானாக முன்வந்து விளக்கம் அளித்தார். இவ்வாறு அவதூறு பரப்பப்பட்டு வருவது முதல் இன்றைய தேதிவரை எட்டு நபர்கள் மட்டுமே என்னிடம் கேட்டுள்ளனர்., அவர்களும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோரினார்கள். இந்தப் பொய்யை ஒரு பொதுக்குழு உறுப்பினர் கூட நம்பவில்லை என்ற போதும் இது குறித்து நானாக முன்வந்து விளக்கம் அளிக்கிறேன் எனக் கூறி விளக்கம் அளித்தார். விளக்கம் அளித்து முடித்த பின்னர் இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்று பீஜே கேட்ட போது, இல்லை என்று அனைவரும் கைகளை உயர்த்தி கூறினார்கள். திருடர்கள் மீது சட்டப்படி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் பீஜே விளக்கினார்.
பைலா திருத்தம்:
அடுத்ததாக பைலாவில் சில திருத்தங்களைச் செய்து அறிவித்தார் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. கலீல் ரசூல்.  முந்தைய பைலாவில் இருந்ததைப் போல, உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இந்த ஜமாஅத்தின் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று இருந்த விதியை முழுமையாக மாற்றி, இனி டி.என்.டி.ஜே உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என திருத்தி அது உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
அதுபோல மாநில நிர்வாகத்தில் யாரும் இருமுறைக்கு மேல் பொறுப்பு வகிக்கக்கூடாது என்ற பழைய விதியை மாற்றி, இந்த ஜமாஅத் நிர்வாகத்தில் அனுபவஸ்தர்கள் நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தவிர மற்ற பொறுப்புகளில் இனி மூன்று முறை நீடிக்கலாம் என்ற விதிக்கு ஒப்புதல் கேட்கப்பட்டது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று நிர்வாகிகளும் இரண்டு தடவைக்கு மேல் தொடர்ந்து அப்பதவிக்கு வரக்கூடாது என்பது உறுதி செய்யப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அல்லாஹ் அக்பர் என முழக்கமிட்டனர்.
ஆனால் சில நிர்வாகிகள் எழுந்து தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் ஆகியோரும் மூன்று முறை பதவி வகிக்கும் வகையில் திருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து பீஜே அவர்கள் விளக்கம் அளித்த பின்னர் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்..
தவறு செய்து நீக்கப்படும் உறுப்பினர் வழி தவறுவதைத் தடுக்க இனி தவறு செய்யும் உறுப்பினர்களுக்கு இரண்டு முறை கடும் எச்சரிக்கைகள் தரப்படும். மேலும் அவர்கள் நிர்வாக பொறுப்புக்கு வரக் கூடாது, நிர்வாகியை தேர்வு செய்யும் வாக்குரிமை இல்லாத உறுப்பினராகத் தான் இருப்பார்கள்.
மூன்றாவது முறை அதே தவறைச் செய்தால் அவர் இந்த ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஒரு வருடத்திற்கு நீக்கப்படுவார். ஒரு வருடம் கழித்து அந்தக் கிளை தரும் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இரண்டாவது அமர்வு:
உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது அமர்வு துவங்கியது. மாவட்ட நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதையும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல் திட்டங்களையும் மாநிலத்தலைவர் சகோ.பீஜே தெளிவாக விளக்கினார். கடந்து வந்த பாதை முதல் காவல் துறையை அணுகும் முறை வரை மிகத் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்கினார்.
பிப்ரவரி 14 இடஒதுக்கீடு போராட்டம்:
முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இதர மாநிலங்களிலும் பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வலியுறுத்தியும் , தமிழகம் மற்றும் புதுவையிலும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தியும்., வரக்கூடிய பிப்ரவரி 14 ஆம் தேதி அனைத்து மாவட்டத்திலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கழிசடைகள் தினமான இந்த பிப்ரவரி 14 ஐ இனி இடஒதுக்கீட்டு தினமாக அறிவிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
கைவிடப்பட்டது போராட்டமே! மசூதி அல்ல:
