-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஞாயிறு, மே 29

சிலைகளுக்குப் படைக்காதவற்றைத் தந்தால் அவற்றைச் சாப்பிடுவது கூடுமா ?


மாற்று மதத்தவர்கள் பொங்கல், தீபவாளி போன்ற பண்டிகைகளில் அவர்களின் சிலைகளுக்குப் படைக்காதவற்றைத் தந்தால் அவற்றைச் சாப்பிடுவது கூடுமா ?

மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களை முழுமையாக இஸ்லாம் தடை செய்யவில்லை. நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களைச் சாப்பிட்டுள்ளார்கள். அவர்களிடம் கேட்டும் வாங்கி உள்ளார்கள். தண்ணீர், உணவு, ஆடை என்று பல பொருட்களை மாற்று மதத்தவர்களிடமிருந்து பெற்றுள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்திகள் சான்றளிக்கின்றன.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்கடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபியவர்கடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்)அவர்கன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (2617)


தூமத்துல் ஜந்தல் பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள் என்று சொன்னார்கள்.அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம் (4209)
 
உகைதிர் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் ஆவார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிருந்து திரும்பி வந்து கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திருந்து கண் விழித்தவர்கள் அபூபக்ரே முதலாமவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் தாமாகக் கண் விழிக்காத வரை அவர்களை உறக்கத்திருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து உமர் (ரலி) அவர்களும் கண் விழித்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு குரலை உயர்த்தி அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் கண் விழித்து (சிறிது தொலைவு சென்றதன்) பின் (தம் வாகனத்திருந்து) இறங்கி எங்களுக்கு அதிகாலைத் தொழுகையைத் தொழுவித்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் எங்களுடன் தொழாமல் கூட்டத்தாரை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியவுடன், இன்னாரே! எங்களுடன் நீர் ஏன் தொழவில்லை? என்று கேட்டார்கள். அவர், எனக்குப் பெருந்தொடக்கு ஏற்பட்டு விட்டது என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் மண்ணில் தயம்மும் செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு அவர் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் தமக்கு முன்னால் அமர்த்தினார்கள்.

எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. நாங்கள் பயணம் சென்று கொண்டிருக்கும் போது (ஒட்டகத்தின் மீது) தோலினாலான தண்ணீர்ப் பைகள் இரண்டிற்கிடையே தன் இரு கால்களையும் தொங்க விட்டிருந்த பெண்ணொருத்தியை நாங்கள் கண்டோம். அவளிடம் நாங்கள், தண்ணீர் எங்கே (உள்ளது)? என்று கேட்டோம். அதற்கு அவள், தண்ணீர் (இங்கு) இல்லை என்று சொன்னாள். நாங்கள், உன் வீட்டாருக்கும் தண்ணீருக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு? என்று கேட்டோம். அவள், ஒரு பகலும் ஓர் இரவும் (பயணம் செய்யும் தூரம்) என்று சொன்னாள். நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வா! என்று சொன்னோம். அவள், அல்லாஹ்வின் தூதர் என்றால் யார்? என்று கேட்டாள். அவளை (தண்ணீர் தரச்) சம்மதிக்க வைக்க எங்களால் முடியவில்லை.

இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கடம் நாங்கள் சென்றோம். அவள் நபி (ஸல்) அவர்களிடமும் எங்களிடம் பேசியதைப் போலவே பேசினாள். தான் அனாதைக் குழந்தைகன் தாய் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதைத் தவிர! உடனே, நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தண்ணீர்ப் பைகள் இரண்டையும் கொண்டு வரச் சொல்லிக் கட்டளையிட்டு, அவற்றின் வாய்கள் இரண்டிலும் (தம் கரத்தால்) தடவினார்கள். தாகமுடனிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகம் தீரும் வரை (அவற்றிருந்து) தண்ணீர் பருகினோம். எங்களுடன் இருந்த ஒவ்வொரு தோல்ப் பையையும் ஒவ்வொரு தோல் பாத்திரத்தையும் நாங்கள் நிரப்பிக் கொண்டோம்.

(எங்கள்) ஒட்டகம் ஒன்றுக்கு மட்டும் (அதனால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால்) தண்ணீர் குடிப்பாட்டவில்லை. அந்தத் தோல்ப் பை நிரம்பி வழிந்த காரணத்தால் வாய் பிளந்து போகவிருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், உங்களிடம் இருக்கும் (உணவுப்) பொருள்களைக் கொண்டு வாருங்கள் என்று (தம் தோழர்களுக்கு) உத்தரவிட்டார்கள். (தோழர்களும் கொண்டு வந்து தர), நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்று திரட்டி(அவளுக்கு வழங்கி)னார்கள்.

இறுதியில், அவள் தன் வீட்டாரிடம் சென்று, நான் மக்கலேயே மிக வசீகரமான ஒருவரை, அல்லது அவர்கள் (முஸ்லிம்கள்) நம்புவதைப் போல் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தேன் என்று சொன்னாள். அல்லாஹ் (அவளது) அந்தக் குலத்தாருக்கு அப்பெண்ணின் வாயிலாக நேர்வழியளித்தான். ஆகவே, அவளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரி (3571)


இவ்வாறு பல மாற்று மதத்தவர்களின் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது.

சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.


தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச்செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:115)


அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் உஹில்ல என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

மாற்று மதத்தவர்கள் பொங்கல், தீபவாளி போன்ற பண்டிகைகளில் அவர்களின் சிலைகளுக்குப் படைக்காதவற்றைத் தந்தால் அவற்றைச் சாப்பிடுவது கூடுமா ?

மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களை முழுமையாக இஸ்லாம் தடை செய்யவில்லை. நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களைச் சாப்பிட்டுள்ளார்கள். அவர்களிடம் கேட்டும் வாங்கி உள்ளார்கள். தண்ணீர், உணவு, ஆடை என்று பல பொருட்களை மாற்று மதத்தவர்களிடமிருந்து பெற்றுள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்திகள் சான்றளிக்கின்றன.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்கடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபியவர்கடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்)அவர்கன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (2617)


தூமத்துல் ஜந்தல் பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள் என்று சொன்னார்கள்.அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம் (4209)
 
உகைதிர் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் ஆவார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிருந்து திரும்பி வந்து கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திருந்து கண் விழித்தவர்கள் அபூபக்ரே முதலாமவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் தாமாகக் கண் விழிக்காத வரை அவர்களை உறக்கத்திருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து உமர் (ரலி) அவர்களும் கண் விழித்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு குரலை உயர்த்தி அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் கண் விழித்து (சிறிது தொலைவு சென்றதன்) பின் (தம் வாகனத்திருந்து) இறங்கி எங்களுக்கு அதிகாலைத் தொழுகையைத் தொழுவித்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் எங்களுடன் தொழாமல் கூட்டத்தாரை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியவுடன், இன்னாரே! எங்களுடன் நீர் ஏன் தொழவில்லை? என்று கேட்டார்கள். அவர், எனக்குப் பெருந்தொடக்கு ஏற்பட்டு விட்டது என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் மண்ணில் தயம்மும் செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு அவர் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் தமக்கு முன்னால் அமர்த்தினார்கள்.

எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. நாங்கள் பயணம் சென்று கொண்டிருக்கும் போது (ஒட்டகத்தின் மீது) தோலினாலான தண்ணீர்ப் பைகள் இரண்டிற்கிடையே தன் இரு கால்களையும் தொங்க விட்டிருந்த பெண்ணொருத்தியை நாங்கள் கண்டோம். அவளிடம் நாங்கள், தண்ணீர் எங்கே (உள்ளது)? என்று கேட்டோம். அதற்கு அவள், தண்ணீர் (இங்கு) இல்லை என்று சொன்னாள். நாங்கள், உன் வீட்டாருக்கும் தண்ணீருக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு? என்று கேட்டோம். அவள், ஒரு பகலும் ஓர் இரவும் (பயணம் செய்யும் தூரம்) என்று சொன்னாள். நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வா! என்று சொன்னோம். அவள், அல்லாஹ்வின் தூதர் என்றால் யார்? என்று கேட்டாள். அவளை (தண்ணீர் தரச்) சம்மதிக்க வைக்க எங்களால் முடியவில்லை.

இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கடம் நாங்கள் சென்றோம். அவள் நபி (ஸல்) அவர்களிடமும் எங்களிடம் பேசியதைப் போலவே பேசினாள். தான் அனாதைக் குழந்தைகன் தாய் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதைத் தவிர! உடனே, நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தண்ணீர்ப் பைகள் இரண்டையும் கொண்டு வரச் சொல்லிக் கட்டளையிட்டு, அவற்றின் வாய்கள் இரண்டிலும் (தம் கரத்தால்) தடவினார்கள். தாகமுடனிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகம் தீரும் வரை (அவற்றிருந்து) தண்ணீர் பருகினோம். எங்களுடன் இருந்த ஒவ்வொரு தோல்ப் பையையும் ஒவ்வொரு தோல் பாத்திரத்தையும் நாங்கள் நிரப்பிக் கொண்டோம்.

(எங்கள்) ஒட்டகம் ஒன்றுக்கு மட்டும் (அதனால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால்) தண்ணீர் குடிப்பாட்டவில்லை. அந்தத் தோல்ப் பை நிரம்பி வழிந்த காரணத்தால் வாய் பிளந்து போகவிருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், உங்களிடம் இருக்கும் (உணவுப்) பொருள்களைக் கொண்டு வாருங்கள் என்று (தம் தோழர்களுக்கு) உத்தரவிட்டார்கள். (தோழர்களும் கொண்டு வந்து தர), நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்று திரட்டி(அவளுக்கு வழங்கி)னார்கள்.

இறுதியில், அவள் தன் வீட்டாரிடம் சென்று, நான் மக்கலேயே மிக வசீகரமான ஒருவரை, அல்லது அவர்கள் (முஸ்லிம்கள்) நம்புவதைப் போல் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தேன் என்று சொன்னாள். அல்லாஹ் (அவளது) அந்தக் குலத்தாருக்கு அப்பெண்ணின் வாயிலாக நேர்வழியளித்தான். ஆகவே, அவளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரி (3571)


இவ்வாறு பல மாற்று மதத்தவர்களின் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது.

சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.


தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச்செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:115)


அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் உஹில்ல என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.