-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஞாயிறு, ஜூலை 1

கொளுத்தும் கோடை வெயிலும்...! நரகமும்...!!


கண்ணியத்திற்குரிய இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்:

ஹுதமா? என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.(104:5,6)    வெயிலின் கோரமுகம் வெளிக்காட்ட துவங்கியுள்ள நிலையில்,வெப்பத்தின் தாக்கம் துவக்கமே அமீரகத்தில் 105 லிருந்து 110 டிகிரி வரை என்ற கணக்கில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கின்றது...
ஓர் இறை நம்பிக்கையாளர் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை நரக நெருப்பின் சூட்டோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.ஏனெனில் சூடு என்றதும் நபி (ஸல்) அவர்கள் நரக நெருப்புடன் முடிச்சு போடுகின்றார்கள்.

வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப்படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 534, முஸ்லிம் 72

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகில் கொளுத்துகின்ற வெயிலை நரகத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுகின்றார்கள்.

இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும்,குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 537 

இந்த ஹதீஸில் வாட்டி வதைக்கும் வெயிலை நரகம் விடும் மூச்சு என்று கூறுகின்றார்கள்.ஆக கொளுத்துகின்ற வெயில் என்பது கொழுந்து விட்டெரியும் நரகத்தின் அக்னி என்று நபி ஸல் அவர்கள் கூறுகின்றார்கள்.
இந்த ஹதீஸ்களை இங்கே குறிப்பிடக் காரணம், சூடு என்றதும் அதை நபி ஸல் அவர்கள் நரகத்தின் சூட்டுடன் தொடர்புபடுத்தி நரகத்தின் சிந்தனைப் பொறிகளை நம்மிடம் கிளப்பி விடுகின்றார்கள்.

பாருங்கள்! சூரியனிலிருந்து பூமி 149 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் அதன் கொடுமையைத் தாங்க முடியவில்லையே! அதன் வெப்பத்தில் சுருண்டு விடுகிறோமே! ஏன்?

சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ்.எங்கோ இருந்தாலும் அதன் வெப்பக் கதிர்கள் நம் கண்களைச் கூசச் செய்கின்றது.நம்முடைய கண்களால் கூட பார்க்க முடியாத சூரியன் என்ற மாபெரும் வெப்பம் அணு உலைக்குள் நாம் தூக்கிப் போடப்பட்டால் நம்மால் தாங்க முடியுமா?அதனுடைய மையப் பகுதியின் வெப்பம் ஒரு லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும்.

100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தண்ணீர் கொதித்து ஆவியாகி விடுகின்றது. 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கடின இரும்பு திரவ நிலைக்கு வந்து விடுகின்றது.பஞ்சு பஸ்பம் போன்ற மனித உடல் தாங்கும் வெப்பம் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் தான்.

அதற்கு மேல் கொதிக்கும் வெப்பத்தை மனித மேனி தாங்காது!ஒரு போதும் தாங்காது எனும் போது சூரியனின் வெப்பத்தை விட பன்மடங்கு வெப்பம் நிறைந்த பல கோடி அணு உலைகளுக்குச் சமமான நரக வெப்பத்தை நாம் எப்படித் தாங்க இயலும்? இதை இப்போதாவது நாம் சிந்தித்தோமா?!

அணுகுண்டு முட்டை பொறித்த அக்னிக் குஞ்சு:

இரண்டாம் உலகப் போரின் போது மனிதகுல விரோதி அழிவு சக்தி அமெரிக்காவின் விமானம் ஜப்பானின் ஹிரோஷிமாவின் வானில் வட்டமடித்து அணுகுண்டை போடுகின்றது.மூன்று மீட்டர் நீளம்,முக்கால் மீட்டர் விட்டம், நான்கு டன் எடை கொண்ட அந்த அணுகுண்டு முட்டை ஓர் அக்னிக் குஞ்சை பொறிக்கின்றது. யுரேனியம்,புளுட்டோனியம் உரசலில் நியுக்ளியஸ் இரண்டாக உடைந்து அது நியுட்ரான்களாக -அக்னி சிறகு விரித்து பூமியை நோக்கி பறந்து வருகின்றது.