பாபர் மசூதியை நாம் கைவிட்டு விட்டதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் கைவிடப்பட்டுள்ளது டிசம்பர் 6 போராட்டம் மட்டுமே! கடமைக்கு இதை நடத்துவதால் மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுவிடமுடியாது. அதேபோல என்னத் தீர்ப்பு வந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொண்டு அமைதி காத்து கொண்டிருக்க மாட்டோம். தவறான தீர்ப்பு வந்தால் நம் முழு பலத்தையும் திரட்டி எதிராகக் களமிறங்குவோம். ஏற்கனவே துளியும் பயமின்றிதான் நாம் நீதிமன்றத்தையே கண்டித்துக் களமிறங்கினோம். இறைவனைத் தவிர யாருக்கும் அஞ்சும் குணம் நமக்குக் கிடையாது என்றும் பாபர் மசூதி நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் சில கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்ற பின்னர் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
சுறுசுறுப்பாக்கிய அல்தாபியின் உரை:
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாபி “மறுமை வெற்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார். மற்ற இயக்கங்களில் இருப்பதற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். மற்ற இயக்கங்களில் இருந்தால் நிச்சயமாக இம்மையிலேயே லாபம் உண்டு என்பதையும், இந்த இயக்கத்தில் இருந்தால் மறுமை வெற்றிக்கு மட்டுமே லாபம் உள்ளது என்பதையும், மறுமை வெற்றியே மகத்தான வெற்றி என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
தீர்மானமும் நிகழ்ச்சி நிறைவும்:
இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநிலச் செயலாளர் சகோ. யூசுப் வாசித்தார். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று கூறிய ஜெயலலிதா, அதற்கான எவ்வித முயற்சியையும் எடுக்காததை இந்தப் பொதுக்குழுவில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல பாண்டிச்சேரியில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு ஏமாற்றத்தைக் கண்டித்தும், மத்தியில் முஸ்லிம்களுக்கு உடனடியாக 10 % இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தரவேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவின் முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி துவா ஓதி சபை முடிக்கப்பட்டது. ஆர்வத்தோடு பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளும் தங்களின் இயக்கத்தின் ஒரு முக்கிய கடமையை ஆற்றிய மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர். பொதுக்குழுவை இவ்வளவு சிறப்பாக நடத்தித் தந்த வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும்!
பொதுக்குழு துளிகள்…
*ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் அங்கே கொடிகள் கட்டப்பட்ட வேன்கள் தயார் நிலையில் நின்றன. வெளியே வந்த சகோதரர்கள் அந்த வேன்களில் ஏறிச் சென்றனர். வெளியூர் மக்கள் தங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஒரு தனி மண்டபம் பிடிக்கப்பட்டிருந்தது. அங்கே சென்று குளியல் கடமைகளை நிறைவு செய்து கொண்டார்கள் சகோதரர்கள்.
*பொதுக்குழு நடந்த அனைத்துச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஏதோ மாநாடு போல நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
*பொதுக்குழு காலை 10.30 க்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் காலை 9 மணி முதலே நிர்வாகிகள் மண்டபத்தின் உள்ளே வரத் துவங்கினார்கள்.வாக்காளர் பட்டியலைப் போல  மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளின் பெயர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக கவுண்டர்கள் பிரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டன. பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனைத்து மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தன. நிர்வாகிகள் அனைவரிடமும் உறுப்பினர் அட்டை இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அட்டை இல்லாதவர்கள் உடனடியாக அங்கேயே விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்தனர்.
*பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரியாத் மண்டல டி.என்.டி.ஜே. சார்பாக இலவசமாக  தினசரி காலண்டர் ஒன்று வழங்கப்பட்டது.
*மண்டபம் நிரம்பி வழிந்ததால் வாசலில் போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலில் அதிகமான மக்கள் அமர்ந்து கொண்டார்கள். அதுமட்டுமின்றி மண்டபத்தில் இரு புறங்கள் மற்றும் மாடி, பால்கனி ஆகிய பகுதிகளில் நாற்காலிகள் போடப்பட்டும் அது பற்றாக்குறையாகவே இருந்தது.
*மண்டபத்தைச் சுற்றி பெரிய பெரிய எல்.சி.டி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்திற்குள் செல்ல முடியாத மக்கள் இந்த டிவி வழியாக நிகழ்ச்சிகளைப் பார்த்தனர்.

*பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்திற்குள் அசைவ சாப்பாட்டுக்கு அனுமதி இல்லை என்பதால், மண்டபத்தை ஒட்டிய பொருட்காட்சித் திடலில் தனியாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.
*உணவு இடைவேளையின் போது மண்டபத்திலும், பொருட்காட்சித் திடலிலும் சகோதரர்கள் தொழுகை மேற்கொண்ட நிகழ்வு அங்கிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
*காலையிலும் முதல்அமர்வு முடிந்து மாலையிலும் சரியான நேரத்திற்கு கதவுகள் மூடப்பட்டன. தாமதமாக வந்த சகோதரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர்., எல்லாருமே நிர்வாகிகள் என்கிறீர்கள், இப்படி செய்தால் அவர்கள் வருத்தப்பட மாட்டார்களா எனக் கேட்டார். ஆனால் இதைத் தான் எங்கள் மக்களும் விரும்புகின்றார்கள். தவறு என்றால் அதை ஒப்புக் கொள்வதற்கு எங்கள் மக்கள் தயங்க மாட்டார்கள், அதற்கு அபராதமும் கட்டுவார்கள் என்று நாம் சொன்னதும் ஆச்சரியமடைந்த அவர், பள்ளிக்கூடத்தில் தான் அபராதமெல்லாம் போடுவார்கள், ஆனால் நீங்கள் உங்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கே அபராதம் போடுகிறீர்கள், தாமதமாக வந்தால் கதவைச் சாத்துகிறீர்கள், இப்படியும் ஒரு கட்டுக் கோப்பான இயக்கமா? என ஆச்சரியப்பட்டார்.
*உணர்வு, ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய இதழ்களின் ஒரு வருட சந்தாக்கள் சிறப்பு சலுகையாக 600 ரூபாயில் இருந்த 400 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. திரளான மக்கள் தங்களை இதில் சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டனர்.
*அமர்வதற்கு இடம் கிடைக்காமல் இறுதி வரை சிலர் நின்றபடியே பொதுக்குழுவை கண்டு மகிழ்ந்தனர். பொதுக்குழு நிகழ்வுகளை அன்றைய மாலைப் பத்திரிகைகள் மற்றும் மறுநாள் காலைப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தது குறிப்பிடத்தக்கது.
*நிகழ்ச்சி முடிந்து மண்டப உரிமையாளரிடம் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கணக்கு முடிக்கச் சென்ற போது., என் மண்டபத்தில் இப்படி ஒரு கட்டுக்கோப்பான கூட்டத்தை நான் கண்டதில்லை. 3000க்கும் அதிகமான மக்கள் குழுமிய இக்கூட்டத்தில் ஒருவர் கூட புகை பிடிக்கவில்லை. பான்பராக் போடவில்லை. பீடி, சிகரெட் துண்டுகள், பீர் பாட்டில்கள் தான் அனைத்து நிகழ்ச்சிகளின் முடிவில் நிறைந்திருக்கும். ஆனால் இது போல் எதுவும் இல்லாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் அசைவ உணவுக்கு அனுமதி அளிக்க முடியாமல் போனதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்.
*பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சகோதரர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அலி தலைமையில் சகோதரர்கள் களமிறக்கப்பட்டு தேனீக்களைப் போல மிகக்கடுமையாக ஓய்வின்றி பணியாற்றினார்கள். கலந்து கொண்ட மக்களுக்கு தங்களின் கனிவான பணிகளைத் தொய்வின்றி செய்தனர். இந்தப் பணிகளைச் செய்த நெல்லை மாவட்டத்தின் அனைத்து சகோதரர்களின் சேவையும் கடின உழைப்பும் பாராட்டுக்குரியதாகும்.
*குறிப்பாக மேலப்பாளையத்தில் இருந்து வாலன்டியர்களாக வந்த சகோதரர்கள் காலை முதல் இரவு வரை உணவு கூட உட்கொள்ளாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு கொஞ்சமும் களைப்பில்லாமல் களப்பணியாற்றியது நிர்வாகிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்காக தங்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தந்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!
பரபரப்பாக்கிய புள்ளிப் பட்டியல்
பொதுக்குழு கூடிய காலை முதல் மக்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தது தரவரிசைப் புள்ளிகள் பட்டியலைத்தான். தாவா பணிகளில் எந்த மாவட்டம் எந்தக் கிளை முதல் இடம் பிடிக்கும் என்ற ஆவலில் அனைவரும் இருக்க, அதற்கான முடிவுகளை மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் அறிவித்தார். அதன்படி மாவட்ட அளவில் பணிகளை அதிகம் செய்து மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. அதேபோல இரண்டாவது இடத்தை திருவள்ளூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தை தென்சென்னை மாவட்டமும் பிடித்தன. அதேபோல அதிகப் பணிகளைச் செய்த கிளைகளில் முதல் இடத்தை மதுரை கரீம்ஷா பள்ளி கிளையும், இரண்டாவது இடத்தை திருவள்ளூர் மதுரவாயல் கிளையும், மூன்றாவது இடத்தை தஞ்சை தெற்கு தஞ்சை நகர் கிளையும் கைப்பற்றின.
அதே போல வெளிநாடு மற்றும் மண்டலங்களுக்கான தாவா பணிகள் தரவரிசைப் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. மண்டலங்களில் முதல் இடத்தை ரியாத் மண்டலமும், இரண்டாவது இடத்தை குவைத் மண்டலமும், மூன்றாவது இடத்தை பஹ்ரைன் மண்டலமும் பெற்றன. அதேபோல வெளிநாட்டு மண்டலக் கிளைகளில் முதல் இடத்தை ரியாத் மண்டலத்தைச் சேர்ந்த கதீம் செனைய்யா கிளையும், இரண்டாவது இடத்தை ஜித்தா மண்டலத்தைச் சேர்ந்த தபூக் கிளையும், மூன்றாவது இடத்தை ரியாத் மண்டலத்தைச் சேர்ந்த ஷிஃபா கிளையும் பெற்றன.
இரத்ததான விருதுகள் : இந்த வருடத்திற்கான இரத்த தான விருதுகள் மாவட்ட மற்றும் கிளை வாரியாக வழங்கப்பட்டன. அதன்படி 2011 ஆம் ஆண்டில் அதிகமான இரத்த தான முகாம்களை நடத்தி அதிக அளவில் இரத்த தானம் வழங்கிய மாவட்டங்களில் திருவள்ளூர் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை தென்சென்னையும்,  மூன்றாவது இடத்தை வடசென்னையும் பிடித்தன. அதேபோல கிளைகளில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவடி  முதல் இடத்தையும்,பாடி கிளை இரண்டாவது இடத்தையும், தென்சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணாம்பேட்டை மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
வெளிநாடு மண்டலங்களில் ரியாத் முதலிடத்தையும், தம்மாம் இரண்டாவது இடத்தையும், குவைத் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

