-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, மே 27

முத்துக்குளிக்க வாரீகளா..?


நான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை
கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில்
குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும்.
நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார்
என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும்.
அந்த நேரம் வந்தவுடன் மேலே
படுவேகமாக கயிற்றை இழுத்து தூக்கி விடுவார். (கயிற்றை கட்டிக்கொள்ள
காரணம்: அவ்வளவு சிப்பிகளின் வெயிட்டை தூக்கிக்கொண்டு நீந்தி மேலே ஏறி வருவது
கடினம்..!)

கயிற்றை கையில் பிடித்திருப்பவருக்கும் முத்து கிடைத்தால் பங்கு உண்டு என்பதால்,
"நம்ம பங்காளி உள்ளே இருக்க இருக்க நமக்கு லாபம்தானே" என்று கயிற்றை இழுக்காமல்
விட்டு வைத்திருப்பவராக இருக்ககூடாது அல்லவா..? இது ஒரு ரிஸ்க்கான வேலை.
உயிர் பிரச்சினை. எனவே, அந்த கயிற்றை பிடித்திருப்பவர் தன் மச்சினனாக மட்டுமே
இருப்பார். அதாவது, குதித்தவரின் மனைவியின் சகோதரன்..! 'தன் சகோதரி விதவை
ஆகக்கூடாது' என்று, சுயநலன் பார்க்காமல் மச்சான் உயிரை காப்பாற்றுவானாம்
மச்சினன் என்பதால்..! வேறு யாரையும் நம்பி முத்துக்குளிப்பவர்கள் கடலினுள்ளே
குதிப்பது கிடையாதாம்..!  

பிற்காலத்தில்,  ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டினால்... இன்னும் அதிக நேரம் சிப்பிகளை சேகரிக்கலாம். இதனால், இன்னும் வெயிட் ஏறும். இதனாலும், கட்டி தூக்க கயிறும் 
அவசியம். எனவே, மச்சினனும் அவசியம்.

இப்போது... சேகரித்த சிப்பிகளை உடைத்துப்பார்த்தால்... 400 கிலோ சிப்பிகளில் ஒன்றோ
அல்லது  இரண்டோதான் முத்துக்கள் கிடைக்குமாம். 

ஆக, இந்த அனைத்து சிப்பிகளிலும் முத்துக்கள் இருந்தால்...? முத்துக்கள்
இருந்தால்...? இருந்தால்...? எப்பூ....................டி இருக்கும்........?


இதற்குத்தான் வந்தது நவீன தொழில்நுட்பம்..! அது பற்றி அறியும் முன், சிப்பிகளில்
முத்துக்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்து விடுவோம்...?




தங்கம், வைரம் போன்று மண்ணிற்குள்ளிருந்து கிடைக்கும் உயிரற்றவை போல அல்ல
முத்து. உயிருள்ள OYSTER என்ற சிப்பிகளின் வயிற்றில் பிறக்கின்ற இயற்கையின்
அதிசயங்களுள் ஒன்று, முத்து..! கடலில் உள்ள சில உயிருள்ள ஒட்டுண்ணிகள்
 (parasites)  சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச்சென்று
விடுகின்றன. அப்போது, சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, அதனிலிருந்து
சிப்பி நிவாரணம் பெற, தற்காப்புக்காக நாக்கர் (nacre) திரவத்தை அந்த வேண்டா
 விருந்தாளியின் மீது பொழியும். அவ்வாறு பொழியும் போது அந்தப் புல்லுருவி
மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை
உயர்ந்த முத்தாக பின்னர் மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள்
உள்ளே சென்றாலும் அது முத்தாக மாறி விடுகிறது. இந்த நாக்கர் திரவம் என்பது
கால்சியம் கார்போனேட் என்ற ஒருவகை உப்பு.! இந்த நாக்கர் திரவம் சிப்பியின்
ஒவ்வோர் வகைக்கும் ஒவ்வோர் வண்ணமாக இருப்பதால், வெள்ளை, கருப்பு, நீலம்,
சிகப்பு என பல வண்ணங்களில் இருந்தாலும் தங்கநிற முத்து மட்டுமே
விலை மதிப்பு வாய்ந்ததாம். இதுபோல உருவானால் அவை (நேச்சுரல்)
'இயற்கை முத்துக்கள்'எனப்படுகின்றன.

