-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், செப்டம்பர் 4

வானத்தில் ஏறிச் செல்ல செல்ல இதயம் சுருங்குகின்றதா?


ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்.
(அல்குர்ஆன் 6: 125)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் ஒரு மனிதன் வானத்தை நோக்கி மேலே செல்லச் செல்ல அவனது இதயம் இறுக்கமாகி விடுவதாக அதாவது சுருங்கி விடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதயத்தின் தொழிற்பாடு
மனித இதயத்தின் தொழிற்பாடு நுரையீரலிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட ஒக்ஸிஐன் நிறைந்த குருதியை மனித உடலின் ஒவ்வொரு கலத்திற்கும் பாய்ச்சுதல். இதன் பங்களிப்பை சீராக நிறைவேற்றுவதற்காக மனிதனுடைய வாழ்நாள் முழுவதிலும் இதயம் துடித்துக்கொண்டே இருக்கும். இதயத்துடிப்பு நின்றுவிடின் மனிதன் இறப்புக்கு உள்ளாவான். எனவே, ஏனைய எலும்புத் தசைகளைப் போல் அல்லாமல் இதயத்தசை இதயம் துடிப்பதற்கு ஏற்றவாறு சுருங்கி விரியும் அமைப்பில் படைக்கப்பட்டிருக்கின்றது. இதயத்தின் தொழிற்பாடு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது.
விண்ணுலக பயணத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றம்
இன்று மனிதனால் மேற்கொள்ளப்பட்ட வானத்தை நோக்கிய அதிக உயரத்தைக் கொண்ட பயணம் விண்ணுலகப் பயணமே ஆகும். எனவேääமேலே சுட்டிக்காட்டப்பட்ட அல்குர்ஆன் வசனத்தின் அறிவியல் உண்மையை விண்ணுலக பயணத்தின் போது மனித இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பூமியிலுள்ள மனிதனைப் பொருத்த வரை மனித உடலின் இரத்த விநியோகம் எல்லா உறுப்புகளுக்கும் சமனான முறையில் விநியோகிக்கப்படத் தக்கவாறு திட்டமிடப்பட்டிருக்கின்றது. இருதயம் உடலின் மேற்பாகத்திலுள்ள உறுப்புகளுக்கு குருதியை பாய்ச்சுவதில் அதிக பங்களிப்பை வழங்முகின்றது. காரணம் புவியீர்ப்பு விசையின் காரணமாக குருதியானது மனித உடலின் கீழுள்ள பாகங்களை நோக்கியே ஓடுகின்றது.
விண்ணுலகைப் பொருத்தவரை மனித உடலிலுள்ள திரவங்களின் பாய்ச்சல் உடலின் மேற்பாகங்களை நோக்கியே ஓடுகின்றது. காரணம் வானத்தை நோக்கி மேலே செல்லச் செல்ல புவியீர்ப்பு விசை குறைவடைந்து கொண்டே செல்லும். இவ் வகையான நிலையில் மூளைக்கு அதிகளவான குருதி ஓட்டம் செலுத்தப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தவுடன் மயக்க நிலையை உணர்கின்றனர் அல்லது மயக்கமாகின்றனர்.
இதனையொட்டி NASA வின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனித உடல் இயக்கவியல் பேராசிரியர் சுiஉhயசன ர்ரபாளழn என்ற பிரதான ஆய்வாளரின் கீழ் ‘விண்வெளியிலிருந்து திரும்பும் போது ஏற்படும் இருதய மற்றும் பெரு முளை இரத்தக் குழாய்களின் கட்டுப்பாடு’என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள வோட்டலூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். இந்த ஆய்வுக்கு கனடிய விண்வெளி முகாமைச் சேர்ந்த விண்வெளி வீரர் Anderson என்பவர் முதன்முதலில் விண்வெளிப் பணத்தின்போது (Expedition 15) பங்கெடுத்தார். ஆராய்ச்சியாளர்களால் Anderson இன் இரத்த அழுத்தம்  இதயத் துடிப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றது மற்றும் இதயத்துடிப்பு எவ்வாறு கூடிக் குறைகின்றது என்பவை தினமும் கணிக்கப்பட்டன. இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்கள் Huntsville, யுடய எனும் இடத்திலுள்ள NASA வின் மார்ஷல் விண்வெளிப்பயண மையத்தில் வைத்து  Hughson மற்றும் அவரது குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது Anderson இன் இருதய அமைப்பின் எல்லா விதமான மாற்றங்களும் அவதானிக்கப்பட்டன. இதன் விளைவாக இதயம் புவியீர்ப்புக்கு எதிராக இயங்க சோம்பல் படுவதை அவதானித்தனர்.
