-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சனி, டிசம்பர் 24

முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! ஏன்? ஏதற்கு!!

கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (அல்குர்ஆன் 3:1-20)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி)
இடஒதுக்கீடு! பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படையான வாழ்வாதார உரிமை தான் இடஒதுக்கீடு. நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டிய நன்நோக்கில் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்டதுதான் இடஒதுக்கீடு. செல்வாக்கு மிக்க தங்கள் தலைவர்களால் சில சமுதாயத்தினரும் கடுமையான போராட்டங்களால் சில சமுதாயத்தினரும் இந்த உரிமையை பெற்று நிலைநாட்டி வருகின்றனர்.

உரிமைகளையும் கடமைகளையும் மார்க்கரீதியாக பெற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயமோ- தங்களின் இடஒதுக்கீடு உரிமையை பெறுவதில் அலட்சிய போக்குடன் இருந்து வருகின்றனர். ஆரம்ப காலங்களிலிருந்தே உரிமைகள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை கண்டு கொள்ளாமல் இருந்து, பிறகு ஓரங்கட்டி பிறகு தீவிரவாதி முத்திரை குத்தி வருகின்றனர்.

அடிமை இந்தியாவில் போராட்ட வீரர்களாகவும், சுதந்திர இந்தியாவில் அடிமைகளை போலவும் நடத்தப்படும் இந்த இஸ்லாமிய சமுதாயம் தன் நிலையை உணர்ந்து தனக்கு உண்டான வலிமையை கேட்டுப் பெற்று தானும் மண்ணின் மைந்தன் என்ற உரிமையை நிலைநாட்ட கிடைக்கவிருக்கும் களமே இந்த பிப்ரவரி 14 ல் நடைபெறவிருக்கும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.

நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மாபெரும் வல்லரசு நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது உங்களுக்குத் தெரியும்.இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர் கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பையும்,அரசியல் அதிகாரத்தை மற்றவர்களுக்குச்  சமமாகப் பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்திய நாட்டை உருவாக்கியதிலும் அதை வளப்படுத்தியதிலும் வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களை விட நாம் அதிக உழைப்பு செய்தோம்.

வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனுடைய மொழியைப் படிக்கக் கூடாது என்றோம். படிப்பைப் பாதியில் நிறுத்தினோம். வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.

வழிபாட்டுத் தலங்களைக் கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் மேடையாக பள்ளிவாசல்களை நாம் பயன்படுத்தினோம். வெள்ளையன் கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறிய போது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.

உடலாலும் பொருளாலும் உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம். நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலைவாய்ப்பு களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே அது பற்றிச் சிந்தித்தீர்களா?

கூலித் தொழலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப் பட்டறையில் கடின வேலை செய்பவராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடை நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவர்களாகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?

ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா?

88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும் தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே! இந்த நிலை இனியும் தொடரலாமா?

பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?

முஸ்லிம்களின் கல்வி அரசியல் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களை கவலையில் ஆழ்த்தவில்லையா?

முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம். அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 35பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.

ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.

எட்டாம் வகுப்புக்கு மேல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் 
வகுப்பு படித்தவர்கள்.பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரண்டு வரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் மூன்று பேர் தான் பட்டப்படிப்பு படித்தவர்கள்.

 இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த அவல நிலை என்றால், பொருளாதார நிலையிலாவது நமது நிலை உயர்ந்து இருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா? பொருளாதாரத்தில் கடைசி நிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டியிடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை.அது மட்டுமின்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

மற்ற சமுதாய மக்களில் நூற்றுக்கு இருபது பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் போது நமது சமுதாயத்தில் நூற்றுக்கு 31 பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?

வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்,இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணங்கள் (டிவி. ரேடியோ மின் விசிறி குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள் நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்.இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கான ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா? இல்லையா?

இதன் பின்னரும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை இயற்றாமல் காங்கிரஸ் இழுத்தடிக்கப் பார்க்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கபடும் என பிரதமர் கூறியுள்ளார்.

பாஜக இதை எப்படி ஒப்புக் கொள்ளும்? ஒருமித்த கருத்து எப்படி ஏற்படும்? ஒருமித்த கருத்து உருவான பின்னர் தான் இட ஒதுக்கீடு என்றால் மிஸ்ரா கமிஷன் அமைத்தது எதற்காக? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை தான் பிரதமர் வேறு வார்த்தையில் சொல்லி இருக்கிறார். முஸ்லிம் சமுதயாத்தை ஏமாளிகளின் சமுதாயம் என்று பிரதமர் தப்புக் கணக்குப் போட்டுள்ளதையே இது காட்டுகிறது.