இனி... முத்துக்குளிப்பில் அதிநவீன(?) தொழில்நுட்பம்:- இதில்,  உருத்தல்தரும் 
புல்லுருவிகள் தானாக நுழையாமல், செயற்கையாக சிப்பிக்குள் நுழைக்கப்படுகின்றன. 
பின்னர், முத்துக்கள் முழுமையாக சிப்பியினுள் உருவாகும் காலம் அறிந்து, 
அதுவரை பொறுமையாக காத்திருந்து, 'அறுவடை' செய்யப்படுகின்றன..! 
இவை (கல்ச்சர்ட்) 'வளர்க்கப்படும் முத்துக்கள்' எனப்படும். 

'ஜ்வெல்மர்' என்ற உலகின் ஒரே ஒரு நிறுவனம்தான் முத்துக்களிலேயே மிக விலையுயர்ந்த வகையான "தங்க நிற முத்துக்களை" வளர்த்து உருவாக்குகின்றது.  இந்நிறுவனம் தன் பலவருட உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பலனாக இதை சாதித்து இருக்கின்றது. இதற்கென ஒரு உயர்ந்த வகை சிப்பி (பிங்க்டேட்டா மேக்ஸிமா) ஒன்றை தேடிக்கண்டுபிடித்து...


(அது சுமார் அரையடி அலத்திற்கு உள்ள!) அவ்வகை  சிப்பி, உலகில் அதிகம் வாழும்
இடத்தையும் ஃபிலிப்பைன் கடலில் கண்டுபிடித்து...  அங்கே சொந்தமாய் ஒரு தீவையும் வளைத்துப்போட்டு...


தன் 'முத்து தொழிற்சாலை'யை (அதாவது... முத்துச்சிப்பி வளர்க்கும் கடல் பண்ணையை)
அங்கே... இப்படி ஜம்பமாய் அமர்த்திக்கொண்டு....
(இதுதான் 'முத்துப்பண்ணை')


அமர்க்களப்படுத்துகிறார் அதன் இயக்குனர் ஜாக்குயஸ் ப்ராநெல்லேக்..!

(இவர்தான் ஜாக்..!)

முதலில் கடலடியிலிருந்து அந்த குறிப்பிட்ட வகை சிப்பிகளை சேமிக்கின்றனர்.



அதனை கயிறுகட்டி இழுத்து தூக்கி படகில் அள்ளிப்போட்டுக்கொள்கின்றனர். 


பின்னர் சேகரித்த சிப்பிகளை சோதனைச்சாலையில், இந்த அறிவியல் தொழில் நுட்பவாதி
ஏதோ ஒரு சரியான புல்லுருவியை சரியான அளவில் சரியான இடத்தில் உள்ளே
செலுத்துகிறார். அதை மேற்பார்வை இடுகிறார் ஜாக். 


பின்னர் அனைத்து சிப்பிகளும் எண்ணப்பட்டு பெயர் குறிப்பிடப்பட்டு பாதுக்காப்பாக
ஸ்டீல் வலைத்தட்டிகளில் பிணைக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் வளரவிட... வாழவிடப்படுகின்றன..!



இந்த முத்துப்பண்ணைக்கு கடும் பாதுகாப்புகள் உண்டு. 


கடலினுள்ளும் அவ்வப்போது பாதுகாப்பு..! முத்துக்கள்.., என்றால் சும்மாவா..?


குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் மீண்டும் அவை கடலில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்புடன் சோதனைச்சாலைக்கு கொண்டுவரப்படுகின்றன. 


முதலில் மிக பாதுக்காப்பாக உடைந்துவிடாமல் முத்துச்சிப்பிகளை ஸ்டீல் வலையிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள். 


பின்னர் சோதனைச்சாலையில், சிப்பிகளிலிருந்து, முத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி  முத்தை நயமாக வெளியே எடுக்கிறார்கள்.



