-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சனி, ஜூன் 2

தக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.


தவ்ஹீத் ஜமாத்தாஅல்லது தக்லீத் ஜமாத்தா?
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை தடுக்க நினைக்கும் சில சுயநலவாத சிந்தனை கொண்ட கயவர்கள் தவ்ஹீத் ஜமாத் மீதும் தவ்ஹீத் வாதிகள் மீதும் பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள் அந்த குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச் சாட்டு தவ்ஹீத் வாதிகள் தக்லீத் (தனி மனித வழிபாடு)செய்கிறார்கள் என்பதாகும்.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்பகாலங்களில் நாம் குர்ஆனும்,ஹதீஸ{ம் மாத்திரம் தான் மார்க்க ஆதாரம் மத்ஹபுகளோ இமாம்களோ தரீக்காக்களோ மார்கத்தின் ஆதாரங்கள் இல்லை என்று உடைத்துப் பேசுகின்ற போதெல்லாம்.நம்மை எதிர்த்தவர்கள் நம்மீது சொன்ன குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமானது.
இவர்கள் இமாம்களைத் திட்டுகிறார்கள்.
இமாம்களை இவர்கள் மதிப்பதில்லை.
இது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் மக்கள் மன்றில் வைக்கப் பட்டது.
அல்லாஹ்வின் பேருதவியால் அந்த அனைத்து வாதங்களும் அடித்து நொருக்கப் பட்டது.
இப்போது நம்மை நோக்கி இவர்கள் ஸஹாபாக்களை திட்டுகிறார்கள்.
பி.ஜெயை கண்மூடிப் பின்பற்றுகிறார்கள்
என்றெல்லாம் பரப்பி வருகிறார்கள்.
அதாவது ஸஹாபாக்கள் ஈமானிலும்,தியாகத்திலும் நம்மை விட பண்மடங்கு உயர்ந்தவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் அவர்களின் சொந்தக் கருத்து மார்கத்தின் ஆதாரமாகாது.என்பதுதான் நமது வாதம்.
சகோதரர் பி.ஜெ அவர்கள் ஒரு சிறந்த மார்க்க அறிஞர் பண்முக ஆளுமை கொண்டவர் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் அவர் சிறந்த அறிஞர் என்பதற்காக எந்தத் தவ்ஹீத் வாதியும் அவரின் கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதில்லை பின்பற்றவும் கூடாது.
இன்றைக்கு இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் சிலர் தாங்கள் எடுத்து வைக்கும் தவறான வாதங்கள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போவதாலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் அபார தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளதாலும் அவரை எதிர்க்க தங்களுக்கு திராணியில்லாததினால் தக்லீத் என்ற ஒரு கோஷத்தை இன்று கையிலெடுத்துள்ளார்கள்.
தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமன்றி அரபுலகத்திலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் மார்க்கம் தொடர்பான கருத்துக்கள் இன்று மெச்சப்படுவது அனைவரும் அறிந்ததே!

இந்த வகையில் இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் சில ஆலிம்களும் மதனிகளும் வெளிநாட்டில் பட்டம் பெற்றதாக சொல்லிக் கொள்ளும் சில பச்சோந்திகளும் தமது கருத்து மக்கள் மத்தியில் எடுபடாமல் போகிறதே என்ற விரக்தியில் இந்த தக்லீத் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
இது தவிர தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்த சிலர் ஒழுக்க சீர் கேடு பண மோசடி உள்ளிட்ட காரணங்களினால் அந்த அமைப்பை விட்டு வெளயேற்றப் பட்டனர்.
நம்முடன் இருக்கும் வரையில் நமது கருத்துக்களை விமர்சிக்காதவர்கள் ஜமாத் அவர்களின் குற்ற செயலை நிரூபித்து ஜமாத்தை விட்டே அவர்களை வெளியேற்றியவுடன் இதே தக்லீத் வாதத்தை அவர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
ஆக இப்படிப்பட்ட அனைத்துத் தரப்பாரின் வாதங்களுக்கும் பதில் கொடுக்கும் வகையில் இந்தக் கட்டுரை ஒரு தொடராக எழுதப் படுகிறது.
இந்தத் தொடரில் குர்ஆன் ஹதீஸ் பார்வையில் தக்லீத் என்றால் என்ன? தக்லீத் பற்றி மாற்றுக் கருத்தாரின் விமர்சனம் மற்றும் அதற்கான பதில் இஸ்லாம் தக்லீதைப் பற்றி என்ன சொல்கிறது? தக்லீத் விஷயத்தில் பி.ஜெயின் நிலைப்பாடு என்ன? தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பி.ஜெயை தக்லீத் செய்கிறார்களா? போன்ற தகவல்கள் எழுத்து மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் விபரிக்கப்படும்.
தக்லீத் என்றால் என்ன?
ஒரு அறிஞரின் கருத்தை அவர் சொன்னால் தவராகவே இருக்காது அது சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்து கண்மூடிப் பின்பற்றுவதை தக்லீத் என்று பரிபாசையில் நாம் அறிகிறோம்.
அதாவது ஆரம்பகால தவ்ஹீத் பிரச்சார நேரத்தில் மத்ஹபை பின்பற்றக் கூடிய ஆலிம்கள் நம்மை பார்த்து எழுப்பிய கேள்விகளில் மிக முக்கியமானது நீங்கள் ஏன் இமாம்களை பின்பற்றுவதில்லை என்பதாகும்.
அதே போல் இன்று தவ்கஹீத் வாதிகள் என்று தம்மை சொல்லிக் கொள்ளும் ஆலிம்களும் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் ஸஹாபாக்களை பின்பற்றுவதில்லை என்பதுதான்.
இந்த இரண்டு கேள்விக்கும் ஒரே பதிலைத் தான் இறைவன் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ(அதைவிட்டும்)தவிர்ந்து கொள்ளுங்கள் (59:5)
ஆக மொத்தத்தில் இரண்டு தரப்பாரும் தக்லீத் என்ற வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள் நம்மையும் அங்குதான் இழுக்கப் பார்க்கிறார்கள்.
முதலில் மத்ஹபு வாதிகளின் தக்லீதின் பின்னனியை நோக்குவோம்.
மத்ஹபுகளில் பிரச்சினை உள்ளது, சிந்தனைக்கு எட்டாத கதைகள் உள்ளது, ஆபாசங்கள் நிறைந்துள்ளது என்றெல்லாம் அதில் உள்ள உண்மைகளை ஏகத்துவ வாதிகள் எடுத்துக் காட்டும் போது அவர்களின் நிலை இமாம்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் இமாம்கள் பொய் சொல்ல மாட்டார்கள் தவறாக எழுத மாட்டார்கள் என்பதாகத்தான் இருக்கிறது.
ஷியாக்கள் என்பவர்கள் எப்படி அலி(ரலி) அவர்களை அளவுகக்கதிகமாக நேசித்ததன் மூலம் நபியவர்களுக்கும் மேலாக அவர்களை கொண்டு போய் நிருத்தினார்களோ நபிக்காக உயிரைக் கூட கொடுக்க தயங்காத நபித் தோழர்களை எப்படி வாய் கூசாமல் தூற்றினார்களோ அது போல் மத்ஹபைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் எந்த மத்ஹபை சார்ந்திருக்கிறார்களோ அந்த மத்ஹபுக்கெதிராக எவர் பேசினாலும் அவரை கடும் வார்த்தைகளால் வசை பாடி தாங்கள் குறிப்பிட்ட இமாமை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் என்பதை பரை சாற்றுகிறார்கள்.
உதாரணத்திற்கு ஹனபி மத்ஹபின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு ஹனபி இமாமை தக்லீத் செய்தவர்கள் ஷாபி இமாம் மீது சொன்ன இழி சொற்களை பாருங்கள்.
(மத்ஹபைப் பின்பற்றுபவர்களின்)மத்ரஸாக்களில் பாடப் புத்தகமான வைக்கப்பட்டுள்ள துர்ருல் முக்தார் என்ற புத்தகத்திலும் அதன் விரிவுரை நூலான ரத்துல் முக்தாரிலும் முன்னுரையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு செய்தியைப் பாருங்கள்.
وعنه عليه الصلاة والسلام (إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتيالدر المختار 1 56
ஆதம் (அலை) அவர்கள் என் மூலம் பெருமை அடைந்தார்கள். நான் என் உம்மத்தில் வருகின்ற நுஃமான் எனும் இயற்பெயர் கொண்ட அபூஹனீபாவைக் கொண்டு பெருமையடைவேன். அவர் என் சமுதாயத்துக்கு விளக்காவார் என்று நபி (ஸல்) கூறியதாக அந்த துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் அபூஹனீபாவின் மூலம் பெருமையடைவதாக அவர்களை கூறியதாக ஒரு பொய்யை அல்லாஹ்வின் பயமின்றின்றி நபியவர்கள் மீது பகிரங்கமான இட்டுக் கட்டியுள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள்.
அது போல் அதே புத்தகத்தில் இன்னோர் இடத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
  وعنه عليه الصلاة والسلام إن ساير الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني
எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமை அடைந்தனர். நான் அபூஹனீபா மூலம் பெருமை பெறுகிறேன். அவரை யார் விரும்புகிறாரோ அவர் என்னை விரும்புகிறார். அவரை யார் வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஹனபி இமாம் அவர்களை தக்லீத் செய்ததினால் ஏற்பட்ட விளைவைப் பாருங்கள்.அபூஹனீபாவை யாராவது வெருத்தால் அவர் நபியவர்களை வெருக்கிறார் என்றும் அபு ஹனீபாவை யார் நேசிக்கிறாரோ அவரை நபியவர்கள் நேசிக்கிறார்கள் என்றும் பொய்யாக நபியின் மீதே இட்டுக் கட்டியுள்ளனர் இந்த அபு ஹனீபாவின் தக்லீத் கூட்டத்தினர்.
ஒருவர் மீது வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை அன்பு பாசம் இவர்களை இப்படி வழிகேட்டில் கொண்டு போய் சேர்த்துள்ளது.
அபூ ஹனீபா மீது கொண்ட தக்லீத் அல்லாஹ்வின் பேயராலேயே இவர்களை பொய் சொல்லத் தூண்டியுள்ளது.
அதே துர்ருல் முக்தார் என்ற கிதாபில் உள்ள இந்தச் செய்தியைப் பாருங்கள்.
ولها قصة مشهورة وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة.
الدر المختار  1 ஃ55
அபூ ஹனீபா அவர்கள் கஃபாவின் காவலாளியிடம் கஃபாவின் உள்ளே செல்ல ஒரு இரவில் அனுமதி கேட்டார்கள். இரண்டு தூண்களுக்கிடையில் வலது காலில் நின்றார்கள். இடது காலை வலது கால் மீது வைத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் குர்ஆனை ஓதி முடித்தார்கள். ஸலாம் கூறியதும் அழுதார்கள். தமது இறைவனிடம் இரகசியமாக உரையாடினார்கள். என் இறைவா இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. எனினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே இந்த அடியானின் முழு ஞானம் காரணமாக இவரது வணக்கத்தில் உள்ள குறைபாடுகளை மன்னித்து விடு என்று துஆ செய்தார்கள். அப்போது கஃபாவின் ஒரு பகுதியில் இருந்து அவர்களை நோக்கி அபூஹனீபாவே நம்மை விளங்க வேண்டிய விதத்தில் விளங்கிக் கொண்டீர். உம்மையும் உம்மைப் பின்பற்றியவர்களையும் கியாம நாள் வரை மன்னித்து விட்டேன் என்று அசரீரியில் அல்லாஹ் கூறினானாம்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தங்களின் இமாமுக்கும் வஹீ வந்திருக்கிறது; அதுவும் அவரைப் பின்பற்றியவர்களை கியாம நாள் வரை மன்னிக்கும் உத்திரவாதத்துடன் வஹீ வந்திருக்கிறது என்று சிறு பருவத்திலேயே நம்ப வைத்து விட்டார்கள்.
இப்படி நம்பியவர்கள் எப்படி உண்மையை ஏற்று இந்த வழிகேட்டிலிருந்து விடுபட்டு வருவது ? ஹனபியை நபியளவுக்கு இல்லை நபியை விட மேலாக உயர்துவதற்கு இவர்களுக்கு தைரியம் வரக் காரணம் என்ன தக்லீத் என்ற இந்த தனி மனித வழிபாடுதான்.
அதுபோல் இந்த ஹனபியாக்கள் தமது இமாமை எதிர்ப்பவர்களை ஷைத்தான்கள் என்று கூறும் அளவுக்கு எல்லை மீறியுள்ளதையும் நாம் அறிய முடிகிறது.
இமாம் ஷாபி அவர்கள் இமாம் ஹனபியின் கருத்துக்கு மாற்றமாக பல கருத்துக்களை கூறியதாலும் ஹனபியின் கருத்தை மறுத்து ஷாபியின் கருத்தை சிலர் ஏற்றுக் கொண்டதாலும் தங்களுக்கு ஷாபியின் மீது ஏற்பட்ட அபார வெருப்பு அவரை ஷைத்தான் என்று சித்தரிக்கும் அளவுக்கு முற்றிப் போனது.
என் உம்மத்தில் முஹம்மத் இப்னு இத்ரீஸ்  (அதாவது ஷாபி இமாம்) என்று ஒருவர் தோன்றுவார். இப்லீஸை விட என் சமுதாயத்திற்கு அவர் கேடு செய்வார். மேலும் என் சமுதாயத்தில் அபூஹனீபா என்று ஒருவர் தோன்றுவார். அவர் என்சமுதாயத்தின் விளக்கு ஆவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்களாம்.
ஒரு தனி மனிதர் மீது ஏற்பட்ட பக்தி இன்னொரு இமாமை இப்லீஸை விட கெட்டவர் என்று கூறும் அளவுக்குச் சிலரை ஆக்கி விட்டது. அதுவும் நபி (ஸல்) அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள் என்ற முத்திரையுடன்..
இதை அறிவிப்பவர்களில் மஃமூன் இப்னு அஹ்மத் என்ற பெரும் பொய்யனும்இ அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஜூவைபாரி என்ற பொய்யனும் இடம் பெறுகின்றனர். இவ்விரு பொய்யர்களில் யாரோ ஒருவர் தான் இதை இட்டுக் கட்டியிருக்கின்றனர் என்று ஹதீஸ்கலை மேதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது மவ்லூஆத் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
மஃமூன் என்ற பொய்யனிடம் ஷாபி இமாமையும் அவரைச் சார்ந்தவர்களையும் பற்றி நீர் என்ன கருதுகிறீர்? என்று கேட்கப்பட்ட போது மேற்கூறிய பொய்யான ஹதீஸைஅவன் கூறினான். மஃமூன் என்ற பொய்யனே இதை இட்டுக் கட்டி இருக்க முடியும் என்று இமாம் ஹாகிம் அவர்கள் தனது அல்மத்ஹல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிறிதளவாவது அறிவு உள்ள ஒவ்வொருவனுக்கும் நபி ஸல் அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய் இது என்று தெளிவாகத் தெரியும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
ஸூயூத்தி அவர்கள் அல்லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் முதல் பாகத்தில் 457 ஆம் பக்கத்தில் இதைப் பொய்யென நிரூபித்துள்ளார்கள். மேலும் பல அறிஞர்களும் இதைப் பொய்யென நிரூபித்துள்ளனர். இவ்வளவு தெளிவாகப் பொய் என்று அறிஞர்கள் முடிவு செய்த பின்பும் ஹனபி அறிஞர்கள் பலர் இதை சரி காணவே முயற்சிக்கிறார்கள்.
ரத்துல் முக்தார் ஆசிரியர் இது சரியான ஹதீஸ் என்று சாதிக்கிறார். மேற்கூறிய அறிஞர்கள் எல்லாம் அபூஹனீபா அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இதைப் பொய் என்று கூறுவதாகத் தெரிவிக்கிறார். ஐனீ போன்ற அறிஞர்களும் இதிலிருந்து தப்பவில்லை. ஹதீஸ் கலை மேதைகள் அறிவிப்பாளர்களின் தராதரத்தை எடை போட்டு தக்கக் காரணங்களுடன் அடையாளம் காட்டியுள்ளதை ஒரு ஆதாரமுமின்றி இந்த ஹனபீ அறிஞர்கள் மறுக்கிறார்கள்.
இந்தக் குருட்டுப் பக்தி ஏற்பட்டு விட்டதால் தான் தங்கள் இமாம் சொன்னதில் தவறே ஏற்படாது என்று நம்புகின்றனர். தவறே ஏற்பட்டாலும் கியாம நாள் வரைக்கும் அல்லாஹ் அதை மன்னித்து விடுவான் என்றும் நம்புகின்றனர். மற்றொரு இமாமை இப்லீஸை விட மோசமானவர் என்று நம்புவதால் தான் அந்த இமாமுடைய எந்தக் கருத்தையும் நாம் ஏற்கக் கூடாது என்ற அளவுக்கு தங்களை மாற்றி கொண்டு விட்டார்கள்.
ஆக தனி மனிதன் மேல் கொண்ட இந்த குருட்டு பக்திதான் இவர்களை இப்படி நபி மீதே பொய் சொல்ல வைத்துள்ளது.
யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)
முன்னோர்களை பின்பற்றுவதும் வழிகேடே !
இமாம்களைப் பின்பற்றுபவர்கள் சொல்லும் மற்றொரு வாதம் தான் முன்னோர்கள் சொன்னவைகள் மார்க்கமாகும் என்பது.
அதாவது நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார்களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார்களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது இவர்களின் வாதமாகும்.
எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும்,மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம்.
எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும்.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது.
குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள்.
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?      (அல்குர்ஆன் 2:170)
மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர்.
முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, “எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்” எனக் கூறுகின்றனர்.
சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், “எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?” என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது.
இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி (ஸல்) அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை.
ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறதுவாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து  சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா?
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்பஇ இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?
தங்கள் முன்னோர்கள் செய்த காரியங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாகத் தான் வந்திருக்க முடியும் என்று இவர்கள் கூறுவது ஏற்கத்தக்கது என்றால், ஏசு இறைமகன் எனும் கோட்பாடு ஏசுவிடமிருந்து தான் வந்தது என்று கிறித்தவர்கள் கூறுவதை எப்படி மறுக்க முடியும்? உருவச் சிலைகள் வழிபாடு இப்ராஹீம் நபியின் மூலமாகவே வந்திருக்க முடியும் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் நம்பியதை எப்படித் தவறென்று கூற முடியும்?
நமது முன்னோர்கள் தாம் தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கூட மார்க்கம் என்று நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்த விஷயங்களில் முன்னோர்களை நாம் பின்பற்றவில்லையா? என்று சிலர் கேட்கலாம். முன்னோர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை. அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் பின்பற்றுவது எப்படித் தவறானதோ அதே போன்று அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் புறக்கணிப்பதும் தவறானதாகும்.
“அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தால் கூட அவர்களைத் தான் பின்பற்றப் போகிறார்களா?” என்று இறைவன் கேட்பதிலிருந்து இதை நாம் விளங்கலாம்.
முன்னோர்கள் சென்றது நேர்வழியாக இருந்தால் – அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியாக இருந்தால் – தாராளமாக அதை ஏற்கலாம். தொழுகைஇ நோன்பு போன்ற கடமைகள் இந்த வகையில் அமைந்துள்ளதாலேயே அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
முன்னோர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை என்பதையும் நாம் உணர்த்த வேண்டியுள்ளது. முன்னோர்களைப் பின்பற்றுவோர் மார்க்க விஷயங்களில் மட்டுமே அவர்களைப் பின்பற்றுகின்றனர். உலக விஷயங்களில் யாருமே முன்னோர்களை பின்பற்றுவதில்லை.
முன்னோர்கள் நவீன வாகனங்களைக் கண்டதில்லை. மின் சாதனங்களைக் கண்டதில்லை. உறுதியான கட்டடங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தியதில்லை என்பதற்காக அவர்களின் வழித் தோன்றல்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. முன்னோர்கள் வாழ்ந்திராத வாழ்க்கைக்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு அதிக நன்மை தரக் கூடியது என்றால் முன்னோர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றனர். முன்னோர்கள் செய்தவற்றை விட்டு விடவும் செய்கின்றனர்.
உலக விஷயங்களில் முன்னோர்களைப் பின்பற்றுவதால் மிகப் பெரிய கேடு எதுவும் ஏற்படப் போவதில்லை. அற்பமான இந்த உலகத்தில் சிறிதளவு சிரமம் ஏற்படலாம், அவ்வளவு தான்!
ஆனால் மார்க்க விஷயத்தில் முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றினால் மறுமை வாழ்வே பாழாகி விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.
எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும்எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள்.      (33:66, 67)
முன்னோர்கள், பெரியார்கள் மீது கொண்ட குருட்டு பக்தி நம்மை நரகத்தில் தள்ளி விடும் என்று இறைவன் எச்சரித்த பிறகு, உலக விஷயங்களை விட மார்க்க விஷயங்களில் அதிகக் கவனம் அவசியம் என்பதை உணர வேண்டாமா?
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைக் கூறியிருப்பது தெரிய வந்தால், முன்னோôர்களின் வழிமுறைக்கு அது மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வும்இ அவனது தூதரும் கூறியதையே எடுத்து நடக்க வேண்டும். மக்கத்துக் காஃபிர்கள் தங்களின் முன்னோர்களைக் காரணம் காட்டியது போல் காரணம் கூறக் கூடாது.
அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது தூதரின் போதனை களையும் புறக்கணிப்பதற்குக் காரணமாக உள்ள முன்னோர் பக்தியைத் தூக்கி எறியக் கூடியவர்களே இந்த வசனத்தை உணர்ந்து செயல்படுத்தியவர்களாவர். இந்த பக்தி அகன்று விடுமானால் சமுதாயத்தில் நிலவுகின்ற குழப்பங்களில் பெருமளவு நீங்கி விடும்.
ஸஹாபாக்களை பின்பற்றுவதும் வழிகேடே !
தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லிக் கொண்டு,இமாம்களைப் பின்பற்றுவது வழிகேடு என்று சொன்னவர்கள்,தற்போது ஸஹாபாக்களைப் பின்பற்றலாம்,அது நேர்வழி என்று பிரச்சாரம் செய்யும் காட்சி அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்தப் பிரச்சாரத்தின் உண்மை நிலை என்ன? ஸஹாபாக்களை பின்பற்றலாமா? பின்பற்றக் கூடாது என்றால் அதற்கான ஆதாரம் என்ன? என்பது போன்ற விஷயங்களை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஸஹாபாக்களை பின்பற்றுபவர்களின் வகைகள் :
ஸஹாபாக்களை பின்பற்றுபவர்கள் இரண்டு வகையினராக இருக்கிறார்கள்.
முதல் வகை : 
ஸஹாபாக்கள் சொல்வதும் மார்க்கத்தின் ஆதாரமாகும்,அவர்கள் சொல்வதை ஏற்று நடப்பது நமது கடமை.என்று வாதிடுபவர்கள்.
இரண்டாவது வகை :
ஸஹாபாக்களை பின்பற்றுவதென்றால் அவர்கள் எப்படி குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கினார்களோ அப்படியே நாமும் விளங்குவது,மார்க்கத்தின் சட்டம் ஒன்றை சொல்வதற்கு முன்னால் ஸஹாபாக்கள் குறிப்பிட்ட சட்டத்தை எப்படி விளங்கிக் கொண்டார்கள் என்று பார்க்க வேண்டும் என வாதிடுபவர்கள்.
மொத்தத்தில் இந்த இரண்டு வகையான கருத்தைக் கொண்டவர்களும் வழிகேட்டில் தான் இருக்கிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கம் என்பது திருமறைக் குர்ஆனையும்,நபியவர்களின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
இந்த இரண்டைத் தவிர வேறு எதையும் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொள்ள கூடாது.
குர்ஆனையும்,ஹதீஸையும் பின்பற்றுபவர்களைப் பொருத்தவரையில் வாழ்க்கைக்கான வழி காட்டி அந்த இரண்டிலும் இருந்தால் போதும் அதைத் தவிர்த்து யார் எதைச் சொன்னாலும் அது நமக்கு தேவையற்றது.
இப்போது ஸஹாபாக்களை பின்பற்ற முடியுமா?
பின்பற்றுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!    
(அல்குர்ஆன் 7:3)
மேற்கண்ட திருமறை வசனத்தில் இறைவனின் மூலம் நமக்கு வந்த வஹியை மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்றும் அது தவிர்ந்த எந்த ஒன்றையும் பின்பற்றக் கூடாது என்றும் இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
இறைவனிடமிருந்து வரும் வஹீ ஒன்று திருமறைக் குர்ஆன் மற்றயது நபியவர்களின் வார்த்தை. இந்த இரண்டையும் தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது.
ஆனால் வஹீ என்ற வட்;டத்தைப் பற்றி பேசுபவர்கள் ஸஹாபாக்கள் சொன்ன,செய்த,அங்கீகரித்தவைகளையும் மார்க்கம் என்று வாதிடுகிறார்கள்.இப்படி வாதிடுபவர்கள் மறைமுகமாக ஸஹாபாக்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வருகிறது என்றே நம்புகிறார்கள் என்று தான் அர்த்தம்.
ஸஹாபாக்களுக்கு வஹீ வராது என்றும் இறைவனின் தூதருக்கு மாத்திரம் தான் வஹீ வரும் என்றும் வஹீயை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்றும் இறைவன் திருமறையில் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:38)
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!
(அல்குர்ஆன் 6:106)
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும்அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்கட்டுப்பட்டோம்‘ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51)
அல்லாஹ்வுக்கும்இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!‘ என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. (அல்குர்ஆன் 24:54)
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்‘ என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவைஅவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6:153)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும்இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும்மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59)
அல்லாஹ்வும்அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
மேட்கண்ட வசனங்கள் யாவும் இறைவனின் வார்த்தைகளையும் நபியவர்களின் நடை முறையையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.
இதே நேரம் ஸஹாபாக்களை பின்பற்றுவதும் மார்க்கம் என்று சொல்பவர்கள் ஸஹாபாக்களை தக்லீத் செய்வதன் மூலம் தெளிவான வழி கேட்டில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்களின் சிறப்புகள்.
நபித்தோழர்கள் நம்மை விட சிறப்பானவர்கள், நன்மையில் முந்தியவர்கள், ஈமானில் சிறந்தவர்கள் என்பதில் நமக்கு அணுவளவும் மாற்றுக் கருத்தில்லை. இதற்கு குா்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏறாளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும்.
நபித் தோழர்களைப் புகழ்ந்து பேசும் இறைவன் அவா்கள் என்றென்றும் சுவர்க்கத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறான்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)
இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்;இரக்கமுடையோன். (அல்குர்ஆன் 9:117)
ஸஹாபாக்களின் வள்ளல் தன்மையை இறைவன் பாராட்டிப் பேசுகிறான்.
உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன் 57:10)
நபித் தோழர்கள் சிலர் சில சந்தர்ப்பங்களில் சில தவறுகளை செய்திருந்தாலும் அவா்களை திட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஏன் என்றால் நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கும் அவா்கள் செய்த சேவைக்கும் உள்ள வித்தியாசம் மலையையும், மடுவையும் போன்றதாகும்.
தங்களுடைய வாழ்வாதார தேவையையை முழுமைப்படுத்துவதற்கு சிறமப்பட்ட நேரத்திலும் அடுத்தவர்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் தான் நபித் தோழர்கள்.
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)  நூல்: புகாரி 3673
மக்களில் சிறந்தவர்கள் யார் என்ற பட்டியலை நபியவர்கள் தெரிவிக்கும்போது முதலிடத்தை நபித் தோழர்களுக்கே வழங்குகிறார்கள்.
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)      நூல்: புகாரி 2651
இவ்வளவு சிறப்பு மிக்கவர்களான நபித் தோழர்களை யாரும் திட்டவோ,நிந்திக்கவோ கூடாது. அவா்களின் சிறப்புக்களை மறுக்கவும் கூடாது.
ஸஹாபாக்களை வஞ்சிக்கும், அவா்களின் சிறப்புக்களை மறுக்கத் துணியும் ஷீயாக்கள் மற்றும் அவா்களுக்கு வக்காலத்து வாங்கும் அமைப்புக்களை நாம் ஒரு போதும் விடப்போதவில்லை.
இந்த கெட்ட எண்ணம் குடி கொண்ட இஸ்லாமியப் பெயர் தாங்கிக் கயவர்களை நாம் மக்கள் மன்றில் அடையாளம் காட்டியே ஆகவேண்டும்.
இதே நேரம் ஸஹாபாக்கள் இவ்வளவு தியாகம் செய்துள்ளார்கள், அவா்களை இறைவன் குா்ஆனிலே புகழ்ந்திருக்கிறான், நபியவர்கள் தனக்குப் பின் சிறந்தவர்கள் என்று ஸஹாபாக்களைத் தான் அடையாளம் காட்டியுள்ளார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஸஹாபாக்கள் சொல்வதும் மார்க்கமாக ஆகும்.
நபித் தோழர்களையும் பின்பற்ற முடியும், அவா்கள் செய்த காரியங்களும் மார்க்கமாக மாறும் என்று யாராவது வாதிட்டால் அவருடைய வாதம் வழிகேட்டிற்கு நம்மை அழைக்கும் வாதம் என்று நாம் தெளிவடைந்து கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் ஸஹாபாக்கள் நம்மை விட சிறந்தவர்கள், ஈமானில் முந்தியவர்கள் என்பதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. அவர்கள் நல்லவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம் அவா்களுக்கெதிரான கருத்துக்களை சொல்பவர்களுக் கெதிரான நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்கிறோம் ஆனால் அவா்களை பின்பற்ற முடியாது, பின்பற்றவும் கூடாது.
திருமறைக் குா்ஆனையும், நபியவர்களின் பொன் மொழிகளையும் மாத்திரம்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.ஏற்பட்டுத்தான் இருக்கிறது.
நபித் தோழர்களிடம் தவறுகள் ஏற்பட்டன என்று நாம் கற்பனையாககூறவில்லை. மாறாக தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தக் கருத்தை முன்வைக்கிறோம்.
நபித் தோழர்களை பின்பற்றுவதும் வழிகேடுதான் என்ற தலைப்பில் குா்ஆன்,ஹதீஸைத் தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது என்ற கருத்தில் திருமறைக் குா்ஆனில் இறைவன் குறிப்பிட்டுள்ள வசனங்களையும் அதற்குறிய விளக்கங்களையும் நாம் பார்தோம்.
ஸஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு,நபித் தோழர்களானாலும் அவர்களை தக்லீத் செய்யக் கூடாது குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் பேசியும்இஎழுதியும் வரும் இவ்வேலை.
இப்படி நாம் சொல்வதால் ஸஹாபாக்களை மதிக்கவில்லை,அவா்களை நாம் திட்டுகிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் தங்களுக்கான ஒரு ஆதரவைப் பெற்றுக் கொள்ள முனைகிறார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.
நபித்தோழர்களை பின்பற்றக் கூடாது அவா்களின் வார்த்தைகள்,வாழ்க்கை வழி முறைகள் மார்க்கத்தின் ஆதாரமாகாது என்று நாம் கூறுவதினால் ஸஹாபாக்களை நாம் திட்டுகிறோம் என்றோ,அல்லது அவா்களின் தியாகத்தை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றோ அர்த்தமல்ல.
ஸஹாபாக்களை நாம் நேசிக்கிறோம்,அவா்களின் தியாகங்களை மெச்சுகின்றோம்,ஆனாலும் மார்க்க விஷயங்களில் குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் தான் நமது வழிமுறைகளாக ஏற்றுக் கொள்வோம்.
இந்த இரண்டுக்கும் மாற்றமாக யார் என்ன கருத்தை சொல்லியிருந்தாலும் அவற்றை தூக்கி தூர எறிந்து விடுவோம் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
இனி ஸஹாபாக்கள் இந்த மார்க்கத்தின் வளர்சிக்காக செய்ய தியாகங்களை பற்றியும் அவா்களின் சேவைகள் பற்றியும் சுருக்கமாக பார்த்துவிட்டு,ஸஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்பதற்கான மேலதிக விளக்கங்களை ஆராய்வோம்.
நம்மை விட ஈமானில் சிறந்த நல்லவா்கள்.
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல்: புகாரி 2651
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3673
நபித் தோழர்களைப் பற்றிய திருமறையின் புகழ்ச்சி.
உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன் 57:10)
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 9:100)
இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.
(அல்குர்ஆன் 9:117)
மேற்கண்ட வசனங்களில் நபித் தோழர்களுக்குள்ள சிறப்புகளை இறைவன் அழகாக எடுத்துக் கூறியுள்ளான்.
இந்தச் சிறப்புகளை மறுத்து,நபித்தோழர்களை தவறாக விமர்சித்து அவா்களை நிந்திக்கும் ஷீயாக்களை எதிர்த்து அவா்களின் கருத்துக்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டி நாம் அடிக்கடி எழுதிவருவதையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
அதே போல் இப்படியெல்லாம் சிறப்புகள் இருக்கிறது என்பதற்காக அவா்கள் சொல்வதும் மார்க்கத்தின் ஆதரங்களாகும் என்று வாதிடுவதும் வடி கட்டிய மடமைத் தனம் என்பதையும் நாம் மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான காரணம்
நபித்தோழர்களும் மனிதர்கள் தான்.
அவா்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
நபித்தோழர்களும் சில நேரங்களில் தவறுகளை செய்திருக்கிறார்கள்.
சில நபித் தோழர்களின் கருத்துக்களும்,செயல்பாடுகளும் குா்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமாக அமைந்திருக்கிறது.
பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.
குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும், நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.
குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்துக் கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.
ஸஹாபாக்களின் கருத்துக்கள் மார்க்க ஆதாரங்களாகுமா? 
இதே நேரம் சகாபாக்கள் நம்மை விட ஈமானில் முதியவர்கள் என்பதில் எல் முனையளவுக்கும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் நபியவர்களின் தோழர்களும் மனிதர்கள் என்பதினால் அவா்களும் பல இடங்களில் குா்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். அவை எவை என்பது தொடர்பாக இந்தத் தொடரில் நாம் பார்ப்போம்.
முத்தலாக்கும் உமர் பின் கத்தாப் (ரலி) அவா்களும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும்அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள்நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?) என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) , நூல் : (முஸ்லிம் 2689)
முத்தலாக் என்று கூறினால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர். ஸஹாபாக்களைப் பின்பற்றலாம், அவா்களைப் பின்பற்றுவதும் நன்மைதான் என்ற கொள்கையுடையவர்கள் இந்தச் செய்தியை ஊன்றி கவணிக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.
நபியவர்கள் எதனை ஒரு தலாக் என்று சட்டம் சொன்னார்களோ அந்த சட்டத்தை அப்படியே மாற்றி உமர் (ரலி) அவா்கள் முத்தலாக் என்று சட்டம் சொல்கிறார்கள். இப்போது நபியைப் பின்பற்றுவதா? அல்லது உமரைப் பின்பற்றுவதா? என்ற கேள்வி எழுகிறது.
உண்மையான ஏகத்துவவாதி ஸஹாபாக்களை தனது தலை மேல் வைத்து மதிக்க வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸஹாபாக்களை பின்பற்றலாம் என்ற கருத்தை ஒரு ஏகத்துவவாதி ஏற்றுக்கொள்ளமாட்டான், ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்பதே இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.
அபூமூஸா (ரலிஅவா்களும், ஆதாரம் கேட்ட உமர் பின் கத்தாப் (ரலி)அவா்களும்.
உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), ‘அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்‘ என்றார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார்‘ என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி)அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது)இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்‘ என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்  என்று கூறினார்கள்.
உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள்நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள் என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) யை உமர் (ரலி) யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி)நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதாநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா   நூல்: புகாரி 2062, 6245
நபியவர்களின் தோழர்களின் மிக முக்கியமானவர்களின் ஒருவர் தான் உமர் (ரலி) அவா்கள், அவா்களுக்கே மேற்கண்ட சட்டம் தெரியாமல் இருந்திருக்கிறது.காரணம் வியாபாரத்தில் ஈடுபட்டதினால் சில நேரங்களில் நபியிடத்தில் அவா்களுக்கு இருப்பதற்குக் கிடைக்கவில்லை. அதனால் தான் அவா்களுக்கு சில சட்டங்கள் தெரியாமல் போய் இருக்கிறது என்பது மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெரியவரும் உண்மையாகும்.
கொள்ளை நோயின் பரவலும் அப்துர் ரஹ்மான் பின் அவ்பின் தெளிவும்.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போதுபடைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்துஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள்ஷாம் நாட்டிற்குப் போகலாமாஎன்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள்இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்‘ என்று சொல்ல நான் கேட்டேன்‘ என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 5279
கொள்ளை நோய் பரவுதல் தொடர்பாக நபியவர்கள் தெரிவித்த மேற்கண்ட செய்தி ஸஹாபாக்களைப் பின்பற்ற முடியும் என்று சொல்பவர்கள் முதற் கொண்டு அநேகருக்குத் தெரியும். ஆனால் உமர் (ரலி) அவா்களுக்கு அது தொடர்பான செய்தி தெரியாமல் இருந்திருக்கிறது. என்பதை மேற்கண்ட செய்தி நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
குளிப்பு எப்போது கடமை?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?’ என்று கேட்டேன். அதற்கு மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)    நூல் : புகாரி 293
உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.
பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல்கள் : முஸ்லிம் 526, திர்மிதீ 102
சட்டம் மாற்றப்பட்ட விஷயம் அனைவரும் பெரும்பாலும் அறிந்த ஒன்று. ஆனால் இந்தச் சட்டம் தெரியாமல் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.
ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்னஎன்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்குஅவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டுதொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)  நூல்: புகாரி 179, 292
மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போயுள்ளது. நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் இப்போது உஸ்மானைப் பின்பற்றுவார்களா?அல்லது நபியவர்களைப் பின்பற்றுவார்களா?
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மம் செய்வது கூடுமா?
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி)அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) யிடம்அபூ அப்திர்ரஹ்மானே ! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்என்று கேட்டார். தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லைஎன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது‘ என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்என்று கேட்டார். அதற்கு, (இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதாஎன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.
அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்ற இறை வசனத்தை என்ன செய்வீர்கள்என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்குஇந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா   நூல்: 346, 347
குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும், அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும், சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?
நபித் தோழர்களைப் பின்பற்றலாம் என்றால் இப்னு மஸ்ஊத் (ரலி) அவா்கள் விஷயத்தில் என்ன தீர்பை சொல்லுவது?
நபிகள் நாயகத்தின் மரணமும், குா்ஆனின் தீர்ப்பும்.
(நபி - ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும்அவரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) உட்கார மறுத்ததும்மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவேஅபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.
அப்போது அபூபக்ர் (ரலி)உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத்தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களாவந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாகஅபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 1242, 3670
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம், நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித்தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.
நபித் தோழர்களையும் பின்பற்றலாம், அதுவும் மார்க்கம் தான் என்று பிதற்றக் கூடியவர்கள் இந்தச் செய்திக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
ளுஹா தொழுகையை மறுக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உபரியான) சில கிரியை (அமல்)களைச் செய்ய விருப்பம் இருந்தாலும்கூட அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள். மக்களும் அவற்றைச் செய்ய அவர்கள் மீது அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். நான் ளுஹாத் தொழுகை தொழுதுவருகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ளுஹாத் தொழுததில்லை    (பார்க்க புகாரி 1128, 1177)
தமத்துஃ ஹஜ்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.
நான் உஸ்மான் (ரலி) உடனும்அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ்உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும்உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ்உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, ‘லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்‘ என்று கூறிவிட்டு, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்‘ என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம் ,  நூல் : புகாரி 1563
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர்கள், ‘அது அனுமதிக்கப்பட்டதே!‘ என்று கூறினார்கள். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், ‘உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!‘ என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ‘என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமாஅல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்‘ என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்‘ என்று விடையளித்தார்கள்.    அறிவிப்பவர் : ஸாம் , நூல் : திர்மிதீ (753)
தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்?
இஹ்ராமின் போது நபி திருமணம் முடித்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியது.
மைமூனா (ரலி) தம்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்)  அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.
(பார்க்க புகாரி 1837)
113 மற்றும் 114ம் அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்.
குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.
நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.
இப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன?
நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, ‘நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாகஉடையணியாதவர்களாகவிருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்‘ என்று கூறிவிட்டு, ‘முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்‘ என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.
அப்போது நான், ‘என் இறைவாஎன் தோழர்கள்‘ என்று சொல்வேன். அதற்கு, ‘இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது‘ என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், ‘நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்‘ என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்‘ என்று கூறப்படும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி 4740, 6524
குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.
மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை‘ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.  
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: ஹாகிம் 318
பி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடே!