ஆனால் இத்தகைய பிரதமரையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அழைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவி சோனியாவுடன் சேர்ந்து பேச வைத்தது நம் சமுதாய மக்கள் சென்னை தீவுத்திடலில் திணற வைத்ததால் தான். 

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களும்,நம்முடைய கட்டுக்கடங்காத போராட்டங் களால் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

குடந்தையை குலுங்கச் செய்த பேரணி மாநாடு தான் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு ராஜசேகர ரெட்டியினால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்த கண்டித்த ஜெயலலிதாவை கமிஷன் அமைக்க வைத்தது. 

ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடலாம் என்று எண்ணிய கலைஞரைக்கூட நம்முடைய தொடர் போராட்டங்களும், ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டமும் தான் மாநிலத்தில் 3.5; சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன் காரணமாக இட ஒதுக்கீட்டின் பலனை ஓரளவு பெற்றுள்ளோம். இருப்பினும் நம் முஸ்லிம் மக்கள் தொகைக்கேற்ப இந்த 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு போதாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

இதன் காரணத்தினால் தான் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவிகிதமும் மத்தியில் 15 சதவிகிதமும் கேட்டு பெற வேண்டி இன்ஷாஅல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக இடஒதுக்கீடு கோரி முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற உள்ளது. 

திரும்பவும் எழுச்சியை காட்டும் நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது. 
தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க உன்னைக் காட்டி விலைபேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய்!

இப்போது உனக்காக மானத்தோடும் மரியாதையோடும் நீ வாழ்வதற்காக உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட!

நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்ல மாட்டோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய!

64 ஆண்டுகள் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட! 

இட ஒதுக்கீடை அடைய எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட!

குடும்பத்துடன் புறப்பட்டு வா!
அலை அலையாய் திரண்டு வா!
புயலென புறப்பட்டு வா!
இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்!

மாவட்ட தலைநகரங்களை குலுங்க வைக்க!  இன்ஷாஅல்லாஹ் இன்னும்
சில் நாட்களே...

வெளியீடு எண்: 303                                              தேதி:16.12.2011
அன்புடன் வெளியிடுவோர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
துபை மண்டலம்.
கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (அல்குர்ஆன் 3:1-20)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி)
இடஒதுக்கீடு! பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படையான வாழ்வாதார உரிமை தான் இடஒதுக்கீடு. நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டிய நன்நோக்கில் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்டதுதான் இடஒதுக்கீடு. செல்வாக்கு மிக்க தங்கள் தலைவர்களால் சில சமுதாயத்தினரும் கடுமையான போராட்டங்களால் சில சமுதாயத்தினரும் இந்த உரிமையை பெற்று நிலைநாட்டி வருகின்றனர்.

உரிமைகளையும் கடமைகளையும் மார்க்கரீதியாக பெற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயமோ- தங்களின் இடஒதுக்கீடு உரிமையை பெறுவதில் அலட்சிய போக்குடன் இருந்து வருகின்றனர். ஆரம்ப காலங்களிலிருந்தே உரிமைகள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை கண்டு கொள்ளாமல் இருந்து, பிறகு ஓரங்கட்டி பிறகு தீவிரவாதி முத்திரை குத்தி வருகின்றனர்.

அடிமை இந்தியாவில் போராட்ட வீரர்களாகவும், சுதந்திர இந்தியாவில் அடிமைகளை போலவும் நடத்தப்படும் இந்த இஸ்லாமிய சமுதாயம் தன் நிலையை உணர்ந்து தனக்கு உண்டான வலிமையை கேட்டுப் பெற்று தானும் மண்ணின் மைந்தன் என்ற உரிமையை நிலைநாட்ட கிடைக்கவிருக்கும் களமே இந்த பிப்ரவரி 14 ல் நடைபெறவிருக்கும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.

நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மாபெரும் வல்லரசு நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது உங்களுக்குத் தெரியும்.இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர் கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பையும்,அரசியல் அதிகாரத்தை மற்றவர்களுக்குச்  சமமாகப் பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்திய நாட்டை உருவாக்கியதிலும் அதை வளப்படுத்தியதிலும் வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களை விட நாம் அதிக உழைப்பு செய்தோம்.

வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனுடைய மொழியைப் படிக்கக் கூடாது என்றோம். படிப்பைப் பாதியில் நிறுத்தினோம். வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.

