-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், ஜனவரி 5

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். இஸ்லாத்தில் முளையவியல்.




மனிதனைப் படைத்த இறைவன் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சட்ட திட்டத்தை தன் தூதராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கும்போது மனிதனை தான் எவ்வாறு படைத்தான் என்ற உண்மையை முதன் முதலில் தெரியப்படுத்துகின்றான். அலக் என்ற அரபுப் பதத்தின் அர்த்தம் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது. அதாவது கருவுற்ற சினை முட்டை என்பது ஆணிணது விந்தும்பெண்ணினது சினை முட்டையும் கருக்கட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட நிலையாகும். 
மனிதனது உருவாக்கத்திற்கு ஆணின் விந்தும்பெண்ணின் சினை முட்டையும் தான் காரணம் என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவனது அல்குர்ஆனில் மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் விவரிக்கின்றான்.

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். (அல்குர்ஆன்23: 12)

அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.(அல்குர்ஆன் 32: 7)

இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும்சில விஞ்ஞானிகளும் கூட மனிதன் குரங்கிலிருந்து தான் பரிணாமமடைந்துள்ளான் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கையின் அடிப்படையில் குருட்டு நம்பிக்கையில் உள்ளனர். சார்ள்ஸ் டார்வினின் கொள்கையானது அவரது ஊகமே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. விஞ்ஞானத்தைப் பொருத்தமட்டில் ஒரு விஷயம் கண்காணிக்கப்படுவதன் (Observation) மூலமே நிரூபனமாகும். டார்வினின் கொள்கை உண்மையாக இருந்தால் ஏன் தற்போதும் குரங்குகள் பரிணாமம் அடைவதில்லை? இந்த சிறு உண்மையைக் கூட இக் கொள்கையில் குருட்டு நம்பிக்கையுடையவர்கள் ஏன் சிந்திக்கத் தலைப்படுவதில்லை?

தற்போது மனித உடலிலுள்ள மூலக்கூறுகளைப் பரிசோதனைப்படுத்தியபோது மண்ணிலுள்ள மூலக்கூறுகளும் மனித உடலிலுள்ள மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று ஒத்தவையாக இருப்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. மனித உடல் இழையங்களில் 95% மண்ணிலுள்ளது போல், காபன்ஹைட்ரிஜன்க்ஸிஜன்நைட்ரிஜன்,பாஸ்பரஸ்சல்ர்  உட்பட மேலும் மொத்தம் வித்தியாசமான 26மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.

1809 - 1882 காலப்பகுதியல் வாழ்ந்த விஞ்ஞானியான சார்ள்ஸ் டார்வினுக்குத் தெரியாத உண்மை எப்படி 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்று தெரிந்திருக்க முடியும்நிச்சயமாக இது அல்லாஹ்வின் கூற்றே தவிர வேறில்லை.

பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 23: 13)

23:12,13 குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் மனிதனை மண்ணால் படைத்ததாகக் கூறியது மட்டுமல்லாது அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம் என்றும் கூறுகின்றான். அதாவது மனிதனின் அடிப்படை உருவாக்கம் விந்திலிருந்தே ஆரம்பம் என அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.

மனித உடலிலுள்ள அத்தனை உயிர் கலங்களிலும் DNA,  புரதங்களினால் ஆன 23 சோடி நிறமூர்த்தங்கள் காணப்படுகின்றன. இவை ஆண்களில் XYநிறமூர்த்தங்களாகவும்பெண்களில் XX நிறமூர்த்தங்களாகவும் காணப்படுகின்றன. Edmund Beecher Wilson, Nettie Stevens ஆகிய விஞ்ஞானிகளே1905ம் ஆண்டில் இவ்வுண்மையை விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர்   கருக்கட்டலின் போது சினை முட்டையை சந்திக்கின்ற  விந்திலுள்ள 23 சோடி XY நிறமூர்த்தங்களிலுள்ள நிறமூர்த்தம் ஆதிக்கம் செலுத்தினால் கிடைக்கக்கூடிய குழந்தை பெண்ணாகவும்Y நிறமூர்த்தம் ஆதிக்கம் செலுத்தினால் கிடைக்கக்கூடிய குழந்தை ஆணாகவும் அமையும். எனவே ஆணிண் விந்திலுள்ள நிறமூர்த்தங்களே பிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா என்பதை நிர்ணயிக்கின்றது. இவ்வுண்மை 1990ம் ஆண்டில் testis-determining factor (TDF)  என்ற ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன் 86: 5,6,7)
                                                                                                                                          