தக்லீத் ஓர் ஆய்வு என்ற தொடர் ஆக்கத்தில் இது வரைக்கும் சில முக்கிய பகுதிகளைப் பற்றி தெளிவாக ஆராய்ந்தோம். இதன் இறுதித் தொடராக தவ்ஹீத் ஜமாத்தைப் பற்றி வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனமான “பி.ஜெ தக்லீத்” தொடர்பாக நாம் ஆராய இருக்கின்றோம்.
ஆம் குர்ஆன், சுன்னா என்று பேசுபவர்களாக இருந்தாலோ அல்லது அதற்கு மாற்றமானவர்களாக இருந்தாலோ அனைவராலும் நம்மைப் பார்த்து வைக்கப்படும் விமர்சனங்களில் இது முக்கிய விமர்சனமாகும்.
இவர்கள் குர்ஆன், சுன்னா என்று பேசினாலும் பி.ஜெ எதைச் சொன்னாலும் அதையும் ஏற்று பின்பற்றுவார்கள். அவர் எதைச் சொல்கிறாரோ அதுதான் மார்க்கத்தின் தீர்ப்பு என்று இவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். என்பதுதான் நமக்கு எதிராக மற்றவர்கள் வைக்கும் முக்கியமான விமர்சனம்.
இந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்காகத் தான் ஆய்வின் இறுதிப் பகுதியை “பி.ஜெ யைப் பின்பற்றுவதும் வழிகேடே!“ என்று தலைப்பிட்டு எழுதுகின்றோம்.
இந்தத் தலைப்பை ஆய்வு செய்வதற்கு முன் பி.ஜெ பற்றிய சில செய்திகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விமர்சனத்திற்கு மட்டும் பதில் சொல்வதைவிட விமர்சனத்துடன் தொடர்புடையவர் யார்? அவரை வைத்து ஏன் இந்த விமர்சனத்தை செய்கிறார்கள் என்பது அனைவரும் தெரிய வேண்டும் என்பதற்காக பி.ஜெ பற்றிய சில செய்திகளை ஆரம்பமாக நாம் பார்த்து விட்டு விமர்சனத்திற்குறிய பதிலை பார்க்களாம்.
யார் இந்த பி.ஜெ?
பி.ஜெ என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல்,எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.
1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்
மார்க்கப் பிரச்சாரம் மாத்திரம் தான் தங்கள் வேலை என்றெண்ணிக் கொண்டிருக்கும் பல மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஆலிம்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் முன்னெடுப்புக்களிலும் தன்னை இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.
ஆலிம்கள் என்றால் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதும், நபியின் பிறந்த நாள் (?) விழா என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலை ஒதுவதும், ஐந்து நேரம் தொழுகை நடத்துவதும் தான் என்பதைத் தாண்டி,சமுதாயப் போராட்டத்தில் ஆலிம்கள் தங்களை ஈடுபடுத்தி நமது சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவராக இவர் இருந்து வருகின்றார்.
ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு.
அல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்கள் (?) என்று மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களை வணங்கி வழிபட்டு வந்ததைப் பார்த்து அதற்கெதிராக இஸ்லாத்தின் உண்மை நிலையை மக்கள் மத்தியல் எடுத்துரைக்க வேண்டும் என்று ஏகத்துவப் பிரச்சாரத்தை 1980களில் தமிழகத்தில் இவர் ஆரம்பித்தார்.
கப்ரு வணக்கத்திற்கெதிராக குரல் கொடுத்த காரணத்தினால் பல இடங்களில் தாக்கப்பட்டு, அல்லாஹ்வின் உதவியினால் உயிர் பிழைத்தார்.
உயிரே போனாலும் கொள்கையை சொல்லாமல் விட மாட்டேன் என்ற கொள்கை உறுதியினால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இவருடைய பிரச்சாரம் சூடு பிடித்தது.
தமிழகத்தின் பல இளைஞர்கள் இவருக்குப் பின்னால் அணி வகுத்தார்கள்.
நவீன தாக்கத்தை உண்டாக்கிய “நஜாத்” பத்திரிக்கை.
ஏகத்துவப் பிரச்சாரத்தை எழுத்து மூலமும் எத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துபையில் பணியாற்றும் தமிழ் கூறும் சகோதரர்களினால் நட்த்தப்பட்ட ஐ ஏ சி (இஸ்லாமிய விழிப்புணர்வு மையம்) என்ற அமைப்பின் சார்பில் “நஜாத்” என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை இவரை ஆசிரியராகக் கொண்டு துவங்கப்பட்ட்து. அது வரை காலமும் பேச்சாளராக மாத்திரமே அறியப்பட்ட பி.ஜெ நஜாத் பத்திரிக்கை மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமானார்.
ஆம் ஒவ்வொரு செய்தியையும் மிக அழகிய முறையில் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் விதமாக பேசும் இவர் எழுத்திலும் அதே முறையைக் கையாண்டார்.
கப்ரு வணக்கத்திற்கு எதிரான இவருடைய எழுத்துக்கள் “நஜாத்” பத்திரிக்கை மூலமாக தமிழகத்தின் மூலை முடுக்குகளையும் தாண்டி வெளிநாடுகளிலும் தடம் பதிக்க ஆரம்பித்தது.
மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக சென்றிருந்த மக்கள் மத்தியில் பி.ஜெ அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அபார தாக்கத்தையே உண்டாக்கியது எனலாம்.
சினிமாவில் மூழ்கி, மரணித்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் இவருடைய பேச்சின் மூலமும், எழுத்தின் மூலம் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முனைந்தனர்.
இன்றைக்கு இவரையும் இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தையும் எதிர்க்கும் பலரும் அன்றைக்கு இவருடைய கருத்துக்களின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றால் அது மிகையல்ல. (இவருடன் இருந்த பலர் இவரை விட்டும் விலகிச் சென்றதற்கான காரணத்தை இறுதியில் விளக்குவோம்).
நடிகர்களுக்கு பால்அபிஷேகம் நடத்திய முஸ்லிம் இளைஞர்கள் “நஜாத்”பத்திரிக்கையின் வாசகர்களாக மாறினார்கள். ஏகத்துவக் கருத்துக்களை மற்றவர்களுக்கு பரப்புவது மட்டுமன்றி குர்ஆனை ஆழமாக படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் இந்தப் பத்திரிக்கை உண்டாக்கியது.
இன்றைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவ்ஹீத் வாதிகளை “நஜாத் காரர்கள்” என்று அழைக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. காரணம் நஜாத் பத்திரிக்கை தான்.
ஆனால் ஐ ஏ சி அமைப்பின் மூலமும், அதன் பொருளாதாரத்தின் மூலமும் உருவாக்கப்பட்ட நஜாத் பத்திர்கையை உள்ளூரில் நிர்வாகம் செய்து வந்த அபூஅப்துல்லா என்பவர் தன்னுடைய சொந்த உரிமையாக பதிவு செய்து கொண்ட்தால் ஐ ஏ சிக்கு ஆதரவாக, நியாயத்துக்கு ஆதரவாக நஜாத் பத்திரிகையில் இருந்து விலகினார். அத்துடன் நஜாத் பத்திரிகை இருந்த இடம் தெரியாமல் போனது தனி விஷயம்.
புரட்சியை உண்டாக்கிய புரட்சி மின்னல்.
இதன் பின்னர் மதுரையில் இருந்து நீண்ட காலமாக அப்துல்லா என்பவர் புரட்சி மின்னல் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார் அவர் ஐ ஏ சி யைத் தொடர்பு கொண்டு இந்தப் பத்திரிகையை நீங்கள் நட்த்துங்கள் என்று கூறி ஒப்படைத்தார். அந்தப் பத்திரிகையில் பீஜே தொடர்ந்து எழுதி வந்தார்.
அறிவுக் கண்களைத் திறந்த அல்ஜன்னத்.
இவருடைய எழுத்துத் துறையின் இன்னொரு பரிணாமமாக உருவானதுதான் “அல்ஜன்னத்” பத்திரிக்கை. ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியில் கருத்துக்களையும் இதன் மூலம் பி.ஜெ முன்வைத்தார்.
பொது சிவில் சட்டம், இந்திய அரசியில் சாசனம் தொடர்பான விளக்கங்கள், குறைகள், பாதிக்கப்படும் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக சட்ட ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை இதன் மூலம் இவர் தெளிவுபடுத்தினார்.
ஷாஃபி, ஹனபி என்று ஆளுக்கு ஒரு இமாமை பிடித்துக் கொண்டு மத்ஹபுகள் என்ற வழி கெட்ட சிந்தனையில் இருந்தவர்களிடம் மத்தபுகளின் ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தியது மாத்திரமன்றி, ஹதீஸ்கள் என்ற பெயரில் போலியாக மக்களிடம் புகுத்தப்பட்டிருந்த செய்திகளையும் தெளிவுபடுத்திக் காட்டுவதற்குறிய சிறந்த ஊடகமாக அல்ஜன்னத்தை இவர் பயன்படுத்தினார்.
இயக்க ரீதியிலான கொள்கை முன்னெடுப்புக்கள்.
ஆரம்பம் முதல் பல இயக்கங்களில் இணைந்திருந்த இவர் குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் உடைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஜாக் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினார். அதன் தலைவராகவும் இருந்தார்.
பிரசாரப்பணியில் தீவிரமாக ஈடுபட தலமைப் பொறுப்பு தடையாக இருப்பதாக கூறி அந்த இயக்கத்தினர் விரும்பாத போதும் வலுக்கட்டாயமாக கமாலுத்தீன் மதனியை அதன் தலைவராக ஆக்கினார்.
சிரிது காலம் அதில் இருந்து பிரச்சாரத்தை முன்னெடுத்த இவர் மார்க்க ரீதியிலான சில பிரச்சினைகள் காரணமாகவும், அரசியல் ரீதியிலும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தமுமுக என்ற இயக்கத்தைச் சில சகோதரர்களுடன் சேர்த்து உருவாக்கினார்.
நேரடி அரசியலில் இணைந்து வெறும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் இயக்கமாக இல்லாமல் சமுதாயத்தின் நலன் காக்கும் இயக்கமாக தமுமுக இருக்க வேண்டும் என்பதற்காக எக்காரணம் கொண்டும் தேர்தலில் இறங்க மாட்டோம் என்ற ஒரு விதியையும் அமைப்பு விதியாக்கினார்.
ஏகத்துவ அறிஞர்களின் இடைவிடாத உழைப்பாலும் தீவிரமான பிரச்சாரத்தினாலும் இந்த இயக்கம் மக்களிடம் செல்வாக்கு பெற்றது.
பலதடைகளைத் தாண்டி இந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்ட பின்னர் இதன் அமைப்பாள பொறுப்பில் இருந்து விலகினார். திருக்குர் ஆன் தமிழாக்கம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுபட வேண்டியுள்ளதால் விலகுவதாகவும் அறிவித்தார். அன்றைய தமுமுகவில் தலைவர் பொதுச் செயலாளர் பதவிகலை விட மேலான முதனமையான பதவி அமைப்பாளர் பதவியாகும்.
அதன் பின்னர் அந்த இயக்கத்தின் பணிகளில் இருந்து விலகிக் கொண்டாலும் அதன் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் இருந்தார். பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து விளகுவோர் அதற்கு எதிராக செயல்படுவது தான் வழக்கம். ஆனால் இவர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும் அந்த இயக்கதில் இருந்து வந்தார்.
இதன் பின்னர் அவர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஞ்சிய தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றினால் தான் சுன்னத் ஜமாஅத் ஆதரவும் கிடைக்கும். நாம் தேர்தலிலும் போட்டியிடலாம் என்று கருதி யாரும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று முடிவு செய்தனர். இதைக் கண்ட பிறகு தான் தவ்ஹித் பிரச்சாரம் உங்களுக்குத் தடையாக இருக்குமானால்அதை எழுதி தாருங்கள் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினார். அந்த மதிகெட்டவர்கள் அப்படியே எழுதியும் கொடுத்தனர்.
தமுமுக வில் இருந்து இவருடன் சேர்த்து வெளியாகிய அனைத்து மார்க்க அறிஞர்களும் சேர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள்.
தவ்ஹீத் பிரச்சாரம் தான் நமது உயிர் மூச்சு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு சமுதாய சேவையிலும் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தவ்ஹீத் பேசினால் மக்கள் வரமாட்டார்கள் என்ற இவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கும்பகோனம் நகரில் பத்து லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு போராட்டம் நடத்தினார். தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நடத்திய இந்த பேரணி இதற்கு முன் தமுமுக நடத்திய எல்லா போராட்டங்களை விடவும் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் பின்னர் தஞ்சை, சென்னை தீவுத்திடல் என நடத்தப்பட்ட இரண்டு மாநாடுகளும் கும்பகோனத்தையும் மிஞ்சும் வகையில் இருந்தன. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுக வளர்ச்சிக்கு தடை என்று கூறியவர்கள் பீஜே பிரிந்த பின்னர் ஒரு மாநில மாநாடையும் நடத்தவில்லை. நட்த்தினால் இரண்டையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து தமுமுகவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வார்கள் என்று அஞ்சினார்கள்.
மாற்று மத அன்பர்களில் பலம் பெரும் இயக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது, இரத்ததான சேவையில் மாநிலத்திலேயே முதல் இடத்தில் இவ்வமைப்பு தான் இருக்கிறது என்றால் அதன் சமுதாய சேவை முன்னெடுப்புக்களின் வீரியத்தை அறிந்து கொள்ளுங்கள்.
பி.ஜெ சந்தித்த விவாதக் களங்கள்.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக விவாதக் களங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகள், கிருத்தவர்கள், காதியானிகள், கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்கள், குர்ஆன் சுன்னா என்று தங்களையும் தவ்ஹீத் வாதிகளாக வாதிடுபவர்கள் என்று பலருடன் பல விவாதக் களங்களை சகோதரர் பி.ஜெ சந்தித்தார்.
முதன் முதலில் குமரி மாவட்டம் கோட்டாரில் கப்ரு வணங்கிகளுடன் விவாதம் நடந்தது. அதில் கேரளாவின் பெரிய ஆலிமாக கருதப்படும் அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்ட பல பெருந்த்தலைக்கள் கேவலமான தோல்வியைத் தழுவினார்கள். அதன் பின்னர் குமரி மாவட்ட்த்தில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்ட்து. தமிழகம் முழுவதும் கப்ரு வணக்கத்தில் இருந்து மக்கள் விடுபட இந்த விவாதம் காரணமாக் இருந்த்து எனலாம்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் இவ்வுலகுக்கு அனுப்பப்பட மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்க மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவனும் நபி தான் என்ற வழி கெட்ட கொள்கை கொண்ட காதியானிக் காபிர்களுடன் எதிர்த்து வாதிடுவதற்கு அனைவரும் பின்வாங்கிய நேரத்தில் இறைவனின் அருளினால் அவர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தி காதியானிகளின் குருட்டுக் கொள்கைக்கு சாவு மணி அடிக்க உதவினார்.
கஃபா நிலைக்குமா? என்ற தலைப்பில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஜெபமணி என்ற பாதிரியாருடன் மதுரையில் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் கிருத்தவம் தூய்மைத் தன்மையை இழந்து மனிதர்களின் சொந்தச் சரக்குகள் பைபிலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்து ஒரு விவாதத்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து இலங்கையில் கல்முனையில் மத்ஹப் வாதிகளுடன் நடந்த விவாதத்திலும் பங்கு கொண்டார்.
பின்னர் கொழும்பில் கப்ரு வணங்கிகளுடன் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த மற்றொரு விவாதத்திலும்  கலந்து கொண்டார்.
அதே போல் மவ்லிதுகளுக்கும், மதுகபுகளுக்கும் எதிராக கலியக்காவிளை என்ற இடத்தில் ததஜ சார்பாக மிகச் சிறப்பான ஒரு விவாதக் களத்தில் கலந்து கொண்டு சத்தியக் கொள்கையை நிலை நாட்ட பாடுபட்டார்.
ஒருவன் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொண்டால் அவன் என்னிடம் வந்து பைஅத் – உறுதி மொழி தரவேண்டும் என்று வாதிட்டு பைஅத் செய்யாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று குப்ர் பட்டம் சூட்டிய இலங்கை உமர் அலி என்பவருடன் இலங்கை புத்தளம் நகர மண்டபத்தில் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்தியதின் மூலம் உமர் அலியின் உளரல் மொழிகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவினார்.
அல்லாஹ் உருவமற்றவனா? அபத்தங்களும், ஆபாசங்களும். இமாம்களின் துணையின்றி குர்ஆனையும், சுன்னாவையும் விளங்க முடியாதா?, போன்ற தலைப்புகளில் கப்ரு வணக்கத்திற்கு வக்காலத்து வாங்கி மக்களை வழிகேட்டிற்கு அழைத்துக் கொண்டிருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் சென்னையில் தொடர்ந்து நான்கு விவாதங்களை நடத்தினார்.
கடவுள் இல்லை எல்லாம் இயற்கை என்று வெற்றுக் கூச்சல் போடும் நாத்தீக திராவிட இயக்கத்தவர்களுடன் இறைவன் இருக்கிறான் என்பதை அழுத்தமாக பதிய வைக்க கடந்த ஆண்டு பகிரங்க விவாதக் களத்தில் அவர்களுடன் வாதிட்டார்.
இறுதியாக முஸ்லீம்களில் யாரும் என்னுடன் வாதிக்க வர மறுக்கிறார்கள். நான் சொல்லும் கிருத்தவ மதம் தான் உலகில் உண்மை மதம், என்று வெறிக் கூச்சல் போட்டுத் திரிந்த ஜெர்ரீ தோமஸ் என்ற கிருத்தவ பாதிரியாருடன் ததஜ சார்பாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பைபில் இறை வேதமா? என்ற தலைப்பில் ஒரு பகிரங்க விவாதத்தை நடத்தினார்.
இதன் விளைவாக இரண்டாவது தலைப்பான குர்ஆன் இறை வேதமா? என்ற தலைப்புக்கு வாதிக்க வராமலே ஓடினர் ஜெர்ரீ தோமஸ்.
இப்படி தனது 30 வருட கால பிரச்சாரக் களத்தில் பல விவாதக் களங்களையும் சந்தித்தார் சகோதரர் பி.ஜெ
இணைய தளத்திலும் இஸ்லாமியப் பிரச்சாரம்.
நவீன ஊடகங்களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகwww.onlinepj.com  என்ற பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து தூய பிரச்சாரத்தை செய்து வருகின்றார்.
தான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக வாசகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இணையதளத்தில் வெளியிட்டார்.
தனது திருக்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விளக்கவுரை, ஆயிரக்கணக்கான வீடியோ, ஆடியோ உரைகள், கட்டுரைகள், கேள்வி பதில் தொகுப்புக்கள், சர்சைக்குரிய சட்டங்களுக்கு ஆய்வு ரீதியிலான பதில்கள், குடும்பவியல் தொடர்பான தெளிவான விளக்கங்கள் என இணையதளம் மூலமான தனது பிரச்சாரத்தையும் செவ்வெனே செய்து வருகின்றார்.
இப்படி பலவிதமாக பிரச்சாரங்கள் இவர் செய்து வந்தாலும் இவருடன் பிரச்சாரக் களத்தில் ஆரம்ப காலத்தில் இணைந்திருந்த சிலர் ததஜ வில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட பின்னர் இவரைப் பற்றி பலவிதமான விமர்சனங்களையும் இவர்கள் செய்து வருகின்றார்கள்.
காரணம் அவர்கள் அனைவரும் தாமாக அமைப்பை விட்டு போனவர்கள் அல்ல குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள். தங்கள் சுயலாபத்திற்காக இயக்கத்தைப் பயன்படுத்தியவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் தாங்கள் தூய்மையானவர்கள் என்பதை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இவர் மீது அபாண்டமாக செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.
பி.ஜெ யைப் பின்பற்றலாமா?
ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பல தியாகங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காகவே இவர் அர்பணித்தார் என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் இவருடைய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதற்கு தக்லீத் –தனிமனித வழிபாடு நடத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் கிடையாது.
பி.ஜெ சொன்னால் அனைத்தும் சரியாகத் தான் இருக்கும்.
அவர் தவறாக சொல்ல மாட்டார்.
அவரில்லாவிட்டால் தவ்ஹீத் பிரச்சாரம் கேள்விக் குறியாகிவிடும்.
இவருடைய ஆய்வுகள், கருத்துக்களில் தவரே இல்லை
என்று யாராவது வாதிட்டால் அவர் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் அல்லாஹ்வை இறைவனாக ஒத்துக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.
எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லாஹ் சொல்லியுள்ளானா?நபியவர்கள் காட்டித் தந்தார்களா? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர பி.ஜெ சொல்லிவிட்டார் என்று பின்பற்றுவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. பி.ஜெ ஒரு செய்தியைச் சொன்னாலும் அதை அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? என்று ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும்.
