-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திங்கள், ஜூன் 20

அதிகம் டி.வி பார்த்தால் விரைவில் மரணம்-எச்சரிக்கை ரிப்போர்ட்




இடியட் பாக்ஸ் என் அழைக்கப்படும் தொ(ல்)லைக்காட்சியை அதிகம் பார்த்தால் இளம் வயதில் மரணம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அதிக நேரம் டி.வி பார்ப்பதினால் சர்க்கரை நோய்,இதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்ப்படும் என்று அமெரிக்காவில் உள்ள 'ஹார்வார்டு ஸ்கூல் ஆப் புப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

     ஒரு நளில் இரண்டு மணி நேரத்துக்கு அதிகமாக டி.வி.பார்த்தால் சர்க்கரை வியாதி வருமென்றும்,மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக டி,வி,பார்த்தால் இதய அடைப்பு ஏற்ப்படும் என்றும்,அதிக நேரம் டி.வி.பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும்,இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங் ஹூ,மற்றும் கிரான்ட் வெட்ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

     இந்த ஆராய்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுதச் செய்வது மட்டுமில்லாமல்,டி.வி.பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்ப்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் என்று பிரான்க் தெரிவித்தார்.

    அதிகம் டி.வி.பார்ப்பதால் சர்க்கரை நோயோடு உடல்பருமனும் ஏற்ப்படும் என்று கிரான்ட் வெட் தெரிவித்தார்.1970 லிருந்து 2011வரை டி.வி.பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

    அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் தான் டி.வி.பாப்பதிலும் முன்னிலை வகிக்கின்றனர்.ஒருநாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டி.வி.பார்ப்பதாகவும்,ஐரோப்பியர்கள் 3 லிருந்து 4மணிநேரம் டி.வி.பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.மனிக்ககனக்கில் டி.வி.பார்ப்பதால் நோய்கள் வரும் என்ற இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து நாள் முழுவதும் 'மெகா சீரியல்களைப்'பார்த்து அழும் நம்மவர்கள் சிந்திப்பார்களா? 
நன்றி:தினமணி.         



இடியட் பாக்ஸ் என் அழைக்கப்படும் தொ(ல்)லைக்காட்சியை அதிகம் பார்த்தால் இளம் வயதில் மரணம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அதிக நேரம் டி.வி பார்ப்பதினால் சர்க்கரை நோய்,இதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்ப்படும் என்று அமெரிக்காவில் உள்ள 'ஹார்வார்டு ஸ்கூல் ஆப் புப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

     ஒரு நளில் இரண்டு மணி நேரத்துக்கு அதிகமாக டி.வி.பார்த்தால் சர்க்கரை வியாதி வருமென்றும்,மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக டி,வி,பார்த்தால் இதய அடைப்பு ஏற்ப்படும் என்றும்,அதிக நேரம் டி.வி.பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும்,இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங் ஹூ,மற்றும் கிரான்ட் வெட்ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

     இந்த ஆராய்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுதச் செய்வது மட்டுமில்லாமல்,டி.வி.பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்ப்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் என்று பிரான்க் தெரிவித்தார்.

    அதிகம் டி.வி.பார்ப்பதால் சர்க்கரை நோயோடு உடல்பருமனும் ஏற்ப்படும் என்று கிரான்ட் வெட் தெரிவித்தார்.1970 லிருந்து 2011வரை டி.வி.பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

    அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் தான் டி.வி.பாப்பதிலும் முன்னிலை வகிக்கின்றனர்.ஒருநாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டி.வி.பார்ப்பதாகவும்,ஐரோப்பியர்கள் 3 லிருந்து 4மணிநேரம் டி.வி.பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.மனிக்ககனக்கில் டி.வி.பார்ப்பதால் நோய்கள் வரும் என்ற இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து நாள் முழுவதும் 'மெகா சீரியல்களைப்'பார்த்து அழும் நம்மவர்கள் சிந்திப்பார்களா? 
நன்றி:தினமணி.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.