அணுகுண்டு முட்டையிலிருந்து அக்னிக் குஞ்சு வெளியான போது அதன் முதல் வெப்பம் 10000 டிகிரி செல்சியஸ்.அந்த 'சா'ப்பறவை சாவகாசமாகத் தரையிறங்கிய போது அதன் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ்.

அவ்வளவுதான்,அந்த அக்னிக் குஞ்சு தின்று முடித்த உயிர்களின் எண்ணிக்கை ஒன்றே கால் லட்சம். சிதைத்தவர்கள் 30524 பேர். காயம்பட்டவர்கள் 79130 பேர், காணாமல் போனவர்கள் 3622 பேர்.

மனித நெருப்பின் அழிவு சக்தி இவ்வளவு பெரியது என்றால் அல்லாஹ்வின் சக்தி எப்படி இருக்கும்?! அதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கும் போது உள்ளத்தையே அது சுட்டெரித்து விடுகின்றது.அதைத் தான் இந்த வசனம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஹுதமா? என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூடப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.(104:5,6)

அணு குண்டுகளாகட்டும் இன்ன பிற அணு ஆயுதங்களாகட்டும் அவை அனைத்தும் நெருப்பினால் ஆனது தான் இவை நெருப்பு என்ற வட்டத்தைத் தாண்டி விடாது.இந்த நெருப்பை மறுமை நெருப்புடன் நபி ஸல் அவர்கள் ஒப்பீடு செய்து மறுமையில் நெருப்பின் பரிமாணத்தை,அல்லாஹ்வின் நெருப்பின் தன்மையை நமக்கு விளக்குகிறார்கள்.

'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்கள் புகாரி 3265, முஸ்லிம் 5077

இத்தகைய தன்மை கொண்ட நெருப்பின் வேதனையை நம்மால் தாங்க முடியுமா? 149 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும் சூரியனின் வெப்பம் தாக்கி சுருண்டு சாகிறோம். 50 டிகிரி செல்ஷியஸ் வரை தாக்கிய இந்த வெப்பத்தில் பலர் இறந்திருக்கிறார்கள். இந்த சூரியனைவிடவும் வெப்பம் நிறைந்த நரக நெருப்பு எப்படியிருக்கும்?

வெயிலில் கிடைக்கும் விடுதலை:

இந்த உலகத்தைப் பொறுத்தவரை கொளுத்திய கோடையின் கத்தரி வெயில் மாறி குளிர், மழைக்காலம் வரும்போது நாம் அனுபவித்த சூட்டிலிருந்து, வெயிலின் வெப்பத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்கிறோம்.

அதுபோல் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற பெரு நகரங்களை அழித்த அணுகுண்டின் மொத்த நெருப்பு அல்லது துப்பாக்கி, பீரங்கிகளிலிருந்து வரும் சிறு நெருப்பு மொத்த மனிதக் கூட்டத்தையோ, அல்லது தனி மனிதனையோ தாக்கினால், மனிதன் கொஞ்ச நேரத்தில் இறந்து போய் விடுகின்றான். இப்படி சாவு வந்து வேதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றது. மரணமே மனிதனைக் காப்பாற்றி விடுகின்றது. ஆனால் நரகத்தில் அது போன்ற நிலை அறவே கிடையாது.

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான். (அல்குர் ஆன் 20:74)

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான்(87:12,13)

மனிதன் அங்கு சாக வேண்டும் என்று துடியாய் துடிப்பான். சாவு தான் அங்கு அவனுக்குக் கிடைக்கின்ற விடுதலை! அது தான் அவனுக்குக் கிடைக்கின்ற நிரந்தர ஆறுதல், ஆனால் அது அவனுக்கு அறவே கிடையாது.