ஏன் என்றால் அவரும் சாதாரண மனிதர் தான் தன்னுடைய ஆய்வின் படி சரியானதாக தான் நினைக்கும் கருத்தை அவர் வெளியிடுகின்றார். குறிப்பிட்ட கருத்து தவறானது என்று யாராவது ஆதாரத்துடன் சுட்டிக் காட்டும் போது அதனை அவர் மாற்றிக் கொள்கின்றார். இதுவே இவரின் கருத்தில் சரியும் இருக்கும் தவறும் வரும் என்பதற்கான ஆதாரமாகும்.
பி.ஜெ அவர்கள் ஆரம்ப காலத்தில் தான் வெளியிட்ட பல கருத்துக்களை அவை தவறானவை என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் திருத்தியிருக்கிறார்.
பி.ஜெ ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்களில் பின்னர் மாற்றிக் கொண்ட சில கருத்துக்கள்….
உதாரணத்திற்கு பி.ஜெ ஆரம்ப காலத்தில் பிரச்சாரம் செய்தவற்றில் தற்போது மாற்றிக் கொண்ட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.
ஏகத்துவக் கொள்கையை யாருக்கும் வளைந்து கொடுக்காமல் உடைத்துச் சொன்னார் அந்த அடிப்படைக் கொள்கையில் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறுகள் ஏற்பட்டு அதை சுட்டிக் காட்டும் போது அவ்வப்போது பகிரங்கமாகச் ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டிருக்கிறார்.
இவரை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.
இதற்கான காரணம்..
அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை.
பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை.
ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்.
இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் பெரும்பாலும் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்.
இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.
தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.
இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.
தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் தாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால் அதன் அடிப்படையில் சில சட்டங்களைக் கூறினார்கள். பின்னர் அவை பலவீனம் எனத் தெரிய வரும் போது முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தை தவறு என்று தெளிவுபடுத்தினார்கள்.
பெரும்பாலான மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் முன்னர் சரி என்று கூறி,  பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல் இருக்கின்றனர். எனவே அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அவற்றை பத்திரிக்கைகளிலும் சிடி க்களாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.
மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள் இளக்காரம் செய்வார்கள் என்றாலும் தம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
பெண்கள் கப்ர் ஸியாரத் செய்யலாமா?
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் பி.ஜெ மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)
இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும்.
மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
நான் ”அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்”என்றார்கள்.
 (பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (1774)
நபியவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1777)
அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதி (974)
மண்ணறைகளை ஸியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணை வைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம். என்பதே மறு ஆய்வின் தெளிவான முடிவாகும்.
நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ.
நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது “தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாபூத் 2010, ஹாகிம், பைஹகீ,தாரகுத்னீ
இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று கூறி பி.ஜெ தனது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்திருந்தார்.
இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹூஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.
ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.
மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் பி.ஜெ யும் இதனை வழிமொழிந்தார்.
இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார்.
பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று பி.ஜெயும் பிரச்சாரம் செய்தார்.
மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்தது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.
ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி,முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி,முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது தெரிய வந்தது.
மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா? என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.
இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், “இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிடுகின்றார்.
இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.
இப்னு ஹிப்பான் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.
வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.
எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.
இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376)நபிமொழிக்கேற்ப நோன்பு துறக்கும் போதும் “பிஸ்மில்லாஹ்’ கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும் என்று தனது மறு ஆய்வில் இதனைத் தெளிவு படுத்தினார்.
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்ப கால நிலைப்பாடாக இருந்தது. இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தார்.
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீது (ரலி), நூல்: ஹாகிம் (3392)
ஆனால் மேற்கண்ட செய்தி ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓத வேண்டும் என்று வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.
கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் வெள்ளிக்கிழமை கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும். என்று தனது மறு ஆய்வின் முடிவில் ஏற்கனவே தான் சொன்னதை மாற்றி அறிவித்தார் பி.ஜெ
நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் ஆரம்பம் முதல் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவு எட்டப்பட்டது.
இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார். (முஸ்லிம் 3910)
இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் (ஹதீஸ் எண் 3910) “இரண்டில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை’ என்று கூறப்படுகிறது.
இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் (இப்னு மாஜா 3638) என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.
இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.
அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.
எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும். என்ற முடிவுக்கு வந்தார்.
இப்படி தான் ஆரம்பத்தில் சொன்ன பல கருத்துக்கள் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் இவரால் திருத்தப்பட்டுள்ளது.
TNTJ மற்றும் SLTJ பிரச்சாரகர்கள் பி.ஜெ யைப் பின்பற்றுகின்றார்களா?
நிலைமை இப்படியிருக்க பி.ஜெயுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் பிர உலமாக்கள் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் அனைவரும் பி.ஜெ சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள். பி.ஜெ அவர்களை தக்லீத் செய்கிறார்கள் என்ற வாதம் அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் பி.ஜெ அவர்கள் தற்போது திருத்திக் கொண்டுள்ள பல விஷயங்கள் மற்ற உலமாக்களினால் சுட்டிக் காட்டப்பட்டதுதான் என்பதை ஏனோ இவர்கள் புரிய மறுக்கின்றார்கள்.
ஒருவரை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?
தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களோ பல விஷயங்களை தாம் ஆய்வு செய்து மற்ற உலமாக்களுடன் அதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்களே!
பி.ஜெயின் ஆய்வுக்கு மாற்றமாக கருத்துக் சொல்லி அதைப் பி.ஜெ அவர்களே ஏற்றுக் கொண்டு திருத்திய விஷயஙகள் பல இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பொய்யையும், அவதூரையும் மாத்திரம் தங்கள் பிரச்சாரமாக இவர்கள் செய்வதற்குக் காரணம் இந்த ஜமாத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரைக் கொடுக்க வேண்டும் என்ற அடிமட்ட சிந்தனை ஒன்று தானே தவிர வேறில்லை.
தவ்ஹீத் ஜமாஅத்தில் நிர்வாக விஷயங்களிலும் மார்க்க விஷயங்களிலும்ஒருவரைக் கண்மூடி பின்பற்றும் நிலை இல்லை. நிர்வாகம் சம்பந்தமாகஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் கூட சக நிர்வாகிகளிடம்கலந்தாலோசித்து அனைவரின் ஒப்புதலுடனே முடிவெடுக்கப்படுகின்றது.
தலைமை நிர்வாகத்தில் மட்டுமின்றி செயற்குழு, பொதுக்குழுஆகியவற்றிலும் ஜமாஅத் உறுப்பினர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக்கூடியஜமாஅத்தாகவே தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது. இந்த ஜமாஅத்தில் தனிமனிதவழிபாடு இருந்தால் இது போன்று கூட்டங்களை நடத்த வேண்டியஅவசியமில்லை.
தனிமனிதனை வழிபடக்கூடியவர்களிடம் கருத்து வேறுபாடே வராது.ஏனென்றால் அவர்கள் ஒரு மனிதனுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவன்சொல்வதற்கு மாற்றமாகப் பேசமாட்டார்கள்.
ஆனால் நம்முடைய ஜமாஅத்தில் மார்க்க விஷயங்களில் நமதுஅறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. அனைவரும் கூடிஆராயந்த பிறகு ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்படுகின்றது.
ஒருவர் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதை மற்றவர்கள்சுட்டிக்காட்டுகிறார்கள். தவறான கருத்தைக் கூறியவர் அதைத் திருத்திக் கொள்கிறார். தக்லீத் செய்யக் கூடியவர்களிடம் இது போன்ற பண்புகளைப்பார்க்க முடியாது.
நிர்வாக விஷயத்திலும், மார்க்க விஷயத்திலும் யாரையும் தக்லீத் செய்யாதஜமாத்தாக தவ்ஹீத் ஜமாத் மாத்திரமே இருப்பதை நியாயமாக சிந்திப்பவர்கள் உணர முடியும்.
இப்படிப்பட்ட ஜமாஅத்தைப் பார்த்து தக்லீத்  செய்யக் கூடியவர்கள் என்றுசிலர் கூறுகிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.
தவ்ஹீத் நிலைபாடுகளை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும்முறியடிக்க திராணி அற்றவர்களே இந்த விமர்சனத்தைக் கையில்எடுக்கின்றனர். இவ்வாறு கூறினால் மக்கள் இந்த ஜமாஅத்தைப்புறக்கணிப்பார்கள் என்பதற்காக நம்மிடம் இல்லாத இந்தக் குற்றத்தை நம்மீதுசுமத்தப் பார்க்கிறார்கள்.
ஆனால் நம்முடைய ஜமாஅத்தின் செயல்பாடுகளும், நிலைபாடுகளும்பொதுமக்களுக்கு வெளிப்படையானவை. இதைப் பார்க்கும் யாரும்இவர்களுடைய இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.
அண்ணன் சொன்னால் இவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்ற வாதம் தவறானது என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களை பார்ப்போம்.
பி.ஜெ யை தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு எதிராக பி.ஜெ அவர்களுக்கு முன்னிலையிலேயே ஜமாத்தின் மூத்த உறுப்பினர் எம்.ஐ சுலைமான் அவர்கள் ஆற்றியை உரையைக் கேளுங்கள்.
அண்ணன் சொன்னால் மார்க்கமா?
ஸக்காத் பற்றிய ஆய்வின் ஆரம்பம் எது?
தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பி.ஜெ யைத் தான் பின்பற்றுகிறார்கள் என்று அவதூறு பரப்புபவர்கள் ஸக்காத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் ஆய்வைத் தான் பெரிதாக எடுத்துப் பேசுவார்கள்.
ஆம் ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு முறை கொடுத்தால் போதுமா? என்று ஆய்வு செய்தால் ஒரு பொருளுக்கு ஒரு முறை தான் ஸக்காத் கொடுக்க வேண்டும். வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாக இருக்கிறது.
அதனால் கொடுத்த பொருளுக்கே வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்ற முடிவை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது. இந்த முடிவை ததஜ வெளியிட்ட நேரத்தில் பலரும் பலவிதமான விமர்சனங்களையும் முன்வைக்க ஆரம்பித்தார்கள்.
அதிலும் குறிப்பாக பி.ஜெ அவர்கள் இது தொடர்பான ஒரு விவாதத்தை மதுரையில் நடத்தினார்கள் அப்போது பி.ஜெ சொல்வதைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தவ்ஹீத் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்களைப் பற்றி சிலர் விமர்சித்தார்கள் இன்றும் விமர்சிக்கின்றார்கள்.
இவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் ஸக்காத் விஷயத்தில் இப்படியான ஒரு ஆய்வை முதலில் முன் வைத்தவர் பி.ஜெ அல்ல. எம்.ஐ சுலைமான் அவர்கள் தான் இந்தக் கருத்தை ஆரம்பத்தில் வைத்தார்கள். அப்போது எம்.ஐ சுலைமானின் கருத்துக்கு மாற்றமாக வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் சகோதர் பி.ஜெ அவர்கள். பின்னர் எம்.ஐ சுலைமான் சொல்வதுதான் சரியான ஆய்வு என்பதை விளங்கி அந்த நிலைபாட்டிற்கு வந்தார்.
இப்போது எம்.ஐ சுலைமானை பி.ஜெ தக்லீத் செய்கிறார் என்று இவர்கள் சொல்வார்களா? சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஸக்காத் ஆய்வு தொடர்பாக எம்.ஐ சுலைமான் அவர்களின் விளக்கத்தைப் பாருங்கள்.
பி.ஜெ க்கும் தவ்ஹீத் ஜமாத் உலமாக்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு வருவதில்லையா?
தவ்ஹீத் ஜமாத்தின் உலமாக்களுக்கும் பி.ஜெ அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடே வருவதில்லை. காரணம் அவர்கள் பி.ஜெ சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு குருட்டு விமர்சனத்தையும் சிலர் செய்கிறார்கள்.
அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம் என்னவெனில். பெரும்பாலும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் யாரும் மார்க்க பிரச்சினைகளில் ஆளுக்கு ஒரு கருத்தை பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். மார்க்க ரீதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டார் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து முடிவை வெளியிடுவார்கள். அதனால் வெளியில் பிரச்சாரம் செய்யும் போது அனைவரும் ஒரே கருத்தை சொல்வதினால் பி.ஜெ யைப் பின்பற்றுகிறார்கள் என்று வாதிட முனைவது. வடிகட்டிய முட்டால் தனமாகும்.
மேற்கண்ட விமர்சனம் ஒன்றும் புதிதாக கிளம்பியது அல்ல. தமுமுக வை விட்டு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பிரிந்து வந்த நேரமே இந்த விமர்சனம் ஆரம்பித்து விட்டது.
பி.ஜெ அவர்களுக்கும் மற்ற பிரச்சாரகர்களுக்கும் மத்தியில் எவ்வித கருத்து வேறுபாடும் வராத அளவுக்கு அத்தனை பேரையும் பி.ஜெ மிரட்டி வைத்திருக்கிறார் என்றொரு குற்றச் சாட்டை அப்போதே தமுமுக வின் சார்பாக ஜவாஹிருல்லாஹ் வைக்கும் போது அதற்கு எம்.ஐ. சுலைமான் அவர்கள் பதில் கொடுத்தார்கள்.
அதில் தனக்கும் பி.ஜெ அவர்களுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பட்டியலிட்டு தெளிவுபடுத்தினார் எம்.ஐ. சுலைமான் அவர்கள்.
பி.ஜெ அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களுக்கும் மத்தியில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றது. அப்படியான நேரங்களில் எல்லாம் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதுதான் ஜமாத்தின் வளர்சிக்கு பெரும் துணையாக இருக்கும் ஒரு விஷயம்.
பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கமும், ததஜ உலமாக்களின் பங்களிப்பும்.
அதே போல் சகோ. பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்தை விமர்சிப்பவர்கள் பி.ஜெ அவர்கள் தன்னிச்சையாக அதனை மொழியாக்கம் செய்த்தைப் போலவும், அவருடைய மொழியாக்கத்தை அனைத்து உலமாக்களும் அப்படியே நம்பியதைப் போலவும் எழுதியும், பேசியும் வருகின்றார்கள். ஆனால் பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆன் மொழியாக்கத்தை வெளியிடுவதற்கு முன் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்கள் அதனை சரி பார்த்து திருத்தங்கள் செய்த்தன் பின்னர் தான் வெளியிட்டார் என்பதே உண்மையாகும்.
குர்ஆன் மொழியாக்கத்தின் முதல் பதிப்பிலேயே அதன் கடைசிப் பகுதியில் சரி பார்த்த உலமாக்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்த பின்பும் விமர்சிப்பவர்கள், காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சிக்கின்றார்களே தவிர சத்தியம் அவர்களிடம் இல்லை என்பது இதன் மூலம் இன்னும் நிரூபணமாகின்றது.
தக்லீத் பற்றி பி.ஜெ யின் கருத்துக்கள்.
உலகத்தில் யார் என்ன கருத்தை சொன்னாலும் அதனை குர்ஆன் மற்றம் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் உரசிப் பார்த்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்கின்றது.
அதே போல் பி.ஜெ அவர்கள் கூட பல இடங்களிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.  தக்லீத் தொடர்பாக பி.ஜெ யிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்க்கப்பட்ட கேள்விகளையும் அதற்குறிய பதில்களையும் ஒரு தொகுப்பாக இங்கு தருகின்றோம்.
ஆய்வு செய்யாமல் பின்பற்றலாமா?
ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும். தவ்ஹீத் ஜமாத் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவறு என்று பி.ஜெ யே சொல்லும் காட்சி.
பி.ஜெ சொன்னால் தான் சரியா?
நான் சொல்லும் செய்திகளை அனைத்தையும் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் இருக்கிறது என்று நான் சொன்னால் அதையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னால் சரி என்று இருந்தால் நீங்கள் மத்ஹபுகளிலேயே இருந்திருக்களாம். அப்படி யாராவது நான் சொன்னால் சரி என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல மறுமையில் அவர்களுக்கு எதிராக நான் பேசுவேன்.
எந்த அறிஞரையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது.
எந்த அறிஞரின் கருத்தையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது. அவர்கள் சொல்வது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருக்கின்றதா என்பதை பார்த்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.
பி.ஜெ பயானை மட்டும் கேட்பது சரியா?
பி.ஜெ அல்லாத மற்ற அறிஞர்களின் பயான்களையும் கேட்க வேண்டும் அப்படி கேட்பதில் குர்ஆன் மற்றும் ஸஹீஹான செய்திகளை சொல்பவர்களின் உண்மையை உணர்ந்து மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
பி.ஜெ க்குப் பின் தவ்ஹீத் ஜமாத் இருக்காதா?
பி.ஜெ இல்லாமலேயே 2 வருடங்களுக்கும் மேலாக ஜமாத்தின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றது. பி.ஜெ இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நாம் சொல்ல முடியும் என்பதை ததஜ பிரச்சாரகர்கள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரியவரும் முக்கிய விஷயம்.
தக்லீதுக்கு யார் பொருப்பு?
நாம் ஒரு கருத்து சொன்னால் நமக்கு மாற்றமாக யாராவது சொல்லியிருந்தால் அதையும் சேர்த்து பார்த்து இரண்டில் எது சரி என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தக்லீத் செய்ததாக மாறிவிடும்.
பொது மக்களின் தெளிவும், குழப்ப நினைக்கும் உலமாக்களும்.
ஏகத்துவத்தின் அடிப்படையில் தெளிவான முறையில் முடிந்த வரை இஸ்லாத்தின் செயல்பாடுகளை எடுத்து நடக்கும் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கும் சில ஆலிம்கள் தான் தக்லீத் என்ற வாதத்தை கையில் எடுத்து அவதூறு பரப்புகிறார்கள். அதிலும் அவர்கள் சொல்லும் செய்திகளை பொது மேடையில் நிரூபிப்பதற்கு முடியாமல் அறைக்குள் இருந்து ஆட்டம் போடுவதையும். மேடையில் வந்து நிரூபிக்க அழைத்தால் ஓடி ஒழிவதையும் நாம் கண் முன் காணக் கிடைக்கிறது.
எது எப்படியோ ஏகத்துவத்தின் செய்திகளை வல்ல இறைவன் மிகத் தெளிவான முறையில் மக்கள் மத்தியில் எத்தி வைப்பதற்கு நமக்கு என்றும் துணையாக இருக்கிறான் என்ற எண்ணத்தில் நமது பயணத்தை தொடருவோம்.
from:  rasminmisc.com

தவ்ஹீத் ஜமாத்தாஅல்லது தக்லீத் ஜமாத்தா?
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை தடுக்க நினைக்கும் சில சுயநலவாத சிந்தனை கொண்ட கயவர்கள் தவ்ஹீத் ஜமாத் மீதும் தவ்ஹீத் வாதிகள் மீதும் பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள் அந்த குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச் சாட்டு தவ்ஹீத் வாதிகள் தக்லீத் (தனி மனித வழிபாடு)செய்கிறார்கள் என்பதாகும்.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்பகாலங்களில் நாம் குர்ஆனும்,ஹதீஸ{ம் மாத்திரம் தான் மார்க்க ஆதாரம் மத்ஹபுகளோ இமாம்களோ தரீக்காக்களோ மார்கத்தின் ஆதாரங்கள் இல்லை என்று உடைத்துப் பேசுகின்ற போதெல்லாம்.நம்மை எதிர்த்தவர்கள் நம்மீது சொன்ன குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமானது.
இவர்கள் இமாம்களைத் திட்டுகிறார்கள்.
இமாம்களை இவர்கள் மதிப்பதில்லை.
இது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் மக்கள் மன்றில் வைக்கப் பட்டது.
அல்லாஹ்வின் பேருதவியால் அந்த அனைத்து வாதங்களும் அடித்து நொருக்கப் பட்டது.
இப்போது நம்மை நோக்கி இவர்கள் ஸஹாபாக்களை திட்டுகிறார்கள்.
பி.ஜெயை கண்மூடிப் பின்பற்றுகிறார்கள்
என்றெல்லாம் பரப்பி வருகிறார்கள்.
அதாவது ஸஹாபாக்கள் ஈமானிலும்,தியாகத்திலும் நம்மை விட பண்மடங்கு உயர்ந்தவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் அவர்களின் சொந்தக் கருத்து மார்கத்தின் ஆதாரமாகாது.என்பதுதான் நமது வாதம்.
சகோதரர் பி.ஜெ அவர்கள் ஒரு சிறந்த மார்க்க அறிஞர் பண்முக ஆளுமை கொண்டவர் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் அவர் சிறந்த அறிஞர் என்பதற்காக எந்தத் தவ்ஹீத் வாதியும் அவரின் கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதில்லை பின்பற்றவும் கூடாது.
