-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், ஜூலை 12

தினத்தந்தியின் தொடரும் விஷமத்தனம்!

தமிழகத்தில் சங்பரிவாரத்தின் ஏஜெண்டாக செயல்படும் தினத்தந்தி நாளிதழ் தொடர்ச்சியாக  முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி, தமிழகத்தையும் குஜராத் போல கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதை உணர்வு இதழில் ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காட்டியிருந்தோம்.
ஏற்கனவே தனது தலையங்கத்தில், “இதைக் கேட்பாரே இல்லையா?” என்று தலைப்பிட்டு பாகிஸ்தானில் இந்துக்கள் பாடாய்ப்படுத்தப்படுகின்றார்கள் என்றும், அங்குள்ள இந்துப் பெண்களையெல்லாம் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்து வருகின்றார்கள் என்றும், இதைக்கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல உள்ளது என்றும் விஷச்செய்தி பரப்பி, இதைக் கேட்பாரே இல்லையா? இங்குள்ள இந்து அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் என்ன செய்து கொண்டுள்ளார்கள். இதை எதிர்த்து அவர்கள் களம் காண வேண்டாமா? என்று இந்துக்களைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக விஷக்கருத்தை பரப்பியது தினத்தந்தி.
மதுரையில்  யாரோ  ஒருவர் லெட்சுமி வெடியை ஒரு சைக்கிளில் வெடிக்க வைக்க, வெடித்தது சிவகாசி வெடி என்பது கூடத்தெரியாமல், வெடி குண்டு வைத்துவிட்டார்கள் என்றும், பி.ஜே.பி. நடத்தும் மாநாட்டைக் சீர்குலைப்பதற்காகத்தான் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் விஷச்செய்தி பரப்பியது. பின்னர் இந்த வெடிகுண்டு சம்பவம் புஷ்வானம் போல புஷ் என்று போனது.
அடுத்ததாக லுங்கி அணியும் முஸ்லிம்களை தேசத்துரோகி போலவும், தமிழினத்துரோகி போலவும் சித்தரித்து தினத்தந்தி தலையங்கம் எழுதியது. பி.ஜே.பி.யின் மாநாட்டில் முஸ்லிம் பெண் நடனமாடினாள் என்று சிண்டு முடிந்து முஸ்லிம்களை இழிவுபடுத்தியது.
இப்படி தொடர்ச்சியாக விஷமச்செய்தி வெளியிட்டு, தமிழகத்தையும் குஜராத் போல ரத்தக்களறியாக்க வேண்டும் என்று முடிவெடுத்து நரபலி மோடியின் மறு உருவமாகத் திகழ்கின்றது தினத்தந்தி.
முஸ்லிம்கள் தரும் விளம்பரத்தில் பத்திரிக்கை நடத்திவிட்டு, முஸ்லிம்களிடத்திலேயே தங்களது விற்பனையைப் பெருக்கி வயிறு வளர்த்துக் கொண்டு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏஜெண்டாகத் திகழும் தினத்தந்திக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தினத்தந்திக்கு எதிராக இரண்டு மாத செயல் திட்டத்தை அறிவித்தது.
மோடியின் குரலை தமிழகத்தில் எதிரொலிக்கும்  தினத்தந்திக்கு தக்க பாடம் புகட்ட   முஸ்லிம்களும், நடுநிலையாளர்களும் தினத்தந்தி இதழை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். தினத்தந்தி இதழுக்கு முஸ்லிம்கள் வர்த்தக விளம்பரங்கள் தரக்கூடாது. தினத்தந்தியை வாங்கக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்வீரர்கள் வீடுவீடாக சென்று பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற செயல்திட்டத்தை நாம் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் தமிழகத்து மோடியான தினத்தந்தி மறுபடியும் முஸ்லிம்களை வம்புக்கிழுத்து தனது தலையங்கத்தை எழுதியுள்ளது.
“தயக்கமா? பயமா? எது தடுக்கிறது?” என்று தலைப்பிட்டு 09.07.12 திங்கள் அன்று எழுதியுள்ள தலையங்கத்தில், 18 வயது பூர்த்தியானால்தான் பெண்கள் திருமணம் முடிக்க வேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஆனால் அந்தச் சட்டத்தை மதிக்காமல் சின்னஞ்சிறு சிறுமிகளுக்கும் திருமணம் முடித்து வைக்கின்றார்கள். 18 வயதுக்கு குறைவான பெண்களுக்குத் திருமணம் முடிக்கக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அதை துச்சமாக மதிக்கும் சமுதாயம் இருக்கின்றது என்று கூறி தனது விஷக்கருத்தை கக்கியுள்ளது.