இருதய அமைப்பு இரு முக்கிய தொழிற்பாடுகளைக் கொண்டது.
1)     ஓக்ஸிஐன் உள்ள குருதியை மூளைக்கும் இதயத்திற்கும் விநியோகித்தல்.
2)     ஓக்ஸிஐன் உள்ள குருதியை இயங்கிக் கொண்டிருக்கும் தசைகளுக்கு விநியோகித்தல்.
மூளைக்கும் இருதயத்திற்கும் போதுமான அளவு குருதி கிடைக்கையில் இரு விதமான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. கால்கள் வயிற்றுப் பகுதியிலிருந்து குருதி இருதயத்தை வந்தடைய வேண்டும். இருதயம் ஒரு முறை குருதியை வெளியே பாய்ச்சும்போது இரத்த நாடிகள் மூளைக்கு குருதியைப் பாய்ச்சுவதற்கு போதுமான அளவு அழுத்தத்தை உருவாக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆய்வின் முதல் நோக்கம் எவ்வாறு குருதி இருதயத்தை வந்தடைகின்றது என்பதும் மற்றும் அதிக குறைந்த புவியீர்ப்பு விசையில் அதிக நேரத்திற்கு எவ்வாறு இருதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் தமது தொழிற்பாட்டைக் காட்டுகின்றது என்பதை ஆராய்வதே. இன்னுமொரு பரிசோதனையில் சாதாரண விமானங்களில் செல்லும்போது உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் இரத்த ஓட்டம்  இரத்த அழுத்தம் ஆகியனவும் கணிக்கப்பட்டன.
இவ்வகையான ‘இருதய மற்றும் பெரு மூளை இரத்தக் குழாய்களின் கட்டுப்பாடு’ஆய்வு பூமியில் இருக்கும் மனிதனிடத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஆய்வுகளின் முடிவாக  Hughson ஆல் வெளியிடப்பட்ட தகவல் நீண்ட விண்வெளிப் பயணத்திலிருந்து புவிபீர்ப்பை நோக்கி திரும்பும்போது மூளையில் சேமிக்கப்பட்டுள்ள அதிகளவான குருதி இருதய அமைப்பு மற்றும் இரத்தக் குழாய்களின் மந்தமான செயற்பாடுகள் காரணமாகவுமே மயக்க நிலை ஏற்படுகின்றது என்பதாகும். முக்கியமாக இந்த ஆய்வு முடிவில் விண்ணுலகில் இருதயம் சோம்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த ஆய்வுப் பயணத்தின் கால அளவு ஏப்ரல் 2007 முதல் மார்ச் 2010 வரையான காலப்பகுதியாகும்.
மேலும் சாதாரணமாக விமானத்தில் பயணம் செய்யும் நாம் மேலிருந்து விமானம் தரை இறங்கும்போது நமக்கு தலை கொஞ்சம் சுற்றுவது போன்ற நிலையை உணர்கின்றோம்.
இந்த ஆய்விற்கும் அல்குர்ஆன் வசனத்திற்கும் உள்ள தொடர்பு
இந்த ஆய்வில் விண்வெளிப் பயணத்தின்போது புவியீர்ப்பு விசை மிகவும் குறைவாக இருப்பதால் இருதயத்திலுள்ள குருதி மூளையை நோக்கி இயல்பாகவே பயணிப்பதால் இருதயத்திற்கு குருதியைப் பாய்ச்சும் வேலை மிச்சமாவதால் இருதயம் செயற்பாட்டுத் திறன் குறைந்ததாக காணப்படுகின்றது என அறியப்பட்டுள்ளது. மேலே சுட்டிக் காட்டப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் ‘அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்’என்ற சொற் பதத்தின் மூலம் அல்லாஹ் இருதயத்தின் செயற்பாட்டின் தரத்தை விவரித்துள்ளான்.
தற்போது அண்மையில் அறியப்பட்ட இந்த அறிவியல் உண்மையை 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் விமானம் கூட இருந்ததில்லை.
