-->
வாசுதேவநல்லூர் தவ்ஹீத் ஜமாத்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், ஜூன் 30

மிஃராஜ் இரவு எப்போது?


at வியாழன், ஜூன் 30, 2011
Posted by Mohideen
Labels: வீடியோ

சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றவர்!


விமானநிலையத்தின் சுற்றுச் சுவர்மீது ஏறிக் குதித்து, புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏற முயன்ற வாலிபவரை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை இலங்கை செல்லும் ஏர்லங்கா, மிகின்லங்கா விமானங்களும், திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர்-ஏசியா விமானமும் புறப்பட்டு செல்வதற்குத் தயாராக நின்று கொண்டு இருந்தன. இந்த விமானங்களில் செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு வாலிபர் அரக்கப் பரக்க ஓடி வந்து ஏர்-ஏசியா விமானத்தில் ஏற முயன்றார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த வாலிபரை விமான நிலைய ஓடுதள பாதையிலிருந்து தூக்கி அப்புறப்படுத்தினர்.

பிடிபட்ட அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரையாம்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்று தெரிய வந்தது.

சிறுவயது முதலே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் அளவு வசதியில்லாததால் விமான நிலைய சுற்று சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் கியூ பிரிவு மற்றும் தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
from: inneram.com
at வியாழன், ஜூன் 30, 2011
Posted by Mohideen

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை !



 வருடம் ஒரு  முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லது காதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதி தூதராகவும் இருதி காலத்தில் இமாம் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்கு பின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்ரிஸ்டர் அருகே உள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குரு கிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ரா வருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்று கொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
at வியாழன், ஜூன் 30, 2011
Posted by Mohideen

மிஃராஜும் அனாச்சாரங்களும் நோட்டீஸ்






at வியாழன், ஜூன் 30, 2011
Posted by Mohideen

இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (ரலி).
(1997 மார்ச் மாத அல்ஜன்னத் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான சகோதரர் எம்.ஐ. சுலைமான் அவர்களினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம். Rasmin M.I.Sc)

ஹிராக் குகையில் திருமறை வசனங்களை ஓதிக்காட்டிய ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்துப் பயந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிவிட்டு,

தனக்கு ஏதும் நிகழ்ந்து விடுமோ என தான் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள் உங்களை அல்லாஹ் ஒரு போதும் இழிவுபடுத்த மாட்டான் ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள், (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள், வரியவர்களுக்கு உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்றார்கள்.

பின்னர் நபியவர்களை வரகாவிடம் அழைத்துச் சென்றார்கள் வரகா அறியாமைக் காலத்திலேயே கிருத்தவ மதத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும், இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவிற்கு எழுதுகிறவராகவும், கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் மகனே! உம் சகோதரர் மகன் கூறுவதைக் கேளுங்கள்! என்றார்கள். அப்போது வரகா நபியவர்களிடம் என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்? எனக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள்.

அதைக் கேட்டதும் வரகா நபி (ஸல்) அவர்களிடம், வந்த இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தினர்கள் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

அப்போது நபியவர்கள் மக்கள் என்னை வெளியேற்றவரா போகிறார்கள்? என்று கேட்டார்கள் அதற்கவர் ஆம் நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும், (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப் படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்கு பலமான உதவி செய்வேன். என்று கூறினார். அதன் பின் வரகா நீண்ட நாள் வாழாமல் மரணித்து விட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (சிறிது காலம்) நின்று விட்டது.

(புகாரி 3,6982 முஸ்லிம்)

தாம் இறைத் தூதர் என்று வரகா அவர்கள் உறுதிப் படுத்தியதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு இறை செய்தி (சிறிது காலம்) தடைப்பட்டது என்று மேற்கூறிய செய்தி குறிப்பிடுகிறது.

எத்தனை நாட்கள் வஹீ வராமல் இருந்தது என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். மூன்று வருடங்கள் என்று சிலரும், ஆறு மாதங்கள் என்று சிலரும்,சில நாட்கள் என்று இன்னும் சிலரும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் இந்தக் காலக் கணக்கிற்கு எந்தச் சான்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லை.

வரகா பின் நவ்ஃபல் இஸ்லாத்தை ஏற்றாரா? 

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் என்பதை உறுதிப் படுத்திய வராக அவர்கள் முஸ்லிமா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர் தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளை காண்போம்.

1. கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வரகா இப்னு நவ்ஃபல் அவர்களைப் பற்றிக் கேட்ட பொது "அவர் வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டவராக கண்டேன். அவர் நரகவாதியாக இருந்திருந்தால் அவர் மீது வெள்ளை ஆடை இருந்திருக்காது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத்

2. வரகாவை பற்றி கதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள். "உங்களை அவர் உண்மைப் படுத்தினார் ஆனால் (இம்மார்கத்தை நீங்கள்) வெளிப்படுத்துவதற்கு முன் இறந்து விட்டாரே!" அதற்கு "கணவில் எனக்கு அவர் காட்டப்பட்டார். அவர் மீது வெள்ளை நிற ஆடை இருந்தது. அவர் நரகவாதியாக இருந்தால் அவர் மீது வேறு ஆடை இருந்திருக்கும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதி

3. வரகா பின் நவ்ஃபல் அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது "அவர் மீது வெள்ளை நிற ஆடை இருக்கக் கண்டேன். அவரை சுவர்க்கத்தில் கண்டேன். அவர் மீது பட்டாடை இருந்தது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : அபு யஃலா

4. வரகா அவர்கள் இறந்த போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (வரகாவிற்கு) ஜன்னத்தில் (சுவர்கத்தில்) ஒரு கோட்டையைக் கண்டேன். அவர் மீது பட்டாடை இருந்தது. (ஏனெனில்) அவர் நான் கொண்டு வந்ததை நம்பினார். உண்மைப்படுத்தினார்.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஸர்ஹபீல் 
நூற்கள் பைஹகீ ஆபு நுஐம் (தலாயிலுன் நுப்வா)

5. "வரகாவை ஏசாதீர்கள் அவருக்காக ஒன்றோ, இரண்டோ சுவர்கத்தைப் பார்த்தேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
நூற்கள் : பஸ்ஸார் இப்னு அஸாகீர்

மேற்கண்ட ஹதீஸ்களில் முதல் நான்கு செய்திகள் பலவீனமானவையாகும். ஐந்தாவது ஹதீஸ் இடம் பெரும் நூற்களில் இப்னு அஸாகீர் நூலின் அறிவிப்பாளர் வரிசை பலமானதாகும் என்று இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (அல்பிதாயா)

இப்னு அஸாகீரில் இடம் பெரும் ஹதீஸின் அடிப்படையில் வரகா அவர்களை முஸ்லீம், சுவர்க்கவாதி என்று முடிவு செய்யலாம். மேலும் புகாரியின் (3, 6982) அறிவிப்பில்,

"உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!" என்று அங்களாய்த்துக் கொண்டார்.

"(நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்க பலமான உதவி செய்வேன்." என்று கூறினார்.

இந்த வாசகங்கள் வரகா அவர்கள் நபி (ஸல்) அவரக்ள் கொண்டு வந்த இறைச் செய்தியின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஈமான் என்பது இறைச் செய்தியையும், இறைத் தூதரையும் மனதால் நம்புவதுதான். இதை வரகா அவர்கள் ஏற்றுள்ளதினால் அவரை முஸ்லீம் என்று சொல்வதே சரியானதாகும்.

இதன் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் என்ற பெருமையை வரகா (ரலி) அவர்கள் பெருகிறார்கள்.

தப்ரீ, இப்னு கானிஃ, இப்னு ஸகன் போன்ற அறிஞர்கள் வரகா அவர்களை நபித் தோழர்கள் என்றே கூறுகிறார்கள். (அல் இஸாபா)
at வியாழன், ஜூன் 30, 2011
Posted by Mohideen
Labels: ஆய்வுகள்

புதன், ஜூன் 29

மதுரையில் நவீன பாஸ்போர்ட் மையம்

மதுரையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாஸ்போர்ட் சேவை மையம் ஜூன் 30 முதல் செயல்பட இருக்கிறது.



















at புதன், ஜூன் 29, 2011
Posted by Mohideen

மனைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே !

RASMIN M.I.Sc
நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சினைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது.

அந்தப் பிரச்சினைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல்,அல்லது தெரியாமல் நாம் கஷ்டப் படும் போது தீர்வுகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள் சிக்கள்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள்.

பெண்களிடம் ஆலோசனைகளை கேட்க்கக் கூடாது, கேட்பது அபசகுனம்,அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும் போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது.

இது போன்றவர்கள் நபியவர்களின் வாழ்வில் இருந்து நிறையவே படிப்பினை பெற வேண்டியுள்ளது. ஏன் என்றால் நபியவர்களே தங்கள் மணைவியரிடத்தில் தனக்குத் தேவையான ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.

அப்படியிருக்க நாம் ஏன் பெண்களிடம் நமக்கு தேவையான சிறந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது?