 நீர்க் குழியல் அல்ல நெருப்புக் குளியல்:

 உலகத்தில் நம்மை தாக்கும் நெருப்பு ஒரு முனையிலிருந்து தான் வரும் ஒரு திசையில் நெருப்பு வரும் போது மறு திசைக்கு ஓடி தப்பிக்க வழியுண்டு. ஆனால் மறுமையில் உள்ள அந்த நெருப்பு எல்லா முனைகளிலிருந்தும் தாக்கிக் கொண்டிருக்கும் மேலே, கீழே, வலம், இடம் என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருப்பு சூழ்ந்து முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்.

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! 'நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்' என்று (இறைவன்) கூறுவான். (அல்குர் ஆன் 29:55)

சுருக்கமாகச் சொல்லப்போனால் சுற்றி வளைத்து சுவர்களாக இருக்கும் நெருப்புச் சுவாலைகளில் நித்தம் நித்தம் மனிதன் நெருப்பு குளியல் நடத்தி கொண்டிருப்பான். மேலும் அந்த வேதனைக்கு முடிவு என்பதே இல்லை.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.( 3 : 91 )

நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மனைவி,மக்கள், பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுக்க நினைப்பான். இந்தப் பூமி முழுக்க தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. இப்போது அவனிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

நரகவாசிகளிலேயே மிக லேசான வேனதையளிக்கப்படுவோரிடம், பூமியிலிருக்கும் பொருட்கள் எல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணையாகத் தர முன் வருவாய் அல்லவா? என்று அல்லாஹ் கேட்பான்.  அதற்கு அவன் 'ஆம்'  என்று பதிலளிப்பான்   அப்போது அல்லாஹ், நீ ஆதமின் முதுகுத் தண்டில் இருந்த போது இதைவிட இலேசான -ஒன்றை எனக்கு இணை கற்பிக்காமல் இருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன் . ஆனால் எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை' என்று கூறுவான் அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் புகார் 3334


கண்ணியத்திற்குரிய இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்:

ஹுதமா? என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.(104:5,6)    வெயிலின் கோரமுகம் வெளிக்காட்ட துவங்கியுள்ள நிலையில்,வெப்பத்தின் தாக்கம் துவக்கமே அமீரகத்தில் 105 லிருந்து 110 டிகிரி வரை என்ற கணக்கில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கின்றது...
ஓர் இறை நம்பிக்கையாளர் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை நரக நெருப்பின் சூட்டோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.ஏனெனில் சூடு என்றதும் நபி (ஸல்) அவர்கள் நரக நெருப்புடன் முடிச்சு போடுகின்றார்கள்.

வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப்படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 534, முஸ்லிம் 72

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகில் கொளுத்துகின்ற வெயிலை நரகத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுகின்றார்கள்.

இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும்,குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 537 

இந்த ஹதீஸில் வாட்டி வதைக்கும் வெயிலை நரகம் விடும் மூச்சு என்று கூறுகின்றார்கள்.ஆக கொளுத்துகின்ற வெயில் என்பது கொழுந்து விட்டெரியும் நரகத்தின் அக்னி என்று நபி ஸல் அவர்கள் கூறுகின்றார்கள்.
இந்த ஹதீஸ்களை இங்கே குறிப்பிடக் காரணம், சூடு என்றதும் அதை நபி ஸல் அவர்கள் நரகத்தின் சூட்டுடன் தொடர்புபடுத்தி நரகத்தின் சிந்தனைப் பொறிகளை நம்மிடம் கிளப்பி விடுகின்றார்கள்.

பாருங்கள்! சூரியனிலிருந்து பூமி 149 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் அதன் கொடுமையைத் தாங்க முடியவில்லையே! அதன் வெப்பத்தில் சுருண்டு விடுகிறோமே! ஏன்?

சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ்.எங்கோ இருந்தாலும் அதன் வெப்பக் கதிர்கள் நம் கண்களைச் கூசச் செய்கின்றது.நம்முடைய கண்களால் கூட பார்க்க முடியாத சூரியன் என்ற மாபெரும் வெப்பம் அணு உலைக்குள் நாம் தூக்கிப் போடப்பட்டால் நம்மால் தாங்க முடியுமா?அதனுடைய மையப் பகுதியின் வெப்பம் ஒரு லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும்.

100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தண்ணீர் கொதித்து ஆவியாகி விடுகின்றது. 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கடின இரும்பு திரவ நிலைக்கு வந்து விடுகின்றது.பஞ்சு பஸ்பம் போன்ற மனித உடல் தாங்கும் வெப்பம் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் தான்.

அதற்கு மேல் கொதிக்கும் வெப்பத்தை மனித மேனி தாங்காது!ஒரு போதும் தாங்காது எனும் போது சூரியனின் வெப்பத்தை விட பன்மடங்கு வெப்பம் நிறைந்த பல கோடி அணு உலைகளுக்குச் சமமான நரக வெப்பத்தை நாம் எப்படித் தாங்க இயலும்? இதை இப்போதாவது நாம் சிந்தித்தோமா?!

அணுகுண்டு முட்டை பொறித்த அக்னிக் குஞ்சு:

இரண்டாம் உலகப் போரின் போது மனிதகுல விரோதி அழிவு சக்தி அமெரிக்காவின் விமானம் ஜப்பானின் ஹிரோஷிமாவின் வானில் வட்டமடித்து அணுகுண்டை போடுகின்றது.மூன்று மீட்டர் நீளம்,முக்கால் மீட்டர் விட்டம், நான்கு டன் எடை கொண்ட அந்த அணுகுண்டு முட்டை ஓர் அக்னிக் குஞ்சை பொறிக்கின்றது. யுரேனியம்,புளுட்டோனியம் உரசலில் நியுக்ளியஸ் இரண்டாக உடைந்து அது நியுட்ரான்களாக -அக்னி சிறகு விரித்து பூமியை நோக்கி பறந்து வருகின்றது.

அணுகுண்டு முட்டையிலிருந்து அக்னிக் குஞ்சு வெளியான போது அதன் முதல் வெப்பம் 10000 டிகிரி செல்சியஸ்.அந்த 'சா'ப்பறவை சாவகாசமாகத் தரையிறங்கிய போது அதன் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ்.

அவ்வளவுதான்,அந்த அக்னிக் குஞ்சு தின்று முடித்த உயிர்களின் எண்ணிக்கை ஒன்றே கால் லட்சம். சிதைத்தவர்கள் 30524 பேர். காயம்பட்டவர்கள் 79130 பேர், காணாமல் போனவர்கள் 3622 பேர்.

மனித நெருப்பின் அழிவு சக்தி இவ்வளவு பெரியது என்றால் அல்லாஹ்வின் சக்தி எப்படி இருக்கும்?! அதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கும் போது உள்ளத்தையே அது சுட்டெரித்து விடுகின்றது.அதைத் தான் இந்த வசனம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஹுதமா? என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூடப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.(104:5,6)

அணு குண்டுகளாகட்டும் இன்ன பிற அணு ஆயுதங்களாகட்டும் அவை அனைத்தும் நெருப்பினால் ஆனது தான் இவை நெருப்பு என்ற வட்டத்தைத் தாண்டி விடாது.இந்த நெருப்பை மறுமை நெருப்புடன் நபி ஸல் அவர்கள் ஒப்பீடு செய்து மறுமையில் நெருப்பின் பரிமாணத்தை,அல்லாஹ்வின் நெருப்பின் தன்மையை நமக்கு விளக்குகிறார்கள்.