அப்பப்பா..! எவ்வளவு முத்துக்கள்..! மாஷாஅல்லாஹ்..! என்ன அழகு..!
இனி... முத்துக்களின் கண்(கொள்ளா)காட்சிகள் தான்..! 
.

பெரும் களிப்புடன் வார்த்தையில்லா உவகையில் ஜாக். 


அவை அனைத்தும் உறையிடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன..! 
சரி, இந்த முத்துக்கள் எப்படி, எதற்கு, உபயோகப்படுகின்றன..? ம்ம்ம்.... எல்லாமே பெரும்பாலும் பெண்களுக்காகத்தான்...


அவர்கள் விதவிதமாக... நகைகளாக இப்படி...  அழகு ஆபரணங்களாக செய்து அணிந்துகொண்டு...


 பெருமையாக தங்களை மேலும் அழகு காட்டிக்கொள்ளத்தான், இந்த முத்துப்பண்ணையில் இவர்களின் இந்த படாதபாடுபட்டு உழைப்பதெல்லாம்..!
.
சரி..., முத்துக்கள் எடுக்கப்பட்ட அந்த சிப்பிகளெல்லாம் என்னவாகும்..? அதையும்கூட காசாக்காமல் விட்டுவைப்பதில்லை ஜாக்..! அவையனைத்தும், உடைக்கப்பட்டு உள்ளே உள்ள 'உணவாகும் மேட்டர்' மட்டும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, அவை நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்டு,


குளிர்படுத்தப்பட்ட ஐஸ் பெட்டிகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு பிபிப்பைனி-சைனீஸ் ஹோட்டல்களுக்கு மிக நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.
இதற்கு சுவைப்பிரியர்களிடம் படு டிமாண்டாம்..!
"சிப்பி 66..?" 




முத்துக்களுடனும் சிப்பிகளுடனும் முத்துப்பண்ணை தீவிலிருந்து இப்போது விடை பெறுகிறார் ஜாக்..! இனி அடுத்த 'முத்து மகசூலுக்கு' திரும்பிவருவார்..!

நான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை
கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில்
குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும்.
நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார்
என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும்.
அந்த நேரம் வந்தவுடன் மேலே
படுவேகமாக கயிற்றை இழுத்து தூக்கி விடுவார். (கயிற்றை கட்டிக்கொள்ள
காரணம்: அவ்வளவு சிப்பிகளின் வெயிட்டை தூக்கிக்கொண்டு நீந்தி மேலே ஏறி வருவது
கடினம்..!)

கயிற்றை கையில் பிடித்திருப்பவருக்கும் முத்து கிடைத்தால் பங்கு உண்டு என்பதால்,
"நம்ம பங்காளி உள்ளே இருக்க இருக்க நமக்கு லாபம்தானே" என்று கயிற்றை இழுக்காமல்
விட்டு வைத்திருப்பவராக இருக்ககூடாது அல்லவா..? இது ஒரு ரிஸ்க்கான வேலை.
உயிர் பிரச்சினை. எனவே, அந்த கயிற்றை பிடித்திருப்பவர் தன் மச்சினனாக மட்டுமே
இருப்பார். அதாவது, குதித்தவரின் மனைவியின் சகோதரன்..! 'தன் சகோதரி விதவை
ஆகக்கூடாது' என்று, சுயநலன் பார்க்காமல் மச்சான் உயிரை காப்பாற்றுவானாம்
மச்சினன் என்பதால்..! வேறு யாரையும் நம்பி முத்துக்குளிப்பவர்கள் கடலினுள்ளே
குதிப்பது கிடையாதாம்..!  

பிற்காலத்தில்,  ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டினால்... இன்னும் அதிக நேரம் சிப்பிகளை சேகரிக்கலாம். இதனால், இன்னும் வெயிட் ஏறும். இதனாலும், கட்டி தூக்க கயிறும் 
அவசியம். எனவே, மச்சினனும் அவசியம்.