இன்றைக்கு இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் சிலர் தாங்கள் எடுத்து வைக்கும் தவறான வாதங்கள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போவதாலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் அபார தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளதாலும் அவரை எதிர்க்க தங்களுக்கு திராணியில்லாததினால் தக்லீத் என்ற ஒரு கோஷத்தை இன்று கையிலெடுத்துள்ளார்கள்.
தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமன்றி அரபுலகத்திலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் மார்க்கம் தொடர்பான கருத்துக்கள் இன்று மெச்சப்படுவது அனைவரும் அறிந்ததே!

இந்த வகையில் இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் சில ஆலிம்களும் மதனிகளும் வெளிநாட்டில் பட்டம் பெற்றதாக சொல்லிக் கொள்ளும் சில பச்சோந்திகளும் தமது கருத்து மக்கள் மத்தியில் எடுபடாமல் போகிறதே என்ற விரக்தியில் இந்த தக்லீத் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
இது தவிர தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்த சிலர் ஒழுக்க சீர் கேடு பண மோசடி உள்ளிட்ட காரணங்களினால் அந்த அமைப்பை விட்டு வெளயேற்றப் பட்டனர்.
நம்முடன் இருக்கும் வரையில் நமது கருத்துக்களை விமர்சிக்காதவர்கள் ஜமாத் அவர்களின் குற்ற செயலை நிரூபித்து ஜமாத்தை விட்டே அவர்களை வெளியேற்றியவுடன் இதே தக்லீத் வாதத்தை அவர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
ஆக இப்படிப்பட்ட அனைத்துத் தரப்பாரின் வாதங்களுக்கும் பதில் கொடுக்கும் வகையில் இந்தக் கட்டுரை ஒரு தொடராக எழுதப் படுகிறது.
இந்தத் தொடரில் குர்ஆன் ஹதீஸ் பார்வையில் தக்லீத் என்றால் என்ன? தக்லீத் பற்றி மாற்றுக் கருத்தாரின் விமர்சனம் மற்றும் அதற்கான பதில் இஸ்லாம் தக்லீதைப் பற்றி என்ன சொல்கிறது? தக்லீத் விஷயத்தில் பி.ஜெயின் நிலைப்பாடு என்ன? தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பி.ஜெயை தக்லீத் செய்கிறார்களா? போன்ற தகவல்கள் எழுத்து மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் விபரிக்கப்படும்.
தக்லீத் என்றால் என்ன?
ஒரு அறிஞரின் கருத்தை அவர் சொன்னால் தவராகவே இருக்காது அது சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்து கண்மூடிப் பின்பற்றுவதை தக்லீத் என்று பரிபாசையில் நாம் அறிகிறோம்.
அதாவது ஆரம்பகால தவ்ஹீத் பிரச்சார நேரத்தில் மத்ஹபை பின்பற்றக் கூடிய ஆலிம்கள் நம்மை பார்த்து எழுப்பிய கேள்விகளில் மிக முக்கியமானது நீங்கள் ஏன் இமாம்களை பின்பற்றுவதில்லை என்பதாகும்.
அதே போல் இன்று தவ்கஹீத் வாதிகள் என்று தம்மை சொல்லிக் கொள்ளும் ஆலிம்களும் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் ஸஹாபாக்களை பின்பற்றுவதில்லை என்பதுதான்.
இந்த இரண்டு கேள்விக்கும் ஒரே பதிலைத் தான் இறைவன் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ(அதைவிட்டும்)தவிர்ந்து கொள்ளுங்கள் (59:5)
ஆக மொத்தத்தில் இரண்டு தரப்பாரும் தக்லீத் என்ற வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள் நம்மையும் அங்குதான் இழுக்கப் பார்க்கிறார்கள்.
முதலில் மத்ஹபு வாதிகளின் தக்லீதின் பின்னனியை நோக்குவோம்.
மத்ஹபுகளில் பிரச்சினை உள்ளது, சிந்தனைக்கு எட்டாத கதைகள் உள்ளது, ஆபாசங்கள் நிறைந்துள்ளது என்றெல்லாம் அதில் உள்ள உண்மைகளை ஏகத்துவ வாதிகள் எடுத்துக் காட்டும் போது அவர்களின் நிலை இமாம்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் இமாம்கள் பொய் சொல்ல மாட்டார்கள் தவறாக எழுத மாட்டார்கள் என்பதாகத்தான் இருக்கிறது.
ஷியாக்கள் என்பவர்கள் எப்படி அலி(ரலி) அவர்களை அளவுகக்கதிகமாக நேசித்ததன் மூலம் நபியவர்களுக்கும் மேலாக அவர்களை கொண்டு போய் நிருத்தினார்களோ நபிக்காக உயிரைக் கூட கொடுக்க தயங்காத நபித் தோழர்களை எப்படி வாய் கூசாமல் தூற்றினார்களோ அது போல் மத்ஹபைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் எந்த மத்ஹபை சார்ந்திருக்கிறார்களோ அந்த மத்ஹபுக்கெதிராக எவர் பேசினாலும் அவரை கடும் வார்த்தைகளால் வசை பாடி தாங்கள் குறிப்பிட்ட இமாமை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் என்பதை பரை சாற்றுகிறார்கள்.
உதாரணத்திற்கு ஹனபி மத்ஹபின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு ஹனபி இமாமை தக்லீத் செய்தவர்கள் ஷாபி இமாம் மீது சொன்ன இழி சொற்களை பாருங்கள்.
(மத்ஹபைப் பின்பற்றுபவர்களின்)மத்ரஸாக்களில் பாடப் புத்தகமான வைக்கப்பட்டுள்ள துர்ருல் முக்தார் என்ற புத்தகத்திலும் அதன் விரிவுரை நூலான ரத்துல் முக்தாரிலும் முன்னுரையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு செய்தியைப் பாருங்கள்.
وعنه عليه الصلاة والسلام (إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتيالدر المختار 1 56
ஆதம் (அலை) அவர்கள் என் மூலம் பெருமை அடைந்தார்கள். நான் என் உம்மத்தில் வருகின்ற நுஃமான் எனும் இயற்பெயர் கொண்ட அபூஹனீபாவைக் கொண்டு பெருமையடைவேன். அவர் என் சமுதாயத்துக்கு விளக்காவார் என்று நபி (ஸல்) கூறியதாக அந்த துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் அபூஹனீபாவின் மூலம் பெருமையடைவதாக அவர்களை கூறியதாக ஒரு பொய்யை அல்லாஹ்வின் பயமின்றின்றி நபியவர்கள் மீது பகிரங்கமான இட்டுக் கட்டியுள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள்.
அது போல் அதே புத்தகத்தில் இன்னோர் இடத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
  وعنه عليه الصلاة والسلام إن ساير الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني
எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமை அடைந்தனர். நான் அபூஹனீபா மூலம் பெருமை பெறுகிறேன். அவரை யார் விரும்புகிறாரோ அவர் என்னை விரும்புகிறார். அவரை யார் வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஹனபி இமாம் அவர்களை தக்லீத் செய்ததினால் ஏற்பட்ட விளைவைப் பாருங்கள்.அபூஹனீபாவை யாராவது வெருத்தால் அவர் நபியவர்களை வெருக்கிறார் என்றும் அபு ஹனீபாவை யார் நேசிக்கிறாரோ அவரை நபியவர்கள் நேசிக்கிறார்கள் என்றும் பொய்யாக நபியின் மீதே இட்டுக் கட்டியுள்ளனர் இந்த அபு ஹனீபாவின் தக்லீத் கூட்டத்தினர்.
ஒருவர் மீது வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை அன்பு பாசம் இவர்களை இப்படி வழிகேட்டில் கொண்டு போய் சேர்த்துள்ளது.
அபூ ஹனீபா மீது கொண்ட தக்லீத் அல்லாஹ்வின் பேயராலேயே இவர்களை பொய் சொல்லத் தூண்டியுள்ளது.
அதே துர்ருல் முக்தார் என்ற கிதாபில் உள்ள இந்தச் செய்தியைப் பாருங்கள்.
ولها قصة مشهورة وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة.
الدر المختار  1 ஃ55
அபூ ஹனீபா அவர்கள் கஃபாவின் காவலாளியிடம் கஃபாவின் உள்ளே செல்ல ஒரு இரவில் அனுமதி கேட்டார்கள். இரண்டு தூண்களுக்கிடையில் வலது காலில் நின்றார்கள். இடது காலை வலது கால் மீது வைத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் குர்ஆனை ஓதி முடித்தார்கள். ஸலாம் கூறியதும் அழுதார்கள். தமது இறைவனிடம் இரகசியமாக உரையாடினார்கள். என் இறைவா இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. எனினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே இந்த அடியானின் முழு ஞானம் காரணமாக இவரது வணக்கத்தில் உள்ள குறைபாடுகளை மன்னித்து விடு என்று துஆ செய்தார்கள். அப்போது கஃபாவின் ஒரு பகுதியில் இருந்து அவர்களை நோக்கி அபூஹனீபாவே நம்மை விளங்க வேண்டிய விதத்தில் விளங்கிக் கொண்டீர். உம்மையும் உம்மைப் பின்பற்றியவர்களையும் கியாம நாள் வரை மன்னித்து விட்டேன் என்று அசரீரியில் அல்லாஹ் கூறினானாம்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தங்களின் இமாமுக்கும் வஹீ வந்திருக்கிறது; அதுவும் அவரைப் பின்பற்றியவர்களை கியாம நாள் வரை மன்னிக்கும் உத்திரவாதத்துடன் வஹீ வந்திருக்கிறது என்று சிறு பருவத்திலேயே நம்ப வைத்து விட்டார்கள்.
இப்படி நம்பியவர்கள் எப்படி உண்மையை ஏற்று இந்த வழிகேட்டிலிருந்து விடுபட்டு வருவது ? ஹனபியை நபியளவுக்கு இல்லை நபியை விட மேலாக உயர்துவதற்கு இவர்களுக்கு தைரியம் வரக் காரணம் என்ன தக்லீத் என்ற இந்த தனி மனித வழிபாடுதான்.
அதுபோல் இந்த ஹனபியாக்கள் தமது இமாமை எதிர்ப்பவர்களை ஷைத்தான்கள் என்று கூறும் அளவுக்கு எல்லை மீறியுள்ளதையும் நாம் அறிய முடிகிறது.
இமாம் ஷாபி அவர்கள் இமாம் ஹனபியின் கருத்துக்கு மாற்றமாக பல கருத்துக்களை கூறியதாலும் ஹனபியின் கருத்தை மறுத்து ஷாபியின் கருத்தை சிலர் ஏற்றுக் கொண்டதாலும் தங்களுக்கு ஷாபியின் மீது ஏற்பட்ட அபார வெருப்பு அவரை ஷைத்தான் என்று சித்தரிக்கும் அளவுக்கு முற்றிப் போனது.
என் உம்மத்தில் முஹம்மத் இப்னு இத்ரீஸ்  (அதாவது ஷாபி இமாம்) என்று ஒருவர் தோன்றுவார். இப்லீஸை விட என் சமுதாயத்திற்கு அவர் கேடு செய்வார். மேலும் என் சமுதாயத்தில் அபூஹனீபா என்று ஒருவர் தோன்றுவார். அவர் என்சமுதாயத்தின் விளக்கு ஆவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்களாம்.
ஒரு தனி மனிதர் மீது ஏற்பட்ட பக்தி இன்னொரு இமாமை இப்லீஸை விட கெட்டவர் என்று கூறும் அளவுக்குச் சிலரை ஆக்கி விட்டது. அதுவும் நபி (ஸல்) அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள் என்ற முத்திரையுடன்..
இதை அறிவிப்பவர்களில் மஃமூன் இப்னு அஹ்மத் என்ற பெரும் பொய்யனும்இ அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஜூவைபாரி என்ற பொய்யனும் இடம் பெறுகின்றனர். இவ்விரு பொய்யர்களில் யாரோ ஒருவர் தான் இதை இட்டுக் கட்டியிருக்கின்றனர் என்று ஹதீஸ்கலை மேதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது மவ்லூஆத் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
மஃமூன் என்ற பொய்யனிடம் ஷாபி இமாமையும் அவரைச் சார்ந்தவர்களையும் பற்றி நீர் என்ன கருதுகிறீர்? என்று கேட்கப்பட்ட போது மேற்கூறிய பொய்யான ஹதீஸைஅவன் கூறினான். மஃமூன் என்ற பொய்யனே இதை இட்டுக் கட்டி இருக்க முடியும் என்று இமாம் ஹாகிம் அவர்கள் தனது அல்மத்ஹல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிறிதளவாவது அறிவு உள்ள ஒவ்வொருவனுக்கும் நபி ஸல் அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய் இது என்று தெளிவாகத் தெரியும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
ஸூயூத்தி அவர்கள் அல்லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் முதல் பாகத்தில் 457 ஆம் பக்கத்தில் இதைப் பொய்யென நிரூபித்துள்ளார்கள். மேலும் பல அறிஞர்களும் இதைப் பொய்யென நிரூபித்துள்ளனர். இவ்வளவு தெளிவாகப் பொய் என்று அறிஞர்கள் முடிவு செய்த பின்பும் ஹனபி அறிஞர்கள் பலர் இதை சரி காணவே முயற்சிக்கிறார்கள்.
ரத்துல் முக்தார் ஆசிரியர் இது சரியான ஹதீஸ் என்று சாதிக்கிறார். மேற்கூறிய அறிஞர்கள் எல்லாம் அபூஹனீபா அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இதைப் பொய் என்று கூறுவதாகத் தெரிவிக்கிறார். ஐனீ போன்ற அறிஞர்களும் இதிலிருந்து தப்பவில்லை. ஹதீஸ் கலை மேதைகள் அறிவிப்பாளர்களின் தராதரத்தை எடை போட்டு தக்கக் காரணங்களுடன் அடையாளம் காட்டியுள்ளதை ஒரு ஆதாரமுமின்றி இந்த ஹனபீ அறிஞர்கள் மறுக்கிறார்கள்.
இந்தக் குருட்டுப் பக்தி ஏற்பட்டு விட்டதால் தான் தங்கள் இமாம் சொன்னதில் தவறே ஏற்படாது என்று நம்புகின்றனர். தவறே ஏற்பட்டாலும் கியாம நாள் வரைக்கும் அல்லாஹ் அதை மன்னித்து விடுவான் என்றும் நம்புகின்றனர். மற்றொரு இமாமை இப்லீஸை விட மோசமானவர் என்று நம்புவதால் தான் அந்த இமாமுடைய எந்தக் கருத்தையும் நாம் ஏற்கக் கூடாது என்ற அளவுக்கு தங்களை மாற்றி கொண்டு விட்டார்கள்.
ஆக தனி மனிதன் மேல் கொண்ட இந்த குருட்டு பக்திதான் இவர்களை இப்படி நபி மீதே பொய் சொல்ல வைத்துள்ளது.
யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)
முன்னோர்களை பின்பற்றுவதும் வழிகேடே !
இமாம்களைப் பின்பற்றுபவர்கள் சொல்லும் மற்றொரு வாதம் தான் முன்னோர்கள் சொன்னவைகள் மார்க்கமாகும் என்பது.
அதாவது நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார்களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார்களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது இவர்களின் வாதமாகும்.
எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும்,மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம்.
எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும்.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது.
குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள்.
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?      (அல்குர்ஆன் 2:170)
மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர்.
முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, “எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்” எனக் கூறுகின்றனர்.
சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், “எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?” என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது.
இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி (ஸல்) அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை.
ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறதுவாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து  சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா?
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்பஇ இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?
தங்கள் முன்னோர்கள் செய்த காரியங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாகத் தான் வந்திருக்க முடியும் என்று இவர்கள் கூறுவது ஏற்கத்தக்கது என்றால், ஏசு இறைமகன் எனும் கோட்பாடு ஏசுவிடமிருந்து தான் வந்தது என்று கிறித்தவர்கள் கூறுவதை எப்படி மறுக்க முடியும்? உருவச் சிலைகள் வழிபாடு இப்ராஹீம் நபியின் மூலமாகவே வந்திருக்க முடியும் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் நம்பியதை எப்படித் தவறென்று கூற முடியும்?
நமது முன்னோர்கள் தாம் தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கூட மார்க்கம் என்று நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்த விஷயங்களில் முன்னோர்களை நாம் பின்பற்றவில்லையா? என்று சிலர் கேட்கலாம். முன்னோர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை. அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் பின்பற்றுவது எப்படித் தவறானதோ அதே போன்று அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் புறக்கணிப்பதும் தவறானதாகும்.
“அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தால் கூட அவர்களைத் தான் பின்பற்றப் போகிறார்களா?” என்று இறைவன் கேட்பதிலிருந்து இதை நாம் விளங்கலாம்.
முன்னோர்கள் சென்றது நேர்வழியாக இருந்தால் – அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியாக இருந்தால் – தாராளமாக அதை ஏற்கலாம். தொழுகைஇ நோன்பு போன்ற கடமைகள் இந்த வகையில் அமைந்துள்ளதாலேயே அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
முன்னோர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை என்பதையும் நாம் உணர்த்த வேண்டியுள்ளது. முன்னோர்களைப் பின்பற்றுவோர் மார்க்க விஷயங்களில் மட்டுமே அவர்களைப் பின்பற்றுகின்றனர். உலக விஷயங்களில் யாருமே முன்னோர்களை பின்பற்றுவதில்லை.
முன்னோர்கள் நவீன வாகனங்களைக் கண்டதில்லை. மின் சாதனங்களைக் கண்டதில்லை. உறுதியான கட்டடங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தியதில்லை என்பதற்காக அவர்களின் வழித் தோன்றல்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. முன்னோர்கள் வாழ்ந்திராத வாழ்க்கைக்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு அதிக நன்மை தரக் கூடியது என்றால் முன்னோர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றனர். முன்னோர்கள் செய்தவற்றை விட்டு விடவும் செய்கின்றனர்.
உலக விஷயங்களில் முன்னோர்களைப் பின்பற்றுவதால் மிகப் பெரிய கேடு எதுவும் ஏற்படப் போவதில்லை. அற்பமான இந்த உலகத்தில் சிறிதளவு சிரமம் ஏற்படலாம், அவ்வளவு தான்!
ஆனால் மார்க்க விஷயத்தில் முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றினால் மறுமை வாழ்வே பாழாகி விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.
எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும்எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள்.      (33:66, 67)
முன்னோர்கள், பெரியார்கள் மீது கொண்ட குருட்டு பக்தி நம்மை நரகத்தில் தள்ளி விடும் என்று இறைவன் எச்சரித்த பிறகு, உலக விஷயங்களை விட மார்க்க விஷயங்களில் அதிகக் கவனம் அவசியம் என்பதை உணர வேண்டாமா?
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைக் கூறியிருப்பது தெரிய வந்தால், முன்னோôர்களின் வழிமுறைக்கு அது மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வும்இ அவனது தூதரும் கூறியதையே எடுத்து நடக்க வேண்டும். மக்கத்துக் காஃபிர்கள் தங்களின் முன்னோர்களைக் காரணம் காட்டியது போல் காரணம் கூறக் கூடாது.
அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது தூதரின் போதனை களையும் புறக்கணிப்பதற்குக் காரணமாக உள்ள முன்னோர் பக்தியைத் தூக்கி எறியக் கூடியவர்களே இந்த வசனத்தை உணர்ந்து செயல்படுத்தியவர்களாவர். இந்த பக்தி அகன்று விடுமானால் சமுதாயத்தில் நிலவுகின்ற குழப்பங்களில் பெருமளவு நீங்கி விடும்.
ஸஹாபாக்களை பின்பற்றுவதும் வழிகேடே !
தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லிக் கொண்டு,இமாம்களைப் பின்பற்றுவது வழிகேடு என்று சொன்னவர்கள்,தற்போது ஸஹாபாக்களைப் பின்பற்றலாம்,அது நேர்வழி என்று பிரச்சாரம் செய்யும் காட்சி அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்தப் பிரச்சாரத்தின் உண்மை நிலை என்ன? ஸஹாபாக்களை பின்பற்றலாமா? பின்பற்றக் கூடாது என்றால் அதற்கான ஆதாரம் என்ன? என்பது போன்ற விஷயங்களை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஸஹாபாக்களை பின்பற்றுபவர்களின் வகைகள் :
ஸஹாபாக்களை பின்பற்றுபவர்கள் இரண்டு வகையினராக இருக்கிறார்கள்.