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும்பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.(அல்குர்ஆன் 76: 2)

                                                                                                                                                              
விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.(அல்குர்ஆன் 80:19)

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். (அல்குர்ஆன் 49:13)
                                                                                                                                                         இவ்வுண்மையை திருக் குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பேகளிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.‘ என்ற வசனத்தின் மூலம் விந்துத் துளியே மனிதனின் துவக்க நிலையாக உள்ளது என்ற அறிவியல் உண்மையை அல்லாஹ் தெளிவாக்குகின்றான். மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனங்களான  (86: 5,6,7),  (76: 2), (80:19) ஆகிய வசனங்களும் இதையே உணர்த்துகின்றன. எனவேஅல்குர்ஆன் இறைவேதம் என்பது இதன் மூலமும் ஆணித்தரமாக முடிவாகின்றது.

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும்பின்னர் விந்துத் துளியாலும்பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும்பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும், முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள்.(அல்குர;ஆன் 22:5)

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23: 14)


மேலுள்ள இரு குர்ஆன் வசனங்களினதும் ஒவ்வொரு வாக்கியங்களுக்குமான விஞ்ஞான விளக்கங்கள் பின்வருமாறு:

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.


மில்லியன் விந்துக்களில் ஒரு விந்தே சினை முட்டையுடன் கருக்கட்டலில் ஈடுபடும்.
 

பலோபியன் குழாயில் கருவுற்ற சினை முட்டையானது பலோபியன் குழாய் வழியாக கருவறையில் நுகமாக பதிக்கப்படும்.



பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம்.


பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம்.




எந்த ஒரு கருவிலும் வளரும் உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும்,மனிதனின் கருவும் இந்த கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்களின் பின் ஒவ்வொரு உறுப்புக்களும் அமைய வேண்டிய இடத்தில் அமைந்து வடிவம் பெறும்.

மேலே காட்டப்பட்ட படம் மூன்று மாதங்களுக்கு முன் கருவறையிலுள்ள மனித உயிரின் நிலை.

11 வாரங்களையுடைய யானையினது முளையத்தின் படத்தைப் பார்ப்போம்.

இனி 30 நாட்களைக் கொண்ட நாயின் முளையத்தைப் பார்ப்போம்.




இதிலிருந்து பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம்  என்று அல்குர்ஆன் மாபெரும் அறிவியல் உண்மையை விளக்குகின்றது.
மூன்று இருள்கள்.

உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. (அல்குர்ஆன் 39:6) 

உலக பிரபல்யம் வாய்ந்த விஞ்ஞானி பேராசிரியர் Emeritus Keith L. Mooreஇவ்வசனம் பற்றி விளக்கும் போது மூன்று இருள்களாவன பின்வருவன என விளக்கினார்.

தாயின் வயிற்றறைச் சுவர்.

தாயின் கருவறையின் சுவர்.