அதுபோல அவசர இரத்த தானத்தில் மதுரை முதல் இடத்தையும், திருச்சி இரண்டாவது இடத்தையும்,நெல்லை மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
தரவரிசையில் இடம்பெற்ற அனைத்து மண்டலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிளைகளுக்கு பாராட்டுப் பத்திரங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

Picture 006
Picture 007


Picture 016
Picture 017
Picture 018
Picture 019


Picture 020
Picture 021
Picture 001
Picture 002


Picture 379
Picture 011
Picture 012
Picture 013


Picture 017
Picture 018
Picture 019
Picture 020


Picture 021
Picture 343
Picture 344
Picture 346


Picture 348
Picture 349
Picture 350
Picture 351


Picture 352
Picture 353
Picture 354
Picture 355


Picture 356
Picture 357
Picture 358
Picture 359


Picture 360
Picture 361
Picture 362
Picture 363


Picture 364
Picture 365
Picture 366
Picture 367


Picture 368
Picture 369
Picture 370
Picture 371


Picture 372
Picture 373
Picture 374
Picture 375


Picture 376
Picture 378
புகைப்படம் – மதுரை ஹக்கிம்
மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்
2011 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நெல்லை பார்வதி சேஷ மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது., ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அவரது வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
2. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவரும் 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும், புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டித்தும், மத்தியில் முஸ்லிம்களுக்கு10% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி 14 (செவ்வாய்க்கிழமை) அன்று உரிமை மீட்புப் போராட்டம் நடத்துவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது
3. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை இதுவரை காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவருகிறது. சச்சார் கமிஷனும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நிலையை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்த பின்பும் அவற்றின் பரிந்துரைகளை மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது. முஸ்லிம்களின் இந்த நியாயமான உரிமையைக் காங்கிரஸ் அரசு உடனடியாக வழங்கத் தவறினால் காங்கிரஸிற்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்பதை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
4. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இப்பொதுக்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.
5. இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
6. கிறிஸ்தவ சமுதாயத்தின் சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிறிஸ்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
7. குஜராத்தில் மூவாயிரத்திற்
கும் அதிகமான முஸ்லிம்களை கொன்றொழித்த பயங்கரவாதி நரபலி மோடியின் உண்ணாவிரத நாடகத்தை வாழ்த்தி தனது பிரதிநிதிகளை அனுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
8. முஸ்லிம்களின் விரோதியான அத்வானியின் ரதயாத்திரைக்கு ஆதரவளித்தும் வாழ்த்தியும் முஸ்லிம்களின்உணர்வோடு விளையாடும் ஜெயலலிதாவின் இப்போக்கு தொடருமானால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் இழக்க நேரிடும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
9. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு எனத் தொடர்ந்து விலைவாசிகள் அதிமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இப்பொதுக்குழு அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என தமிழக அரசைக் கோருகின்றது.
10. தமிழகத்திற்கும் கேரளத்திற்
கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, தமிழகத்திற்கும் ஆந்திரத்திற்கும் இடையே பாலாறு அணைப் பிரச்சினை, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரிப் பிரச்சினை என இன மொழி அடிப்படையிலான பிரிவினைவாதங்கள் இந்திய தேசத்தின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அனைவரும் ஓரிறையின் அடிமைகள் என்பதையும் ஒருதாய் மக்கள் என்பதையும் உணர்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடும் நியாயத்தோடும் இப்பிரச்சினை
களைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் அதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்சினைகளில் மத்திய மாநில அரசுகள் தீர்க்க உதவும் வகையில் அனைத்து மாநில பொது மக்களும் கட்சிகளும் வன்முறையைத் தூண்டிவிடுவதைக் கைவிட வேண்டும் என்று அனைத்து மாநில மக்களையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
11. அரசியல் ஆதாயத்திற்காக
வும் சுய விளம்பரத்திற்காகவும் இன மொழி பிரிவினைகளைத் தூண்டி மக்களை பிளவு படுத்த முயற்சிக்கும் நச்சு சக்திகளை இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் புரிந்து கொண்டு அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
12. கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்தில் இன மொழி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மக்களைப் பிரிக்க முயலும் பிரிவினைவாதிகள், அந்நிய சக்திகளின் அடிவருடிகள், ஆகியோரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, அப்பகுதிவாழ் மக்களின் நியாயமான அச்சத்தை போக்கி, தேவையான பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்தி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
13. தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரிக்கவும் பலரது குடும்ப வாழ்க்கை சீரழியவும் காரணமாக இருக்கும் அரசு மதுக்கடைகள் போதாதென்று சொகுசு மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடவேண்டும் என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
14. முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களும் அரசு விடுமுறையாக இருந்தும் சில கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் தேர்வுகளை நடத்துகின்றன. சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படும் இந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் அவற்றின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்படவேணடும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
15. முஸ்லிம் அல்லாதார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அந்நிறுவனங்களின் மதம் சார்ந்த வழிபாட்டு பாடல்களை பாடவும் அவற்றில் பங்கேற்கவும் முஸ்லிம் சிறார்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்கும் மாணவ மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது
16. ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அரிசி வழங்கலில் தேவையற்ற கெடுபிடிகள் செய்து முஸ்லிம்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.
17. வியாபார நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணம் போன்றே பள்ளிவாசல்களுக்கும் மின்கட்டணம்வசூலிக்கப்படுகிறது. அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் முற்றிலுமாக இலவச மின்சாரம் வழங்கும்படியும் இயலாவிட்டால் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட் கட்டணத்தை வசூலிக்குமாறு தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
18. காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
19. சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக் குழு எச்சரிக்கை செய்கிறது. உள்நாட்டு மக்களின் பொருளாதாரத்தைச் சீரழித்து அந்நிய சக்திகளிடம் நாட்டையே அடகுவைக்க வேண்டிய நிலையைத்தான் 51 சதவிகித அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் இந்த முடிவு ஏற்படுத்தும். எனவே இந்தியாவை அந்நிய சக்திகளிடம் அடிமையாக்கும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது

தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளில் வெளியான TNTJ வின் 13 வது பொதுக்குழு செய்தி!


நெல்லையில் கடந்த 11-12-2011 அன்று ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு கூட்டம் பற்றிய செய்தி தினகரன் தினமணி, தினத்தந்தி,தினமலர்,மாலைமுரசு, இந்தியன் எக்ஸ் பிரஸ் ,ஹிந்து உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!


malaimurasu
dinakaran
dinamalar


dinamani
dinathanthi
hindu


indian express

புதன், டிசம்பர் 7

கணவுகளின் பலன்கள்



பதில் : கனவுகளின் பலன்கள் பற்றி பல செய்திகள் திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலதை இங்கு தருகிறோம்.