முதல் வகை : 
ஸஹாபாக்கள் சொல்வதும் மார்க்கத்தின் ஆதாரமாகும்,அவர்கள் சொல்வதை ஏற்று நடப்பது நமது கடமை.என்று வாதிடுபவர்கள்.
இரண்டாவது வகை :
ஸஹாபாக்களை பின்பற்றுவதென்றால் அவர்கள் எப்படி குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கினார்களோ அப்படியே நாமும் விளங்குவது,மார்க்கத்தின் சட்டம் ஒன்றை சொல்வதற்கு முன்னால் ஸஹாபாக்கள் குறிப்பிட்ட சட்டத்தை எப்படி விளங்கிக் கொண்டார்கள் என்று பார்க்க வேண்டும் என வாதிடுபவர்கள்.
மொத்தத்தில் இந்த இரண்டு வகையான கருத்தைக் கொண்டவர்களும் வழிகேட்டில் தான் இருக்கிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கம் என்பது திருமறைக் குர்ஆனையும்,நபியவர்களின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
இந்த இரண்டைத் தவிர வேறு எதையும் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொள்ள கூடாது.
குர்ஆனையும்,ஹதீஸையும் பின்பற்றுபவர்களைப் பொருத்தவரையில் வாழ்க்கைக்கான வழி காட்டி அந்த இரண்டிலும் இருந்தால் போதும் அதைத் தவிர்த்து யார் எதைச் சொன்னாலும் அது நமக்கு தேவையற்றது.
இப்போது ஸஹாபாக்களை பின்பற்ற முடியுமா?
பின்பற்றுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!    
(அல்குர்ஆன் 7:3)
மேற்கண்ட திருமறை வசனத்தில் இறைவனின் மூலம் நமக்கு வந்த வஹியை மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்றும் அது தவிர்ந்த எந்த ஒன்றையும் பின்பற்றக் கூடாது என்றும் இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
இறைவனிடமிருந்து வரும் வஹீ ஒன்று திருமறைக் குர்ஆன் மற்றயது நபியவர்களின் வார்த்தை. இந்த இரண்டையும் தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது.
ஆனால் வஹீ என்ற வட்;டத்தைப் பற்றி பேசுபவர்கள் ஸஹாபாக்கள் சொன்ன,செய்த,அங்கீகரித்தவைகளையும் மார்க்கம் என்று வாதிடுகிறார்கள்.இப்படி வாதிடுபவர்கள் மறைமுகமாக ஸஹாபாக்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வருகிறது என்றே நம்புகிறார்கள் என்று தான் அர்த்தம்.
ஸஹாபாக்களுக்கு வஹீ வராது என்றும் இறைவனின் தூதருக்கு மாத்திரம் தான் வஹீ வரும் என்றும் வஹீயை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்றும் இறைவன் திருமறையில் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:38)
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!
(அல்குர்ஆன் 6:106)
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும்அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்கட்டுப்பட்டோம்‘ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51)
அல்லாஹ்வுக்கும்இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!‘ என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை. (அல்குர்ஆன் 24:54)
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்‘ என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவைஅவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6:153)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும்இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும்மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59)
அல்லாஹ்வும்அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
மேட்கண்ட வசனங்கள் யாவும் இறைவனின் வார்த்தைகளையும் நபியவர்களின் நடை முறையையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.
இதே நேரம் ஸஹாபாக்களை பின்பற்றுவதும் மார்க்கம் என்று சொல்பவர்கள் ஸஹாபாக்களை தக்லீத் செய்வதன் மூலம் தெளிவான வழி கேட்டில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்களின் சிறப்புகள்.
நபித்தோழர்கள் நம்மை விட சிறப்பானவர்கள், நன்மையில் முந்தியவர்கள், ஈமானில் சிறந்தவர்கள் என்பதில் நமக்கு அணுவளவும் மாற்றுக் கருத்தில்லை. இதற்கு குா்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏறாளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும்.
நபித் தோழர்களைப் புகழ்ந்து பேசும் இறைவன் அவா்கள் என்றென்றும் சுவர்க்கத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறான்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)
இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்;இரக்கமுடையோன். (அல்குர்ஆன் 9:117)
ஸஹாபாக்களின் வள்ளல் தன்மையை இறைவன் பாராட்டிப் பேசுகிறான்.
உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன் 57:10)
நபித் தோழர்கள் சிலர் சில சந்தர்ப்பங்களில் சில தவறுகளை செய்திருந்தாலும் அவா்களை திட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஏன் என்றால் நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கும் அவா்கள் செய்த சேவைக்கும் உள்ள வித்தியாசம் மலையையும், மடுவையும் போன்றதாகும்.
தங்களுடைய வாழ்வாதார தேவையையை முழுமைப்படுத்துவதற்கு சிறமப்பட்ட நேரத்திலும் அடுத்தவர்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் தான் நபித் தோழர்கள்.
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)  நூல்: புகாரி 3673
மக்களில் சிறந்தவர்கள் யார் என்ற பட்டியலை நபியவர்கள் தெரிவிக்கும்போது முதலிடத்தை நபித் தோழர்களுக்கே வழங்குகிறார்கள்.
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)      நூல்: புகாரி 2651
இவ்வளவு சிறப்பு மிக்கவர்களான நபித் தோழர்களை யாரும் திட்டவோ,நிந்திக்கவோ கூடாது. அவா்களின் சிறப்புக்களை மறுக்கவும் கூடாது.
ஸஹாபாக்களை வஞ்சிக்கும், அவா்களின் சிறப்புக்களை மறுக்கத் துணியும் ஷீயாக்கள் மற்றும் அவா்களுக்கு வக்காலத்து வாங்கும் அமைப்புக்களை நாம் ஒரு போதும் விடப்போதவில்லை.
இந்த கெட்ட எண்ணம் குடி கொண்ட இஸ்லாமியப் பெயர் தாங்கிக் கயவர்களை நாம் மக்கள் மன்றில் அடையாளம் காட்டியே ஆகவேண்டும்.
இதே நேரம் ஸஹாபாக்கள் இவ்வளவு தியாகம் செய்துள்ளார்கள், அவா்களை இறைவன் குா்ஆனிலே புகழ்ந்திருக்கிறான், நபியவர்கள் தனக்குப் பின் சிறந்தவர்கள் என்று ஸஹாபாக்களைத் தான் அடையாளம் காட்டியுள்ளார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஸஹாபாக்கள் சொல்வதும் மார்க்கமாக ஆகும்.
நபித் தோழர்களையும் பின்பற்ற முடியும், அவா்கள் செய்த காரியங்களும் மார்க்கமாக மாறும் என்று யாராவது வாதிட்டால் அவருடைய வாதம் வழிகேட்டிற்கு நம்மை அழைக்கும் வாதம் என்று நாம் தெளிவடைந்து கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் ஸஹாபாக்கள் நம்மை விட சிறந்தவர்கள், ஈமானில் முந்தியவர்கள் என்பதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. அவர்கள் நல்லவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம் அவா்களுக்கெதிரான கருத்துக்களை சொல்பவர்களுக் கெதிரான நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்கிறோம் ஆனால் அவா்களை பின்பற்ற முடியாது, பின்பற்றவும் கூடாது.
திருமறைக் குா்ஆனையும், நபியவர்களின் பொன் மொழிகளையும் மாத்திரம்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.ஏற்பட்டுத்தான் இருக்கிறது.
நபித் தோழர்களிடம் தவறுகள் ஏற்பட்டன என்று நாம் கற்பனையாககூறவில்லை. மாறாக தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தக் கருத்தை முன்வைக்கிறோம்.
நபித் தோழர்களை பின்பற்றுவதும் வழிகேடுதான் என்ற தலைப்பில் குா்ஆன்,ஹதீஸைத் தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது என்ற கருத்தில் திருமறைக் குா்ஆனில் இறைவன் குறிப்பிட்டுள்ள வசனங்களையும் அதற்குறிய விளக்கங்களையும் நாம் பார்தோம்.
ஸஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு,நபித் தோழர்களானாலும் அவர்களை தக்லீத் செய்யக் கூடாது குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் பேசியும்இஎழுதியும் வரும் இவ்வேலை.
இப்படி நாம் சொல்வதால் ஸஹாபாக்களை மதிக்கவில்லை,அவா்களை நாம் திட்டுகிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் தங்களுக்கான ஒரு ஆதரவைப் பெற்றுக் கொள்ள முனைகிறார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.
நபித்தோழர்களை பின்பற்றக் கூடாது அவா்களின் வார்த்தைகள்,வாழ்க்கை வழி முறைகள் மார்க்கத்தின் ஆதாரமாகாது என்று நாம் கூறுவதினால் ஸஹாபாக்களை நாம் திட்டுகிறோம் என்றோ,அல்லது அவா்களின் தியாகத்தை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றோ அர்த்தமல்ல.
ஸஹாபாக்களை நாம் நேசிக்கிறோம்,அவா்களின் தியாகங்களை மெச்சுகின்றோம்,ஆனாலும் மார்க்க விஷயங்களில் குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் தான் நமது வழிமுறைகளாக ஏற்றுக் கொள்வோம்.
இந்த இரண்டுக்கும் மாற்றமாக யார் என்ன கருத்தை சொல்லியிருந்தாலும் அவற்றை தூக்கி தூர எறிந்து விடுவோம் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
இனி ஸஹாபாக்கள் இந்த மார்க்கத்தின் வளர்சிக்காக செய்ய தியாகங்களை பற்றியும் அவா்களின் சேவைகள் பற்றியும் சுருக்கமாக பார்த்துவிட்டு,ஸஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்பதற்கான மேலதிக விளக்கங்களை ஆராய்வோம்.
நம்மை விட ஈமானில் சிறந்த நல்லவா்கள்.
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல்: புகாரி 2651
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3673
நபித் தோழர்களைப் பற்றிய திருமறையின் புகழ்ச்சி.
உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன் 57:10)
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 9:100)
இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.
(அல்குர்ஆன் 9:117)
மேற்கண்ட வசனங்களில் நபித் தோழர்களுக்குள்ள சிறப்புகளை இறைவன் அழகாக எடுத்துக் கூறியுள்ளான்.
இந்தச் சிறப்புகளை மறுத்து,நபித்தோழர்களை தவறாக விமர்சித்து அவா்களை நிந்திக்கும் ஷீயாக்களை எதிர்த்து அவா்களின் கருத்துக்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டி நாம் அடிக்கடி எழுதிவருவதையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
அதே போல் இப்படியெல்லாம் சிறப்புகள் இருக்கிறது என்பதற்காக அவா்கள் சொல்வதும் மார்க்கத்தின் ஆதரங்களாகும் என்று வாதிடுவதும் வடி கட்டிய மடமைத் தனம் என்பதையும் நாம் மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான காரணம்
நபித்தோழர்களும் மனிதர்கள் தான்.
அவா்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
நபித்தோழர்களும் சில நேரங்களில் தவறுகளை செய்திருக்கிறார்கள்.
சில நபித் தோழர்களின் கருத்துக்களும்,செயல்பாடுகளும் குா்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமாக அமைந்திருக்கிறது.
பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.
குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும், நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.
குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்துக் கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.
ஸஹாபாக்களின் கருத்துக்கள் மார்க்க ஆதாரங்களாகுமா? 
இதே நேரம் சகாபாக்கள் நம்மை விட ஈமானில் முதியவர்கள் என்பதில் எல் முனையளவுக்கும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் நபியவர்களின் தோழர்களும் மனிதர்கள் என்பதினால் அவா்களும் பல இடங்களில் குா்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். அவை எவை என்பது தொடர்பாக இந்தத் தொடரில் நாம் பார்ப்போம்.
முத்தலாக்கும் உமர் பின் கத்தாப் (ரலி) அவா்களும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும்அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள்நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?) என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) , நூல் : (முஸ்லிம் 2689)
முத்தலாக் என்று கூறினால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர். ஸஹாபாக்களைப் பின்பற்றலாம், அவா்களைப் பின்பற்றுவதும் நன்மைதான் என்ற கொள்கையுடையவர்கள் இந்தச் செய்தியை ஊன்றி கவணிக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.
நபியவர்கள் எதனை ஒரு தலாக் என்று சட்டம் சொன்னார்களோ அந்த சட்டத்தை அப்படியே மாற்றி உமர் (ரலி) அவா்கள் முத்தலாக் என்று சட்டம் சொல்கிறார்கள். இப்போது நபியைப் பின்பற்றுவதா? அல்லது உமரைப் பின்பற்றுவதா? என்ற கேள்வி எழுகிறது.
உண்மையான ஏகத்துவவாதி ஸஹாபாக்களை தனது தலை மேல் வைத்து மதிக்க வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸஹாபாக்களை பின்பற்றலாம் என்ற கருத்தை ஒரு ஏகத்துவவாதி ஏற்றுக்கொள்ளமாட்டான், ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்பதே இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.
அபூமூஸா (ரலிஅவா்களும், ஆதாரம் கேட்ட உமர் பின் கத்தாப் (ரலி)அவா்களும்.
உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். உமர் (ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனேஅபூமூஸா (ரலி) திரும்பி விட்டார். அலுவலை முடித்த உமர் (ரலி), ‘அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதியளியுங்கள்‘ என்றார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார்‘ என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி)அபூமூஸா (ரலி)யை அழைத்து வரச் செய்தார்கள். (ஏன் திரும்பிச் சென்றீர் என்று கேட்ட போது)இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்‘ என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘இதற்குரிய சான்றை என்னிடம் நீர் கொண்டு வாரும்  என்று கூறினார்கள்.
உடனே அபூமூஸா (ரலி) அன்சாரிகளின் சபைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள்நம்மில் இளையவரான அபூஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் சாட்சி சொல்ல மாட்டார்கள் என்று கூறினார்கள். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) யை உமர் (ரலி) யிடம் அபூமூஸா (ரலி) அழைத்துச் சென்றார். (அபூஸயீத் அல்குத்ரீ சாட்சி கூறியதும்) உமர் (ரலி)நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய் விட்டதாநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கடைவீதிகளில் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தைத் திசை திருப்பி விட்டது போலும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபைத் பின் உஸாமா   நூல்: புகாரி 2062, 6245
நபியவர்களின் தோழர்களின் மிக முக்கியமானவர்களின் ஒருவர் தான் உமர் (ரலி) அவா்கள், அவா்களுக்கே மேற்கண்ட சட்டம் தெரியாமல் இருந்திருக்கிறது.காரணம் வியாபாரத்தில் ஈடுபட்டதினால் சில நேரங்களில் நபியிடத்தில் அவா்களுக்கு இருப்பதற்குக் கிடைக்கவில்லை. அதனால் தான் அவா்களுக்கு சில சட்டங்கள் தெரியாமல் போய் இருக்கிறது என்பது மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெரியவரும் உண்மையாகும்.
கொள்ளை நோயின் பரவலும் அப்துர் ரஹ்மான் பின் அவ்பின் தெளிவும்.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போதுபடைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்துஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள்ஷாம் நாட்டிற்குப் போகலாமாஎன்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்துக் கருத்து கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள்இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்‘ என்று சொல்ல நான் கேட்டேன்‘ என்று கூறினார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 5279
கொள்ளை நோய் பரவுதல் தொடர்பாக நபியவர்கள் தெரிவித்த மேற்கண்ட செய்தி ஸஹாபாக்களைப் பின்பற்ற முடியும் என்று சொல்பவர்கள் முதற் கொண்டு அநேகருக்குத் தெரியும். ஆனால் உமர் (ரலி) அவா்களுக்கு அது தொடர்பான செய்தி தெரியாமல் இருந்திருக்கிறது. என்பதை மேற்கண்ட செய்தி நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
குளிப்பு எப்போது கடமை?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?’ என்று கேட்டேன். அதற்கு மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)    நூல் : புகாரி 293
உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.
பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல்கள் : முஸ்லிம் 526, திர்மிதீ 102
சட்டம் மாற்றப்பட்ட விஷயம் அனைவரும் பெரும்பாலும் அறிந்த ஒன்று. ஆனால் இந்தச் சட்டம் தெரியாமல் உஸ்மான் (ரலி) அவர்கள், இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமையில்லை என்று கூறியுள்ளார்கள்.
ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்னஎன்று நான் உஸ்மான் (ரலி)யிடம் கேட்டேன். அதற்குஅவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டுதொழுகைக்கு உளூச் செய்வது போன்று செய்ய வேண்டும். இதை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)  நூல்: புகாரி 179, 292
மாற்றப்பட்ட இந்தச் சட்டம் உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் போயுள்ளது. நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் இப்போது உஸ்மானைப் பின்பற்றுவார்களா?அல்லது நபியவர்களைப் பின்பற்றுவார்களா?
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மம் செய்வது கூடுமா?
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூஸல் அஷ்அரி (ரலி) ஆகியோருடன் நானும் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி)அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) யிடம்அபூ அப்திர்ரஹ்மானே ! குளிப்பு கடமையான ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்என்று கேட்டார். தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லைஎன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார். அதற்கு அபூமூஸா (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது‘ என்று அம்மார் பின் யாஸிரிடத்தில் சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்என்று கேட்டார். அதற்கு, (இச்செய்தியை அம்மார் (ரலி) உமர் (ரலி)யிடம் கூறியபோது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதாஎன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) பதில் கூறினார்.
அம்மார் அறிவிப்பதை விட்டு விடுங்கள். தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்ற இறை வசனத்தை என்ன செய்வீர்கள்என்று அபூமூஸா (ரலி) கேட்டார். அதற்குஇந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டால் யாருக்காவது கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் உளூச் செய்வதை விட்டு விட்டு தயம்மும் செய்து விடுவார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) தாம் சொல்லக் கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலேயே சொல்லி விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஷகீக் பின் ஸலமா   நூல்: 346, 347
குளிப்பு கடமையானவர் தண்ணீர் இல்லையானால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து தொழக் கூடாது என்று கூறுகின்றார்கள்.
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யுங்கள் என்ற தெளிவான அனுமதி குர்ஆனில் இருந்தும், அது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டும், சொந்த ஊகத்தின் அடிப்படையில் அனுமதி மறுக்கின்றார்கள். இது எதைக் காட்டுகின்றது?
நபித் தோழர்களைப் பின்பற்றலாம் என்றால் இப்னு மஸ்ஊத் (ரலி) அவா்கள் விஷயத்தில் என்ன தீர்பை சொல்லுவது?
நபிகள் நாயகத்தின் மரணமும், குா்ஆனின் தீர்ப்பும்.
(நபி - ஸல் அவர்கள் இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்து விட்டு) அபூபக்ர் (ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும்அவரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) உட்கார மறுத்ததும்மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவேஅபூபக்ர் (ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி)யிடமிருந்து அபூபக்ர் (ரலி)யிடம் திரும்பினர்.
அப்போது அபூபக்ர் (ரலி)உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக முஹம்மது இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன். மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத்தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களாவந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாகஅபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 1242, 3670
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் உமர் (ரலி) உள்ளிட்ட பல்வேறு நபித்தோழர்கள் மறுத்துள்ளனர். குர்ஆனில் உள்ள ஒரு விஷயம், நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்ததை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டியதால் நபித்தோழர்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர். இது போன்று சுட்டிக் காட்டப்படாத எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன.
நபித் தோழர்களையும் பின்பற்றலாம், அதுவும் மார்க்கம் தான் என்று பிதற்றக் கூடியவர்கள் இந்தச் செய்திக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
ளுஹா தொழுகையை மறுக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹா தொழுததேயில்லை என்று மறுத்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உபரியான) சில கிரியை (அமல்)களைச் செய்ய விருப்பம் இருந்தாலும்கூட அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவார்கள். மக்களும் அவற்றைச் செய்ய அவர்கள் மீது அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். நான் ளுஹாத் தொழுகை தொழுதுவருகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ளுஹாத் தொழுததில்லை    (பார்க்க புகாரி 1128, 1177)
தமத்துஃ ஹஜ்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.
நான் உஸ்மான் (ரலி) உடனும்அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ்உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும்உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ்உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, ‘லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்‘ என்று கூறிவிட்டு, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்‘ என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம் ,  நூல் : புகாரி 1563
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர்கள், ‘அது அனுமதிக்கப்பட்டதே!‘ என்று கூறினார்கள். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், ‘உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!‘ என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ‘என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமாஅல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்‘ என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்‘ என்று விடையளித்தார்கள்.    அறிவிப்பவர் : ஸாம் , நூல் : திர்மிதீ (753)
தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இது ஏன்?
இஹ்ராமின் போது நபி திருமணம் முடித்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியது.