நபியவர்கள் உம்ராச் செய்வதற்காக தங்கள் சகாபாக்களை அழைத்துக் கொண்டு வந்த நேரம் எதிரிகள் அதற்கு நபியவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

அந்நேரம் நபியவர்கள் எதிரிகளுடன் ஹுதைபிய்யா என்ற ஒப்பந்தத்தை போடுகிறார்கள். அப்போது நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.
இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவைர நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 2732

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இப்படிப்பட்ட பாராட்டத்தக்க ஒரு யோசனை சொன்னவர் ஒரு பெண்தான் ஆணல்ல.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

நபியவர்களிடம் விருந்தாளியாக ஒருவர் வந்த நேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தனர். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?'' அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)'' என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.

"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து,விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.

பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்'' அல்லது "வியப்படைந்தான்'' என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், "தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்'' எனும் (59:9)வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3798

ஜாடிக்கு ஏற்ற மூடி என்று சொல்வதைப் போல் நபியின் மனைவியரும்,நபித் தோழர்களின் மனைவியரும் குடும்ப வாழ்வில் சிறப்பான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டதையும், தேவையான சந்தர்ப்பங்களில் கணவனுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதையும், கணவன் சொல் பேச்சைக் கேட்டு நடந்ததையும் மேற்கண்ட செய்திகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  
at புதன், ஜூன் 29, 2011
Posted by Mohideen
Labels: பெண்கள்

செவ்வாய், ஜூன் 28

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.
உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

DSC03031
DSC03033
DSC03035
DSC03036


DSC03050
DSC03051
DSC03052
DSC03056


DSC03057
DSC03059
DSC03060
DSC03067


DSC03085
DSC03086
DSC03087
DSC03088


DSC03090
DSC03091
DSC03099
DSC03101


DSC03104
DSC03106
DSC03107
DSC03108


DSC03109
DSC03110
DSC03111
DSC03112


DSC03113
DSC03115
DSC03116
DSC03117


DSC03118
DSC03119
DSC03120
DSC03121


DSC03124
DSC03127
DSC03128
DSC03139


DSC03145
DSC03146
DSC03147
DSC03148


DSC03149
DSC03150
DSC03152
DSC03153


DSC03154
DSC03155
DSC03156
DSC03166


DSC03167
DSC03168
DSC03169
DSC03173


DSC03174
DSC03177
DSC03178
DSC03179


DSC03205
DSC03213
at செவ்வாய், ஜூன் 28, 2011
Posted by Mohideen
Labels: சட்ட மன்ற முற்றுகை பற்றிய செய்திகள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

TNTJ அமெரிக்க தூதரகம் முற்றுக்கை!

தினந்தோறும் திரு குர்ஆன்







قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
3:31. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.