எனவே இறைவேதமே தவிர வேறில்லை.

ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்.
(அல்குர்ஆன் 6: 125)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் ஒரு மனிதன் வானத்தை நோக்கி மேலே செல்லச் செல்ல அவனது இதயம் இறுக்கமாகி விடுவதாக அதாவது சுருங்கி விடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதயத்தின் தொழிற்பாடு
மனித இதயத்தின் தொழிற்பாடு நுரையீரலிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட ஒக்ஸிஐன் நிறைந்த குருதியை மனித உடலின் ஒவ்வொரு கலத்திற்கும் பாய்ச்சுதல். இதன் பங்களிப்பை சீராக நிறைவேற்றுவதற்காக மனிதனுடைய வாழ்நாள் முழுவதிலும் இதயம் துடித்துக்கொண்டே இருக்கும். இதயத்துடிப்பு நின்றுவிடின் மனிதன் இறப்புக்கு உள்ளாவான். எனவே, ஏனைய எலும்புத் தசைகளைப் போல் அல்லாமல் இதயத்தசை இதயம் துடிப்பதற்கு ஏற்றவாறு சுருங்கி விரியும் அமைப்பில் படைக்கப்பட்டிருக்கின்றது. இதயத்தின் தொழிற்பாடு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது.
விண்ணுலக பயணத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றம்
இன்று மனிதனால் மேற்கொள்ளப்பட்ட வானத்தை நோக்கிய அதிக உயரத்தைக் கொண்ட பயணம் விண்ணுலகப் பயணமே ஆகும். எனவேääமேலே சுட்டிக்காட்டப்பட்ட அல்குர்ஆன் வசனத்தின் அறிவியல் உண்மையை விண்ணுலக பயணத்தின் போது மனித இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பூமியிலுள்ள மனிதனைப் பொருத்த வரை மனித உடலின் இரத்த விநியோகம் எல்லா உறுப்புகளுக்கும் சமனான முறையில் விநியோகிக்கப்படத் தக்கவாறு திட்டமிடப்பட்டிருக்கின்றது. இருதயம் உடலின் மேற்பாகத்திலுள்ள உறுப்புகளுக்கு குருதியை பாய்ச்சுவதில் அதிக பங்களிப்பை வழங்முகின்றது. காரணம் புவியீர்ப்பு விசையின் காரணமாக குருதியானது மனித உடலின் கீழுள்ள பாகங்களை நோக்கியே ஓடுகின்றது.
விண்ணுலகைப் பொருத்தவரை மனித உடலிலுள்ள திரவங்களின் பாய்ச்சல் உடலின் மேற்பாகங்களை நோக்கியே ஓடுகின்றது. காரணம் வானத்தை நோக்கி மேலே செல்லச் செல்ல புவியீர்ப்பு விசை குறைவடைந்து கொண்டே செல்லும். இவ் வகையான நிலையில் மூளைக்கு அதிகளவான குருதி ஓட்டம் செலுத்தப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தவுடன் மயக்க நிலையை உணர்கின்றனர் அல்லது மயக்கமாகின்றனர்.
இதனையொட்டி NASA வின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனித உடல் இயக்கவியல் பேராசிரியர் சுiஉhயசன ர்ரபாளழn என்ற பிரதான ஆய்வாளரின் கீழ் ‘விண்வெளியிலிருந்து திரும்பும் போது ஏற்படும் இருதய மற்றும் பெரு முளை இரத்தக் குழாய்களின் கட்டுப்பாடு’என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள வோட்டலூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். இந்த ஆய்வுக்கு கனடிய விண்வெளி முகாமைச் சேர்ந்த விண்வெளி வீரர் Anderson என்பவர் முதன்முதலில் விண்வெளிப் பணத்தின்போது (Expedition 15) பங்கெடுத்தார். ஆராய்ச்சியாளர்களால் Anderson இன் இரத்த அழுத்தம்  இதயத் துடிப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றது மற்றும் இதயத்துடிப்பு எவ்வாறு கூடிக் குறைகின்றது என்பவை தினமும் கணிக்கப்பட்டன. இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்கள் Huntsville, யுடய எனும் இடத்திலுள்ள NASA வின் மார்ஷல் விண்வெளிப்பயண மையத்தில் வைத்து  Hughson மற்றும் அவரது குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது Anderson இன் இருதய அமைப்பின் எல்லா விதமான மாற்றங்களும் அவதானிக்கப்பட்டன. இதன் விளைவாக இதயம் புவியீர்ப்புக்கு எதிராக இயங்க சோம்பல் படுவதை அவதானித்தனர்.