மைமூனா (ரலி) தம்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தனர் என்ற செய்தியை மறுத்துள்ள போதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது தான் மணம் முடித்தார்கள் என்று மைமூனாவின் சகோதரி மகன் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்)  அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும்போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.
(பார்க்க புகாரி 1837)
113 மற்றும் 114ம் அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்.
குர்ஆனில் 114 சூராக்கள் உள்ளன என்பதில் உலகில் எந்த முஸ்லிமுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 113, 114 ஆகிய சூராக்கள் குர்ஆனில் இல்லை என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மறுத்த செய்தி அஹ்மத் 20244, 20246 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.
நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருந்தும், உஸ்மான் (ரலி) கொலை, ஒட்டகப் போர், சிஃப்பீன் போர் என நபித் தோழர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தூக்கியுள்ளார்கள்.
இப்படி எண்ணற்ற சான்றுகள் ஹதீஸ் நூற்களில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன?
நபித்தோழர்களும் மனிதர்கள் தான், அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை இந்தச் செய்திகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, தமது தோழர்களில் சிலர் மார்க்கத்தை மாற்றி விடுவார்கள் என்பதைக் கூறி விட்டுச் சென்றுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, ‘நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாகஉடையணியாதவர்களாகவிருத்த சேதனம் செய்யபடாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்‘ என்று கூறிவிட்டு, ‘முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்‘ என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.
அப்போது நான், ‘என் இறைவாஎன் தோழர்கள்‘ என்று சொல்வேன். அதற்கு, ‘இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது‘ என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், ‘நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்‘ என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்‘ என்று கூறப்படும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி 4740, 6524
குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும், நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.
மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை‘ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.  
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: ஹாகிம் 318
பி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடே!
தக்லீத் ஓர் ஆய்வு என்ற தொடர் ஆக்கத்தில் இது வரைக்கும் சில முக்கிய பகுதிகளைப் பற்றி தெளிவாக ஆராய்ந்தோம். இதன் இறுதித் தொடராக தவ்ஹீத் ஜமாத்தைப் பற்றி வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனமான “பி.ஜெ தக்லீத்” தொடர்பாக நாம் ஆராய இருக்கின்றோம்.
ஆம் குர்ஆன், சுன்னா என்று பேசுபவர்களாக இருந்தாலோ அல்லது அதற்கு மாற்றமானவர்களாக இருந்தாலோ அனைவராலும் நம்மைப் பார்த்து வைக்கப்படும் விமர்சனங்களில் இது முக்கிய விமர்சனமாகும்.
இவர்கள் குர்ஆன், சுன்னா என்று பேசினாலும் பி.ஜெ எதைச் சொன்னாலும் அதையும் ஏற்று பின்பற்றுவார்கள். அவர் எதைச் சொல்கிறாரோ அதுதான் மார்க்கத்தின் தீர்ப்பு என்று இவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். என்பதுதான் நமக்கு எதிராக மற்றவர்கள் வைக்கும் முக்கியமான விமர்சனம்.
இந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்காகத் தான் ஆய்வின் இறுதிப் பகுதியை “பி.ஜெ யைப் பின்பற்றுவதும் வழிகேடே!“ என்று தலைப்பிட்டு எழுதுகின்றோம்.
இந்தத் தலைப்பை ஆய்வு செய்வதற்கு முன் பி.ஜெ பற்றிய சில செய்திகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விமர்சனத்திற்கு மட்டும் பதில் சொல்வதைவிட விமர்சனத்துடன் தொடர்புடையவர் யார்? அவரை வைத்து ஏன் இந்த விமர்சனத்தை செய்கிறார்கள் என்பது அனைவரும் தெரிய வேண்டும் என்பதற்காக பி.ஜெ பற்றிய சில செய்திகளை ஆரம்பமாக நாம் பார்த்து விட்டு விமர்சனத்திற்குறிய பதிலை பார்க்களாம்.
யார் இந்த பி.ஜெ?
பி.ஜெ என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல்,எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.
1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்
மார்க்கப் பிரச்சாரம் மாத்திரம் தான் தங்கள் வேலை என்றெண்ணிக் கொண்டிருக்கும் பல மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஆலிம்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் முன்னெடுப்புக்களிலும் தன்னை இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.
ஆலிம்கள் என்றால் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதும், நபியின் பிறந்த நாள் (?) விழா என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலை ஒதுவதும், ஐந்து நேரம் தொழுகை நடத்துவதும் தான் என்பதைத் தாண்டி,சமுதாயப் போராட்டத்தில் ஆலிம்கள் தங்களை ஈடுபடுத்தி நமது சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவராக இவர் இருந்து வருகின்றார்.
ஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு.
அல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்கள் (?) என்று மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களை வணங்கி வழிபட்டு வந்ததைப் பார்த்து அதற்கெதிராக இஸ்லாத்தின் உண்மை நிலையை மக்கள் மத்தியல் எடுத்துரைக்க வேண்டும் என்று ஏகத்துவப் பிரச்சாரத்தை 1980களில் தமிழகத்தில் இவர் ஆரம்பித்தார்.
கப்ரு வணக்கத்திற்கெதிராக குரல் கொடுத்த காரணத்தினால் பல இடங்களில் தாக்கப்பட்டு, அல்லாஹ்வின் உதவியினால் உயிர் பிழைத்தார்.
உயிரே போனாலும் கொள்கையை சொல்லாமல் விட மாட்டேன் என்ற கொள்கை உறுதியினால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இவருடைய பிரச்சாரம் சூடு பிடித்தது.
தமிழகத்தின் பல இளைஞர்கள் இவருக்குப் பின்னால் அணி வகுத்தார்கள்.
நவீன தாக்கத்தை உண்டாக்கிய “நஜாத்” பத்திரிக்கை.
ஏகத்துவப் பிரச்சாரத்தை எழுத்து மூலமும் எத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துபையில் பணியாற்றும் தமிழ் கூறும் சகோதரர்களினால் நட்த்தப்பட்ட ஐ ஏ சி (இஸ்லாமிய விழிப்புணர்வு மையம்) என்ற அமைப்பின் சார்பில் “நஜாத்” என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை இவரை ஆசிரியராகக் கொண்டு துவங்கப்பட்ட்து. அது வரை காலமும் பேச்சாளராக மாத்திரமே அறியப்பட்ட பி.ஜெ நஜாத் பத்திரிக்கை மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமானார்.
ஆம் ஒவ்வொரு செய்தியையும் மிக அழகிய முறையில் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் விதமாக பேசும் இவர் எழுத்திலும் அதே முறையைக் கையாண்டார்.
கப்ரு வணக்கத்திற்கு எதிரான இவருடைய எழுத்துக்கள் “நஜாத்” பத்திரிக்கை மூலமாக தமிழகத்தின் மூலை முடுக்குகளையும் தாண்டி வெளிநாடுகளிலும் தடம் பதிக்க ஆரம்பித்தது.
மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக சென்றிருந்த மக்கள் மத்தியில் பி.ஜெ அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அபார தாக்கத்தையே உண்டாக்கியது எனலாம்.
சினிமாவில் மூழ்கி, மரணித்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் இவருடைய பேச்சின் மூலமும், எழுத்தின் மூலம் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முனைந்தனர்.
இன்றைக்கு இவரையும் இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தையும் எதிர்க்கும் பலரும் அன்றைக்கு இவருடைய கருத்துக்களின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றால் அது மிகையல்ல. (இவருடன் இருந்த பலர் இவரை விட்டும் விலகிச் சென்றதற்கான காரணத்தை இறுதியில் விளக்குவோம்).
நடிகர்களுக்கு பால்அபிஷேகம் நடத்திய முஸ்லிம் இளைஞர்கள் “நஜாத்”பத்திரிக்கையின் வாசகர்களாக மாறினார்கள். ஏகத்துவக் கருத்துக்களை மற்றவர்களுக்கு பரப்புவது மட்டுமன்றி குர்ஆனை ஆழமாக படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் இந்தப் பத்திரிக்கை உண்டாக்கியது.
இன்றைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவ்ஹீத் வாதிகளை “நஜாத் காரர்கள்” என்று அழைக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. காரணம் நஜாத் பத்திரிக்கை தான்.
ஆனால் ஐ ஏ சி அமைப்பின் மூலமும், அதன் பொருளாதாரத்தின் மூலமும் உருவாக்கப்பட்ட நஜாத் பத்திர்கையை உள்ளூரில் நிர்வாகம் செய்து வந்த அபூஅப்துல்லா என்பவர் தன்னுடைய சொந்த உரிமையாக பதிவு செய்து கொண்ட்தால் ஐ ஏ சிக்கு ஆதரவாக, நியாயத்துக்கு ஆதரவாக நஜாத் பத்திரிகையில் இருந்து விலகினார். அத்துடன் நஜாத் பத்திரிகை இருந்த இடம் தெரியாமல் போனது தனி விஷயம்.
புரட்சியை உண்டாக்கிய புரட்சி மின்னல்.
இதன் பின்னர் மதுரையில் இருந்து நீண்ட காலமாக அப்துல்லா என்பவர் புரட்சி மின்னல் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார் அவர் ஐ ஏ சி யைத் தொடர்பு கொண்டு இந்தப் பத்திரிகையை நீங்கள் நட்த்துங்கள் என்று கூறி ஒப்படைத்தார். அந்தப் பத்திரிகையில் பீஜே தொடர்ந்து எழுதி வந்தார்.
அறிவுக் கண்களைத் திறந்த அல்ஜன்னத்.
இவருடைய எழுத்துத் துறையின் இன்னொரு பரிணாமமாக உருவானதுதான் “அல்ஜன்னத்” பத்திரிக்கை. ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியில் கருத்துக்களையும் இதன் மூலம் பி.ஜெ முன்வைத்தார்.
பொது சிவில் சட்டம், இந்திய அரசியில் சாசனம் தொடர்பான விளக்கங்கள், குறைகள், பாதிக்கப்படும் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக சட்ட ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை இதன் மூலம் இவர் தெளிவுபடுத்தினார்.
ஷாஃபி, ஹனபி என்று ஆளுக்கு ஒரு இமாமை பிடித்துக் கொண்டு மத்ஹபுகள் என்ற வழி கெட்ட சிந்தனையில் இருந்தவர்களிடம் மத்தபுகளின் ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தியது மாத்திரமன்றி, ஹதீஸ்கள் என்ற பெயரில் போலியாக மக்களிடம் புகுத்தப்பட்டிருந்த செய்திகளையும் தெளிவுபடுத்திக் காட்டுவதற்குறிய சிறந்த ஊடகமாக அல்ஜன்னத்தை இவர் பயன்படுத்தினார்.
இயக்க ரீதியிலான கொள்கை முன்னெடுப்புக்கள்.
ஆரம்பம் முதல் பல இயக்கங்களில் இணைந்திருந்த இவர் குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் உடைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஜாக் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினார். அதன் தலைவராகவும் இருந்தார்.
பிரசாரப்பணியில் தீவிரமாக ஈடுபட தலமைப் பொறுப்பு தடையாக இருப்பதாக கூறி அந்த இயக்கத்தினர் விரும்பாத போதும் வலுக்கட்டாயமாக கமாலுத்தீன் மதனியை அதன் தலைவராக ஆக்கினார்.
சிரிது காலம் அதில் இருந்து பிரச்சாரத்தை முன்னெடுத்த இவர் மார்க்க ரீதியிலான சில பிரச்சினைகள் காரணமாகவும், அரசியல் ரீதியிலும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தமுமுக என்ற இயக்கத்தைச் சில சகோதரர்களுடன் சேர்த்து உருவாக்கினார்.
நேரடி அரசியலில் இணைந்து வெறும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் இயக்கமாக இல்லாமல் சமுதாயத்தின் நலன் காக்கும் இயக்கமாக தமுமுக இருக்க வேண்டும் என்பதற்காக எக்காரணம் கொண்டும் தேர்தலில் இறங்க மாட்டோம் என்ற ஒரு விதியையும் அமைப்பு விதியாக்கினார்.
ஏகத்துவ அறிஞர்களின் இடைவிடாத உழைப்பாலும் தீவிரமான பிரச்சாரத்தினாலும் இந்த இயக்கம் மக்களிடம் செல்வாக்கு பெற்றது.
பலதடைகளைத் தாண்டி இந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்ட பின்னர் இதன் அமைப்பாள பொறுப்பில் இருந்து விலகினார். திருக்குர் ஆன் தமிழாக்கம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுபட வேண்டியுள்ளதால் விலகுவதாகவும் அறிவித்தார். அன்றைய தமுமுகவில் தலைவர் பொதுச் செயலாளர் பதவிகலை விட மேலான முதனமையான பதவி அமைப்பாளர் பதவியாகும்.
அதன் பின்னர் அந்த இயக்கத்தின் பணிகளில் இருந்து விலகிக் கொண்டாலும் அதன் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் இருந்தார். பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து விளகுவோர் அதற்கு எதிராக செயல்படுவது தான் வழக்கம். ஆனால் இவர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும் அந்த இயக்கதில் இருந்து வந்தார்.
இதன் பின்னர் அவர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஞ்சிய தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றினால் தான் சுன்னத் ஜமாஅத் ஆதரவும் கிடைக்கும். நாம் தேர்தலிலும் போட்டியிடலாம் என்று கருதி யாரும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று முடிவு செய்தனர். இதைக் கண்ட பிறகு தான் தவ்ஹித் பிரச்சாரம் உங்களுக்குத் தடையாக இருக்குமானால்அதை எழுதி தாருங்கள் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினார். அந்த மதிகெட்டவர்கள் அப்படியே எழுதியும் கொடுத்தனர்.
தமுமுக வில் இருந்து இவருடன் சேர்த்து வெளியாகிய அனைத்து மார்க்க அறிஞர்களும் சேர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள்.
தவ்ஹீத் பிரச்சாரம் தான் நமது உயிர் மூச்சு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு சமுதாய சேவையிலும் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தவ்ஹீத் பேசினால் மக்கள் வரமாட்டார்கள் என்ற இவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கும்பகோனம் நகரில் பத்து லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு போராட்டம் நடத்தினார். தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நடத்திய இந்த பேரணி இதற்கு முன் தமுமுக நடத்திய எல்லா போராட்டங்களை விடவும் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் பின்னர் தஞ்சை, சென்னை தீவுத்திடல் என நடத்தப்பட்ட இரண்டு மாநாடுகளும் கும்பகோனத்தையும் மிஞ்சும் வகையில் இருந்தன. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுக வளர்ச்சிக்கு தடை என்று கூறியவர்கள் பீஜே பிரிந்த பின்னர் ஒரு மாநில மாநாடையும் நடத்தவில்லை. நட்த்தினால் இரண்டையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து தமுமுகவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வார்கள் என்று அஞ்சினார்கள்.
மாற்று மத அன்பர்களில் பலம் பெரும் இயக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது, இரத்ததான சேவையில் மாநிலத்திலேயே முதல் இடத்தில் இவ்வமைப்பு தான் இருக்கிறது என்றால் அதன் சமுதாய சேவை முன்னெடுப்புக்களின் வீரியத்தை அறிந்து கொள்ளுங்கள்.
பி.ஜெ சந்தித்த விவாதக் களங்கள்.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக விவாதக் களங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகள், கிருத்தவர்கள், காதியானிகள், கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்கள், குர்ஆன் சுன்னா என்று தங்களையும் தவ்ஹீத் வாதிகளாக வாதிடுபவர்கள் என்று பலருடன் பல விவாதக் களங்களை சகோதரர் பி.ஜெ சந்தித்தார்.
முதன் முதலில் குமரி மாவட்டம் கோட்டாரில் கப்ரு வணங்கிகளுடன் விவாதம் நடந்தது. அதில் கேரளாவின் பெரிய ஆலிமாக கருதப்படும் அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்ட பல பெருந்த்தலைக்கள் கேவலமான தோல்வியைத் தழுவினார்கள். அதன் பின்னர் குமரி மாவட்ட்த்தில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்ட்து. தமிழகம் முழுவதும் கப்ரு வணக்கத்தில் இருந்து மக்கள் விடுபட இந்த விவாதம் காரணமாக் இருந்த்து எனலாம்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் இவ்வுலகுக்கு அனுப்பப்பட மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்க மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவனும் நபி தான் என்ற வழி கெட்ட கொள்கை கொண்ட காதியானிக் காபிர்களுடன் எதிர்த்து வாதிடுவதற்கு அனைவரும் பின்வாங்கிய நேரத்தில் இறைவனின் அருளினால் அவர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தி காதியானிகளின் குருட்டுக் கொள்கைக்கு சாவு மணி அடிக்க உதவினார்.
கஃபா நிலைக்குமா? என்ற தலைப்பில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஜெபமணி என்ற பாதிரியாருடன் மதுரையில் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் கிருத்தவம் தூய்மைத் தன்மையை இழந்து மனிதர்களின் சொந்தச் சரக்குகள் பைபிலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்து ஒரு விவாதத்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து இலங்கையில் கல்முனையில் மத்ஹப் வாதிகளுடன் நடந்த விவாதத்திலும் பங்கு கொண்டார்.
பின்னர் கொழும்பில் கப்ரு வணங்கிகளுடன் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த மற்றொரு விவாதத்திலும்  கலந்து கொண்டார்.
அதே போல் மவ்லிதுகளுக்கும், மதுகபுகளுக்கும் எதிராக கலியக்காவிளை என்ற இடத்தில் ததஜ சார்பாக மிகச் சிறப்பான ஒரு விவாதக் களத்தில் கலந்து கொண்டு சத்தியக் கொள்கையை நிலை நாட்ட பாடுபட்டார்.
ஒருவன் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொண்டால் அவன் என்னிடம் வந்து பைஅத் – உறுதி மொழி தரவேண்டும் என்று வாதிட்டு பைஅத் செய்யாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று குப்ர் பட்டம் சூட்டிய இலங்கை உமர் அலி என்பவருடன் இலங்கை புத்தளம் நகர மண்டபத்தில் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்தியதின் மூலம் உமர் அலியின் உளரல் மொழிகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவினார்.
அல்லாஹ் உருவமற்றவனா? அபத்தங்களும், ஆபாசங்களும். இமாம்களின் துணையின்றி குர்ஆனையும், சுன்னாவையும் விளங்க முடியாதா?, போன்ற தலைப்புகளில் கப்ரு வணக்கத்திற்கு வக்காலத்து வாங்கி மக்களை வழிகேட்டிற்கு அழைத்துக் கொண்டிருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் சென்னையில் தொடர்ந்து நான்கு விவாதங்களை நடத்தினார்.
கடவுள் இல்லை எல்லாம் இயற்கை என்று வெற்றுக் கூச்சல் போடும் நாத்தீக திராவிட இயக்கத்தவர்களுடன் இறைவன் இருக்கிறான் என்பதை அழுத்தமாக பதிய வைக்க கடந்த ஆண்டு பகிரங்க விவாதக் களத்தில் அவர்களுடன் வாதிட்டார்.
இறுதியாக முஸ்லீம்களில் யாரும் என்னுடன் வாதிக்க வர மறுக்கிறார்கள். நான் சொல்லும் கிருத்தவ மதம் தான் உலகில் உண்மை மதம், என்று வெறிக் கூச்சல் போட்டுத் திரிந்த ஜெர்ரீ தோமஸ் என்ற கிருத்தவ பாதிரியாருடன் ததஜ சார்பாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பைபில் இறை வேதமா? என்ற தலைப்பில் ஒரு பகிரங்க விவாதத்தை நடத்தினார்.
இதன் விளைவாக இரண்டாவது தலைப்பான குர்ஆன் இறை வேதமா? என்ற தலைப்புக்கு வாதிக்க வராமலே ஓடினர் ஜெர்ரீ தோமஸ்.
இப்படி தனது 30 வருட கால பிரச்சாரக் களத்தில் பல விவாதக் களங்களையும் சந்தித்தார் சகோதரர் பி.ஜெ
இணைய தளத்திலும் இஸ்லாமியப் பிரச்சாரம்.
நவீன ஊடகங்களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகwww.onlinepj.com  என்ற பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து தூய பிரச்சாரத்தை செய்து வருகின்றார்.
தான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக வாசகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இணையதளத்தில் வெளியிட்டார்.
தனது திருக்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விளக்கவுரை, ஆயிரக்கணக்கான வீடியோ, ஆடியோ உரைகள், கட்டுரைகள், கேள்வி பதில் தொகுப்புக்கள், சர்சைக்குரிய சட்டங்களுக்கு ஆய்வு ரீதியிலான பதில்கள், குடும்பவியல் தொடர்பான தெளிவான விளக்கங்கள் என இணையதளம் மூலமான தனது பிரச்சாரத்தையும் செவ்வெனே செய்து வருகின்றார்.