புதிய வரவுகள்

இளைஞர்கள் அன்றும் இன்றும் - 30.12.2011

Age Calculator

முந்தைய பதிவுகள்

  • ▼  2011 (417)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மே (160)
    • ▼  ஜூன் (81)
      • தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்
      • நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ
      • இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் - மின்னூல்
      • போதையில் 95% இளைஞர்கள்
      • கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
      • TV யில் தொலைந்து விட்ட சமுதாயம்
      • உம்ரா செய்யும் முறை
      • சன்மார்க்க கல்வியின் அவசியம்!
      • புகை நமக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு.
      • ஊட்டியில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம...
      • கோவையில் SDPI போலி போராளிகள்(?) தொடர்ந்து அத்துமீறல்
      • குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது யார்? தி...
      • அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்
      • Saudization=சவூதியின் பிழைப்புவாத அரசியல்
      • பொறுமையால் சுவர்க்கம் நுழைந்த உம்மு சுபைர் (ரலி) ...
      • தாவா பயிற்சி முகாம் வீடியோ 1
      • மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அற...
      • இஸ்லாம் கூறும் குடும்பவியல்.
      • வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது ...
      • சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்
      • மமக ரவுடிகளை கண்டித்து பஸ் மற்றும் ஆட்டோக்களில் கண...
      • பேச்சை பேணுக
      • சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்
      • பாவத்தை கழுவும் தொழுகை!
      • இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!
      • கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்?
      • தவ்ஹீத் நிகழ்ச்சிக்கு தடை விதித்த காவல்துறை மற்றும...
      • யுக முடிவு நாளின் அடையாளங்கள்
      • சட்ட மன்றம் கூடும் முதல் நாள் சட்டமன்ற முற்றுகைப் ...
      • இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா !!!
      • வழிகேட்டிற்குள் வழிகேடு - ரஜினியின் பிறந்த நாளும்,...
      • இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)
      • தீவிரவாதத்தை போதிக்கின்றதா இஸ்லாம்?
      • ஹஜ் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பாஸ்போர்ட...
      • சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொ...
      • 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியைத் தொட...
      • குழந்தை வளர்ப்பு.....
      • முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ?
      • இன்று இரவு சந்திர கிரகணம்! – உங்கள் பகுதியில் சந்த...
      • 13 வயது முஸ்லிம் சிறுமி போலிசால் கற்பழித்துக் கொடூ...
      • உளூவை நீக்குபவை
      • பாங்கின் சிறப்புகள் !
      • மாநபி கண்ட மகத்தான மக்கா வெற்றி.
      • உணர்வு அலுவலக மீட்புப் போராட்டம் – தயாராவீர்!
      • பொன்னாடை போர்த்திக்கொண்டிருக்கும் பன்னாடை
      • வெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா ? கண்டுபிட...
      • இத்தா காலத்தில் வெளியே செல்லலாமா ?
      • அல்லாஹ்வினால் பார்க்கப்படாதவர்கள்!
      • பகவத் கீதையில் நபியைப் பற்றி முன்னறிவிப்பு உண்டா?
      • கேள்வி? பதில்!
      • நுஹ் நபியின் கப்பல்
      • அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்,அருளாளனிடம் சிறப்போம்
      • தொலைக்காட்சி, புகைப்படம்
      • அதிகம் டி.வி பார்த்தால் விரைவில் மரணம்-எச்சரிக்கை ...
      • ஆட்சியாளர்களுக்கு அடிவருடும் ஆபாச பத்திரிக்கைகள்...
      • கடையநல்லூர் கிளைகளின் ஒன்றினைந்த பொதுக் குழு கூட்ட...
      • DR ஸாக்கிர் நாயக்குடன் TNTJ இணைந்து இஸ்லாமியப் பிர...
      • ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு
      • ரமழான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்.
      • மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி
      • ஏகத்துவம் ஓர் வரலாற்றுப் பார்வை!
      • தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி ...
      • தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்.
      • ஹிஜாப் அணிந்ததால் முஸ்லிம் மாணவி நீக்கம்: காரைக்கு...
      • தஹஜ்ஜத் தொழுகையை ஆர்வமூட்டலாமே?
      • மனிதனின் சட்டங்களும்,இறைவனின் சட்டங்களும்
      • மனத்தூய்மையும் மகத்தான கூ­லியும்...
      • எப்படி பிரார்த்திப்பது ?
      • குர்ஆன் கூறும் துஆக்கள்
      • செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில ...
      • விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் ப...
      • பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?
      • வாசுதேவநல்லூர் கிளையில் மருத்துவ உதவி
      • மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்க...
      • மனைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே !
      • மதுரையில் நவீன பாஸ்போர்ட் மையம்
      • இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (...
      • மிஃராஜும் அனாச்சாரங்களும் நோட்டீஸ்
      • மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை !
      • சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றவர்!
      • மிஃராஜ் இரவு எப்போது?
    • ►  ஜூலை (54)
    • ►  ஆகஸ்ட் (38)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  அக்டோபர் (25)
    • ►  நவம்பர் (13)
    • ►  டிசம்பர் (25)
  • ►  2012 (151)
    • ►  ஜனவரி (24)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மே (17)
    • ►  ஜூன் (14)
    • ►  ஜூலை (18)
    • ►  ஆகஸ்ட் (15)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  அக்டோபர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  டிசம்பர் (1)

பிரபலமான இடுகைகள்

  • ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது? ஓர் உளவியல் அணுகல்.
  • இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்
  • டி.வி பார்த்தல் ஒழு நீங்குமா?
  • நபிகளாரின் இறுதி நாட்கள்...!
  • ஜின்கள் என்ன தவறு செய்கிறார்கள்? ஜின் இனம் என்பது ஷைத்தான் இனத்தின் ஒரு பிரிவா?
  • பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா ?
  • ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது? குளிப்பாட்டும் போது என்ன ஓதுவது? யார் குளிப்பாட்டுவது?
  • காதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?
  • அல்லாஹ்வை நினைவு கூறுவோம்!
  • அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்!