இருதய அமைப்பு இரு முக்கிய தொழிற்பாடுகளைக் கொண்டது.
1)     ஓக்ஸிஐன் உள்ள குருதியை மூளைக்கும் இதயத்திற்கும் விநியோகித்தல்.
2)     ஓக்ஸிஐன் உள்ள குருதியை இயங்கிக் கொண்டிருக்கும் தசைகளுக்கு விநியோகித்தல்.
மூளைக்கும் இருதயத்திற்கும் போதுமான அளவு குருதி கிடைக்கையில் இரு விதமான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. கால்கள் வயிற்றுப் பகுதியிலிருந்து குருதி இருதயத்தை வந்தடைய வேண்டும். இருதயம் ஒரு முறை குருதியை வெளியே பாய்ச்சும்போது இரத்த நாடிகள் மூளைக்கு குருதியைப் பாய்ச்சுவதற்கு போதுமான அளவு அழுத்தத்தை உருவாக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆய்வின் முதல் நோக்கம் எவ்வாறு குருதி இருதயத்தை வந்தடைகின்றது என்பதும் மற்றும் அதிக குறைந்த புவியீர்ப்பு விசையில் அதிக நேரத்திற்கு எவ்வாறு இருதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் தமது தொழிற்பாட்டைக் காட்டுகின்றது என்பதை ஆராய்வதே. இன்னுமொரு பரிசோதனையில் சாதாரண விமானங்களில் செல்லும்போது உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் இரத்த ஓட்டம்  இரத்த அழுத்தம் ஆகியனவும் கணிக்கப்பட்டன.
இவ்வகையான ‘இருதய மற்றும் பெரு மூளை இரத்தக் குழாய்களின் கட்டுப்பாடு’ஆய்வு பூமியில் இருக்கும் மனிதனிடத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஆய்வுகளின் முடிவாக  Hughson ஆல் வெளியிடப்பட்ட தகவல் நீண்ட விண்வெளிப் பயணத்திலிருந்து புவிபீர்ப்பை நோக்கி திரும்பும்போது மூளையில் சேமிக்கப்பட்டுள்ள அதிகளவான குருதி இருதய அமைப்பு மற்றும் இரத்தக் குழாய்களின் மந்தமான செயற்பாடுகள் காரணமாகவுமே மயக்க நிலை ஏற்படுகின்றது என்பதாகும். முக்கியமாக இந்த ஆய்வு முடிவில் விண்ணுலகில் இருதயம் சோம்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த ஆய்வுப் பயணத்தின் கால அளவு ஏப்ரல் 2007 முதல் மார்ச் 2010 வரையான காலப்பகுதியாகும்.
மேலும் சாதாரணமாக விமானத்தில் பயணம் செய்யும் நாம் மேலிருந்து விமானம் தரை இறங்கும்போது நமக்கு தலை கொஞ்சம் சுற்றுவது போன்ற நிலையை உணர்கின்றோம்.
இந்த ஆய்விற்கும் அல்குர்ஆன் வசனத்திற்கும் உள்ள தொடர்பு
இந்த ஆய்வில் விண்வெளிப் பயணத்தின்போது புவியீர்ப்பு விசை மிகவும் குறைவாக இருப்பதால் இருதயத்திலுள்ள குருதி மூளையை நோக்கி இயல்பாகவே பயணிப்பதால் இருதயத்திற்கு குருதியைப் பாய்ச்சும் வேலை மிச்சமாவதால் இருதயம் செயற்பாட்டுத் திறன் குறைந்ததாக காணப்படுகின்றது என அறியப்பட்டுள்ளது. மேலே சுட்டிக் காட்டப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் ‘அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்’என்ற சொற் பதத்தின் மூலம் அல்லாஹ் இருதயத்தின் செயற்பாட்டின் தரத்தை விவரித்துள்ளான்.
தற்போது அண்மையில் அறியப்பட்ட இந்த அறிவியல் உண்மையை 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் விமானம் கூட இருந்ததில்லை.
எனவே இறைவேதமே தவிர வேறில்லை.