சிசுவைச் சூழ இருக்கும் மென்சவ்வுப் படலத்தின் amnion  பாய்மம்.
இவர் முளையவியல் (Embryology), ரீர அமைப்பு (Anatomy) போன்ற துறைகளில் அதி பாண்டித்தியம் பெற்றவர்எட்டு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட The Developing Human என்ற புத்தகத்தையும் எழுதி உலகிலேயே மிகவும் பிரபல்யம் வாய்ந்த விஞ்ஞானியாகவும் திகழ்கிறார். 1981ல் சவுதி அரேபியாவில் தமாம் என்ற இடத்தில நடந்த 7வது வைத்திய மகாநாட்டில் இவர் பேசுகையில் முளையவியல் பற்றிய குர்ஆனிலுள்ள வசனங்கள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின. மேலும் எனக்கு இவை இறைவனின் மூலம் தான் முஹம்மதிற்கு வந்திருக்க வேண்டும் எனவும் தெளிவாகின. காரணம் முஹம்மதிற்குப் பின் பலநூற்றாண்டுகள் வரை இவ்விடயம் அறியப்படாமலேயே இருந்தது” என பகிரங்கமாக தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பேராசிரியர் Moore அவர்களிடம் அப்படியானால் குர்ஆன் இறைவேதம் என்று ஒப்புக் கொள்கின்றீர்களா என்று கேட்கப்பட்டபோது அவர் ஆம் குர்ஆன் இறைவேதம் என ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை எனக் கூறினார். 

விஞ்ஞானி பேராசிரியர் Emeritus Keith L. Moore அவர்கள் இது தொடர்பாக விளக்கம் தரும் காட்சிகள்.



1677ம் ஆண்டிலேயே முதன் முதலில் Hamm and Leeuwenhoek  என்ற விஞ்ஞானி மனிதனுடைய விந்துக் கலங்களை மிகவும் தொழினுட்ப முன்னேற்றம் வாய்ந்த நுணுக்குக் காட்டியின் மூலம் ஆராய்ந்தார்இது இவ்வாறிருக்க 1400 வருடங்களுக்கு முன்னர் எந்தவித தொழினுட்ப அறிவோநுணுக்குக்காட்டிகளோ இல்லாத காலத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு இம் முளையியல் பற்றிய அறிவியல் உண்மையைக் கூறியிருக்க முடியும்? என்று சிந்தித்தால் இவை படைத்த இறைவனின் வார்த்தைகள் அல்லாமல் வேறில்லை. என்பது மீண்டும் உறுதிப்படுத்தப் படுகின்றது.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.



மனிதனைப் படைத்த இறைவன் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சட்ட திட்டத்தை தன் தூதராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கும்போது மனிதனை தான் எவ்வாறு படைத்தான் என்ற உண்மையை முதன் முதலில் தெரியப்படுத்துகின்றான். அலக் என்ற அரபுப் பதத்தின் அர்த்தம் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது. அதாவது கருவுற்ற சினை முட்டை என்பது ஆணிணது விந்தும்பெண்ணினது சினை முட்டையும் கருக்கட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட நிலையாகும். 
மனிதனது உருவாக்கத்திற்கு ஆணின் விந்தும்பெண்ணின் சினை முட்டையும் தான் காரணம் என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவனது அல்குர்ஆனில் மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் விவரிக்கின்றான்.

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். (அல்குர்ஆன்23: 12)

அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.(அல்குர்ஆன் 32: 7)

இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும்சில விஞ்ஞானிகளும் கூட மனிதன் குரங்கிலிருந்து தான் பரிணாமமடைந்துள்ளான் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கையின் அடிப்படையில் குருட்டு நம்பிக்கையில் உள்ளனர். சார்ள்ஸ் டார்வினின் கொள்கையானது அவரது ஊகமே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. விஞ்ஞானத்தைப் பொருத்தமட்டில் ஒரு விஷயம் கண்காணிக்கப்படுவதன் (Observation) மூலமே நிரூபனமாகும். டார்வினின் கொள்கை உண்மையாக இருந்தால் ஏன் தற்போதும் குரங்குகள் பரிணாமம் அடைவதில்லை? இந்த சிறு உண்மையைக் கூட இக் கொள்கையில் குருட்டு நம்பிக்கையுடையவர்கள் ஏன் சிந்திக்கத் தலைப்படுவதில்லை?