லேபிள்கள்

  • (பெற்றோரை பேணுதல்) (2)
  • அரசியல் (21)
  • அரிய புகைப்படங்கள் (2)
  • அவ்லியாக்கள் (1)
  • அவ்லியாக்களின் சிறப்புகளும் (1)
  • அறிவியல் (23)
  • ஆசூரா நோன்பு (2)
  • ஆடையணிவதின்ஒழுக்கங்கள் (1)
  • ஆய்வுகள் (4)
  • இளைஞர்கள் (3)
  • இஸ்லாத்தை தழுவியவர்கள் (1)
  • இஸ்லாம் (15)
  • இஸ்லாம் கூறும் குடும்பவியல். (2)
  • இஸ்லாமிய வங்கி (2)
  • இஸ்லாமியத் திருமணம் (21)
  • உண்மை (1)
  • உணவை வீணாக்காதீர் (1)
  • உம்ரா செய்யும் முறை (1)
  • ஒழுக்கங்கள் (5)
  • ஒழுக்கம் (4)
  • ‍கடன் (1)
  • கணிணிக்குறிப்புக்கள் (3)
  • கணிணிக்குறிப்புகள் (4)
  • கல்வி (20)
  • குர்பானியின் சிறப்பும் அதன் சட்டங்களும் (1)
  • குழந்தை வளர்ப்பு (7)
  • குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதின் அடிப்படைகள் (2)
  • கேள்வி - பதில் (17)
  • சட்ட மன்ற முற்றுகை பற்றிய செய்திகள் (4)
  • சமூக கொடுமைகள் (2)
  • தர்மம் (1)
  • தரீக்காக்களும் (1)
  • தவ்ஹீத் சிந்தனைகள் (2)
  • தவ்ஹீத் ஜமாஅத் வரலாறு (1)
  • தீமைகள் (4)
  • தீவிரவாதம் (1)
  • துஆக்கள் (2)
  • தேர்தல் (2)
  • தொலைக்காட்சி (4)
  • தொழுகை (17)
  • நபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா? (1)
  • பராஅத்தும் மத்ஹபுகளும் (1)
  • பிரார்த்தனை (2)
  • புகை பிடித்தல் (1)
  • பெண்கள் (30)
  • பெருந்தன்மையின் முக்கியத்துவமும் (1)
  • பேச்சின் ஒழுங்குகள் (1)
  • பொது செய்திகள் (15)
  • மமக (8)
  • மனித வாழ்வும் (2)
  • மூட நம்பிக்கைகள் (7)
  • யுக முடிவு நாளின் அடையாளங்கள் (1)
  • ரமழான் தொடர்சொற்பொழிவு (3)
  • ரமழான் மாதம் (11)
  • ரமழானின் சிறப்புகள்... வீடியோ (2)
  • ரமளான் மாதம் (10)
  • வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (1)
  • வரலாறுகள் (2)
  • வாசுதேவநல்லூர் சமுதாய செய்திகள் (13)
  • வீடியோ (64)
  • வெள்ளிக் கிழமையின் சிறப்பும் அதன் சட்டங்களும் (1)
  • ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்... (1)
  • ஜிஹாத் - ஓர் ஆய்வு. (15)
  • ஷபே பராஅத் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? (1)
  • ஸஃபர் மாதமும் நாமும் (1)
  • ஹிஜாபை பேணுவதில் அலட்சியம் (2)

அல்லாஹ்வின் திருநாமங்கள்

PJ அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன்

குர்ஆனை எளிதில் ஓதிட இதை கிளிக் செய்யவும்

குர்ஆனை எளிதில் ஓதிட இதை கிளிக் செய்யவும்

சகோதரர் பிஜே அவர்களின் சொற்பொழிவை கேட்க சொடுக்கவும்

சமுதாய இணையதளங்கள்






KIDS USEFUL WEBSITES


                  மே மாத

      தீன்குலப்பெண்மணி

  • அதிமுக அரசின் ஓராண்டு சாதனைகள்
  • தனித்திருக்கும் பெண்களின் வீட்டிற்கு செல்லாதீர்
  • ------------------------------------------------- மேலும் பல செய்திகள் அறிய         படத்தை கிளிக் பண்ணவும்

    புகைவண்டி (இரயில்) பயணத்தின் முன் பதிவுக்கு

    புகைவண்டி (இரயில்) பயணத்தின் முன் பதிவுக்கு

    AIR INDIA

    AIR INDIA
    விமான பயணத்தின் முன் பதிவுக்கு

    ஆன்லைன் சேவைகள்

  • இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி
  • தமிழ்நாடு மின்சார வாரியம்
  • பாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி
  • பாஸ்போர்ட் அலுவலகம் – மதுரை
  • பி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன்     பில்களை ஆன்லைனில் செலுத்த
  • வாக்காளர் பட்டியல்
  • HDFC வங்கி
  • ICICI வங்கி
  • SBI பாரத ஸ்டேட் வங்கி
  • படித்துவிட்டீர்களா

    இந்த வார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்

    sam0540n

    மறந்துவிடாதீர்கள்

    இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். ஆங்கிலம் , அரபி, ஜெர்மனி போன்ற எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துணையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

    தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள

    free counters

    widgeo.net