-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், செப்டம்பர் 13

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்: எகிப்தில் அமெரிக்க தூரகம் முற்றுகை! ஒருவர் பலி , நாடுமுழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.
இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.
மேலும் அமெரிக்காவில் குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றேன் எனக் கூறிய பாதிரியார் Terry Jones இதை பரப்பியுள்ளான்.
இதை தொடர்ந்து இதனின் அரபி மொழிபெயர்ப்பு சமீபத்தில் வெளியானது.
இதை பார்த்து கொந்தளித்து போன எகிப்து மற்றும் லிப்யா நாட்டினர் அயிரக்கணக்கானோர் அங்குள்ள அமெரிக்க தூரகத்தை நேற்று (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

செவ்வாய், செப்டம்பர் 11

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்




பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.

காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.


பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.
இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

குஜராத்தில் மோடியை புறகணித்த RSS தலைவர்கள்

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரான அதிருப்தி அலை சங்கபரிவார அமைப்புகளிடையே பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன் குஜராத் மாநிலத்தில் நடந்த RSS கூட்டத்திற்கு வந்த RSS-ன் முக்கிய தலைவர்கள் அனைவரும் மோடியை சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் சங்பரிவார்களிடையே பிரதமர் வேட்பாளர் குறித்த சர்ச்சை மேலும் அதிமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம் வடோரா நகர் அருகே உள்ள கயவரோஹன் என்ற இடத்தில் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய அரசியல் கூட்டம் செப்டம்பர் 8,9 தேதிகளில் நடைபெற்றது. இதில் நாட்டில் நடக்கும் அரசியல், பொருளாதார, சமூக விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதில் மோகன் பக்வத் உட்பட நாட்டின் அனைத்து பகுதி முக்கிய RSS தலைவர்கள் கலந்து கொண்டனர். எனினும் மோடியைச் சந்திப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த RSS-ன் பத்திரிக்கை தொடர்பாளர் ப்ரதீப் ஜெயின், இது முழுக்க முழுக்க RSS கூட்டம் என்றும், வேறு யாரும் அழைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். எனினும் முதல்வர் மோடி அலுவலகத்திலிருந்து RSS தலைவர்களைச் சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டதாகவும், எனினும் சந்திப்பிற்கான நேரம் RSS தலைவர்களால் ஒதுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று தனது அரசியல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் மோடிக்கு, இது அரசியல் ரீதியான பின்னடைவாக கருதப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த RSS தலைவர் ஒருவர், குஜராத் முன்னாள் முதல்வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை விட்டு விலகிய முக்கிய தலைவரான கேசுபாய் பட்டேலுடன் மோடி சமரசம் செய்துகொள்ளுமாறு RSS கட்டளையிட்டதாகவும், இதற்கு மோடி மறுத்து விட்டதாகவும், இதனால் RSS அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குஜராத் கலவரம் குறித்து விசாரணை முடிவுகள் அனைத்தும் மோடியை நோக்கி இருந்து வருவதால், இதிலிருந்து RSS விலகியிருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.


திங்கள், செப்டம்பர் 10

வை-பி (WI-FI) இன்டர்நெட் இணைப்பு வலைப்பின்னல்!


வயர்லெஸ் இன்டர்நெட் நெட்வொர்க் என அழைக்கப்படும் வை-பி இன்டர்நெட் 
இணைப்பு நமக்கு, ஓரிடத்தில் அமர்ந்து மட்டுமே இன்டர்நெட் இயக்கும் 
சிக்கலைத் தவிர்க்கிறது.

ஜாலியாக, வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த இடத்திலும் அமர்ந்து 
இன்டர்நெட்டில் உலா வர உதவுகிறது. கேபிளை இணைக்காமல், எளிதாக 
இன்டர்நெட் உலகைக் காண, அனுபவிக்க முடிகிறது. 

இருப்பினும், இதிலும் பல தொல்லைகளை நாம் சந்திக்கிறோம். இன்டர்நெட்
 இணைப்பைத் தரும் ரேடியோ அலைகளுக்குப் பல தடைகள் உருவாகின்றன. 
சிக்னல் வட்டம் சுருங்குதல், ஹார்ட்வேர் பிரச்னைகள், நமக்கு இணைப்பு 
சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் வை-பி இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் 
இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.

வெள்ளி, செப்டம்பர் 7

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். – ஓர் அறிவியல் ஆய்வு.

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். – 03
கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலைவை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி)    நூல்: முஸ்லிம் 4200
மேலுள்ள நபிமொழியிலிருந்து இந்த உலகில் பிறந்து வாழ்ந்து மடிந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழப்போகின்ற அனைவருக்கும் கனவு எனும் உணர்வு பொதுவானது. தூக்கத்தின்போது கனவு ஏற்படாத மனிதன் யாருமே இல்லை என்று உறுதியாகக் கூறும் அளவிற்கு கனவு எல்லா மனித வாழ்க்கையிலும் ஒரு பொதுவான அம்சமாக விளங்குகின்றது. 
விஞ்ஞானம் கனவுகள் பற்றி என்ன சொல்கின்றது?
மனோதத்துவயியலின் படி கனவின் வரைவிலக்கனமானது தூக்கத்தின் போது மனித மூளையில் ஏற்படும் ஒரு இரசாயன மாற்றமாகும். பௌதீக மனோதத்துவவியலில் பதிவு செய்யப்படும்; மூளையின் மின் அலைகள் (EEG)இ கண் அசைவுகள் (EEG), தசைகளின் இயக்கம் (EEG) ஆகியவற்றின் ஆதாரத்துடன் தூக்கத்தின் நிலைகள் நான்காகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது.
தூக்கத்தின் நிலைகள்.
தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. 
1.விழிப்பு நிலை (wakefulness)
2.அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை{non- REM(rapid eye movement)}
3.அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM slee) - இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை.
4.ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep)

நபியின் பாதத்தை கழுவ ஆசைப்பட்ட அரசர். (Video)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சேப்பாக்கம் கிளையில் நடை பெற்ற குர்ஆன் விளக்க வகுப்பில் ஆற்றப்பட்ட உரை.

வியாழன், செப்டம்பர் 6

நகைகள் வெளியே தெரியாமல் மறைக்க இந்திய பெண்களுக்கு இங்கிலாந்து போலீசார் அறிவுரை (இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்பு )



லண்டன்: இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்கள் வெளியே செல்லும்போது ஸ்கார்ப் அல்லது துப்பட்டாவால் தங்க நகைகளை மறைத்துக் கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் லெஸ்டரில் உள்ள கிழக்கு மிட்லேண்ட்ஸ் நகரில் இந்திய வம்சாவழியினர் அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள பெல்கிரேவ் ரோட்டில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் நகைக்கடைகள் வைத்துள்ளனர். அந்த கடைகளுக்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து நகைகள் செல்கின்றன.