'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்கள் புகாரி 3265, முஸ்லிம் 5077

இத்தகைய தன்மை கொண்ட நெருப்பின் வேதனையை நம்மால் தாங்க முடியுமா? 149 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும் சூரியனின் வெப்பம் தாக்கி சுருண்டு சாகிறோம். 50 டிகிரி செல்ஷியஸ் வரை தாக்கிய இந்த வெப்பத்தில் பலர் இறந்திருக்கிறார்கள். இந்த சூரியனைவிடவும் வெப்பம் நிறைந்த நரக நெருப்பு எப்படியிருக்கும்?

வெயிலில் கிடைக்கும் விடுதலை:

இந்த உலகத்தைப் பொறுத்தவரை கொளுத்திய கோடையின் கத்தரி வெயில் மாறி குளிர், மழைக்காலம் வரும்போது நாம் அனுபவித்த சூட்டிலிருந்து, வெயிலின் வெப்பத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்கிறோம்.

அதுபோல் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற பெரு நகரங்களை அழித்த அணுகுண்டின் மொத்த நெருப்பு அல்லது துப்பாக்கி, பீரங்கிகளிலிருந்து வரும் சிறு நெருப்பு மொத்த மனிதக் கூட்டத்தையோ, அல்லது தனி மனிதனையோ தாக்கினால், மனிதன் கொஞ்ச நேரத்தில் இறந்து போய் விடுகின்றான். இப்படி சாவு வந்து வேதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றது. மரணமே மனிதனைக் காப்பாற்றி விடுகின்றது. ஆனால் நரகத்தில் அது போன்ற நிலை அறவே கிடையாது.

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான். (அல்குர் ஆன் 20:74)

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான்(87:12,13)

மனிதன் அங்கு சாக வேண்டும் என்று துடியாய் துடிப்பான். சாவு தான் அங்கு அவனுக்குக் கிடைக்கின்ற விடுதலை! அது தான் அவனுக்குக் கிடைக்கின்ற நிரந்தர ஆறுதல், ஆனால் அது அவனுக்கு அறவே கிடையாது.

 நீர்க் குழியல் அல்ல நெருப்புக் குளியல்:

 உலகத்தில் நம்மை தாக்கும் நெருப்பு ஒரு முனையிலிருந்து தான் வரும் ஒரு திசையில் நெருப்பு வரும் போது மறு திசைக்கு ஓடி தப்பிக்க வழியுண்டு. ஆனால் மறுமையில் உள்ள அந்த நெருப்பு எல்லா முனைகளிலிருந்தும் தாக்கிக் கொண்டிருக்கும் மேலே, கீழே, வலம், இடம் என எல்லாப் பக்கங்களில் இருந்தும் நெருப்பு சூழ்ந்து முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்.

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! 'நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்' என்று (இறைவன்) கூறுவான். (அல்குர் ஆன் 29:55)

சுருக்கமாகச் சொல்லப்போனால் சுற்றி வளைத்து சுவர்களாக இருக்கும் நெருப்புச் சுவாலைகளில் நித்தம் நித்தம் மனிதன் நெருப்பு குளியல் நடத்தி கொண்டிருப்பான். மேலும் அந்த வேதனைக்கு முடிவு என்பதே இல்லை.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.( 3 : 91 )

நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மனைவி,மக்கள், பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுக்க நினைப்பான். இந்தப் பூமி முழுக்க தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. இப்போது அவனிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கிறான்.

நரகவாசிகளிலேயே மிக லேசான வேனதையளிக்கப்படுவோரிடம், பூமியிலிருக்கும் பொருட்கள் எல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணையாகத் தர முன் வருவாய் அல்லவா? என்று அல்லாஹ் கேட்பான்.  அதற்கு அவன் 'ஆம்'  என்று பதிலளிப்பான்   அப்போது அல்லாஹ், நீ ஆதமின் முதுகுத் தண்டில் இருந்த போது இதைவிட இலேசான -ஒன்றை எனக்கு இணை கற்பிக்காமல் இருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன் . ஆனால் எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை' என்று கூறுவான் அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் புகார் 3334