கனவுகளின் பலன்கள் விஷயத்தில் இன்று நமது சமுதாயத்தில் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். கனவுகளின் பலன்களை படித்த அறிஞர்கள் அறிவார்கள். பாமரர்கள் அறியமாட்டார்கள் என்றெல்லாம் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றித் திரியும் போலிகள் நமது சமுதாயத்தில் நிறையவே இருக்கிறார்கள்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் நமக்குத் தோன்றும் கனவுகளுக்கு விளக்கத்தை நாமே தீர்மானித்துக் கொள்ள முடியும் எந்த போலிகளிடமும் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை.

நல்ல கனவுகள் என்பவை அல்லாஹ்வின் புறத்தால் நமக்கு தரப்படுபவையாகும். அல்லாஹ் தரும் கனவுகளுக்கு வேறு ஒருவர் விளக்கம் சொல்ல வேண்டிய தேவையே இருக்காது அல்லாஹ்வே அதனை விளக்கமாகத் தான் தருவான்.

நாம் கனவு கண்டால், நாம் காணும் கனவில் என்ன தகவல் வருகிறதோ அதுதான் அந்தக் கனவுக்கு விளக்கமாக இருக்கும்.
'அனைத்தையும் அறிந்தவனை (அல்லாஹ்வை) போல் வேறு எவரும் உமக்கு விளக்க முடியாது' என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 35:14)
அனைத்து விஷயத்தையும் விளக்கமாக சொல்லும் இறைவன் கனவையும் விளக்கமாகத் தான் தருவான் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் விளங்க முடியும்.

குர்ஆனிலும், நபி மொழிகளிலும் இடம் பெற்ற சில கனவுகள் பற்றிய செய்திகளை இங்கு தருகிறோம்.

தான் ஹஜ் செய்வதாக நபியவர்கள் கண்ட கனவு.

சொந்த ஊரிலிருந்து விரட்டப்பட்ட நபியவர்கள். மீண்டும் தமது ஊரான மக்காவுக்குப் போய் ஹஜ் செய்வதைப் போன்று கனவு கண்டார்கள் அதனை அல்லாஹ் நிறைவேற்றி வைத்தான்.

{لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالْحَقِّ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا} [الفتح: 27
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான். (அல்குர்ஆன் 48:27)

யூசுப் நபியின் கனவு

நபி யுசுப் அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போது கண்ட கனவைப் பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

{إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ } [يوسف: 4
'என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்' என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 12:4)

நபி யுசுப் அவர்கள் பார்த்ததாகச் சொன்ன மேற்கண்ட கனவின் விளக்கம் என்ன என்பதை இதே அத்தியாயத்தின் 100-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
{وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا وَقَالَ يَا أَبَتِ هَذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ وَجَاءَ بِكُمْ مِنَ الْبَدْوِ مِنْ بَعْدِ أَنْ نَزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ إِخْوَتِي إِنَّ رَبِّي لَطِيفٌ لِمَا يَشَاءُ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ } [يوسف: 100
தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். 'என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:100)
யூசுப் நபியவர்கள் பிற்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக ஆகி அவர்களின் ஆட்சியின் கீழ் அவர்களின் தாய் தந்தையர் வாழும் நிலை ஏற்படும் என்பதையும் அவரது அண்ணன்மார்களும் அவருக்குக் கீழே இருக்கும் நிலை ஏற்படும் என்பதையும் சூரியன், சந்திரன், பதினொரு நட்சத்திரங்கள் அவருக்குப் பணிவதாகக் காட்டுவதன் மூலம் இறைவன் அறிவித்தான்.

யுசுப் நபியவர்கள் கண்ட கனவு அப்படியே நிறைவேறியது.

மன்னரின் கனவு

யூசுப் நபி காலத்தில் எகிப்தை ஆண்ட மன்னர் கண்ட கனவும் அந்தக் கனவுக்கு யூசுப் நபி அளித்த விளக்கமும் 12வது அத்தியாயம் 43 முதல் 49 வரை கூறப்பட்டுள்ளது.
'கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகள் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!' என்று மன்னர் கூறினார்.
'இவை அர்த்தமற்ற கனவு. அர்த்தமற்ற கனவின் விளக்கத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை' என்று அவர்கள் கூறினர்.
'நான் உங்களுக்கு அதற்கான விளக்கம் தருகிறேன். என்னை அனுப்புங்கள்!' என்று அவ்விருவரில் விடுதலையானவர் நீண்ட காலத்திற்குப் பின் நினைவு வந்தவராக கூறினார்.
யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்றதற்கும், ஏழு பசுமையான கதிர்கள் மற்றும் காய்ந்த கதிர்களுக்கும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! மக்களிடம் (இத்தகவலுடன்) நான் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் (என்றார்.)
தொடர்ந்து ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். அறுவடை செய்தவற்றில் உண்பதற்காக குறைவான அளவைத் தவிர மற்றவற்றைக் கதிர்களுடன் விட்டு வையுங்கள்!
இதன் பிறகு பஞ்சமான ஏழு (ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முன்னர் இருப்பு வைத்தவற்றில் சிலதைத் தவிர மற்றவற்றை அவை சாப்பிட்டு விடும்.
'இதன் பிறகு மக்களுக்கு மழை பொழியும் ஆண்டு வரும். அந்த ஆண்டில் பழ ரசங்களைப் பிழிவார்கள்' (என்றார்)
(அல்குர்ஆன் 12:43-49)
மெலிந்த ஏழு மாடுகள் = வரட்சியான ஏழு ஆண்டுகள்
கொளுத்த ஏழு மாடுகள் = செழிப்பான ஏழு ஆண்டுகள்
மெலிந்த மாடு கொளுத்த மாட்டைச் சாப்பிடுதல் = வரண்ட ஆண்டுகள் செழிப்பான ஆண்டுகளின் சேமிப்பைச் சாப்பிடுதல்