இப்படி பலவிதமாக பிரச்சாரங்கள் இவர் செய்து வந்தாலும் இவருடன் பிரச்சாரக் களத்தில் ஆரம்ப காலத்தில் இணைந்திருந்த சிலர் ததஜ வில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட பின்னர் இவரைப் பற்றி பலவிதமான விமர்சனங்களையும் இவர்கள் செய்து வருகின்றார்கள்.
காரணம் அவர்கள் அனைவரும் தாமாக அமைப்பை விட்டு போனவர்கள் அல்ல குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள். தங்கள் சுயலாபத்திற்காக இயக்கத்தைப் பயன்படுத்தியவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் தாங்கள் தூய்மையானவர்கள் என்பதை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இவர் மீது அபாண்டமாக செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.
பி.ஜெ யைப் பின்பற்றலாமா?
ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பல தியாகங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காகவே இவர் அர்பணித்தார் என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் இவருடைய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதற்கு தக்லீத் –தனிமனித வழிபாடு நடத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் கிடையாது.
பி.ஜெ சொன்னால் அனைத்தும் சரியாகத் தான் இருக்கும்.
அவர் தவறாக சொல்ல மாட்டார்.
அவரில்லாவிட்டால் தவ்ஹீத் பிரச்சாரம் கேள்விக் குறியாகிவிடும்.
இவருடைய ஆய்வுகள், கருத்துக்களில் தவரே இல்லை
என்று யாராவது வாதிட்டால் அவர் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் அல்லாஹ்வை இறைவனாக ஒத்துக் கொண்ட ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.
எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லாஹ் சொல்லியுள்ளானா?நபியவர்கள் காட்டித் தந்தார்களா? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர பி.ஜெ சொல்லிவிட்டார் என்று பின்பற்றுவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. பி.ஜெ ஒரு செய்தியைச் சொன்னாலும் அதை அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? என்று ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும்.
ஏன் என்றால் அவரும் சாதாரண மனிதர் தான் தன்னுடைய ஆய்வின் படி சரியானதாக தான் நினைக்கும் கருத்தை அவர் வெளியிடுகின்றார். குறிப்பிட்ட கருத்து தவறானது என்று யாராவது ஆதாரத்துடன் சுட்டிக் காட்டும் போது அதனை அவர் மாற்றிக் கொள்கின்றார். இதுவே இவரின் கருத்தில் சரியும் இருக்கும் தவறும் வரும் என்பதற்கான ஆதாரமாகும்.
பி.ஜெ அவர்கள் ஆரம்ப காலத்தில் தான் வெளியிட்ட பல கருத்துக்களை அவை தவறானவை என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் திருத்தியிருக்கிறார்.
பி.ஜெ ஆரம்பத்தில் சொன்ன கருத்துக்களில் பின்னர் மாற்றிக் கொண்ட சில கருத்துக்கள்….
உதாரணத்திற்கு பி.ஜெ ஆரம்ப காலத்தில் பிரச்சாரம் செய்தவற்றில் தற்போது மாற்றிக் கொண்ட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.
ஏகத்துவக் கொள்கையை யாருக்கும் வளைந்து கொடுக்காமல் உடைத்துச் சொன்னார் அந்த அடிப்படைக் கொள்கையில் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறுகள் ஏற்பட்டு அதை சுட்டிக் காட்டும் போது அவ்வப்போது பகிரங்கமாகச் ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டிருக்கிறார்.
இவரை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.
இதற்கான காரணம்..
அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை.
பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை.
ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்.
இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் பெரும்பாலும் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்.
இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.
தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.
இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.
தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் தாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால் அதன் அடிப்படையில் சில சட்டங்களைக் கூறினார்கள். பின்னர் அவை பலவீனம் எனத் தெரிய வரும் போது முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தை தவறு என்று தெளிவுபடுத்தினார்கள்.
பெரும்பாலான மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் முன்னர் சரி என்று கூறி,  பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல் இருக்கின்றனர். எனவே அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில் அவற்றை பத்திரிக்கைகளிலும் சிடி க்களாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.
மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள் இளக்காரம் செய்வார்கள் என்றாலும் தம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
பெண்கள் கப்ர் ஸியாரத் செய்யலாமா?
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் பி.ஜெ மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)
இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும்.
மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
நான் ”அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்”என்றார்கள்.
 (பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (1774)
நபியவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1777)
அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதி (974)
மண்ணறைகளை ஸியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணை வைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம். என்பதே மறு ஆய்வின் தெளிவான முடிவாகும்.
நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ.
நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது “தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாபூத் 2010, ஹாகிம், பைஹகீ,தாரகுத்னீ
இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று கூறி பி.ஜெ தனது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்திருந்தார்.
இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹூஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.
ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.
மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் பி.ஜெ யும் இதனை வழிமொழிந்தார்.
இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார்.
பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று பி.ஜெயும் பிரச்சாரம் செய்தார்.
மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்தது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.
ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி,முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி,முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது தெரிய வந்தது.
மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா? என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.
இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், “இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிடுகின்றார்.
இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.
இப்னு ஹிப்பான் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.
வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.
எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.
இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376)நபிமொழிக்கேற்ப நோன்பு துறக்கும் போதும் “பிஸ்மில்லாஹ்’ கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும் என்று தனது மறு ஆய்வில் இதனைத் தெளிவு படுத்தினார்.
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்ப கால நிலைப்பாடாக இருந்தது. இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தார்.
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீது (ரலி), நூல்: ஹாகிம் (3392)
ஆனால் மேற்கண்ட செய்தி ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓத வேண்டும் என்று வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.
கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் வெள்ளிக்கிழமை கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும். என்று தனது மறு ஆய்வின் முடிவில் ஏற்கனவே தான் சொன்னதை மாற்றி அறிவித்தார் பி.ஜெ
நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் ஆரம்பம் முதல் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவு எட்டப்பட்டது.
இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார். (முஸ்லிம் 3910)
இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் (ஹதீஸ் எண் 3910) “இரண்டில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை’ என்று கூறப்படுகிறது.
இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் (இப்னு மாஜா 3638) என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.
இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.
அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.
எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும். என்ற முடிவுக்கு வந்தார்.
இப்படி தான் ஆரம்பத்தில் சொன்ன பல கருத்துக்கள் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டவுடன் இவரால் திருத்தப்பட்டுள்ளது.
TNTJ மற்றும் SLTJ பிரச்சாரகர்கள் பி.ஜெ யைப் பின்பற்றுகின்றார்களா?
நிலைமை இப்படியிருக்க பி.ஜெயுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் பிர உலமாக்கள் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் அனைவரும் பி.ஜெ சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்கிறார்கள். பி.ஜெ அவர்களை தக்லீத் செய்கிறார்கள் என்ற வாதம் அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் பி.ஜெ அவர்கள் தற்போது திருத்திக் கொண்டுள்ள பல விஷயங்கள் மற்ற உலமாக்களினால் சுட்டிக் காட்டப்பட்டதுதான் என்பதை ஏனோ இவர்கள் புரிய மறுக்கின்றார்கள்.
ஒருவரை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?
தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களோ பல விஷயங்களை தாம் ஆய்வு செய்து மற்ற உலமாக்களுடன் அதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்களே!
பி.ஜெயின் ஆய்வுக்கு மாற்றமாக கருத்துக் சொல்லி அதைப் பி.ஜெ அவர்களே ஏற்றுக் கொண்டு திருத்திய விஷயஙகள் பல இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பொய்யையும், அவதூரையும் மாத்திரம் தங்கள் பிரச்சாரமாக இவர்கள் செய்வதற்குக் காரணம் இந்த ஜமாத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரைக் கொடுக்க வேண்டும் என்ற அடிமட்ட சிந்தனை ஒன்று தானே தவிர வேறில்லை.
தவ்ஹீத் ஜமாஅத்தில் நிர்வாக விஷயங்களிலும் மார்க்க விஷயங்களிலும்ஒருவரைக் கண்மூடி பின்பற்றும் நிலை இல்லை. நிர்வாகம் சம்பந்தமாகஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் கூட சக நிர்வாகிகளிடம்கலந்தாலோசித்து அனைவரின் ஒப்புதலுடனே முடிவெடுக்கப்படுகின்றது.
தலைமை நிர்வாகத்தில் மட்டுமின்றி செயற்குழு, பொதுக்குழுஆகியவற்றிலும் ஜமாஅத் உறுப்பினர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக்கூடியஜமாஅத்தாகவே தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது. இந்த ஜமாஅத்தில் தனிமனிதவழிபாடு இருந்தால் இது போன்று கூட்டங்களை நடத்த வேண்டியஅவசியமில்லை.
தனிமனிதனை வழிபடக்கூடியவர்களிடம் கருத்து வேறுபாடே வராது.ஏனென்றால் அவர்கள் ஒரு மனிதனுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவன்சொல்வதற்கு மாற்றமாகப் பேசமாட்டார்கள்.
ஆனால் நம்முடைய ஜமாஅத்தில் மார்க்க விஷயங்களில் நமதுஅறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. அனைவரும் கூடிஆராயந்த பிறகு ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்படுகின்றது.
ஒருவர் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதை மற்றவர்கள்சுட்டிக்காட்டுகிறார்கள். தவறான கருத்தைக் கூறியவர் அதைத் திருத்திக் கொள்கிறார். தக்லீத் செய்யக் கூடியவர்களிடம் இது போன்ற பண்புகளைப்பார்க்க முடியாது.
நிர்வாக விஷயத்திலும், மார்க்க விஷயத்திலும் யாரையும் தக்லீத் செய்யாதஜமாத்தாக தவ்ஹீத் ஜமாத் மாத்திரமே இருப்பதை நியாயமாக சிந்திப்பவர்கள் உணர முடியும்.
இப்படிப்பட்ட ஜமாஅத்தைப் பார்த்து தக்லீத்  செய்யக் கூடியவர்கள் என்றுசிலர் கூறுகிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.
தவ்ஹீத் நிலைபாடுகளை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும்முறியடிக்க திராணி அற்றவர்களே இந்த விமர்சனத்தைக் கையில்எடுக்கின்றனர். இவ்வாறு கூறினால் மக்கள் இந்த ஜமாஅத்தைப்புறக்கணிப்பார்கள் என்பதற்காக நம்மிடம் இல்லாத இந்தக் குற்றத்தை நம்மீதுசுமத்தப் பார்க்கிறார்கள்.
ஆனால் நம்முடைய ஜமாஅத்தின் செயல்பாடுகளும், நிலைபாடுகளும்பொதுமக்களுக்கு வெளிப்படையானவை. இதைப் பார்க்கும் யாரும்இவர்களுடைய இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.
அண்ணன் சொன்னால் இவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்ற வாதம் தவறானது என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களை பார்ப்போம்.
பி.ஜெ யை தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு எதிராக பி.ஜெ அவர்களுக்கு முன்னிலையிலேயே ஜமாத்தின் மூத்த உறுப்பினர் எம்.ஐ சுலைமான் அவர்கள் ஆற்றியை உரையைக் கேளுங்கள்.
அண்ணன் சொன்னால் மார்க்கமா?
ஸக்காத் பற்றிய ஆய்வின் ஆரம்பம் எது?
தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் பி.ஜெ யைத் தான் பின்பற்றுகிறார்கள் என்று அவதூறு பரப்புபவர்கள் ஸக்காத் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் ஆய்வைத் தான் பெரிதாக எடுத்துப் பேசுவார்கள்.
ஆம் ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு முறை கொடுத்தால் போதுமா? என்று ஆய்வு செய்தால் ஒரு பொருளுக்கு ஒரு முறை தான் ஸக்காத் கொடுக்க வேண்டும். வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாக இருக்கிறது.
அதனால் கொடுத்த பொருளுக்கே வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்ற முடிவை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது. இந்த முடிவை ததஜ வெளியிட்ட நேரத்தில் பலரும் பலவிதமான விமர்சனங்களையும் முன்வைக்க ஆரம்பித்தார்கள்.
அதிலும் குறிப்பாக பி.ஜெ அவர்கள் இது தொடர்பான ஒரு விவாதத்தை மதுரையில் நடத்தினார்கள் அப்போது பி.ஜெ சொல்வதைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தவ்ஹீத் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்களைப் பற்றி சிலர் விமர்சித்தார்கள் இன்றும் விமர்சிக்கின்றார்கள்.
இவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் ஸக்காத் விஷயத்தில் இப்படியான ஒரு ஆய்வை முதலில் முன் வைத்தவர் பி.ஜெ அல்ல. எம்.ஐ சுலைமான் அவர்கள் தான் இந்தக் கருத்தை ஆரம்பத்தில் வைத்தார்கள். அப்போது எம்.ஐ சுலைமானின் கருத்துக்கு மாற்றமாக வருடா வருடம் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் சகோதர் பி.ஜெ அவர்கள். பின்னர் எம்.ஐ சுலைமான் சொல்வதுதான் சரியான ஆய்வு என்பதை விளங்கி அந்த நிலைபாட்டிற்கு வந்தார்.
இப்போது எம்.ஐ சுலைமானை பி.ஜெ தக்லீத் செய்கிறார் என்று இவர்கள் சொல்வார்களா? சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஸக்காத் ஆய்வு தொடர்பாக எம்.ஐ சுலைமான் அவர்களின் விளக்கத்தைப் பாருங்கள்.
பி.ஜெ க்கும் தவ்ஹீத் ஜமாத் உலமாக்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு வருவதில்லையா?
தவ்ஹீத் ஜமாத்தின் உலமாக்களுக்கும் பி.ஜெ அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடே வருவதில்லை. காரணம் அவர்கள் பி.ஜெ சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு குருட்டு விமர்சனத்தையும் சிலர் செய்கிறார்கள்.
அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம் என்னவெனில். பெரும்பாலும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் யாரும் மார்க்க பிரச்சினைகளில் ஆளுக்கு ஒரு கருத்தை பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். மார்க்க ரீதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டார் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து முடிவை வெளியிடுவார்கள். அதனால் வெளியில் பிரச்சாரம் செய்யும் போது அனைவரும் ஒரே கருத்தை சொல்வதினால் பி.ஜெ யைப் பின்பற்றுகிறார்கள் என்று வாதிட முனைவது. வடிகட்டிய முட்டால் தனமாகும்.
மேற்கண்ட விமர்சனம் ஒன்றும் புதிதாக கிளம்பியது அல்ல. தமுமுக வை விட்டு தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பிரிந்து வந்த நேரமே இந்த விமர்சனம் ஆரம்பித்து விட்டது.
பி.ஜெ அவர்களுக்கும் மற்ற பிரச்சாரகர்களுக்கும் மத்தியில் எவ்வித கருத்து வேறுபாடும் வராத அளவுக்கு அத்தனை பேரையும் பி.ஜெ மிரட்டி வைத்திருக்கிறார் என்றொரு குற்றச் சாட்டை அப்போதே தமுமுக வின் சார்பாக ஜவாஹிருல்லாஹ் வைக்கும் போது அதற்கு எம்.ஐ. சுலைமான் அவர்கள் பதில் கொடுத்தார்கள்.
அதில் தனக்கும் பி.ஜெ அவர்களுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பட்டியலிட்டு தெளிவுபடுத்தினார் எம்.ஐ. சுலைமான் அவர்கள்.
பி.ஜெ அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்களுக்கும் மத்தியில் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றது. அப்படியான நேரங்களில் எல்லாம் அனைவரும் ஒன்று கூடி ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதுதான் ஜமாத்தின் வளர்சிக்கு பெரும் துணையாக இருக்கும் ஒரு விஷயம்.
பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கமும், ததஜ உலமாக்களின் பங்களிப்பும்.
அதே போல் சகோ. பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்தை விமர்சிப்பவர்கள் பி.ஜெ அவர்கள் தன்னிச்சையாக அதனை மொழியாக்கம் செய்த்தைப் போலவும், அவருடைய மொழியாக்கத்தை அனைத்து உலமாக்களும் அப்படியே நம்பியதைப் போலவும் எழுதியும், பேசியும் வருகின்றார்கள். ஆனால் பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆன் மொழியாக்கத்தை வெளியிடுவதற்கு முன் ஜமாத்தின் மற்ற பிரச்சாரகர்கள் அதனை சரி பார்த்து திருத்தங்கள் செய்த்தன் பின்னர் தான் வெளியிட்டார் என்பதே உண்மையாகும்.
குர்ஆன் மொழியாக்கத்தின் முதல் பதிப்பிலேயே அதன் கடைசிப் பகுதியில் சரி பார்த்த உலமாக்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்த பின்பும் விமர்சிப்பவர்கள், காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சிக்கின்றார்களே தவிர சத்தியம் அவர்களிடம் இல்லை என்பது இதன் மூலம் இன்னும் நிரூபணமாகின்றது.
தக்லீத் பற்றி பி.ஜெ யின் கருத்துக்கள்.
உலகத்தில் யார் என்ன கருத்தை சொன்னாலும் அதனை குர்ஆன் மற்றம் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் உரசிப் பார்த்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்கின்றது.
அதே போல் பி.ஜெ அவர்கள் கூட பல இடங்களிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.  தக்லீத் தொடர்பாக பி.ஜெ யிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்க்கப்பட்ட கேள்விகளையும் அதற்குறிய பதில்களையும் ஒரு தொகுப்பாக இங்கு தருகின்றோம்.
ஆய்வு செய்யாமல் பின்பற்றலாமா?
ஆய்வு செய்துதான் பின்பற்ற வேண்டும். தவ்ஹீத் ஜமாத் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது தவறு என்று பி.ஜெ யே சொல்லும் காட்சி.
பி.ஜெ சொன்னால் தான் சரியா?
நான் சொல்லும் செய்திகளை அனைத்தையும் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் இருக்கிறது என்று நான் சொன்னால் அதையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னால் சரி என்று இருந்தால் நீங்கள் மத்ஹபுகளிலேயே இருந்திருக்களாம். அப்படி யாராவது நான் சொன்னால் சரி என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல மறுமையில் அவர்களுக்கு எதிராக நான் பேசுவேன்.
எந்த அறிஞரையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது.
எந்த அறிஞரின் கருத்தையும் கண்மூடிப் பின்பற்றக் கூடாது. அவர்கள் சொல்வது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருக்கின்றதா என்பதை பார்த்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும்.
பி.ஜெ பயானை மட்டும் கேட்பது சரியா?
பி.ஜெ அல்லாத மற்ற அறிஞர்களின் பயான்களையும் கேட்க வேண்டும் அப்படி கேட்பதில் குர்ஆன் மற்றும் ஸஹீஹான செய்திகளை சொல்பவர்களின் உண்மையை உணர்ந்து மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
பி.ஜெ க்குப் பின் தவ்ஹீத் ஜமாத் இருக்காதா?
பி.ஜெ இல்லாமலேயே 2 வருடங்களுக்கும் மேலாக ஜமாத்தின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றது. பி.ஜெ இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நாம் சொல்ல முடியும் என்பதை ததஜ பிரச்சாரகர்கள் நிரூபித்துக் காட்டினார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரியவரும் முக்கிய விஷயம்.
தக்லீதுக்கு யார் பொருப்பு?
நாம் ஒரு கருத்து சொன்னால் நமக்கு மாற்றமாக யாராவது சொல்லியிருந்தால் அதையும் சேர்த்து பார்த்து இரண்டில் எது சரி என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தக்லீத் செய்ததாக மாறிவிடும்.
பொது மக்களின் தெளிவும், குழப்ப நினைக்கும் உலமாக்களும்.
ஏகத்துவத்தின் அடிப்படையில் தெளிவான முறையில் முடிந்த வரை இஸ்லாத்தின் செயல்பாடுகளை எடுத்து நடக்கும் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கும் சில ஆலிம்கள் தான் தக்லீத் என்ற வாதத்தை கையில் எடுத்து அவதூறு பரப்புகிறார்கள். அதிலும் அவர்கள் சொல்லும் செய்திகளை பொது மேடையில் நிரூபிப்பதற்கு முடியாமல் அறைக்குள் இருந்து ஆட்டம் போடுவதையும். மேடையில் வந்து நிரூபிக்க அழைத்தால் ஓடி ஒழிவதையும் நாம் கண் முன் காணக் கிடைக்கிறது.
எது எப்படியோ ஏகத்துவத்தின் செய்திகளை வல்ல இறைவன் மிகத் தெளிவான முறையில் மக்கள் மத்தியில் எத்தி வைப்பதற்கு நமக்கு என்றும் துணையாக இருக்கிறான் என்ற எண்ணத்தில் நமது பயணத்தை தொடருவோம்.
from:  rasminmisc.com