இப்போது... சேகரித்த சிப்பிகளை உடைத்துப்பார்த்தால்... 400 கிலோ சிப்பிகளில் ஒன்றோ
அல்லது  இரண்டோதான் முத்துக்கள் கிடைக்குமாம். 

ஆக, இந்த அனைத்து சிப்பிகளிலும் முத்துக்கள் இருந்தால்...? முத்துக்கள்
இருந்தால்...? இருந்தால்...? எப்பூ....................டி இருக்கும்........?


இதற்குத்தான் வந்தது நவீன தொழில்நுட்பம்..! அது பற்றி அறியும் முன், சிப்பிகளில்
முத்துக்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்து விடுவோம்...?




தங்கம், வைரம் போன்று மண்ணிற்குள்ளிருந்து கிடைக்கும் உயிரற்றவை போல அல்ல
முத்து. உயிருள்ள OYSTER என்ற சிப்பிகளின் வயிற்றில் பிறக்கின்ற இயற்கையின்
அதிசயங்களுள் ஒன்று, முத்து..! கடலில் உள்ள சில உயிருள்ள ஒட்டுண்ணிகள்
 (parasites)  சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச்சென்று
விடுகின்றன. அப்போது, சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, அதனிலிருந்து
சிப்பி நிவாரணம் பெற, தற்காப்புக்காக நாக்கர் (nacre) திரவத்தை அந்த வேண்டா
 விருந்தாளியின் மீது பொழியும். அவ்வாறு பொழியும் போது அந்தப் புல்லுருவி
மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை
உயர்ந்த முத்தாக பின்னர் மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள்
உள்ளே சென்றாலும் அது முத்தாக மாறி விடுகிறது. இந்த நாக்கர் திரவம் என்பது
கால்சியம் கார்போனேட் என்ற ஒருவகை உப்பு.! இந்த நாக்கர் திரவம் சிப்பியின்
ஒவ்வோர் வகைக்கும் ஒவ்வோர் வண்ணமாக இருப்பதால், வெள்ளை, கருப்பு, நீலம்,
சிகப்பு என பல வண்ணங்களில் இருந்தாலும் தங்கநிற முத்து மட்டுமே
விலை மதிப்பு வாய்ந்ததாம். இதுபோல உருவானால் அவை (நேச்சுரல்)
'இயற்கை முத்துக்கள்'எனப்படுகின்றன.

இனி... முத்துக்குளிப்பில் அதிநவீன(?) தொழில்நுட்பம்:- இதில்,  உருத்தல்தரும் 
புல்லுருவிகள் தானாக நுழையாமல், செயற்கையாக சிப்பிக்குள் நுழைக்கப்படுகின்றன. 
பின்னர், முத்துக்கள் முழுமையாக சிப்பியினுள் உருவாகும் காலம் அறிந்து, 
அதுவரை பொறுமையாக காத்திருந்து, 'அறுவடை' செய்யப்படுகின்றன..! 
இவை (கல்ச்சர்ட்) 'வளர்க்கப்படும் முத்துக்கள்' எனப்படும். 

'ஜ்வெல்மர்' என்ற உலகின் ஒரே ஒரு நிறுவனம்தான் முத்துக்களிலேயே மிக விலையுயர்ந்த வகையான "தங்க நிற முத்துக்களை" வளர்த்து உருவாக்குகின்றது.  இந்நிறுவனம் தன் பலவருட உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பலனாக இதை சாதித்து இருக்கின்றது. இதற்கென ஒரு உயர்ந்த வகை சிப்பி (பிங்க்டேட்டா மேக்ஸிமா) ஒன்றை தேடிக்கண்டுபிடித்து...


(அது சுமார் அரையடி அலத்திற்கு உள்ள!) அவ்வகை  சிப்பி, உலகில் அதிகம் வாழும்
இடத்தையும் ஃபிலிப்பைன் கடலில் கண்டுபிடித்து...  அங்கே சொந்தமாய் ஒரு தீவையும் வளைத்துப்போட்டு...