இரண்டு கைதிகளின் கனவு

யூசுப் நபியுடன் வேறு இரண்டு கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இரு கைதிகளும் வெவ்வேறு கனவுகளைக் கண்டு அதற்கான விளக்கத்தை யூசுப் நபியிடம் கேட்டனர்.
{وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ } [يوسف: 36
அவருடன் இரு இளைஞர்கள் சிறைக்குச் சென்றனர். 'நான் மது ரசம் பிழிவதைப் போல் கனவு கண்டேன்' என்று ஒருவர் கூறினார். 'நான் என் தலையில் ரொட்டியைச் சுமந்திருக்க, அதைப் பறவை சாப்பிடக் (கனவு) கண்டேன்' என்று இன்னொருவர் கூறினார். 'இதன் விளக்கத்தை எங்களுக்குக் கூறுவீராக! உம்மை நன்மை செய்வோரில் ஒருவராக நாங்கள் காண்கிறோம்' (என்றனர்).
(அல்குர்ஆன் 12:36)
இதற்கு யூசுப் நபி அளித்த விளக்கமும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
'என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்குப் மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது' (என்றார்.)
(அல்குர்ஆன் 12:41)
தனது தலையின் மேல் ரொட்டியைச் சுமந்து செல்லும் போது அவற்றைப் பறவைகள் உண்பது போல் கனவு கண்டவர் மரண தண்டனை அடைவார் என்று யூசுப் நபி விளக்கினார்கள். அவரது உணவு முடிந்து விட்டது என்பதை பறவைகள் சாப்பிட்டதன் மூலம் அல்லாஹ் காட்டினான். அதன் பலனும் அவ்வறே அமைந்தது.

பழரசம் பிழிவது போல கனவு கண்டவருக்கு அவர் கனவு கண்டது போல் எஜமானருக்கு பழரசம் பிழிந்து புகட்டும் வேலை கிடைக்கும் என்றார்கள்.

இந்த இருவரும் எதைக் கனவில் கண்டார்களோ அதற்கேற்ப பலனும் அமைந்தது.

யூசுப் நபியிடம் இரு கைதிகள் விளக்கம் கேட்டது போல் நாமும் மற்றவர்களிடம் விளக்கம் கேட்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. இறைத்தூதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து செய்திகள் கிடைப்பதால் அவர்களால் மிகத் தெளிவான பலனைக் கூற முடியும்.

இறைத்தூதராக இல்லாத ஒருவரிடம் பலன் கேட்க எந்தச் சான்றும் இல்லை.

லைலதுல் கத்ர் இரவு பற்றிய கனவு

லைலதுல் கத்ர் இரவில் மழை பெய்வது போலவும், அதனால் தரை சேறும் சகதியுமாகி அதில் ஸஜ்தாச் செய்வது போலவும் நபிகள் நாயகம் (ஸல்) கனவு கண்டார்கள். அவர்கள் கனவு கண்டவாறு மறுநாள் இரவு மழை பெய்து, களி மண்ணில் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எதைக் கண்டார்களோ அது போலவே அதன் பலனும் அமைந்தது.

புகாரி 813, 2016, 2018, 2027, 2036, 2040 ஆகிய ஹதீஸ்களில் இதைக் காணலாம்.

பல்வேறு அளவுகளில் சட்டையைக் காணுதல்
மனிதர்கள் பலவித அளவுகளில் சட்டை அணிந்தவர்களாக நபிகள் நாயகம் கனவு கண்டார்கள். சிலரது சட்டை மார்பு வரையும், சிலரது சட்டை அதை விடக் குறைவாகவும் இருந்தது. உமர் அவர்களின் சட்டை தரையில் இழுபடும் அளவுக்கு இருந்தது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதன் விளக்கம் என்ன என்று உமர் (ரலி) கேட்ட போது 'மார்க்கம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கம் தந்தார்கள். (புகாரி 23, 3691, 7008, 7009)
அதிகமான மார்க்கப் பற்று உள்ளவர் பெரிய ஆடை அணிந்தது போன்றும், மார்க்கப்பற்று குறைவாக உள்ளவர் அதற்கேற்ப சிறிய அளவில் சட்டை அணிந்தது போன்றும் கனவு கண்டு நபிகள் நாயகம் விளக்கமும் தந்துள்ளார்கள்.

எதிரிகளின் தோல்வியைக் கனவில் காணுதல்

பத்ருக் களத்தில் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையிலும் எதிரிகள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கனவில் எதிரிகள் குறைவாகவும் முஸ்லிம்கள் அதிகமாகவும் இருப்பது போல் இறைவன் காட்டினான். முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை இதன் மூலம் இறைவன் முன்னறிவிப்புச் செய்தான்.

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 8:43)

ஈஸா நபியைக் கனவில் காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கனவில் கஃபாவைத் தவாப் செய்வது போல கண்டார்கள். அதே கனவில் ஈஸா நபியையும், தஜ்ஜாலையும் கண்டார்கள். அவ்விருவரின் அங்க அடையாளங்களை நமக்கும் விவரித்தார்கள்.
இது புகாரி 3441, 3440, 5902, 6999, 7026, 7128 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் எந்த வடிவத்தில் கனவில் கண்டார்களோ அதுவே அவர்களின் வடிவமாக இருந்தது.