முஸ்லிம் பெண்கள் பருவ வயதை அடைந்தாலே தாங்கள் விரும்பியவர்களை மணம் முடிக்கலாம் என்று இந்திய அரசியல் சாசன சட்டம் வழிவகை செய்து அனுமதி வழங்கியிருக்கும்போது, அதை டெல்லி உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கும் போது சட்டப்படி முஸ்லிம்கள் செய்யும் ஒரு செயல் சட்டவிரோதமானது என்று கூறி முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தினத்தந்தியின் இந்த இழிசெயலுக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
பருவ வயதை அடைந்த பெண்களுக்கு திருமணம் முடிப்பது எப்படி குழந்தைத் திருமணமாகும் என்ற உண்மை கூட இந்த ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான தினத்தந்திக்குத் தெரியவில்லை.
இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனிச் சட்டம் உள்ளது என்ற உண்மை இந்த காவி வெறி பிடித்த தினத்தந்திக்குத் தெரியாமல் இருக்காது.
குறுவாள் கொண்டு செல்லும் சீக்கியர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை துச்சமாக மதிக்கின்றார்கள் என்று இந்த மதவெறிஇதழ் தலையங்கம் எழுதுமா?
காவிப்பித்தம் தலைக்கேறி, முஸ்லிம்களை கருவறுக்கத் துடிக்கும் இந்த சங்பரிவார ஏஜெண்டை தமிழகத்தில் இல்லாமல் ஆக்கினால்தான் தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக இருக்கும். இல்லாவிட்டால் தமிழகமும் குஜராத்தைப் போல சுடுகாடாக மாறிவிடும்.
எனவே முஸ்லிம்களும், இந்த நாட்டின் நலன் நாடும் நல விரும்பிகளும் தினத்தந்தியை முற்றிலுமாக புறக்கணித்து ஒழித்துக்கட்ட உறுதி எடுக்க வேண்டும்.
நமது ஜமாஅத்தின் கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், செயல் வீரர்களும் வீரியமாக களமிறங்கி தமிழகத்து மோடிக்கு தக்க பாடம் புகட்டுவோம்.
தினத்தந்திக்கு எதிரான வீரியமான செயல்பாடுகளை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கும் அவசியத்தை தினத்தந்தி ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் ஒரு முஸ்லிம் கூட தினத்தந்தியை வாசிக்காத நிலையை ஏற்படுத்த பம்பரமாய் சுழன்று பணியாற்றுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சங்பரிவாரத்தின் ஏஜெண்டாக செயல்படும் தினத்தந்தி நாளிதழ் தொடர்ச்சியாக  முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி, தமிழகத்தையும் குஜராத் போல கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதை உணர்வு இதழில் ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காட்டியிருந்தோம்.
ஏற்கனவே தனது தலையங்கத்தில், “இதைக் கேட்பாரே இல்லையா?” என்று தலைப்பிட்டு பாகிஸ்தானில் இந்துக்கள் பாடாய்ப்படுத்தப்படுகின்றார்கள் என்றும், அங்குள்ள இந்துப் பெண்களையெல்லாம் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்து வருகின்றார்கள் என்றும், இதைக்கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல உள்ளது என்றும் விஷச்செய்தி பரப்பி, இதைக் கேட்பாரே இல்லையா? இங்குள்ள இந்து அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் என்ன செய்து கொண்டுள்ளார்கள். இதை எதிர்த்து அவர்கள் களம் காண வேண்டாமா? என்று இந்துக்களைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக விஷக்கருத்தை பரப்பியது தினத்தந்தி.
மதுரையில்  யாரோ  ஒருவர் லெட்சுமி வெடியை ஒரு சைக்கிளில் வெடிக்க வைக்க, வெடித்தது சிவகாசி வெடி என்பது கூடத்தெரியாமல், வெடி குண்டு வைத்துவிட்டார்கள் என்றும், பி.ஜே.பி. நடத்தும் மாநாட்டைக் சீர்குலைப்பதற்காகத்தான் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் விஷச்செய்தி பரப்பியது. பின்னர் இந்த வெடிகுண்டு சம்பவம் புஷ்வானம் போல புஷ் என்று போனது.
அடுத்ததாக லுங்கி அணியும் முஸ்லிம்களை தேசத்துரோகி போலவும், தமிழினத்துரோகி போலவும் சித்தரித்து தினத்தந்தி தலையங்கம் எழுதியது. பி.ஜே.பி.யின் மாநாட்டில் முஸ்லிம் பெண் நடனமாடினாள் என்று சிண்டு முடிந்து முஸ்லிம்களை இழிவுபடுத்தியது.