தன் 'முத்து தொழிற்சாலை'யை (அதாவது... முத்துச்சிப்பி வளர்க்கும் கடல் பண்ணையை)
அங்கே... இப்படி ஜம்பமாய் அமர்த்திக்கொண்டு....
(இதுதான் 'முத்துப்பண்ணை')


அமர்க்களப்படுத்துகிறார் அதன் இயக்குனர் ஜாக்குயஸ் ப்ராநெல்லேக்..!

(இவர்தான் ஜாக்..!)

முதலில் கடலடியிலிருந்து அந்த குறிப்பிட்ட வகை சிப்பிகளை சேமிக்கின்றனர்.



அதனை கயிறுகட்டி இழுத்து தூக்கி படகில் அள்ளிப்போட்டுக்கொள்கின்றனர். 


பின்னர் சேகரித்த சிப்பிகளை சோதனைச்சாலையில், இந்த அறிவியல் தொழில் நுட்பவாதி
ஏதோ ஒரு சரியான புல்லுருவியை சரியான அளவில் சரியான இடத்தில் உள்ளே
செலுத்துகிறார். அதை மேற்பார்வை இடுகிறார் ஜாக். 


பின்னர் அனைத்து சிப்பிகளும் எண்ணப்பட்டு பெயர் குறிப்பிடப்பட்டு பாதுக்காப்பாக
ஸ்டீல் வலைத்தட்டிகளில் பிணைக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் வளரவிட... வாழவிடப்படுகின்றன..!



இந்த முத்துப்பண்ணைக்கு கடும் பாதுகாப்புகள் உண்டு. 


கடலினுள்ளும் அவ்வப்போது பாதுகாப்பு..! முத்துக்கள்.., என்றால் சும்மாவா..?


குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் மீண்டும் அவை கடலில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்புடன் சோதனைச்சாலைக்கு கொண்டுவரப்படுகின்றன. 


முதலில் மிக பாதுக்காப்பாக உடைந்துவிடாமல் முத்துச்சிப்பிகளை ஸ்டீல் வலையிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள். 


பின்னர் சோதனைச்சாலையில், சிப்பிகளிலிருந்து, முத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி  முத்தை நயமாக வெளியே எடுக்கிறார்கள்.



அப்பப்பா..! எவ்வளவு முத்துக்கள்..! மாஷாஅல்லாஹ்..! என்ன அழகு..!
இனி... முத்துக்களின் கண்(கொள்ளா)காட்சிகள் தான்..! 
.

பெரும் களிப்புடன் வார்த்தையில்லா உவகையில் ஜாக். 


அவை அனைத்தும் உறையிடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன..! 
சரி, இந்த முத்துக்கள் எப்படி, எதற்கு, உபயோகப்படுகின்றன..? ம்ம்ம்.... எல்லாமே பெரும்பாலும் பெண்களுக்காகத்தான்...


அவர்கள் விதவிதமாக... நகைகளாக இப்படி...  அழகு ஆபரணங்களாக செய்து அணிந்துகொண்டு...


 பெருமையாக தங்களை மேலும் அழகு காட்டிக்கொள்ளத்தான், இந்த முத்துப்பண்ணையில் இவர்களின் இந்த படாதபாடுபட்டு உழைப்பதெல்லாம்..!
.
சரி..., முத்துக்கள் எடுக்கப்பட்ட அந்த சிப்பிகளெல்லாம் என்னவாகும்..? அதையும்கூட காசாக்காமல் விட்டுவைப்பதில்லை ஜாக்..! அவையனைத்தும், உடைக்கப்பட்டு உள்ளே உள்ள 'உணவாகும் மேட்டர்' மட்டும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, அவை நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்டு,


குளிர்படுத்தப்பட்ட ஐஸ் பெட்டிகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு பிபிப்பைனி-சைனீஸ் ஹோட்டல்களுக்கு மிக நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.
இதற்கு சுவைப்பிரியர்களிடம் படு டிமாண்டாம்..!
"சிப்பி 66..?" 




முத்துக்களுடனும் சிப்பிகளுடனும் முத்துப்பண்ணை தீவிலிருந்து இப்போது விடை பெறுகிறார் ஜாக்..! இனி அடுத்த 'முத்து மகசூலுக்கு' திரும்பிவருவார்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.