ஹிஜ்ரத் பற்றிய கனவு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது வேறு ஒரு ஊருக்கு இடம் பெயர்வது போல் கண்டார்கள். பேரீச்சை மரம் நிறைந்த அந்த ஊர் யமாமா என்ற ஊராக இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளங்கிக் கொண்டார்கள். ஆனால் அது மதீனாவாக அமைந்து விட்டது.
இது புகாரியில் 3622, 7035 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

கப்பல் படை

தமது சமுதாயத்தில் கடற்படை அமைவது போலவும் அந்தப் படையில் உம்மு ஹராம் என்ற பெண்மணி இடம் பெறுவது போலவும் நபிகள் நாயகம் (ஸல்) கனவு கண்டார்கள். தாம் கண்டவாறு நிறைவேறும் என்று விளக்கினார்கள்.
(புகாரி 2789, 2800, 2878, 2895, 2924, 6282, 7002)

பாலருந்துவது போல கனவு காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால் அருந்துவது போலவும் மீதியை உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்தது போலவும் கனவில் கண்டார்கள். கல்வியே பால் வடிவில் காட்டப்பட்டதாகவும் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.
(புகாரி 82, 3681, 7006, 7007, 7027, 7032)

பொய் நபிகளைக் கனவில் காணுதல்
இரு கைகளிலும் தங்கக் காப்புகள் அணிவிக்கப்பட்டது போல் என் கனவில் கண்டேன். அது எனக்குச் சுமையாக இருந்தது. அதை ஊதுமாறு அல்லாஹ் எனக்கு அறிவித்தான். நான் ஊதியதும் இரு காப்புகளும் பஞ்சாய்ப் பறந்தன. சன்ஆ, எமன் ஆகிய பதிகளில் தம்மை நபியென வாதிட்ட இரு பொய்யர்களுக்கு ஏற்படும் தோல்வியை அல்லாஹ் இவ்வாறு காட்டுவதாக விளங்கிக் கொண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(புகாரி 3621, 4375, 7034, 7037)
உடைந்த வாளைக் காணுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாள் உடைந்தது போலவும் பின்னர் உடைந்த வாள் சரியாகி விட்டது போலவும் கனவு கண்டார்கள். அது உஹதுக் களத்தில் முன்னர் ஏற்பட்ட தோல்வியையும் பின்னர் வெற்றி கிடைத்ததையும் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) விளக்கினார்கள்.
(புகாரி 3622, 4081, 7041)
உமரின் மாளிகையைக் காணுதல்
மறுமையில் உமர் (ரலி) அவர்களுக்குக் கிடைக்கும் மாளிகையை நபிகள் நாயகம் கனவில் கண்டு அதை உமர் (ரலி) யிடம் கூறினார்கள்.
(புகாரி 3242, 3680, 5227, 7023, 7025)
புகாரி 3679-ல் உமர், பிலால், ருமையா ஆகியோரின் மாளிகைகளைக் கனவில் கண்டதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

தலைவிரி கோலத்தில் பெண்ணைக் காணுதல்
மதீனாவில் கொள்ளை நோய் ஏற்பட்ட போது கனவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஜுஹ்ஃபா என்ற இடத்துக்குச் செல்வது போல் கனவு கண்டார்கள். அந்த நோய் மதீனாவை விட்டு ஜுஹ்பா என்ற பகுதிக்குச் சென்றதாக விளக்கினார்கள்.
(புகாரி 7038, 7039, 7040)
திருமணத்திற்கு முன்பே மனைவியைக் காணுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு முன்பே கனவில் ஆயிஷா (ரலி) யைக் கண்டு அல்லாஹ் நாடினால் இது நடக்கும் என்றார்கள். அவ்வாறே நடந்தது.
(புகாரி 3895, 5078, 5125, 7011, 7012)
இப்படி ஏராளமான கனவுகள் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. வாளியில் தண்ணீர் இறைப்பது போன்ற கனவு புகாரி 3664, 7021, 7022, 7475 ஆகிய ஹதீஸ்களில் காணலாம். தேனையும் நெய்யையும் கனவில் கண்டதாக புகாரி 7046வது ஹதீஸில் காணலாம். பசுமையான பேரீச்சம் பழத்தைக் கனவில் கண்டது முஸ்லிம் 4215வது ஹதீஸில் காணலாம். இவை அனைத்தையும் நாம் ஆய்வு செய்தால் நாம் எதைக் கனவில் காணுகிறோமோ அது அப்படியே நிறைவேறலாம். அல்லது நாம் கண்டதற்கு நெருக்கமானதாக அதன் விளக்கம் அமையலாம் என்பதை அறியலாம்.

மேலும் நபிகள் நாயகம் கண்ட அதே கனவை நாமும் கண்டால் அதே பலன் என்று முடிவு செய்யக் கூடாது. கனவு காண்பவரின் காலம், அவர் சந்தித்த பிரச்சினை போன்றவற்றுக்கேற்ப அதன் பலன் இருக்கலாம்.

தலைவிரி கோலமாக ஒரு பெண்ணைப் பார்த்து கொள்ளை நோய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். கொள்ளை நோய் இல்லாத போது அது போல கனவு கண்டால் அதே விளக்கத்தைக் கொடுக்க முடியாது.
காணுகின்ற மனிதர் சிந்தித்துப் பார்த்தால் இது எதைக் குறிக்கிறது என்று தீர்மானிக்க முடியும்.

எதையுமே தீர்மானிக்க முடியாவிட்டால் பேசாமல் அதை அலட்சியப்படுத்தி விடலாம். அதில் ஏதேனும் செய்தி இருந்தால் நமக்குத் தெளிவாகப் புரியும் வகையில் அதை வேறு கனவின் மூலம் அல்லாஹ் காட்டுவான்.