வழிபாட்டுத் தலங்களைக் கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் மேடையாக பள்ளிவாசல்களை நாம் பயன்படுத்தினோம். வெள்ளையன் கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறிய போது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.

உடலாலும் பொருளாலும் உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம். நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலைவாய்ப்பு களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே அது பற்றிச் சிந்தித்தீர்களா?

கூலித் தொழலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப் பட்டறையில் கடின வேலை செய்பவராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடை நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவர்களாகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?

ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா?

88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும் தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே! இந்த நிலை இனியும் தொடரலாமா?

பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?

முஸ்லிம்களின் கல்வி அரசியல் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களை கவலையில் ஆழ்த்தவில்லையா?

முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம். அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 35பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.

ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.

எட்டாம் வகுப்புக்கு மேல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் 
வகுப்பு படித்தவர்கள்.பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரண்டு வரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் மூன்று பேர் தான் பட்டப்படிப்பு படித்தவர்கள்.

 இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த அவல நிலை என்றால், பொருளாதார நிலையிலாவது நமது நிலை உயர்ந்து இருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா? பொருளாதாரத்தில் கடைசி நிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டியிடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை.அது மட்டுமின்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

மற்ற சமுதாய மக்களில் நூற்றுக்கு இருபது பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் போது நமது சமுதாயத்தில் நூற்றுக்கு 31 பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?

வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்,இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணங்கள் (டிவி. ரேடியோ மின் விசிறி குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள் நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்.இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கான ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா? இல்லையா?

இதன் பின்னரும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை இயற்றாமல் காங்கிரஸ் இழுத்தடிக்கப் பார்க்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கபடும் என பிரதமர் கூறியுள்ளார்.

பாஜக இதை எப்படி ஒப்புக் கொள்ளும்? ஒருமித்த கருத்து எப்படி ஏற்படும்? ஒருமித்த கருத்து உருவான பின்னர் தான் இட ஒதுக்கீடு என்றால் மிஸ்ரா கமிஷன் அமைத்தது எதற்காக? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை தான் பிரதமர் வேறு வார்த்தையில் சொல்லி இருக்கிறார். முஸ்லிம் சமுதயாத்தை ஏமாளிகளின் சமுதாயம் என்று பிரதமர் தப்புக் கணக்குப் போட்டுள்ளதையே இது காட்டுகிறது.

ஆனால் இத்தகைய பிரதமரையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அழைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவி சோனியாவுடன் சேர்ந்து பேச வைத்தது நம் சமுதாய மக்கள் சென்னை தீவுத்திடலில் திணற வைத்ததால் தான். 

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களும்,நம்முடைய கட்டுக்கடங்காத போராட்டங் களால் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

குடந்தையை குலுங்கச் செய்த பேரணி மாநாடு தான் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு ராஜசேகர ரெட்டியினால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்த கண்டித்த ஜெயலலிதாவை கமிஷன் அமைக்க வைத்தது. 

ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடலாம் என்று எண்ணிய கலைஞரைக்கூட நம்முடைய தொடர் போராட்டங்களும், ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டமும் தான் மாநிலத்தில் 3.5; சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன் காரணமாக இட ஒதுக்கீட்டின் பலனை ஓரளவு பெற்றுள்ளோம். இருப்பினும் நம் முஸ்லிம் மக்கள் தொகைக்கேற்ப இந்த 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு போதாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

இதன் காரணத்தினால் தான் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவிகிதமும் மத்தியில் 15 சதவிகிதமும் கேட்டு பெற வேண்டி இன்ஷாஅல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக இடஒதுக்கீடு கோரி முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற உள்ளது. 

திரும்பவும் எழுச்சியை காட்டும் நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது. 
தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க உன்னைக் காட்டி விலைபேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய்!

இப்போது உனக்காக மானத்தோடும் மரியாதையோடும் நீ வாழ்வதற்காக உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட!

நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்ல மாட்டோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய!

64 ஆண்டுகள் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட! 

இட ஒதுக்கீடை அடைய எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட!

குடும்பத்துடன் புறப்பட்டு வா!
அலை அலையாய் திரண்டு வா!
புயலென புறப்பட்டு வா!
இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்!

மாவட்ட தலைநகரங்களை குலுங்க வைக்க!  இன்ஷாஅல்லாஹ் இன்னும்
சில் நாட்களே...

வெளியீடு எண்: 303                                              தேதி:16.12.2011
அன்புடன் வெளியிடுவோர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
துபை மண்டலம்.