தற்போது மனித உடலிலுள்ள மூலக்கூறுகளைப் பரிசோதனைப்படுத்தியபோது மண்ணிலுள்ள மூலக்கூறுகளும் மனித உடலிலுள்ள மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று ஒத்தவையாக இருப்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. மனித உடல் இழையங்களில் 95% மண்ணிலுள்ளது போல், காபன்ஹைட்ரிஜன்க்ஸிஜன்நைட்ரிஜன்,பாஸ்பரஸ்சல்ர்  உட்பட மேலும் மொத்தம் வித்தியாசமான 26மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.

1809 - 1882 காலப்பகுதியல் வாழ்ந்த விஞ்ஞானியான சார்ள்ஸ் டார்வினுக்குத் தெரியாத உண்மை எப்படி 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்று தெரிந்திருக்க முடியும்நிச்சயமாக இது அல்லாஹ்வின் கூற்றே தவிர வேறில்லை.

பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 23: 13)

23:12,13 குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் மனிதனை மண்ணால் படைத்ததாகக் கூறியது மட்டுமல்லாது அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம் என்றும் கூறுகின்றான். அதாவது மனிதனின் அடிப்படை உருவாக்கம் விந்திலிருந்தே ஆரம்பம் என அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.

மனித உடலிலுள்ள அத்தனை உயிர் கலங்களிலும் DNA,  புரதங்களினால் ஆன 23 சோடி நிறமூர்த்தங்கள் காணப்படுகின்றன. இவை ஆண்களில் XYநிறமூர்த்தங்களாகவும்பெண்களில் XX நிறமூர்த்தங்களாகவும் காணப்படுகின்றன. Edmund Beecher Wilson, Nettie Stevens ஆகிய விஞ்ஞானிகளே1905ம் ஆண்டில் இவ்வுண்மையை விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர்   கருக்கட்டலின் போது சினை முட்டையை சந்திக்கின்ற  விந்திலுள்ள 23 சோடி XY நிறமூர்த்தங்களிலுள்ள நிறமூர்த்தம் ஆதிக்கம் செலுத்தினால் கிடைக்கக்கூடிய குழந்தை பெண்ணாகவும்Y நிறமூர்த்தம் ஆதிக்கம் செலுத்தினால் கிடைக்கக்கூடிய குழந்தை ஆணாகவும் அமையும். எனவே ஆணிண் விந்திலுள்ள நிறமூர்த்தங்களே பிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா என்பதை நிர்ணயிக்கின்றது. இவ்வுண்மை 1990ம் ஆண்டில் testis-determining factor (TDF)  என்ற ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன் 86: 5,6,7)
                                                                                                                                          
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும்பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.(அல்குர்ஆன் 76: 2)

                                                                                                                                                              
விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.(அல்குர்ஆன் 80:19)

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். (அல்குர்ஆன் 49:13)
                                                                                                                                                         இவ்வுண்மையை திருக் குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பேகளிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.‘ என்ற வசனத்தின் மூலம் விந்துத் துளியே மனிதனின் துவக்க நிலையாக உள்ளது என்ற அறிவியல் உண்மையை அல்லாஹ் தெளிவாக்குகின்றான். மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனங்களான  (86: 5,6,7),  (76: 2), (80:19) ஆகிய வசனங்களும் இதையே உணர்த்துகின்றன. எனவேஅல்குர்ஆன் இறைவேதம் என்பது இதன் மூலமும் ஆணித்தரமாக முடிவாகின்றது.

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும்பின்னர் விந்துத் துளியாலும்பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும்பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும், முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள்.(அல்குர;ஆன் 22:5)

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23: 14)


மேலுள்ள இரு குர்ஆன் வசனங்களினதும் ஒவ்வொரு வாக்கியங்களுக்குமான விஞ்ஞான விளக்கங்கள் பின்வருமாறு:

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.


மில்லியன் விந்துக்களில் ஒரு விந்தே சினை முட்டையுடன் கருக்கட்டலில் ஈடுபடும்.
 

பலோபியன் குழாயில் கருவுற்ற சினை முட்டையானது பலோபியன் குழாய் வழியாக கருவறையில் நுகமாக பதிக்கப்படும்.



பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம்.


பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம்.




எந்த ஒரு கருவிலும் வளரும் உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும்,மனிதனின் கருவும் இந்த கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்களின் பின் ஒவ்வொரு உறுப்புக்களும் அமைய வேண்டிய இடத்தில் அமைந்து வடிவம் பெறும்.

மேலே காட்டப்பட்ட படம் மூன்று மாதங்களுக்கு முன் கருவறையிலுள்ள மனித உயிரின் நிலை.

11 வாரங்களையுடைய யானையினது முளையத்தின் படத்தைப் பார்ப்போம்.

இனி 30 நாட்களைக் கொண்ட நாயின் முளையத்தைப் பார்ப்போம்.




இதிலிருந்து பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம்  என்று அல்குர்ஆன் மாபெரும் அறிவியல் உண்மையை விளக்குகின்றது.
மூன்று இருள்கள்.

உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. (அல்குர்ஆன் 39:6) 

உலக பிரபல்யம் வாய்ந்த விஞ்ஞானி பேராசிரியர் Emeritus Keith L. Mooreஇவ்வசனம் பற்றி விளக்கும் போது மூன்று இருள்களாவன பின்வருவன என விளக்கினார்.

தாயின் வயிற்றறைச் சுவர்.

தாயின் கருவறையின் சுவர்.

சிசுவைச் சூழ இருக்கும் மென்சவ்வுப் படலத்தின் amnion  பாய்மம்.
இவர் முளையவியல் (Embryology), ரீர அமைப்பு (Anatomy) போன்ற துறைகளில் அதி பாண்டித்தியம் பெற்றவர்எட்டு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட The Developing Human என்ற புத்தகத்தையும் எழுதி உலகிலேயே மிகவும் பிரபல்யம் வாய்ந்த விஞ்ஞானியாகவும் திகழ்கிறார். 1981ல் சவுதி அரேபியாவில் தமாம் என்ற இடத்தில நடந்த 7வது வைத்திய மகாநாட்டில் இவர் பேசுகையில் முளையவியல் பற்றிய குர்ஆனிலுள்ள வசனங்கள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின. மேலும் எனக்கு இவை இறைவனின் மூலம் தான் முஹம்மதிற்கு வந்திருக்க வேண்டும் எனவும் தெளிவாகின. காரணம் முஹம்மதிற்குப் பின் பலநூற்றாண்டுகள் வரை இவ்விடயம் அறியப்படாமலேயே இருந்தது” என பகிரங்கமாக தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பேராசிரியர் Moore அவர்களிடம் அப்படியானால் குர்ஆன் இறைவேதம் என்று ஒப்புக் கொள்கின்றீர்களா என்று கேட்கப்பட்டபோது அவர் ஆம் குர்ஆன் இறைவேதம் என ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை எனக் கூறினார். 

விஞ்ஞானி பேராசிரியர் Emeritus Keith L. Moore அவர்கள் இது தொடர்பாக விளக்கம் தரும் காட்சிகள்.



1677ம் ஆண்டிலேயே முதன் முதலில் Hamm and Leeuwenhoek  என்ற விஞ்ஞானி மனிதனுடைய விந்துக் கலங்களை மிகவும் தொழினுட்ப முன்னேற்றம் வாய்ந்த நுணுக்குக் காட்டியின் மூலம் ஆராய்ந்தார்இது இவ்வாறிருக்க 1400 வருடங்களுக்கு முன்னர் எந்தவித தொழினுட்ப அறிவோநுணுக்குக்காட்டிகளோ இல்லாத காலத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு இம் முளையியல் பற்றிய அறிவியல் உண்மையைக் கூறியிருக்க முடியும்? என்று சிந்தித்தால் இவை படைத்த இறைவனின் வார்த்தைகள் அல்லாமல் வேறில்லை. என்பது மீண்டும் உறுதிப்படுத்தப் படுகின்றது.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.