கனவில் காண்பதை நாம் விளங்கும் போது கனவில் கண்டது அப்படியே வரிக்கு வரி நடக்கும் என்று கருதக் கூடாது. நாம் புரிந்து கொண்டது நடக்காமல் அதற்கு நெருக்கமானதும் நடக்கலாம்.

யூசுப் நபியவர்கள் பதினொரு நட்சத்திரங்கள் தமக்குப் பணிந்ததாகக் கனவு கண்டார்கள். அதற்கு ஏற்ப 11 சகோதரர்களும் அவரைப் பணிந்தார்கள். கனவில் சூரியனும், சந்திரனும் தமக்குப் பணிந்ததாகக் கண்டார்கள். இது அப்படியே நிறைவேறுவது என்றால் யூசுப் நபியின் தாயும், தந்தையும் யூசுப் நபிக்குப் பணிய வேண்டும். ஆனால் தாயையும் தந்தையையும் சிம்மாசனத்தில் அமரச் செய்து அனைவரும் அவ்விருவருக்கும் பணிந்தார்கள் என்று தான் 12:100 வசனம் கூறுகிறது. கனவில் காட்டப்பட்டது ஒரு அளவுக்குத் தான் நடந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஊருக்கு ஹிஜ்ரத் செய்வது போல் கண்டார்கள். அந்த ஊர் யமாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது மதீனாவாக இருந்தது. இதிலிருந்து கனவில் காட்டப்படும் செய்தி நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் இருக்காது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மன்ஸில் - அற்புத நோய் நிவாரணி(?) ஓர் ஆய்வு.



மன்ஸில் என்ற ஒரு புத்தகம் காலா காலமாக முஸ்லீம்கள் மத்தியில் ஓதப்பட்டு வருவதை நாம் அறிவோம். அற்புத நோய் நிவாரணி என்ற அடை மொழியோடு அச்சிடப்படும் இந்தப் புத்தகம் பொதுவாக தப்லீக் மற்றும் தரீக்காக்களை மார்க்கமாக நினைக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும்.

யாராவது இறந்து விட்டால் அவருடைய பெயரால் கத்தம் ஓதுதல் என்ற மார்க்கத்தில் இல்லாத காரியத்தை செய்பவர்கள் இந்த நூலை மரணித்தவரின் பெயரால் அச்சிட்டு வினியோகம் செய்வார்கள். அந்தப் புத்தகத்தின் உள் அட்டையில் இன்னாரின் பெயரால் அவர் மரணித்ததற்காக அவரின் மறுமை மோட்சத்திற்காக இது அச்சிடப்பட்டது என்பதையும் குறிப்பிடுவார்கள்.

அது மட்டுமன்றி பெரும்பாலான வீடுகளில் பெண்கள் இதைத் தான் புனித நூலாகக் கருதுகிறார்கள் காரணம் இதில் அடங்கியிருக்கும் சில செய்திகள் – குறிப்பிட்ட அத்தியாயத்தை ஓதினால் அந்த நோய் நீங்கும், வருமை நம்மை விட்டு விலகும் என்றொல்லாம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதினால் தான் இந்தப் புத்தகத்தை மிகவும் புனித நூலாக நமது பெண்கள் நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் மஃரிப் தொழுகைக்குப் பின் மற்றும் சுப்ஹுத் தொழுகைக்குப் பின் இந்த மன்ஸில் என்ற புத்தகத்தை ஓதுவார்கள் இறுதியில் அதில் உள்ள 40 ஸலவாத்துக்களை(?) ஓதி முடிப்பார்கள்.

இந்தத் தொடர் மூலமாக மன்ஸில் என்ற இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக ஆராய இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

முன் அட்டையே மூடலாக………………….

மன்ஸில் என்ற இந்தப் புத்தகத்தின் முன் அட்டையையே மூடலாக அமைத்திருப்பார்கள். அதாவது இதன் முன் அட்டையில்……

மன்ஸில் - சூரா யாஸீன், சூரா தபாரக், சூரா வாகிஆ, சூரா ஜும்ஆ, சூரா அர்ரஹ்மான், சூரா நூஹ், சூரா முஜ்ஜம்மில், சூரா ஸஜ்தா, சூரத்துல் கஹ்ப், சூரா துகான், வழீஃபா நபவிய்யா மற்றும் நாற்பது ஸலவாத்தும் அவற்றின் சிறப்புகளும் என்று ஒரு விளம்பரம் போடப்பட்டிருக்கும்.

இந்த வாசகத்தை பார்த்தவுடன் ஏதோ அற்புத நோய் நிவாரணி போல்தான் உள்ளது என்று மக்கள் எண்ணத்தலைப்பட்டு இந்த புத்தகத்தை வாங்குகிறார்கள்.

உண்மையில் இதில் உள்ள தகவல்களை நாம் ஆய்வு செய்து பார்க்கின்ற நேரத்தில் குர்ஆன் அத்தியாயங்களை குறிப்பிட்டு அவைகளுக்கு நபியவர்களோ, அல்லாஹ்வோ சொல்லித் தராத சிறப்புகளையெல்லாம் இருப்பதாக வெரும் கப்ஸாக்களைக் கொண்டு கட்டமைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.

ஞாயிறு, டிசம்பர் 4

நாம் எதற்கு TNTJவில் இணைந்திருக்க வேண்டும் ?

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தில் நாம் இணைந்திருப்பது எதற்க்காக ?

  • தலைப்பு : தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தில் நாம் இணைந்திருப்பது எதற்க்காக ?
  • உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்


ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.

மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது.

கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும், மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம்.

துக்க நாளாகி விட்ட ஆஷூரா