இப்படி தொடர்ச்சியாக விஷமச்செய்தி வெளியிட்டு, தமிழகத்தையும் குஜராத் போல ரத்தக்களறியாக்க வேண்டும் என்று முடிவெடுத்து நரபலி மோடியின் மறு உருவமாகத் திகழ்கின்றது தினத்தந்தி.
முஸ்லிம்கள் தரும் விளம்பரத்தில் பத்திரிக்கை நடத்திவிட்டு, முஸ்லிம்களிடத்திலேயே தங்களது விற்பனையைப் பெருக்கி வயிறு வளர்த்துக் கொண்டு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏஜெண்டாகத் திகழும் தினத்தந்திக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தினத்தந்திக்கு எதிராக இரண்டு மாத செயல் திட்டத்தை அறிவித்தது.
மோடியின் குரலை தமிழகத்தில் எதிரொலிக்கும்  தினத்தந்திக்கு தக்க பாடம் புகட்ட   முஸ்லிம்களும், நடுநிலையாளர்களும் தினத்தந்தி இதழை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். தினத்தந்தி இதழுக்கு முஸ்லிம்கள் வர்த்தக விளம்பரங்கள் தரக்கூடாது. தினத்தந்தியை வாங்கக்கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்வீரர்கள் வீடுவீடாக சென்று பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற செயல்திட்டத்தை நாம் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் தமிழகத்து மோடியான தினத்தந்தி மறுபடியும் முஸ்லிம்களை வம்புக்கிழுத்து தனது தலையங்கத்தை எழுதியுள்ளது.
“தயக்கமா? பயமா? எது தடுக்கிறது?” என்று தலைப்பிட்டு 09.07.12 திங்கள் அன்று எழுதியுள்ள தலையங்கத்தில், 18 வயது பூர்த்தியானால்தான் பெண்கள் திருமணம் முடிக்க வேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஆனால் அந்தச் சட்டத்தை மதிக்காமல் சின்னஞ்சிறு சிறுமிகளுக்கும் திருமணம் முடித்து வைக்கின்றார்கள். 18 வயதுக்கு குறைவான பெண்களுக்குத் திருமணம் முடிக்கக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அதை துச்சமாக மதிக்கும் சமுதாயம் இருக்கின்றது என்று கூறி தனது விஷக்கருத்தை கக்கியுள்ளது.
முஸ்லிம் பெண்கள் பருவ வயதை அடைந்தாலே தாங்கள் விரும்பியவர்களை மணம் முடிக்கலாம் என்று இந்திய அரசியல் சாசன சட்டம் வழிவகை செய்து அனுமதி வழங்கியிருக்கும்போது, அதை டெல்லி உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கும் போது சட்டப்படி முஸ்லிம்கள் செய்யும் ஒரு செயல் சட்டவிரோதமானது என்று கூறி முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தினத்தந்தியின் இந்த இழிசெயலுக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
பருவ வயதை அடைந்த பெண்களுக்கு திருமணம் முடிப்பது எப்படி குழந்தைத் திருமணமாகும் என்ற உண்மை கூட இந்த ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான தினத்தந்திக்குத் தெரியவில்லை.
இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனிச் சட்டம் உள்ளது என்ற உண்மை இந்த காவி வெறி பிடித்த தினத்தந்திக்குத் தெரியாமல் இருக்காது.
குறுவாள் கொண்டு செல்லும் சீக்கியர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை துச்சமாக மதிக்கின்றார்கள் என்று இந்த மதவெறிஇதழ் தலையங்கம் எழுதுமா?
காவிப்பித்தம் தலைக்கேறி, முஸ்லிம்களை கருவறுக்கத் துடிக்கும் இந்த சங்பரிவார ஏஜெண்டை தமிழகத்தில் இல்லாமல் ஆக்கினால்தான் தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக இருக்கும். இல்லாவிட்டால் தமிழகமும் குஜராத்தைப் போல சுடுகாடாக மாறிவிடும்.
எனவே முஸ்லிம்களும், இந்த நாட்டின் நலன் நாடும் நல விரும்பிகளும் தினத்தந்தியை முற்றிலுமாக புறக்கணித்து ஒழித்துக்கட்ட உறுதி எடுக்க வேண்டும்.
நமது ஜமாஅத்தின் கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், செயல் வீரர்களும் வீரியமாக களமிறங்கி தமிழகத்து மோடிக்கு தக்க பாடம் புகட்டுவோம்.
தினத்தந்திக்கு எதிரான வீரியமான செயல்பாடுகளை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கும் அவசியத்தை தினத்தந்தி ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் ஒரு முஸ்லிம் கூட தினத்தந்தியை வாசிக்காத நிலையை ஏற்படுத்த பம்பரமாய் சுழன்று பணியாற்றுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் முடிவு செய்துள்ளது.